சென்னையில் ஷவ்வால் மாதம் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சி ஆன்மீகச் சகோதரர் ஹைதர் நிஜாம் இல்லத்தில் சங்கைமிக்க யாசீன் அலி மௌலானா மற்றும் ஷம்மிஸ்அலி மௌலானா அவர்களின் முன்னிலையில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை கிளை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 16 காலை 8.30 மணிக்கு புனித புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து கஸிதத்துல்அவுனிய்யாவும் ஓதப்பட்டன. பின் சங்கைக்குரிய இமாம் ஜமாலிய்யா அஷ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்களின் 76வது பிறந்ததினவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கண்ணியமிக்க மௌலானாமார்களின் முன்னிலையில் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல்ஹமீது நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது.
இந்த சிறப்புமிகு நன்னாளிலே நமது நாட்டதேட்டங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நற்கிருபையிலும் நமது ஆருயிர் ஷெய்கு நாயகத்தின் துவாவிலும் ஈடேறுமாக ஆமீன். அனைவருக்கும் தப்ரூக் வழகப்பட்டது