This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தியாகத் திருநாளின் நல் வாழ்த்துக்கள்...

இன்று காலை ஏழு மணிக்கு ஈத் பெருநாளின் தொழுகையை முடித்துக் கொண்டு காலை 8.30 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி துவா செய்தார்கள்.
பெருநாளின் வாழ்த்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.



மத ஒப்பியல் அறிஞர்.!


வாப்பாவை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர் ஒரு ஆன்மீகவாதியாக இறைநேச செல்வராக ஆழ்ந்த மார்க்க ஞானமும் மதங்களிடையே நல்லிணக்க கருத்துக்களை சிறப்பாக எடுத்துக்காட்டும் மத ஒப்பியல் அறிஞராகத் திகழ்பவர்.
அவருடைய அரபி ஞானமும் தமிழ் இலக்கிய இலக்கணப் புலமைத்தன்மையும் வியப்பூட்டக் கூடியது.

ஏகத்துவ(ஒரிறை)கோட்பாடுகளைக் கவிதை நடையில் வடித்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் படிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுடன் எளிய முறையில் தத்துவ விளக்கமும் செய்து வருகிறார்.

அவருடைய எளிமை தூய்மை யாரையும் புண்படுத்தாத வகையில் மக்களுக்கு உபதேசங்களை சொல்வதோடு எல்லா இடத்துக்கும் சென்று நடமாடும் நல்லிணக்க பிரச்சாரகராக இருக்கிறார்.(மொபைல் பிரபகண்டா)என்று வாப்பாவைக் கூறலாம்.


இன்றைய காலகட்டத்திற்கு இவர் சேவை மிக மிக அவசியமானது.அவரை நபிகள் நாயகத்தின் வாரிசு எனச் சொல்வதில் தவறில்லை.ஆன்மீக வரிசையில் தரிக்காவில்(ஞான வழி) இப்படி எல்லாம் சொல்வது இயற்கைதான்.இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.என்று கூறுகிறார்
தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் (முன்னால்)நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்.


விழிப்புணர்வு

மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”


“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயே அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல்இ இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”


“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

நன்றி – குரு கதைகள் வலைப்பூ

புனித விசால்தின நிகழ்ச்சி


குதுபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 45வது வருட விசால் கந்தூரிதினம் 4/11/2009 புதன் மாலை வியாழன் இரவு மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.

கந்தூரி விசால் தினத்தை துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5.11.2009 வியாழன் மாலை வெள்ளி இரவு இஷாத் தொழுகைக்குபின் பெரியநாயகத்தின் புகழ்மாலை ஒதப்பட்டது.
பின்னர் விழா ஆரம்பமானது.
இவ்விழாவில் மௌலானாமார்கள் கலந்துக் கொண்டார்கள்....

திண்டுக்கல் நூருல்ஹக் அவர்கள் கிராஅத் ஒதி விழாவை துவங்கினார்.

ஹ+வல் வுஜ+து பாடலை சிராஜ்தீன் பாடினார்....அந்தபாடலுக்கான தமிழில் விளக்கத்தை அமீர்அலி கூறினார்

பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஞானப்பாடல் பாடினார்கள்...
இக்கூட்டத்திற்கு பொதுச்செயளாளர் A.N.M.முஹம்மது யூசுப் தலைமைத்தாங்கினார்...
துவக்க உரையாக முஹம்மது யூசுப் அவர்கள் விழாநாயகரைப்பற்றியும் பெருமானார் (ஸல்அலை)அவர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.


மன்னார்குடி ஷேக்மைதீன் உரையாற்றுகையில் மகான்களின் மகத்துவத்தை விளக்கினார்...


சித்தமருத்துவர் மாலீக் அவர்கள் குருவைப்பற்றியும் குருமருந்தின் தன்மையைப்பற்றியும் விவரித்து பேசினார்.


ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சஹாபுதீன் பேசுகையில் பெரிய நாயகத்தின் பிறப்பு மற்றும் அவர்களின் தொண்டு இவைகளை விவரித்தார்...



துணைத்தலைவர் அப்பாஸ் ஷாஜகான் பேசுகையில் விழாநாயகரைப்பற்றி செய்குனா கூறிய பல நிகழ்ச்சிகளை விவரித்தார்...


துணைத்தலைவர் காதர்ஷாகிப் உரையாற்றுகையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் மகான்களின் மூலம் அவர் பெற்ற நன்மைகளைபற்றியும் விவரித்தார்...


கிளியனூர் இஸ்மத் பேசுகையில்
மகான்களிடம் ஞானங்களை நாம்பெறவேண்டும் வெறும் நோய்களுக்காகமட்டும் அவர்களிடம் நாம் போய் நிற்கக்கூடாது என்று வழியுறுத்திபேசினார்....

வீடியோ காட்சிகள்




இறுதியாக மதரஸா வளர்ச்சிப் பணிக்காக ஆர்வத்துடன் செயலாற்றிய பல ஆன்மீக சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது....










பின் துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...

ஐயமும் தெளிவும்

ஒரு அமானிதத்தை எடுத்து மிருகங்கள் மரங்கள் மலைகளிடம் சுமக்க முடியுமா…?என இறைவன் கேட்டதற்கு அவைகள் மறுத்துவிட்டன.ஆனால் மனிதன் அவற்றை சுமந்து அநியாயக்காரனாகவும் மூடனாகவும் திரிகிறான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறதே அதன் விளக்கம் என்ன..?

மிருகங்கள் என்பது அது மிருகங்கள்தான். ஆனால் இரண்டுகால் மிருகத்தைவிட நான்கு கால் மிருகம் மிகவும் சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அது அப்படியே இயற்கையிலேயே இருக்கிறது.அதற்கு ஒன்றும் தெரியாது.ஏதாவது ஒன்றில் முட்டினாலும் அதற்கு தெரியாது.

ஆனால் மனிதனுக்கு இறைவன் கொடுத்திருப்பது பெரிய அமானிதம் எதுவென்றால் அறிவு. மனிதன்அறிவை சுமந்திருக்கிறான்.அவனிடம் இருக்கக் கூடிய ஒவ்வொரு உறுப்புகளும் அறிவுடையதாகும் விஷயமுடையதாகவும் இருக்கிறது. அதிலிருந்து எல்லா நன்மைகள் தீமைகள் பெறக்கூடியவனாகவும் மனிதன் இருக்கிறான்.

மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று இறைவன் வரையறுத்துள்ளான்.அதற்கு மாற்றமாக ஒருவன் நடந்து விட்டானென்றால் அவனுடைய அமானிதத்தை இழந்துவிடுகிறான்.

எல்லாவகையிலுமே மனிதன்தான் முக்கியமானவன்.அவனுக்கு எல்லா அறிவையும் இறைவன் வழங்கியிருக்கிறான்.

கொடுத்த அமானிதத்தை மனிதன் காப்பாற்ற வேண்டும்.அவன் இறைவனுக்கு மாற்றமாக நடந்துக் கொண்டால் ஆபத்து உண்டாகும்.

மனிதனிடம் அறிவுகள் இருந்தும் அதை விளங்காமல் கேடுகளை சுமந்துக் கொண்டிருக்கிறான்.
மனிதனுக்கு தடுக்கப்பட்டதை உண்ணுகிறான் குடிக்கிறான் ஏனென்றால் அவன் அந்த உண்மையை விட்டுவிட்டான். ஆபத்தான விசயங்களை செய்யக்கூடிய நிலமை வந்துவிட்டது.
அமானிதம் என்று சொன்னால் என்ன…?
இறைவன் தன்னுடைய இரகசியத்தை மனிதனுக்குதான் கொடுத்திருக்கிறான்.ஆனால் மனிதன் அதை மறந்துவிட்டான்.

- இமாம் கலீல்அவன் மௌலானா

புனித கந்தூரிவிழா

புனித இராத்தீபு நிகழ்ச்சி



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 1.11.2009 ஞாயிறு மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சியும் ,
குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாசீன் மௌலானா அல்ஹாஷிமிய்(ரலி) அவர்களின்

45வது கந்தூரிவிழா எதிர்வரும் 4.11.2009 அன்று பிறை 17ல் நடைபெற உள்ளதால் அவர்களின் புகழ்மாலையும் ஒதப்பட்டது.
இன் நிகழ்ச்சியில் மௌலானா மார்களும் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்நிகழ்ச்சிக்கு பின் இஷாத் தொழுகை அங்கே நடைப்பெற்றது.