This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

லஜ்னத்துல் இர்பானித் தவ்ஹீத்


நன்றி - அபுல்பசர்

மஜ்லிஸ் - 1

நாள்: வியாழக்கிழமை

தேதி: 01/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)





சபையால் மனதுக்கு சந்தோஷம்



எனது அன்பிற்குரிய முரீதுகளே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய‌ நன்றி உரித்தாக்குக. ஆரம்ப காலத்தில் இந்த சபை சிறியதாக பிள்ளைகள் காலித், முஸ்தபா மற்ற மதுக்கூர் பிள்ளைகள் அதிகமானவர்கள் இருந்துதான் சபைகளை நடத்தி வந்தார்கள். அதற்கு பின்னால், பல பகுதிகளில் இருந்தும் பிள்ளைகள் நிறைய வர தொடங்கினார்கள். அதற்கு பின்னால் ஆட்சி மாறுவது போல எங்களுடைய சபையும், தலைமைத்துவமும், மற்றவைகள் எல்லாம் ஒருவகையில் மாறி, கொஞ்ச காலம் நன்றாக இருந்தது.



அதற்கு பிறகு, அது திரும்ப கீழே போகக்கூடிய நிலைக்கு வந்து கொண்டிருந்தது. காரணம், சபையினுடைய நிர்வாக ஒழுங்கு முறைகள் சரியாக இல்லாமல் இருந்ததுதான் காரணம். ஒரு சபைக்குரிய ஒழுங்கு முறைகள் சரியாக இருக்க வேண்டும். அப்படி அந்த ஒழுங்கு முறைகள் சரியாக இருந்தால் எல்லோரும் அந்த சபையை விரும்புவார்கள். ஒழுங்கு முறைகள் சரியில்லையாகவும், தலைவராக இருக்கின்றவர்கள் மற்றவர்களை நாங்கள் எங்களை விட மிகக் குறைந்தவர்கள் என நினைக்கின்றதாலேயும், அந்த சபை ஒழுங்காக நடக்கக்கூடிய வழியில்லாமல் போய்விடுகிறது. மற்ற முரீதுகளும், அங்கத்தினர்களும் அதை சரியாக செய்ய விரும்பமாட்டார்கள். அந்த நிலை முரீதுகளுக்கு உண்டாகும்.



இந்த நிலையில் இப்பொழுது இன்னொரு தலைமை பீடம் உண்டாகி, அது இப்போது, அழகாக நடந்து வருவதாக எல்லாப் பிள்ளைகளும் சொல்கிறார்கள். எல்லோரும் ஒன்றாய் இருந்து, ஒழுங்கான முறையில், ஒற்றுமையாக அவரவர்கள் விரும்பியப் படி அழகாக செய்து வருகிறார்கள். எவருமே இதை தடுப்பதற்கு இல்லை. தலைவர் கூட தடுப்பது இல்லை. நல்ல முறையில் அவரவர்கள் விருப்பத்தோட செய்து வருகிறார்கள்‌ பிள்ளைகள் என்று கேள்விப்படுகிற நேரத்தில் மித்தம் சந்தோஷம் மனதுக்கு.



சபைகளில் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு தலைவர் இருந்தால் தன் இஷ்டத்துக்கு எந்த ஒரு வேலையும் செய்யக் கூடாது. நானாக இருந்தாலும் கூட என்னுடைய இஷ்டதுக்கு நான் எதையும் செய்ய போறது இல்லை. பத்து பேர்கிட்ட கேட்பேன். கேட்டுத்தான் செய்வேன். ஒருவரிடம் ஒரு குற்றம் இருக்கும் என்றால், அதையும் பலமுறை கேட்பேன். எல்லோரிடமும் விசாரிப்பேன். எப்படி, என்ன நடக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரியாமலேயே விசாரித்திடுவேன். பிறகுதான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்க்கிறது பழக்கம். இந்த சபை இப்பொழுது, ஒரு நல்ல ஒழுங்கான முறைக்கு வந்து நல்ல நல்ல பிள்ளைகள் இதில் சேர்ந்து, உங்களுடைய சபையை நடத்தி வருகிறீர்கள். பொதுவா ஒரு சபை இருந்தால் அதில் பகுதி பிரிந்து குழப்பங்கள் செய்யக்கூடிய நபர்கள் சபைகளுக்கு அழகாய் இருக்காது. எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து, ஒரே மனதோட, சரியான முறையில், ஒழுங்கான முறையில் வரவேண்டி இருக்கிறது.



அல்லாஹ்வுக்காக வந்தவர்கள் 5 பேர்தான்



பொதுவாக சபை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு ஷெய்கிற்கு அநேகமாக நிறைய முரீதுகளும் இருப்பார்கள். குறைந்த முரீதுகளும் இருப்பார்கள். இப்படி இருக்கிறதுல அவருக்கு 4, 5 பேர்கள்தான் முக்கியமான சில முரீதுகளாய் இருப்பார்கள். காரணம், அவர்கள் அந்த விளக்கத்தை விளங்கினவர்களாய் இருப்பார்கள். ஒரு ஷெய்கிற்கு விளக்கத்தை விளங்கினவர்கள் அவ்வளவு பேர்தான் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டும் வந்திருப்பார்கள். எப்படி, எனக்கு நிறைய பணம் வேண்டும், நான் நோயாளியாய் இருக்கின்றேன். எனக்கு சுகம் வர வேண்டும். பணவசதியே எனக்கு இல்லை. அதனால் எனக்கு நிறைய பணம் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போவதெல்லாம் உலக விஷயங்களுகுக்தான். அப்படி உள்ள ஜனங்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆனால், அந்த அல்லாஹ்வுக்காக வந்தவர்கள் அந்த 5 பேர்தான் இருப்பார்கள்.



ஒரு சிலர் தற்பெருமைக்காக வருவார்கள். தான் பெருமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வருவார்கள். ஆனால், இப்ப நாங்கள் கூட்டல், கழித்தல் செய்து பார்த்ததில் எங்களுக்கு இவ்வளவு பிள்ளைகள் விஷயம் விளங்கின பிள்ளைகள்தான் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கு விளங்குகிறது. பெரிய சந்தோஷம். ஏனென்றால், நீங்களெல்லாம் விஷயம் விளங்காத பிள்ளைகளாக இருந்தால் இவ்வளவுக்கு எல்லோரும் போயிருப்பீர்கள். ஒரு சோதனை மாதிரி நடந்து முடிந்துவிட்டது. இப்ப இங்கு இருக்கின்ற எல்லோருமே ஹக்கை பற்றி அறிகிற சந்தோஷத்தோட, அதில் விருப்புமுள்ளவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம். ஒரு சிலர் குற்றம் சொல்வார்கள். அவர்கள் இருக்கட்டும், போகட்டும். எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.



எங்களுக்கு நல்ல பிள்ளைகளாக, விஷயம் விளக்கமுள்ள பிள்ளைகளாக, தவ்ஹீதை விரும்பின‌ பிள்ளைகளாக, தவ்ஹீதிற்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக, தவ்ஹீத் என்று சொன்னால் அல்லாஹ்வுக்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக, ரசூலுக்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக இருந்தால் அதுவே போதும். இவருக்கு இத்தனை முரீத் இருக்கிறார்கள். அவருக்கு ஞானம் எப்பவுமே கொட்டிக் கொண்டே இருக்கிறது. இவர் நேரத்தோட ஞானமெல்லாம் படிச்சிட்டே வந்திருக்கிறார், அப்படி சொல்லக் கூடிய ஆட்கள் எங்களுக்கு தேவையில்லை. ஏன், நேரத்தோட படிச்சிட்டு வந்தவங்க இங்கு வரவேண்டிய அவசியமில்லையே. நாங்கள், ஒரு ஆசிரியரிடம் போகிறோம் என்றால் படிக்கிறத்துக்குதான். ஆசிரியருக்கு படிச்சுக் கொடுக்க போவதில்லையே. இங்கு வருவது தவ்ஹீதை விளங்குவதற்கு, படிப்பதற்கு அல்ல.



ஒவ்வொருவரும் பேசி, கதைச்சு அதைக்கொண்டு, நீங்கள் உங்களுக்குள்ளேயே விளக்கத்தை விளங்கி கொள்கிறீர்கள். இப்ப, நான் பேசுகிற நேரத்தில் நீங்கள் சில விஷய விளக்கங்களை விளங்கிக் கொள்கிறீர்கள். மற்றவர்களுக்கு தெரியாததை மற்றவர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்கிறீர்கள். இந்த வகையில் நாங்கள் தவ்ஹீதுடைய இல்மை ஒவ்வொருவரிடமும் பரிமாறிக் கொள்கிறீர்கள். அதுதான் மிக அவசியம்.



ஆரம்பக் காலத்தில் 2, 3 பேர் ஒன்று சேர்ந்தால் தவ்ஹீதைத்தான் பேசுவார்களாம். வேறொன்றும் பேச்சு இல்லை. அது 12, 1 மணி வரை போகுமாம் பேச்சு. கதைச்சு, கதைச்சு அதில் வருகிற‌ சந்தேகங்கள் எல்லாவற்றையும் பேசி இப்படித்தானாம் பேசுவார்கள். இதனால் நன்மை என்னவென்று கேட்டால் தவ்ஹீதை விளங்கக்கூடிய ஆர்வம் எங்கள் பிள்ளைகளுக்கிடையில் அதிகமாக இருக்கின்றது என்ப‌துதான் கருத்து. உண்மையிலேயே ஒரு தவ்ஹீதுடைய சபையாக இருந்தால் அதில் ஞான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். பொய்க்கு வந்து அமர்ந்திருந்து, எல்லாம் தெரிந்தவர்கள் போல தலையாட்டி, சிரிச்சு, சிரிச்சு அதை கேட்டுக் கொண்டு இருந்து, ஒன்றுமே இல்லாமல் போறது என்றால் எருமைக்கு மேலே மழை பெய்தது போலத்தான்.



க‌டுமையாக‌ ம‌ழை பெய்கிற‌ நேர‌த்தில் ம‌ற்ற‌ மாடுக‌ளாவ‌து த‌லையை ப‌ணிக்கும். ஆடு போக‌ ப‌ய‌ப்ப‌டும். மித்த‌ம் க‌ஷ்ட‌ப்ப‌டும். எருமைக்கு அந்த‌ பேச்சே இல்லை. அது அழ‌காக‌ ந‌ட‌ந்து போகும். ஏனென்றால், அதற்கு ம‌ழை பெய்கிறதா என்றே தெரியாது. சும்மா, பொய்க்கு த‌லை ஆட்டுவ‌தும், சிரிக்கிற‌தும் தேவையில்லை. த‌வ்ஹீதை விள‌ங்க‌னும். இப்ப‌, இவ்வ‌ள‌வு பிள்ளைக‌ள் தவ்ஹீதை விள‌ங்கின‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌தை ப‌ற்றி நாங்க‌ள் ச‌ந்தோஷ‌ப்ப‌டுகிறோம். உங்க‌ளுக்குள்ளே ஏதும் குழ‌ப்ப‌ம் ஒன்றும் இல்லையே? எல்லாம் நல்லாதானே இருக்கிறீர்க‌ள்? ச‌ந்தோஷமாக‌ இருக்கின்றீர்க‌ள். எல்லா விள‌க்க‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ விள‌ங்கிக் கொள்கிறீர்க‌ள்.



அவர்கள்தான் ஞானிகள்



ர‌சூல் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் க‌ந்தூரியை அழ‌காய் செய்கிறீர்க‌ள். குதுபு நாய‌க‌த்துடைய‌ க‌ந்தூரியை செய்கிறீர்க‌ள். க‌ந்தூரி எத‌ற்கு செய்ய‌னும் என்று கேட்கிற‌து இல்லையே. நாங்க‌ள் சொல்லியிருக்கிறோம் ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் பேரிலும் நீங்க‌ள் விழா (க‌ந்தூரி) செய்யுங்க‌ள் என்று. ஏன் தெரியுமா? ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்கள்தான் குத்புமார்க‌ள் எல்லோருக்குமே த‌லைவ‌ர்க‌ள்.



இன்றைக்கு கூட‌ எங்க‌ள் ஊரில் மிக‌ப்ப‌ழைய‌ கால‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌ள்ளி உள்ள‌து. எங்க‌ளுடைய‌ ஊரிலிருந்து கொஞ்ச‌ தூர‌த்தில்தான் உள்ள‌து. அது ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கும் உரிய‌ ப‌ள்ளி. ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி)அவ‌ர்க‌ளுடைய‌ கால‌த்தில் அங்கு க‌ந்தூரி கொடுப்பார்க‌ள். அங்கு ஜ‌ன‌ங்க‌ள் போவார்க‌ள். ந‌ம்பி த‌ன‌க்கு தேவையான‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை கேட்டு நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடு போகிறவ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். இப்ப‌, எங்கள் வீட்டில் கூட‌ பிள்ளைக‌ள் ஏதாவ‌தும் செய்வ‌தாக‌ இருந்தால், ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் பேரில் ஒரு காணிக்கையை போட்டு வ‌ருவ‌துதான் ப‌ழ‌க்க‌ம். எல்லோருமே அப்ப‌டித்தான். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ அந்த‌ வேலையை செய்கிறார்க‌ள். ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ளுடைய‌ பேரிலும் ஒரு 2, 3 நாளாவ‌து ந‌ல்ல‌ முறையில் செய்யுங்க‌ள். 11 நாள் செய்தாலும் பர‌வாயில்லை. நாங்க‌ள் நன்றாக வாழ வேண்டும். நன்றாக இருக்க வேண்டும், நாங்க‌ சிற‌ப்பா இருக்க வேண்டும். மேன்மையாக‌ இருக்க வேண்டும். அதுமாத்திர‌ம‌ல்ல‌ எங்க‌ளுடைய‌ ச‌ந்த‌திக‌ளும் நன்றாக இருக்க வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு கொடிய‌ நோய்க‌ள், ஆப‌த்துக்க‌ள் வ‌ர‌க்கூடாது. அந்த‌ எண்ண‌த்தோட‌ நீங்க‌ள் ப‌ண‌த்தைக் கொடுத்து ந‌ல்ல‌ முறையில் செய்யுங்க‌ள். அத‌னால் உங்க‌ளுக்கு நன்றாகத்தான் இருக்குமே அல்லாம‌ல் ஒருக்காலும் கெடுதி வ‌ராது. ர‌சூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரில்‌, ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவர்களின் பேரில், முஹையுத்தீன் ஆண்ட‌கை பேரில்‌ எல்லாம் செய்வ‌தில் எல்லாச் சிற‌ப்பும் இருக்கின்றது. உங்க‌ளுக்கு அல்லாஹ் ந‌ன்மையை இன்னும் த‌ர‌ட்டும்.



ஆனால் இதுவும் ஞான‌ம்தான். ஞானிக‌ளை நாங்க‌ள் கெள‌ர‌விக்கிறோம். ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) சும்மா இருந்த‌வ‌ர்க‌ளா? இன்றைக்கு அவ‌ர்க‌ளுடைய‌ ஞான‌த்தைதான் நாங்க‌ள் பேசுகிறோம். எதை அலி (ர‌லி) அவ‌ர்க‌ள் ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ளுக்கு சொன்னார்க‌ளோ அந்த‌ விஷ‌ய‌த்தைதான் நாங்க‌ பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த‌ விஷ‌ய‌த்தை நாங்க‌ சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதில் ஏதும் த‌வ‌று இருக்கும் என்றால் காட்டுங்க‌ள், என‌க்கு எந்த‌ இட‌த்தில்‌ த‌வ‌று உள்ள‌து என்று. அவ‌ர்க‌ள்தான் ஞானிக‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வார்த்தையை ஞான‌ பாஷையில் பேசிவிட்டால் அவ‌ங்க‌ ஞானியாவார்க‌ளா? அவ‌ர்க‌ள் சாணிக‌ள்தான். ஏனென்றால் மாட்டிலிருந்து தேவையில்லாதுதானே வெளியே போகிறது. தேவையில்லாத கழிவு பொருள் போகிறதை நாங்க சாணியென்றுதான் சொல்கிறோம். அந்தக் கழிவு பொருள்தான் அப்படி சொல்லும். ஞானத்தை கிரகிச்ச பொருள்களில் எதுவுமே தன்னை ஞானியென்று சொல்லிக் கொண்டு திரியாது.



ஞானம் அல்ல பாணம்



ஞான‌ம் எங்கே இருக்கிற‌து, ஞான‌ம் எது என்ப‌தை விளங்கிக் கொள்ள வேண்டும். ஞான‌த்தை எல்லோரிடமும் கேட்க‌லாம். ஆனால் வ‌ழி த‌வ‌ற‌க்கூடாது என்றுதான் சொல்வது. ஞான‌ம் படித்தவர்கள்‌ எத்த‌னையோ பேர் இருந்திருக்கிறார்கள்? ஹ‌காய்குஸ‌பா எழுதின‌து யாரு? துஹ்ப‌த்துல் முர்ஸ‌லா எழுதின‌து யாரு? அந்த‌ மாதிரி அந்த‌ந்த‌ ஆட்களிடம் தெரிந்தவர்களிடம் ‌கேட்டாத்தான் ஞான‌ம் இருக்கும். இல்லாவிட்டால் ஞான‌ம் அல்ல பாண‌ம், குத்துகிற‌ அம்பு அதுதான் வ‌ரும். ஞான‌த்துடைய‌ விஷ‌ய‌த்தை ஒவ்வொருவ‌ரும் விள‌ங்க‌னும். ஞான‌த்தைப் ப‌ற்றி விள‌ங்குவ‌த‌ற்கு ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தை வாசிக்க‌னும். முக்கிய‌மான் புத்த‌க‌ங்க‌ள் நாங்க‌ள் எழுதியிருக்கிறோம். அதையும் பார்க்க‌லாம். அதில் ‌ வ‌ருகிற‌ ச‌ந்தேக‌த்தை கேட்க‌லாம். அதில் விள‌ங்கிக் கொள்வ‌து எவ்வ‌ள‌வோ ந‌ல்ல‌து. அதில் எவ்வ‌ள‌வோ நுனுக்க‌மான‌ விஷ‌ய‌ம் எல்லாம் இருக்கும். அதை ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ப‌ல‌முறை ப‌டிக்கிற‌ நேர‌த்தில‌ ப‌ல‌வ‌கையான‌ நுனுக்க‌ங்க‌ள் உண்டாகும்.



ச‌ர்புதீன் ஆலிம்ஷா என்றொரு மெளலவி இருந்தார்கள். ஜ‌மாலியாவில் அவர்கள்‌ ஓதிக் கொடுத்தவர்கள். எங்கள்‌ வாப்பா கால‌த்தில எல்லாம் என‌க்கு தெரியும். ஞான‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌ம் எதுவும் அவருக்கு தெரியாது. அப்பொழுது என்னிட‌ம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு என்னிட‌ம் பைஅத் ஆக‌னும் என்று சொல்லி, பைஅத் ஆகிவிட்டார்கள், ந‌ல்ல‌ வயதானவர்கள்‌. சொன்னாராம் நான் இவ்வ‌ள‌வு கால‌ம் குர்ஆன் ஓதிய‌துதான். ஆலிமும் கூட‌ விள‌ங்கித்தானே ஓதுவாரு. ஆனால் நான் அறிந்த‌து ஒன்றே ஒன்றுதான். ஒரேயொரு கருத்துத்தான் தெரியும். ஆனால் இப்ப எடுக்கிற நேரத்திலே எனக்கு எல்லா வகையான கருத்துக்களும் என்ற மனதுக்கு வருது என்று. அதுபோல நாங்கள் ஞான புத்தகங்களை பலமுறை வாசித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு நாங்கள் எப்பவுமே இரண்டாவது ஆகிறதுமில்லை. ஆகிவிடவும் மாட்டோம். ஞானத்திலே எப்பவுமே எங்க பிள்ளைகள் இன்னொருவருக்கு இரண்டாவது ஆகுறதுமில்லை. ஆகவும் மாட்டோம். ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இப்ப எங்களது சபை நல்ல ஒழுங்கான முறையிலே, அதாவது சல்லடையில் எல்லாவற்றையும் போட்டு, அரைச்சி சக்கையொல்லாம் போனதிற்கு பிறகு நல்லதை கொண்டு வந்து வைத்திருக்கின்றோம். இங்கு எனக்கு தேவையான முறையில் அல்லாஹ் பார்த்து அப்படியே அது சரிபண்ணி வைத்திருக்கிறது. அதேமாதிரியே எப்பவுமே எல்லோரும் இருக்க வேண்டும். சபைக்கு வருகிற நேரத்திலே முனாஃபிக் தனமோ, தற்பெருமையோ யாருக்கும் இருக்கக் கூடாது. தற்பெருமை நிச்சயமாக மனிதனுடைய வாழ்க்கையை கெடுத்தே போடும். ஆனால், இன்றைக்கு நல்லா இருந்தால் இன்னும் கொஞ்சம் நாள் போனதுக்கு பிறகு பார்க்கலாம் என்னவருவதென்று.



மற்றவர்களை பற்றி பொறாமை கொண்டால் நிச்சயமாக நீங்கள் பாருங்கள் எவன் பொறாமை கொன்டானோ அவன் நிச்சயமாக கீழே தட்டப்படுவான், தாழ்த்தப்படுவான். எனது வாழ்க்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். மற்றவர் வாழ்க்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். யாரும் பொறாமை கொள்ளக் கூடாது.



அப்படி எங்கள் பிள்ளைகள் யாருக்கும் தற்பெருமை, பொறாமை இதன் கிட்டேயே நெருங்கி விடாதீர்கள். ஆக மோசமான நோய்தான் அது. அதனால் நோயும் வரும் மனுசனுக்கு. பொறாமை படுகிறவனுக்கு சும்மா டென்ஷன் உண்டாகிவிடும். டென்ஷன் உண்டானால் பிரஷ்ஷர் மற்றும் சீனி கூடும். இப்படி ஒவ்வொன்றும் கூடிக் கொண்டு போய் நோயாளியாகிவிடுவான் அவன். தற்பெருமையிலே "நான் தான் பெரிய மனுஷன். அவர்கிட்ட கேட்கக் கூடாது. அவர் என்ன செய்வார், இவன் தற்பெருமைக்காரன், இவனை நாங்கள் மதிக்கக் கூடாது. இப்படி மதிப்பு கொஞ்சம் தற்பெருமையாலேயே போய்விடும். மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா அவர்களுடைய கதை ஒன்று.



அவங்க ஓதிக் கொடுக்கிற காலத்திலே, அஹ்மது அலி ஆலிம்ஷா என்று ஒருவர் ஓதியிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ பேர் ஓதியிருக்கிறார்கள். பெரிய அறிவாளி. மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா என்று சொன்னால் அவர்கள் லேசான அறிவாளி அல்ல பெரிய அறிவாளி. அறபியிலும் அப்படித்தான். மித்தம் பேருக்கு அவங்களை பற்றி தெரியாது பாருங்கள். ஒரு நாள் என்ன செய்தார்களாம் அஹமது அலியே என்று கூப்பிட்டார்களாம்.



அஹ்மது அலியே - அவர்களுடைய பெயர்.

நஹ்வில் புலியே - நஹ்வு - அறபி இலக்கணத்தில் அவர்கள் புலி

அலமாரிக்குள்ள எலி - அலமாரிக்குள் எலி இருந்துள்ளது

கம்பையெடுத்து ஒழி - அடிச்சு போடு

ஹஸது இல்லாட்டி ஒலி - அவ்வளவு பெரிய அறிவாளிக்கு ஹஸது இல்லாட்டி ஒலி என்று சொல்லி விட்டார்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா அவர்கள். அவர்கள் எல்லாம் சிறப்பான மனிதர். அவர்களிடம் பொறாமை என்பதே இருக்கவில்லையே. நல்ல பெரிய மனிதர் அவர். எங்க வாப்பாவுடைய உஸ்தாதுவிற்கு உஸ்தாது. அந்த அஹ்மது அலி ஆலிம்ஷாதான் எங்களுடைய வாப்பாவுக்கு உஸ்தாது.



அல்லாஹ்வும் சபித்தான், ரசூலும் (ஸல்) சபித்தார்கள்



பிள்ளைகள் மற்றவர்களைப் பற்றி பொறாமை கொள்ளக் கூடாது. நீங்கள் கோப‌ங்க‌ள் ஒருவ‌ரோட‌ அதிக‌ம் வைத்துக் கொள்ள‌ கூடாது. ஆனால், உண்மையாக‌வே உங்க‌ளுக்கு ஒருவ‌ர் மோச‌மான‌ முறையில் ந‌ட‌ந்தார் என்றால் கோப‌ம் வ‌ர‌த்தான் செய்யும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே ச‌பித்திருக்கிறார்க‌ளே. அல்லாஹ்வும் சும்மாவா விட்டான். அல்லாஹ் ச‌பித்தானா இல்லையா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ‌ர்க‌ளுக்கு அநியாய‌ம் செய்த‌ அபுல‌ஹ‌பிற்கு என்ன‌ அல்லாஹ் சொன்னான்? (த‌ப்ப‌த்திய‌தா சூரா) க‌ண‌வ‌னுக்கும் ச‌பித்தான். பின்னால் ஹ‌ம்மா ல‌த்த‌ல் ஹ‌த‌ப் என்று அவளுடைய பெயரையும் கொடுத்து விட்டான் அல்லாஹ். இது இன்றைக்கும் இவ்வளவு கால‌மும் இருக்கின்றது. ர‌சூலுல்லாஹ்வுடைய‌ கால‌த்திலிருந்து வ‌ஹீ இற‌ங்கிய‌து இன்றைக்கு வ‌ரையிலும் இருக்கின்றது. இன்றைக்கு வ‌ரையிலும் ச‌பிச்சுக் கொண்டே இருக்கிறார்க‌ள். அல்லாஹ் மட்டுமா சபித்தது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சபித்தார்கள். இன்றைக்கு நாங்களும் சபித்துக் கொண்டிருக்கிறோம். அபூலஹபுடைய இரண்டு கைகளும் சூகையாகட்டும் (தப்ப‌தியதா அபிலஹபின் வ தப்). இன்றைக்கு நாங்கள் ஓதுவதுதானே. இன்றைக்கு சொல்கிற ஒவ்வொரு வார்த்தையிலும் இன்றைக்கு சபிப்புத்தான். அல்லாஹ் சபித்திருக்கான். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம் இருந்தாலும் கூட அவன் சபித்துக் கொண்டு இருக்கிறான்.



ஒரு நாள் அபுஜஹீல், மர்வான் எல்லாம் ஒன்று சேர்ந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழ வருவார்கள். அப்போது ஸஜ்தா செய்வார்கள். அவர்கள் ஸஜ்தா செய்யும் நேரத்தில் ஒட்டக‌த்தின் குடலை கொண்டு வந்து அவர்கள் மேலே போட வேண்டும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு சஹாபி ஒருவரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை ஒருவர்தானாம் கூட இருந்து உள்ளார்கள். ஒட்டகத்தின் குடலை கொண்டு வந்து போட்டார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எழும்ப முடியவில்லை. சரியான கஷ்டம். அவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கி கொண்டு எப்படி எழும்புவது. அப்படியே ஸஜ்தாவிலேயே இருந்து விட்டார்களாம். ஃபாத்திமா (ரலி) நாயகி கேள்விப்பட்டு ஓடி வந்தார்களாம். ஓடி வந்து அவற்றையெல்லாம் சுத்தம் செய்து அப்புறப்படுத்தினார்களாம். பிறகுதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலையை தூக்கி நின்றார்களாம். எழுந்து கையை ஏந்தி அல்லாஹ் இவர்களை ஹலாலாக்கி போடு என்று சபித்தார்களாம். சபித்தது பத்ரு யுத்ததில்தான் அவ்வளவு பேரும் சபிக்கப்பட்டது குளோஸ் ஆனார்கள். சபிக்க இயலாமலும் இல்லை. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு இடத்தில் அல்ல. எத்தனையோ இடத்தில் சபித்திருக்கிறார்கள். சபிக்க வேண்டிய நேரத்திலே சபிக்கத்தான் செய்வார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சபிக்கவில்லை என்றால் இதற்கு என்ன சொல்வது? அல்லாஹ் சபிக்கவில்லை என்று சொன்னால் "தப்பத்தியதா" வை வைத்து என்ன செய்வது? அல்லாஹ்வும் சபித்துள்ளான், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சபித்துள்ளார்கள், குத்பு நாயகம் (ரலி) அவர்களும் சபித்துள்ளார்கள், சாதுலி நாயகம் (ரலி) அவர்களும் சபித்துள்ளார்கள். அவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததால் சபித்தார்கள். மனிதர்களுக்கு சபிக்கிறதுக்கு வைத்துள்ளான் அல்லாஹ். நல்லா வாழுங்கள் என்று நல்லவர்களை பார்த்து சொல்லனும். ஆகவே மோசமானவனை பார்த்து நாசமா போ என்று சொல்ல வேண்டியதுதான். இது அவரவர்கள் தேடிக் கொள்வதுதானே. அது ஆகுகிறது ஆகத்தான் செய்யும். யாராலேயும் நிறுத்த முடியாது.



சுவர்காரம் கரைய வேண்டியது கரைந்துக் கொண்டே போகும். எந்நாளும் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தால் அது கரைகின்றதை நிறுத்த முடியுமா? பிள்ளைகள் எல்லாம் பொறாமை, தற்பெருமை, மற்றவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய் பேசுவது வைத்துக் கொள்ளாதீர்கள். பொய் சொல்வதால் வாய்க்குத்தான் ஆபத்து. அதுக்கு மட்டுமா? நாக்குக்கு, உதட்டுக்கு, தொண்டைக்கு ஆபத்து. எவனொருவன் அநியாயமான பொய்யை சொல்கிறானோ, பெரும் பொய்களை, பாவமான பொய்களை சொல்லக் கூடாது. எது உண்மையோ அதைத்தான் சொல்ல வேண்டும். உண்மை, சத்தியம் அதுதான் தேவை. அதனால ஒரு கெடுதியும் வருவதைப் பற்றி பரவாயிலையே. குத்பு நாயகத்திடம் எவ்வளவு இருக்கு என்று கேட்ட பொழுது, இவ்வளவுதான் இருக்கு என்று சொன்னப்போது கள்வனுக்கே புத்தி வந்துவிட்டது. கள்வனே திருந்தி விட்டான். பாரதியார் சொல்கிறார்:



பொய் சொல்ல கூடாது பாப்பா

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

தெய்வம் நமக்கு துணை பாப்பா ‍ ஒரு

தீங்கும் வரமாட்டாது பாப்பா.



எங்களுக்கு பாரதியாருக்கு பத்வா கொடுக்கவியலாது.



ஆகவே நீங்கள் உங்கள் மனங்களை துப்புறப்படுத்தி எல்லா பிள்ளைகளும், இன்னும் நல்ல முறையில் சீரடைந்து, நல்ல ஞானிகளாக வர அல்லாஹ் உதவி செய்யட்டும். அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தையும் தந்து, கராமாத்துக்களையும் தந்து, அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும். உங்களுடைய தொழில்களிலும் நிறைய செல்வத்தை தந்து சிறப்பாக்கி வைக்கட்டும். உங்களுடைய உடல் நலங்களையும் அல்லாஹ் பாதுகாத்து, கொடிய நோய்கள், ஆபத்துக்கள் வராமல் பாதுகாத்து, உங்களுடைய பிள்ளை குட்டிகள், மனைவிமார், உங்களை சேர்ந்தவர்கள், நீங்க அன்பாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் பாதுகாத்து, நல்ல வாழ்வை கொடுத்து சிறப்பாக்கி வைக்கட்டும்.



ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது

நன்றி

அமீர்அலி
ஆதம் அப்துல் குத்தூஸ்

சம்பை நிறைவான ஜியாரத் விழா




இன்று 17.04.2010 காலையில் சம்பைப்பட்டினத்தில் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா (ரலி) அவர்களின் விசால் தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல ஊர்களிலிருந்தும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் ஜியாரத் விழாவில் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.


புகைப்படங்கள் - மதுக்கூர் இன்ஞினியர் இத்ரீஸ் ஹக்கியுல் காதிரி

நன்றி - மதுக்கூர் ராஜாமுஹம்மது

ஜமாலிய்யா மௌலானா(ரலி) அவர்களின் ஜியாரத் விழா







துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 16.04.2010 வெள்ளிக்கிழமை மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களின் 61ஆவது புனித விசால் தினத்தை(கந்தூரி ஜியாரத்) முன்னிட்டு இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரியா ஓதப்பட்டது.

நிர்வாகத்தலைவர் சஹாபுதீன் சங்கைமிகு ஜமாலிய்யா மௌலானா அவர்களின் வாழ்க்கை சரிதையை சுருக்கமாக கூறினார்.

17.04.2010 அன்று சம்பைப்பட்டிணத்தில் புனித ஜியாரஅத் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சங்கைமிகு இமாம் கலீல்அவுன் மௌலானா அவர்களின் குவைத் விஜயத்திற்கு உடன் சென்றுவந்த நிர்வாகத்தலைவர் சஹாபுதீன் அக்பர் ஷாஜகான் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவவிக்கப்பட்டனர்.

துவக்கத்தின் நிறைவுவிழா

சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் புனித மஜ்லிஸ் ஏப்ரல் 10ம் தேதி துவாவுடன் நிறைவுப் பெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பல நாட்டு இஸ்லாமியர்கள் சங்கைமிகு மௌலானா அவர்களை சந்தித்து துவா பெற்றார்கள்.
முரிதீன்கள் மற்றும் அஹ்பாபுகள் பலரும் பத்துதினங்களாக நடைப்பெற்ற இன்நிகழ்ச்சியில் கலந்து ஞான சந்தேகங்களை கேட்டு தங்களை தெளிவுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

சுங்கைமிகு மௌலானா அவர்கள் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு துபாயிலிருந்து குவைத் புறப்பட்டார்கள்.

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் சங்கைமிகு மௌலானா அவர்களை வரவேற்று தங்களின் மகிழ்ச்சியினை தெரியப்படுத்தினார்கள்.

துபாயில் நடைப்பெற்ற மஜ்லிஸ்சிற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றி தெரியபடுத்தி கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் வீடியோ கிளீப் மற்றும் ஆடியோ மற்றும் உபநியாசங்கள் வெளியீடப்படும்.

புகைப்படங்கள் -மதுக்கூர் ராஜாமுஹம்மது,
கடலூர் -கடலூர் முஹம்மது காசிம்,
ஆடியோ -அதிரை அப்துல்ரஹ்மான்,
வீடியோ -திண்டுக்கல் முஹைய்யத்தீன்,
ஆடியோ ரிக்காடிங் -மதுக்கூர் அமீர்அலி.

இவ்விழா சிறப்பாக அமைவதற்கு உதவியானவர்கள்
நிர்வாகத் தலைவர் சஹாபுதீன், முஹம்மது யூசுப், ஷாஜகான்அப்பாஸ், காதர்ஷாகிப், கிளியனூர் இஸ்மத், அதிரை ஷரபுத்தீன், மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவுது, சிராஜ்தீன், சாகுல்ஹமீது, அபுசாலிஹ், மற்றும் அக்பர்ஷாஜகான், மன்னார்குடி ஷேக்தாவுது, ஷேக்மைதீன், திருமக்கோட்டை பக்ருதீன், தாஜ்தீன், அலாவுதீன், வாவா முஹம்மது, அபுல்பஸர், அபுதாபி ஜெகபர்சாதிக்

மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்த
முஹம்மது அமீன்,
நிசார்,
யூசுப்தீன்,

மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி




கடந்த வெள்ளிக்கிழமை சுபுஹ் தொழுகைக்குப்பின் புர்தா ஷரீப் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஓதப்பட்டது. அதிகாலை 6.30 மணிக்கு சங்கைமிகு மௌலானா அவர்கள் சபைக்கு விஜயம் செய்தார்கள்.














சங்கைமிகு மௌலானாவை ஆர்வத்துடன் காணவந்த பாக்கிஸ்தான் நாட்டைச்சார்ந்த சகோதரர்.

பத்திரிக்கைகளுக்கு நன்றி




இலங்கை வெலிகமையில் நடந்த மாபெரும் மீலாதுன்னபி பெருவிழாவில் வெளியீடப்பட்ட அறபு - தமிழ் அகராதி (காமூஸ்) மற்றும் விழாவினை இலங்கையின் தினகரன் நாளிதழும், நவமணி நாளிதழும் செய்தியை பிரசுரித்துள்ளன.

தினகரன் மற்றும் நவமணி நாளிதழ்களுக்கு மற்றும் இந்தியாவிலிருந்து பிரசுரமாகும் தினமணி நாளிதழுக்கும் மற்றும் பிறைமேடை பத்திரிக்கைக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.

பேராசிரியரின் சிறப்புரை

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை முப்பெரும் விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் அவர்களின் சிறப்புரை.



ஆடியோ அதிரை அப்துல் ரஹ்மான்

பேராசிரியர் சிறப்புரை (வீடியோ)











சங்கைமிகு ஷெய்குனாவை துபாய் அரசு அதிகாரி உற்சாக வரவேற்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் துபாய் விஜயத்தில் தினசரி மாலை மஹ்ஃரிப் தொழுகைக்குப்பின் தொடர் மஜ்லிஸ் நிகழ்ச்சி தினமும் நடைப்பெறுகிறது.

இன்றைய மஜ்லிஸில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அது சமயம் துபாய் அரசு அதிகாரியான மதிப்பிற்குரிய அப்துல்ரஹ்மான் அல் ஜரார் - (டைரக்டர் ஆப் டெக்கினிகல் எஜூகேஷன் கெவர்மெண்ட் ஆப் அவுக்காப் துபாய்) அவர்கள் சங்கைமிகு ஷெய்குனாவை வரவேற்பதற்கு மஜ்லிஸிற்கு வருகை புரிந்தார்கள்.
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானாவிற்கு தித்திக்கும் அருள்மறையாம் திருமறையை அவர்களுக்கு வழங்கி வரவேற்றார்கள்.

அங்கு தமிழில் நடைப்பெற்ற மஜ்லிஸில் அமர்ந்து ஆர்வத்துடன் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆன்மீக சகோதரர்களுடன் பணிவுடன் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களும் கீழே அமர்ந்துக் கொள்ள சங்கைமிகு செய்குனா இருக்கையில் அமரும்படி வலியுறுத்தினார்கள்.

நான் தமிழில் உரையாற்றுகின்றேன் எனக் கூறியதும் உங்களின் அருளான உரை எந்த மொழியானாலும் இறையருளால் எனக்கு விளங்கும் என்று பவ்யமாக கூறி ஆர்வத்துடன் உபநியாசங்களை கேட்கலானார்கள்.

மஜ்லிஸ் நிகழ்ச்சிக்குப்பின் சங்கைமிகு ஷெய்குனாவுடன் அலாவினார்கள்.

இன் நிகழ்ச்சியில் அடமங்குடி அப்துல் ரஹ்மான் மற்றும் அவரின் இளவல்களுடன் கலந்துக் கொண்டார்.


















சங்கைமிகுஇமாம் கலீல் அவுன் மௌலானா துபாய் வருகை

துபாய் ஏப்ரல் 1 மாலை 4.30 மணிக்கு சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனியுல் உசைனிய் அவர்களின் 13 ம் ஆண்டு துபாய் விஜயம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

ஏகத்துவமெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள் அங்கத்தினர்கள் பலரும் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்து மலர்கொத்து வழங்கி மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.












































மஹ்ஃரிப் தொழுகைக்குப்பின் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் இல்லத்திற்கு மஜ்லிஸிற்கு வருகைப்புரிகிறார்கள்