துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 14-ம் ஆண்டு துபாய் விஜயம், இறைவனின் கிருபையால் மிகவும் சிறப்படைந்தது.
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகர் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் 14-ம் ஆண்டு துபாய் விஜயம், இறைவனின் கிருபையால் மிகவும் சிறப்படைந்தது.

ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து 29-ம் தேதி வரையில் மஹ்ஃரிப் தொழுகைக்குப் பின், நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் தினம் மஜ்லிஸ் நடைப்பெற்றது.

இந்த மஜ்லிசிற்கு முரிதீன்களும் மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களும் கலந்து தங்களின் சந்தேகங்களை ஷெய்குனாவிடம் கேட்டு தெளிந்தார்கள்.

திருச்சி மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாசீன் அறபுக் கல்லூரி 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் V.M.முஹம்மது ஹஸன் ஆலிம் யாசீனி,V.M.முஹம்மது ஜக்கரிய்யா ஆலிம் யாசீனி ஆகிய மாணவர்கள் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் திரு கரங்களால் யாசீனி பட்டம் பெறுகிறார்கள்.
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி பெருவிழாவில் சிறப்பம்சமாக குத்புல்பரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூயத் தமிழில் எழுதப்பட்ட அரபு-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சுமார்45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல்
ஹு
ஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் வெளியீடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.

இவ்வகராதியை சிறப்புமிகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளரும் அதன் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைய்தீன் அவர்களால் வெளியீடப்பட்டது.
இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன்னபி கந்தூரி விழாவிற்கு
கைருப் பாரியா பெண்கள் அறபிக் கல்லூரியின் முதல்வரும் புதிய பயணம் இதழ் ஆசிரியரும் – தமிழகத்தில் வஹ்ஹாபிகளை தன் நாவன்மையால் தக்க ஆதாரங்களுடன் சூரையாடும் மௌலவி ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள்
சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களை சந்தித்து ஆசிபெறுகிறார்கள்.
இலங்கை வெலிகமையயில் நடைபெற்ற மீலாதுன்னபி கந்தூரி விழாவிற்கு வருகைப் புரிந்த இலங்கை மாகாண ஆளுநர் ஸய்யித் அலவி மௌலானா அவர்களை சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள் அன்போடு வரவேற்கிறார்கள்.