This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

பன்னிரெண்டு நாளிதே பாடல்

"பன்னிரெண்டு நாளிதே"-
பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை மிக அழகாக பொருள்பட எழுதி உள்ள பாடல் இது...நீளமான பாடலாக இருப்பதால் யூடிப்பில் அப்லோட் ஆக மறுக்கிறது...
இந்தப்பாடலை இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள் எழுதி உள்ளார்கள்.
இதைப்பாடியவர்கள் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி அவர்களும் எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி (ஆலிம்புலவர்)அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப்பாடல் பிரபலமாகிவருகிறது...


"யா நபி சலாம் அலைக்கும்" - பாடல்

"யா நபி சலாம் அலைக்கும்" - சின்டா ரசூல் குழுவினரின் பாடல் கேட்டு மகிழுங்கள்

ஐயமும் தெளிவும்...2

மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.?

எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோசமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறு விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்த ஒரு கஷ்ட நிலையிலும் சந்தோசப்பட்டால் அவனுக்கு அந்தக் கஷ்டம் நீங்கி சந்தோச நிலை உண்டாகும். இது இயற்கை.
கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(0)

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகி விடுவோமா.?

எல்லாமே ஒன்றான பரிபூரண ஒன்றைப் பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால் ஏகமெனும் நிலை உண்டாகிவிடும்.(அது எவ்வாறெனில்) குதம்பைச் சித்தர் வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயமேதுக்கடி, குதம்பாய் பட்டயமேதுக்கடி- என்று பாடினார்.
வெட்டவெளியை மெய்யாகவைத்துக் கொண்டால் அவனுக்கு எதைப்பற்றிய பிரச்சனையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நினைத்து வருபவன் சில காலங்களில் இதில் சித்தமடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.


- செய்குனா பதில்கள் - மறைஞானப்பேழை

அறிவை அறியுமிடத்தில் தற்பெருமை ஆடை அவசியமா.?

ஒரு செய்குவிடம் முரீத் அதிககாலம் இருந்து விட்டு செய்குவை விளங்காமல் பொறாமை தற்பெருமை திமிர் அகம்பாவம் இவைகளினால் விலகிச் சென்றால் அவர்களின் நிலை என்னவாகும்.?
அவர்களுக்கு ரசூல் (ஸல்)அவர்களின் ஷபாஅத் மற்றும் அல்லாஹ்வின் கருணைக் கிடைக்குமா.?

அவர்கள் செய்குவிடம் ஏதேனும் தவறு கண்டு போனதாச் சொல்வார்கள். அதிக காலம் இருந்தவருக்கு எப்படி தவறொன்று உண்டாகிறது.? அதற்கு முன்பு தவறு ஏற்படவில்லையா.? இப்போதுதான் தவறு ஏற்பட்டுள்ளதா.?
முரீதுக்கு பொறாமை தற்பெருமை அகம்பாவம் திமிர் இப்படி சிலருக்கு ஏற்பட்டால் அது பெரிய ஆபத்தான நிலை. எந்த இடத்தில் கொண்டுபோய் விடுமென்றுச் சொல்ல முடியாது.

சரி இல்லை என்றால் போய் மௌனமாக இருக்கவேண்டும். மௌனமாக இல்லாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு தேவையில்லாத கதைகளை கதைச்சுக் கொண்டு அசிங்கமான விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பதாக இருந்தால் இவ்வளவு காலம் (செய்குவிடம்)இருந்து கேட்டுக் கொண்ட நன்மைகளெல்லாம் அவர்களுக்குப் போய் அம்புகளாக குத்தும்.

இவ்வளவு காலம் பெற்ற நன்மைகள் அறிவுகள் அது சம்பந்தபட்டவைகள் இதற்கு முன்பு செய்குவை பற்றிப் புகழ்ந்து பேசின புகழ்ச்சிகள் எல்லாம்சேர்ந்து மோசமான இடங்களில் போய் அம்பாக குத்தும். அது எங்கெங்கே குத்தும் எனச் சொல்ல இயலாது. அது இதயத்திலேயும் குத்தலாம். முக்கியமான நரம்புகளிலேயும் குத்தலாம் உறுப்புகளிலேயும் குத்தலாம்.

அப்படி குத்துபட்டது என்றுச் சொன்னால் கடைசியில் யாராலேயும் திரும்பமுடியாது நெருங்கமுடியாது தடுக்க முடியாது அதுதான் பெரிய ஆபத்து.
அதனால்தான் மித்த கவனமாக இருக்கவேண்டும் எனச்சொல்வது. ஏனென்றால் அப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும்.

முன்பிருந்த வலிமார்கள் காலத்தில் அதற்கு பின்னால் இருந்த காலத்திலும் இனிமேலும் இருக்கக்கூடிய காலத்திலும் இப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அது பெரிய ஆபத்தாக போய்விடும். அக்குபஞ்சரல்ல இது.
இது மோசமானது மித்தம் பயப்படவேண்டும் அல்லாஹ்வுக்கு.

அதாவது நீங்கள் ஏதோ ஒரு பரிட்சை எடுக்குறீர்கள் அதன் ரிசல்ட் வரும்வரை எவ்வளவு காலம் யோசிக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ பார்ப்பீர்கள். ரிசல்ட் வரவில்லை என்றால் திரும்ப அவரிடம் சென்று கேட்பீர்கள்.

இந்தமாதிரி விஷயங்களுக்கு சோதனைகளுக்கு ரிசல்ட் இதுமாதிரிதான் வரும். ஆனால் அந்த ரிசல்ட் மிக மோசமான ரிசல்ட் மிக ஆபத்தான ரிசல்ட். அப்படி எத்தனையோ பேர்களுக்கு அது மாதிரியான ரிசல்ட் வந்துவிட்டது. அது எல்லோருக்கும் தெரியும். அறியவில்லை என்று சொல்லவும் கூடாது. தெரியாது என்று சொல்லவும் இயலாது.

கண்முன்னால் கண்ட விஷயங்கள் நிறைய உண்டு. ஆகவே எனக்கு எல்லாம் முடியும் என்று துள்ளுகிற நேரத்தில் ஆபத்துகள் தான் வந்து முடியும். கல்லு கரடு உடைந்த கண்ணாடித் துண்டுகளில் குத்திக் கொண்டார்கள் என்றால் ஆபத்துதான்.

ஒவ்வொரு வகையான ஆபத்தான நோய்கள் மனிதனுக்கு மனிதன் உண்டாகிறது. அது மிக பயங்கரமான பலவகையான நோய்கள் இருக்கின்றன. நீங்கள் அறியாத நோய்களும் உள்ளது. புதிது புதிதான நோய்கள் அவரவர்கள் எதைச் செய்கிறார்களோ அல்லாஹ் அதைப்பார்த்து உங்களுக்கு இதுதான் ஜிஸா என்று கொடுத்திடுவான்.

ஓவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையான நோய்களில் மக்கள் அவதிப்படுவதை கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு காலில் ஒரு நோவு பிடித்தது. டாக்டர் கூறினார் இந்த நோய் ஆபத்தானது இவர் நன்றாக குடிக்கவேண்டும் குடித்தால் நரம்புகள் விரிவடைந்து சரியாகிவிடும் என்றார்.
அவர் நன்றாக தொழுது கொண்டிருந்த மனிதர் குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பிறகு விரல்களில் புண் உண்டாகி காலில் உண்டாக கொஞ்சம் கொஞ்சமாக இரு கால்களையும் வெட்டி கையை வெட்டவருகிற நேரத்தில் மருந்தைப்போல் குடிக்க ஆரம்பித்தார்.ஏதோ அவரின் மனைவி நல்ல பெண்ணானதால் மித்தம் கவனமாக குழந்தை பிள்ளையைப்போல் பாதுகாத்து நீராட்டி துடைத்து பவுடரெல்லாம்போட்டு நல்ல நிலையில் வைத்திருந்தார்.

அந்த மனைவி எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு சென்றாலும் விரட்டிவிட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவோ உதவிசெய்துள்ளார். யாருமே அவரைமதிக்கவில்லை. இப்படியான நிலை ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. முன்பே யோசிக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்கு பயப்புடவேண்டும் அவனுக்கு இந்தமாதிரி சில விஷயங்கள் இருக்கிறது நாடி செய்து விட்டான் என்றால் என்ன செய்வது.?

மனிதனுடைய தற்பெருமை எங்கே போகப்போகிறது. ஓன்றும் செய்யஇயலாது.
அல்லாஹ்வுடைய நாட்டம் அது. எந்த டாக்டரும் ஒன்றும் செய்ய முடியாது. சித்ரவதை என்று சொல்வது இதுதான்.அல்லாஹ் யாவரையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் முரட்டுதனமாகவும் மிருகத்தனமாகவும் அல்லாஹ்வுக்கு மாறாகவும் அநியாயமான முறையில் நடக்கிறவனுக்கு அல்லாஹ் கொடுக்கவும் வேண்டும். அப்போது தான் மற்றவன் பார்த்து பயப்படுவான்.

அப்படி எவ்வளவோ மோசமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. என்னென்ன நோய்கள் எல்லாம் இருக்கிறது. அதற்கு நாம் பயப்புடவேண்டும். அல்லாஹ் எங்களுக்கு வராமல் காப்பாற்றவேண்டும். மனநிம்மதியாக நாம் இருக்கவேண்டும். எப்பவுமே அந்தமாதிரியான நிலைதான் மனிதனுக்கு அவசியம். அதை நினைத்து பயந்து நாம்வாழவேண்டும்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் எவன் துள்ளுகிறான் என்று.!
துள்ளினால் சரிவந்து விடுமா,?
அல்லாஹ்வுடைய சக்திக்கு முன்னால் யாருமே நிற்க முடியாது. சுனாமி வந்தது என்ன நடந்தது பார்த்தீர்களா.?
பத்து பதினைந்து நிமிடம்தான் தான் சுனாமி .பிணங்களெல்லாம் எங்கெங்யோ போனது. ஒருகடல் அதனுடைய ஆபத்தைப் பாருங்கள். நெருப்பும் அப்படித்தான் பனிபெய்கிறதே அதுவும் அப்படித்தான். இந்தமாதிரியான நிலைகள் மனிதனுக்கு வரவும் கூடாது. அல்லாஹ்விடம் இருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சாபங்களை பெற்றுக் கொள்ளவும் கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.

- இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள்

புதுப்பொலிவுடன் உதயதின விழா


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை சங்கைமிகு செய்கு நாயகம் இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் அவர்களின் 74 வது உதய தின விழா புதுப் பொலிவுடன் கொண்டாடப்பட்டது.

காலை 9.00 மணிக்கு புர்தா ஓதப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு பின் காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவின் தலைவராக
A.P.சஹாபுதீன் BE M.B.A அவர்கள்.

விழா ஆரம்பமாக ஆலிம் அப்துல் கரீம் அலிதாவி அவர்கள்
கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.

கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன்
"ஹ_வல் வுஜூது" பாடலை பாடினார்.

மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவூது B.COM அவர்கள் "மாநபியின் மாணிக்கமே வரவேண்டும்" என்ற பாடலை பாடினார்.

மதுக்கூர் பாடகர் சிராஜ்தீன் B.COM அவர்கள்
"குத்துபியத்தின் பெருமையுடன்" என்ற பாடலைப் பாடினார்.

பாடல்களுக்கு பின் தலைவர் A.P.சஹாபுதீன் BE. M.B.A அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சங்கைமிகு செய்குனா அவர்களின் பிறப்பு, அவர்கள் வளர்ந்தவிதம், அவர்களின் கல்வி, அவர்கள் தங்களின் தந்தை நாயகத்திடம் படித்த ஞானம், அவர்களின் பண்பு, அவர்களின் அன்பு, அவர்களின் பாசம், அவர்களின் கருணை, அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உபதேசங்கள், அவர்களின் வாழ்க்கைசரிதையை மிகஅழகாக எளிமையாக எடுத்துரைத்தார்.
இகக்கல்வியை கற்ற அறிஞர்கள் தங்களிடமுள்ள பெருமை, பொறாமை, நயவஞ்சகத்தன்மை இவைகளை அழிக்காமல் ஏகத்துவ மெய்ஞ்ஞானத்தை அறிந்திட முடியாது என்று சங்கைக்குரிய செய்குனா விளக்கிய சரித்திர சம்பவத்தை மீட்டுரைத்தார்.

இவரைத் தொடர்ந்து கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் தன்னுடைய அனுபவங்களை தன் செய்கு நாயகத்திடமிருந்து தான் பெற்றுக் கொண்டிருக்கும் பேரின்;பங்களையும். இந்த ஜமானுக்கு குத்புல் திலகமாக நமது ஆருயிர் செய்குனாதான் விளங்குகிறார்கள் என்று கூறினார்.

அடுத்து அதிராம்பட்டினம் S. ஷர்புத்தீன் D.COM உரையில்
கடந்த மாதம் செய்குனா அவர்களின் திரு இல்லத்திற்கு சென்று வந்த செய்தியும் அங்கு தங்கிருந்த அனுபவங்களையும் செய்குனா உபதேசித்த ஞானங்களைப் பற்றியும் கூறினார்.
பெருமானார் (ஸல்)அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை போதித்து பூர்த்தி செய்தார்கள் ஆனால் இதற்கு இந்த மக்களிடமிருந்து என்ன பிரதிஉபகாரம் கேட்டார்கள் என்றால் தன்னுடைய திருகுடும்பத்தை (அஹ்லுல்பைத்)நேசிக்க சொன்னார்கள்என்று அல்லாஹ் தனது மறையில் கூறுகிறான் என்றும்
இன்றைய காலத்தில் மாபெரும் செய்குவாக குத்புஸ்ஜமானாக நமது ஆருயிர் செய்குனா விளங்குகிறார்கள். இவர்களின் சிறப்பு என்னவென்றால் ரசூல் ஸல்லாலாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்களின் திருப்பேரராக விளங்குகிறார்கள் என்றும்
சமீபத்தில் பாக்கிஸ்தான் கராச்சி நகரத்தில் அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறினார்.

அடுத்து கீழக்கரை காதர் சாஹிப் M.B.A அவர்கள் பேசுகையில்
நான் இந்த ஞானசபைக்கு வரவில்லை எனில் என்னுடைய வாழ்க்கை மிகவும் கைசேதப்பட்டிருக்கும் என்றும் இங்கு வந்ததினால் தன்னுடைய வாழ்க்கையில் எழில் பொங்குவதையும் தன்னுடைய பணியில் தலைசிறந்து விளங்குவதின் காரணத்தையும் தனக்கே உரித்தான கவித்தோனியில் அடுக்கு மொழியுடன் மிகஅழகாக பேசினார்.

அவரைத்தொடர்ந்து கிளியனூர் M.S.முஹம்மது சபீர் M.B.A அவர்கள் பேசுகையில் பத்தாண்டுக்குப்பின் இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்று ஆரம்பித்து இன்றையக் காலக்கட்டத்தில் ஞானவிசயங்களை முதலில் நம்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் போதிக்கவேண்டும். இன்றைய உலகம் இளைஞர்களை இன்டெர்நெட்டின்பால் கவனத்தை மிகஅதிகமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது. பலரும் சேட்டிங் பேஸ்புக் என்று தங்களுடைய நேரங்களை அதில் சிலவுசெய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்கு நாம் நம்முடைய மீடியாவை இணையதளத்தின் பக்கம் திருப்பவேண்டும் என்று எழுச்சியான உரை நிகழ்த்தினார்.

இவரைத் தொடர்ந்து கடையநல்லூர் அப்துல்காதிர் (இளவரசன்) அவர்கள் செய்குனா அவர்களைப்பற்றி நீளமான கவிதையை கம்பீரகுரலுடன் வாசித்தார்.

அவரைத் தொடந்து கிளியனூர் இஸ்மத் பேசினார்.
பிறந்தநாள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் அவசியத்திற்குரிய நாளாக இருக்கிறது.
பள்ளியில் கல்லூரியில் அரசுநிறுவனங்களின் ரேசன் கார்டு போன்றவற்றிற்காகவும் வேலை வெளிநாடு பாஸ்போர்ட் போன்ற அனைத்திற்கும் தன்னுடைய பிறந்த தினத்தை நினைவுப்படுத்தப்படுகிறது. பிறந்த தேதியை மட்டும் நினைவு படுத்தக்கூடியவர்களால் இந்த சமூகத்தில் எந்த மாற்றமுமில்லை ஆனால் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களுக்கு இந்த சமூகத்தில் சிலர் பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்ததில்லை.
பெருமானார் (ஸல்)அவர்களின் பிறந்தநாளையும் மகான்களின் பிறந்தநாளையும் கொண்டாடுவது தரீக்காவாதிகள் தனக்காக தானே பிறந்தநாளை கொண்டாடுபவர் அரசியல்வாதி.என்றும் செய்குவிடம் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கையுடன் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

அடுத்து திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா B.SC அவர்கள் உரைநிகழ்த்துகையில்
அல்லாஹ் ஏழுவானத்திற்கு மேல் இருப்பதாக சிலரும் அர்ஷில் மட்டும் இருப்பதாக சிலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நன்மையான விசயத்திற்குமட்டும் தான் இறைவன் அதே ஒரு கஸ்டம் வந்தால் அந்த இறைவனை மறந்துவிடுவதுமாக இருக்கிறார்கள். அன்றை காலத்தில் இலக்கியங்களில் எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று தெளிவாக இறையைப்பற்றிய உண்மைகளை ஞானங்களை அறபு இலக்கியங்கள் தெளிவுப்படுத்தியது. அது காலப்போக்கில் அந்த இலக்கியங்களை மறைத்துவிட்டு இறைவனை ஏழுவானங்களுக்கு மேல் உயர்திவிட்டார்கள்.
எங்கும் நிறைந்த இறைவனை அனைத்திலும் அனைத்துமாய் நிறைந்த இறைவனை விளங்கவைத்துக் கொண்டிருப்பதுதான் இந்த ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை.
ஆரம்பக்காலத்தில் அணுவில் ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின் அணுவைப்பிளந்தால் அதில் ஒரு சக்தி இருக்கிறது என்று அறிந்தார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் இறைவனுடைய சக்தி இருப்பதை விஞ்ஞானம் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது என்று பேசினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து அப்பாஸ் ஷாஜகான் B.SC அவர்கள்
பேசுகையில் செய்குனாவின் மேன்மைகளையும் அவர்களின் திருக்குடும்பத்தார் கராமத் நிறைந்தவர்கள் என்றும் செய்குனாவின் மூத்தசகோதரர் அவர்கள் சிறுவயதில் செய்த கரமத் சம்பவங்களை எடுத்துக்கூறினார்.

இவரை அடுத்து தீன் இசைமுரசு தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் தங்களின் இனிமையான குரலில் பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.


அடுத்து மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் பேசுகையில்
நமது செய்குனா அவர்கள் நமக்கு இறைவனைப்பற்றி விளக்கத்தை அறியத்தருகிறார்கள். நாம் தாயின் கருவறைக்கு முன் எங்கிருந்தோம் தந்தையின் முதுகந்தண்டிலே இருந்தோம் அதற்குமுன் உணவு பண்டங்களிலிருந்தோம் அதற்கு முன் பஞ்ச பூதங்களிலிருந்தோம் அதற்குமுன் இறைவனுடைய அமாவாக இருந்தோம் என்றும்
மற்ற தரீக்காவில் இருந்த சிலர் நமது செய்குனாவிடம் பைஅத் பெறவந்தபோது அவர்களை ஏற்கனவே பைஅத் பெற்ற தரீக்காவிலேயே இருக்கும்மாறு பணித்தார்கள் என்றும் மாற்று சமயத்து சகோதரர்கள் ஆர்வத்துடன் நமது செய்குனா அவர்களை அனுகிறார்கள் அவர்களின் ஞான உபதேசங்களை கேட்டு அவர்கள் மதம்மாறுவதற்கும் சிலர் கேட்டபோது இந்த உண்மைகளை விளங்கிக்கொள்ளுங்கள் மதம்மாற்றம் தேவைஇல்லை உங்களுக்கு மனம்மாற்றம்தான் தேவை ஞானம் உங்கள் மதங்களிலும் இருக்கிறது என்று கூறினார்கள் என்று சில நிகழ்ச்சிகளை கூறினார்.

இறுதியாக துவா சலவாத்துடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பைஜி தரீக்காவிலிருந்து ஆலிம் சபியுல்லாஹ் ஜமாலி அவர்களும் ஆலிம் அப்துல்கரீம் அல்தாவி அவர்களும் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.

இன் நிகழ்ச்சிக்கு அலங்காரங்கள் செய்து அழகுபடுத்தியவர்கள் இக்பர் ஷாஜகான் அபுல்பசர் திருச்சி சாதிக் முஹம்மது அலி ஆசிக் அப்துல்ரஹ்மானின் மகனார் அமீர்அலி ஜாகிர்உசேன் ரியாஸ்அஹமது மற்றும் அறை நண்பர்கள்.


ஜூம்மா தொழுகைக்கு பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு புகைப்படங்கள் எடுத்தவர்கள்.
மதுக்கூர் ராஜாமுஹம்மது
அதிரை அப்துல்ரஹ்மான்
மதுக்கூர் சாதிக்
மற்றும் பலர்.

அபுதாயிலிருந்து ஜெகபர் சாதிக், கிளியனூர் பத்தாஹ் மற்றும் வழுத்தூர் அப்துல்ரசீது, ஆதம் அப்துல்குத்தூஸ் ,அப்துல்ரவூப் ,ஹாஜாஅலாவுதீன், அன்வர்உசேன், வாவாமுஹம்மது, பஷீருல்லாஹ், ஜெய்னுலஆபுதீன், அப்துல்ஹக், மன்னார்குடி முஹம்மது தாவூது , ஷேக்முஹைத்தீன், ஜெகபர்தீன்,கவிஞர் நாசர், சாகுல்ஹமீது மற்றும் அமீரகத்திலிருந்து பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி…!

இலங்கையில் முதல் வசந்தம் ஷவ்வால் பிறை 16






அக்டோபர் 4 ம் தேதி இலங்கை வெலிகமையில் ஷவ்வால் பிறை 16 மாலை இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்களின் பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிரா அத் ஒதப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய புகழ்பாடல் பாடப்பட்டது.
வரவேற்புரை சபீர் அவர்கள் நிகழ்த்தினார்
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
மௌலவி ஹரீல் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவரைத்தொடந்து நூருதீன் அவர்களும் கலீபா அவர்களும் உரைநிகழ்த்தினார் இறுதியாக இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.
இன் நிகழ்ச்சியில் இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் அவர்களும், அஸ்சையது யாசீன் மௌலானா அவர்களும், பிஸ்ரின் மௌலானா அவர்களும் ,கலீபா அவர்களும் மற்றும் அனைத்து முரீதீன்களும் கலந்து சிறப்பித்தார்கள்.




ஐயமும் தெளிவும்

கைர் - ஷர்ரு என்றால் என்ன.?

கைர் - ஷர்ரு இந்த இரண்டும் ஆரம்ப காலமான அல்லாஹ்வுடைய காலத்தில் இருக்கவில்லை. மனிதனாகப் பிறந்த பிறதுதான் லநவ - இடறு எனும் இரண்டும் உருவாகியது. சுpல நன்மைகளை நாம் செய்து கொண்டால் அது நன்மையாக முடியும். கெடுதலைச் செய்து கொண்டால் இடறாக முடியும். மனிதனுடைய வாழ்க்கை சீராக அமையவேண்டும் என்பதற்காக நன்மையும் தீமையும் கற்பிக்கப்பட்டன. இறந்த பிறகும் அசுத்தப்பட்ட ஆத்மா கேடையத்தான் செய்யும். தன்னுடைய நோக்கத்தை அடைய முடியாமல் போன இறந்த ஒரு ஆன்மாவாக இருந்தால் அது அந்தக் கஷ்டநிலையை அடையும். பரிசுத்தமாகவிருந்த ஆத்மாஇறையை அடைந்துவிடும்.

நன்றி - மறைஞானப்பேழை

காலத்தின் வசந்தங்கள்...ஷவ்வால் பிறை 16

மகான்கள்-மாமனிதர்கள்-புனிதர்கள்-இறைவனின் அருளைச்சுமந்த வண்ணம் இந்த வுலகில் எல்லாப் பகுதிகளிலும் உதயமாகிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் மனிதர்களுக்கும் இறைவனுக்குமிடையே உள்ள தொடர்பை மக்களுக்கு விளக்கி தங்கள் பிறந்த லட்சியத்தை நிறைவேற்றிச் செல்வார்கள்.

மற்ற உபதேசிகளைப் போல – பிரசங்கிகளைப் போல – வாய் வார்த்தை மட்டும் பேசாமல் வாழ்ந்து காட்டுவார்கள்.

மற்ற மனிதர்களோடு மனிதர்களாகக் கலந்து வாழ்ந்தாலும் அவர்களின் செயல்களில் தனித்தன்மை மிளிரும் அவர்களின் குணங்களில் அன்பும் அருளும் ததும்பி வழியும்.

அவர்களைச் சேர்ந்தவர்களின் துன்பங்களை அகற்றுவார்கள். மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிகாட்டுவார்கள். தாங்கள் எப்படி அரிய பொருளாக – அருமையான மனிதராக இருக்கிறார்களோ அதைப் போலவே அவர்களைப் பின்பற்றுவோரையும் மாற்றிக் காட்டுவார்கள்.

அவர்கள் பூமியில் வாழ்ந்தாலும் வானத்தோடு தொடர்புடையவர்கள் அவர்கள் சொல்வது நடக்கும். அவர்களிடம் கேட்டது கிடைக்கும்.

இயற்கை அவர்களோடு ஒத்துழைக்கும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அந்தரங்கமாக விளங்கும் அவர்களே அந்தஅந்தக் காலத்தின் வசந்தமாக உயிர்களுக்கு இறைவனால் அமைக்கப்பட்டவர்கள்.

அத்தைகய மாபெரும் ஞானியை நம்காலத்தில் சையிதுனா கலீல் அவ்ன் நாயகமாக நாம் பெற்றிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்…அவர்களை எமக்களித்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செய்து அவர்களின் இலட்சிய நோக்கங்களில் பங்கு பெறுவோம் ஈருலக வெற்றிகளை அடைவோம்…!
நன்றி - மறைஞானப் பேழை தலையங்கம்


ஷவ்வால் பிறை 16 அன்று இஷாத் தொழுகைக்கு பின் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கஸிதத்துலட அவுனியா ஒதப்பட்டது. பின் ஆன்மீக சகோதரர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
தலைவர் சஹாபுதீன் இமாம் அஸ்சையிது கலீல் அவ்ன் மௌலானா அவர்களின் சிறப்புகளைப்பற்றி பேசினார்.

அதிரை சர்புதீன் அவர்களின் இலங்கை பயணத்தை பகிர்ந்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து அதிரை அப்துல்ரஹ்மான் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறையும் மகான்களின் வரலாறையும் ஒப்பிட்டு பேசினார்.
மதுக்கூர் தாவுது சிராஜ் சாகுல்ஹமீது ஞானப்பாடல்கள் பாடினார்கள்.
இவ்விழாவிற்கு அனைத்து ஆன்மீக சகோதரர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



உலக அமைதிக்கு உண்மை வழி

இன்று உலகத்திற்குத் தேவையானது எது.?

அமைதி .

மனிதர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் பொது அமைதிதேவை. ஆமைதி நிலவாவிட்டால் எவ்வளவு பணம் பொருள் இருந்தும் நிம்மதி இருக்காது.

உலகம் அமைதியாக இருக்க என்ன வழி.?

மக்களுடைய மனதில் ஆழமாக பதித்து கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் அனைத்தும் மனதில் இருந்து நீங்கினால்தான் ஒற்றுமைக்கு வழிபிறக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் அமைதி தானாகவே வந்து விடும். ஆனால் காலகாலமாக இருக்கும் வேற்றுமை உணர்வுகளை நீக்க முடியுமா.?

நிச்சயமாக முடியும்.

அதற்கான வழிகள் என்ன.?
இந்த வேற்றுமை உணர்வுகளை மக்கள் மனதில் இருந்து பிடுங்கி எறியவது எப்படி.? அல்லது இதற்கு என்ன வழி.?

ஆருயிர் செய்கு நாயகம் ஆன்மீக குருநாதர் சங்கைமிகு மகான் ஜமாலிய்யா கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் சீரிய வழியைக் காட்டுகிறார்கள். இவர்களின் ஞானக் கருத்துக்களை மக்கள் உணர்ந்தார்களேயானால் தங்களது மனதில் மிகமிக ஆழமாக பதிந்து பரவிக்கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் சூரியனைக் கண்ட பனிப்போல உருகி மறைந்துவிடும்.
அவர்ளுடைய இறையருட்பா எனும் ஞானக்கவிதை நூலில் இருந்து சில உதாரணங்களைக் காண்போம்.

வேரொடு தண்டு கோடு
வேறிலை பூவுங் காயும்
பூரண மாக நின்ற
போதினில் மரம தாகும்
ஓரிலை யேனு நீங்கின்
உருபெயர் மரமும் நீங்கி
சீரிலை யென்ற நாமம்
சீர்த்திடு முண்மை யாலே.

வேர், தண்டு, இலை, பூ, காய், கனி இவைகள் அனைத்தும் பூரணமாக மரத்தில் இருக்கும்போது அதனைத் தனித்தனியாக நாம் பார்க்க மாட்டோம். அதை மரம் என்று சொல்வோம். அந்த மரத்தில் இருந்து இலையை மட்டும் பிரித்து மரத்திலிருந்து நீக்கிவிட்டால் மரம் என்ற சொல் நீங்கி இலை என்ற நாமத்தை அது பெறுகிறது. அதைப் போலவே

அவ்வகைத் தேயும் கொம்பும்
அருவேர் தண்டு மெல்லாம்
அவ்வுரு மரத்தினின்று
அற்றிடுங் காலை யாவும்
இவ்விகை யாவும் தத்தம்
இடுபெயர் மரமு நீங்கி
ஓவ்வொரு பெயரி னாலே
உணர்த்திடும் தம்மை யாமே.

கோம்பு, இலை, வேர், தண்டு ஆகியவைகளை அம்மரத்திலிருந்து நீக்கும்போது மரம் என்ற பெயர் நீங்கி கொம்பு வேர் தண்டு என்ற தனிப் பெயரையடைகிறது. அதைப்போலவே

சினைபல கொண்ட தாக்கை
சீரதற் குண்டு நாமம்
நினைவினற் கொள்ளு தற்கு
நிறுத்துக மனித னையே
சினைபல யாவுங் கொண்ட
சீருட லுயிரி னோடு
அனையது தானே மாந்தன்
ஆவது காண்க நீரே.!

மனிதனுடைய உடல் பல உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மொத்தத்தில் மனிதன்தான் உடல் என்று சொல்கிறோம்.

பல உறுப்புகளைக் கொண்ட மனிதனுடைய உடலுடன் உயிரும் சேரும்போது மனிதன் என்று சொல்கிறோம் அது போல

தன்னுட னின்று கையைத்
தானே நீக்கி வேறே
பின்னிடம் வைப்ப தாகில்
பிரிந்த வென் கையு மென்றன்
இன்பெயர் கொண்ட தாமோ
இவ்வகை உலகி னிற்கும்
மண்பொருள் யாவு மென்க
மாண்பிணி னான தானேன்.

விளக்கம்.
மனிதனுடைய உடம்பில் இருந்து கையை தனியாக நீக்கி (வெட்டி) தனியாக வைத்து விட்டாலும் அந்தக் கை மனிதனுடைய கை தானே.
இது என்னுடைய கை என்று தான் சொல்வேன். இதைப்போலவே இவ்வுலகத்திலுள்ள சிருஷ்டிப் பொருள்கள் அனைத்தும் தனித்தனியாப் பெயரைக் கொண்டு நிலைத்து நின்றாலும் அவை அனைத்தும் மாபெரும் சக்தியாகிய இறையிலிருந்து வந்தது தான் என்பதை உணரவேண்டும்.

கையது பிரிந்த போது
கொண்டதோர் நாம(ம்)நீங்கி
கையென வான போலும்
கருத்தினி றைந்த வொன்றாம்
மெய்யிறை நின்று வந்த
மேன்மிகு சிருட்டி யெல்லாம்
பெய்ம்முதற் பெயரு நீங்கிப்
பெற்றது வேறு பெயரே.

மனிதனுடைய உடம்பிலிருந்து கையைத் தனியாகப் பிரித்தவுடன் மனிதன் என்ற பெயர் நீங்கி கையென்ற பெயர் பெற்றாலும் கருத்தினில் எங்கும் நிறைந்து ஒன்றாய் விளங்கும் இறையிடமிருந்து வந்த மேன்மைமிக்க சிருஷ்டிகள் எல்லாம் இறை என்ற பெயர் நீங்கி தனித்தனிப் பெயர்களைப் பெற்று நிற்கின்றன.

கரமது பிரிந்த போதும்
மனிதறன் கரம தாகும்
அருமிறை தன்னி னின்று
அற்புத சிருட்டி யெல்லாம்
உருவதிற் பிரிந்த போதும்
உத்தம வொன்றி னின்றாம்
அருவமு முருவ மெல்லாம்
ஆதிய தாகு மம்மே.

மனிதனுடைய உடலிலிருந்து கரத்தைப் பிரிந்த போதும் அது மனிதனின் கரமதாகும். அதைப்போல இறைவனிடமிருந்து தோன்றிய சிருட்டிகளெல்லாம் உருவத்தில் தனித்தனி பெயரைக் கொண்டாலும் அதுஇறையின் அங்கங்களாகும்.
மனிதனின் அருவமான உயிரும் வெளியில் கண்களுக்குத் தோன்றக்கூடிய உடலும் இறைவனின் பகுதிகளாகும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? சிருட்டிப் பொருள்கள் அனைத்தும் இறையிலிருந்து வந்த இறைவனின் பகுதிகள் அங்கங்கள் என்று வைத்துக் கொள்வோமே.!
இக்கருத்தினை உணர்ந்தால் ஜாதி மதம் இனம் மொழி பணக்காரன் ஏழை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றும்.?
வேற்றுமை உணர்வுகள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும். அப்போது ஒருவருக்கொருவர் உண்மையிலேயே பாசம் நேசம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். ஒருவருக்கு கஷ்டம் வந்தால் தனக்கு வந்தது போல நினைத்து உதவிகள் செய்வார்கள்.

ரசூல் (ஸல்)அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து காட்டினார்கள். ஏன்.? இன்றைக்கு நமது சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களும் தங்களின் முரீதுப் பிள்ளைகளோ அல்லது பொது மனிதரோ தங்களது கஷ்டத்தைக் கூறும்போது அதை உளமார பொறுமையாக இருந்து கேட்டு மனமுருகி அல்லாஹ்விடம் துஆச் செய்து அவர்களது துன்பத்தை நீக்குகிறார்கள்.
புத்தர் ஓர் ஆட்டுக்குட்டி நொண்டிச் செல்வதைக் கண்டு மனமுருகி அதைத்தன் தோளில் சுமர்ந்தார்.
சிபிச் சக்கரவர்த்தி புறாவை வேடனிடமிருந்து காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தார்.
வள்ளல் பாரி பரிதவித்துக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்கு தன் தேரை நிறுத்திச் சென்றார்.
ஒரு பெரியார் தங்களது சட்டையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பூனையை விரட்டாமல் அது விழிக்கும்வரை பொறுமையாக இருந்தார்.
வள்ளலார் இராமலிங்க சுவாமி அவர்கள் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடினார். இவைகளெல்லாம் உதாரணங்கள். இதை நாம் கருத்தற்ற செயலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிந்தித்தால்தான் அதன் தாற்பரியம் புரியும்.

இத்தகையசர்கள் மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். தானாகவே எங்கும் இன்பம் பொங்கும். மக்கள் சந்தோசமாகவும் வாழ்வார்கள். அதன் பயனாக உலகமே அமைதியடையும். ஆகவே உண்மையான இறைத் தத்துவத்தை
அறிந்துக் கொண்டால்தான் தான் யார் மற்றவைகளும் எது ?
இறைவனுக்கும் நமக்கும்முள்ள தொடர்பு என்ன வென்பது விளங்கும். இதுதான் உண்மையான ஆன்மீகம். ஆகையால் சங்கைமிகு நாயகம் அவர்களின் உபதேசங்கள் ஞானப் பாக்களை ஆராய்ந்து பயனடைவோமாக…!

நன்றி – எஸ். காஜா நஜ்முத்தீன் ஹக்கியுல் காதிரிய் திண்டுக்கல்

நன்றி – மறைஞானப் பேழை

இராத்தீபும் கஸிதத்துல் அவுனியா நிகழ்வும்


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபாயில் பிறை 14 2.10.2009 வெள்ளிமாலை மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.
அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யா ஓதப்பட்டது.

இன் நிகழ்ச்சிக்குப் பின் தலைவர் சஹாபுதீன் இராத்திபத்துல் காதிரியாவின் சிறப்புகளை சுறுக்கமாக தெளிவாக கூறினார்.

திருக்குர்ஆன் இறைவசனங்களைக் கொண்டு இராத்திபத்துல் காதிரியா தொகுக்கப்பட்டுள்ளது என்றும் இதை பிறை 14 ல் ஓதிவருவதைக் கொண்டு நமது உடல் மனம் தூய்மை பெறுகிறது. மனதில் நிய்யத் வைத்து ஓதிவருபவர்களுக்கு அல்லாஹ்த்தால அந்த நிய்யத்தை நிவர்த்தி செய்து வருகிறான். என்றுநடந்த ஒரு சில சம்பவங்களையும் எடுத்துக் கூறினார்.இந்த இராத்திபத்துல் காதிரியாவை ஏற்படுத்தி அதை தொகுத்து தந்தவர்கள் பெரிய நாயகம் என்றழைக்கப்படும் அஸ்சைய்யது யாசீன் மௌலானாஅவர்கள்.
அவரைத் தொடர்ந்து திருச்சி சாதிக் உரையாற்றினார்.

அவருடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
பெருமானாரின் திருகுடும்பத்தினர் மீது நாம் எந்தகாலக்கட்டத்திலும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கவேண்டும்.இன்றைய காலத்தில் சிலர் பெருமானாரின் திருகுடும்பத்தினர் மீது அவமரியாதை கூறுவது புதிதான ஒரு விசயமல்ல. பெருமானார் (ஸல்)அவர்களின் காலத்திலிருந்தே அவமரியாதை செய்யும் புல்லுருவிகள் இருந்துக் கொண்டு தொடர்ந்து கொண்டுதான் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின்
வாழ்க்கைதரழும் மிகக்கேவளமானதாகவே இருக்கும் என்று தன் அனுபவங்களை கூறினார்.
பாடகர் தாவுது அவர்கள் பாடலைப்பாடி பின் சலவாத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
இன் நிகழ்ச்சியில் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள் - மதுக்கூர் ராஜாமுஹம்மது.

நம்மைப் போன்ற மனிதரல்ல நாயகமே

நம்மைப்போன்ற மனிதரென- நீ
நாயகத்தை எண்ணாதே

இந்த பாடலை திண்டுக்கல் உசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்கள் எழுதி இஸ்லாமிய தமிழ் உலகில் புகழ்பெற்று விளங்கும் ஆன்மீப்பாடகர் இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடியுள்ள பாடல்.
தமிழ் இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் வரவேற்ற பாடலின் கருத்துக்கு படங்களை இணைத்து மூவிப் பாடலாக இங்கே தந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்.

சிங்கை சகோதரர் அஹமது கபீர் துபாய் சபைக்கு வருகை......


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் ஒருவாரத்திற்கு கஸியத்துல் அவுனியா ஒதப்பட்டுவருகிறது.
இந்த தொடர் நிகழ்ச்சிக்கு சிங்கை ஆன்மீக சகோதரர் அஹமது கபீர் அவர்கள் டோஹா கத்தார் வியாபாரநிமித்தமாக சென்று விட்டு சிங்கைக்கு திரும்புகையில் 01/10/2009 அன்று காலை துபாய்க்கு வருகை புரிந்துள்ளார்.
இரவு 9.00 ஒதப்படும் கஸிதத்துல் அவுனியா நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.

துபாய் சபையின் தலைவர் சஹாபுதீன் அவர்களும் துணைத்தலைவர் ஷாஜகான் அப்பாசும் அஹமது கபீரை இனிதே வரவேற்று கண்ணியப்படுத்தினர்.

இன் நிகழ்ச்சியில் சையதுஅலி மௌலானா துணைத்தலைவர் காதர் சாஹிப் பொதுச் செயளாளர் முஹம்மது யூசுப் இணைச் செயளாளர் இஸ்மத் பொருளாளர் தாவுது ஆடிட்டர் அப்துல்குத்தூஸ் மற்றும் அதிரை அப்துல் ரஹ்மான் ஆஷிக் அப்துல்ரஹ்மான் சுபகான் அமீர்அலி அக்பர் முஹம்மது அலி அஸரப்அலி சாகுல்ஹமீது மொய்தீன் ஹாஜாஅலவுதீன் அன்வர்உசேன் மற்றும் பல ஆன்மீக சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள்- அதிரை அப்துல்ரஹ்மான்.