This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

உடன்கட்டை ஏறுவோம்







என்னை நான் தேடி

என்னுள் அலைந்தாடி

உந்தன் கரம் தேடினேன்



சிந்தை திரியேற்றி

என்னுள் பலச்சாற்றி

உன்னை நான் காண்கிறேன்



காற்றின் கைக்கோர்த்து

நகைத்து விளையாடும்

அலையை நான் காண்கிறேன்



அலையின் நிலைபோல

பொழுதும் அலைமோதும்

நினைவில் ஏன் வாழ்கிறேன்



உயர பறந்தும் - சிரம்

பணிந்து மகிழ்கின்ற‌

பறவை மனம் கேட்கிறேன்



பிறந்த மனம் தன்னில்

திரியும் பொருள்கண்டு

எரிந்து நான் வேகிறேன்



ஞானம் தனைத்தேடி

கோணம் பலவாக

திரியும் பலமாந்தருள்



தேடி எமைவந்து

கூடி நலங்காக்கும்

குருவையெப் போற்றுவேன்



பொழுதும் ப‌ல‌வாக‌

விழுந்து தொழுதாலும்

இறையை அறிந்தாரில்லை





அடையும் இட‌ம‌றியா

அலைந்து திரிவோர்க‌ள்

அறிவில் சிறந்தோரில்லை



வ‌ழிவிடும் தோற்றம்

இடைவெளிக் காட்டும்

நிலைத‌னை மாற்றவே



குவ‌ல‌ய‌ம் எங்கும்

நறும‌ண‌ம் பொங்கும்

ந‌பிபுக‌ழ் பாடுவோம்



இடிவ‌ரும் முன்னே

வெளிவ‌ரும் மின்னல்

ஒளித‌னைப் போல‌வே



இழிப‌வ‌ர் கூட்ட‌ம்

ஒழிவ‌த‌ற்க்(கு) உட‌ன்

க‌ட்டையும் ஏறுவோம்





உடன்கட்டை ஏறுவோம்



என்னை நான் தேடி
என்னுள் அலைந்தாடி
உந்தன் கரம் தேடினேன்

சிந்தை திரியேற்றி
என்னுள் பலச்சாற்றி
உன்னை நான் காண்கிறேன்

காற்றின் கைக்கோர்த்து
நகைத்து விளையாடும்
அலையை நான் காண்கிறேன்

அலையின் நிலைபோல
பொழுதும் அலைமோதும்
நினைவில் ஏன் வாழ்கிறேன்

உயர பறந்தும் - சிரம்
பணிந்து மகிழ்கின்ற‌
பறவை மனம் கேட்கிறேன்

பிறந்த மனம் தன்னில்
திரியும் பொருள்கண்டு
எரிந்து நான் வேகிறேன்

ஞானம் தனைத்தேடி
கோணம் பலவாக
திரியும் பலமாந்தருள்

தேடி எமைவந்து
கூடி நலங்காக்கும்
குருவையெப் போற்றுவேன்

பொழுதும் ப‌ல‌வாக‌
விழுந்து தொழுதாலும்
இறையை அறிந்தாரில்லை


அடையும் இட‌ம‌றியா
அலைந்து திரிவோர்க‌ள்
அறிவில் சிறந்தோரில்லை

வ‌ழிவிடும் தோற்றம்
இடைவெளிக் காட்டும்
நிலைத‌னை மாற்றவே

குவ‌ல‌ய‌ம் எங்கும்
நறும‌ண‌ம் பொங்கும்
ந‌பிபுக‌ழ் பாடுவோம்

இடிவ‌ரும் முன்னே
வெளிவ‌ரும் மின்னல்
ஒளித‌னைப் போல‌வே

இழிப‌வ‌ர் கூட்ட‌ம்
ஒழிவ‌த‌ற்க்(கு) உட‌ன்
க‌ட்டையும் ஏறுவோம்


அமீர்அலி - மதுக்கூர்

செய்குனா அபுதாபிக்கு வருகை

சங்கைமிகு செய்குனா அவர்கள் வியாழன்கிழமை காலையில் முரிதீன்களின் அழைப்பின்பேரில் அபுதாபிக்கு மதுக்கூர் ஜெகபர்சாதிக் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார்கள் அதன் பின்னர்
அபுதாபி மன்னரின் மிக பிரமாண்டமான கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குச் சென்று மர்ஹும் மன்னர் ஷேக்ஜாயித் அவர்களுக்கு ஜியாரத் மற்றும் துவா செய்தார்கள்.































அமீரகத்தின் அவ்காப் அதிகாரி செய்குநாயகத்துடன் சந்திப்பு

அமீரகத்தின் அவ்காபின் அரசு உயர் அதிகாரியான டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்கள் சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்களை சந்தித்து மனம் மகிழ்ந்தார்.



ஒவ்வொரு ஆண்டும் செய்குநாயகம் விஜயத்தின் போது அவர்களை சந்தித்து தனது மரியாதையையும் அவர்களிடம் துவாவையும் பெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள.





இராத்திபத்துல் ஹக்கியத்தில் காதரிய்யா(இராத்தீபு) சிடியை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கி சங்கைமிகு செய்குநாயகம் வெளியிட்டார்கள் மற்றும் மௌலானா மார்களுக்கும் வழங்கினார்கள்.





சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்கள் மொழிப்பெர்த்த பர்ஸன்ஜிய் மவ்லித் நூலை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கினார்கள்





தனது சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக முரிதுக்கு மத்தியில் தானும் செய்குநாயகத்தின் முரிது என்ற எண்ணத்துடன் சில நிமிடங்கள் அரபும், ஆங்கிலமும் கலந்து உரையாற்றினார்கள்.




சங்கைமிகு ஷெய்குனாவுடன் ஈராக்கியர் சந்திப்பு

அமீரகத்தில் பிரபளமான அமரியாவில் அல்தாஹிர் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை நிறைவேற்றி விட்டு முரிதீன்களுடன் சங்கைமிகு இமாம் ஷெய்குனா அவர்கள் ஷார்ஜாவிற்கு புறப்பட்டார்கள்.







ஷார்ஜாவில் பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் இல்லத்திற்கு விஜயம் செய்த சங்கைமிகு இமாம் ஷெய்குனாவை, ஈராக் நாட்டைச் சார்ந்த மதிப்பிற்குரிய முஹம்மது அவர்கள் ஆர்வத்துடன் வரவேற்று சந்தித்தார்,
தானும், தனது குடும்பத்தார்களும் காதிரிய்யா தரீக்காவை சார்ந்தர்கள் என்றும், மஹ்பூபே சுபுஹானி முஹைய்யதீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களின் மீது அதிகமான அன்பை வைத்திருக்கிறோம் என்றும் தாங்கள் கட்டாயம் ஈராக் வரவேண்டும்,அஹ்லபைத்தாகிய தாங்கள் எங்கள் நாட்டிற்காக துவா செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
சங்கைமிகு ஷெய்குனா அவர்கள் துவா செய்தார்கள்.


மஜ்லிஸ் வீடியோ -1

சங்கைமிகு இமாம் சைய்குனா அவர்களின் மஜ்லிஸ் தினம் மஹ்ரிப்தொழுகைக்குப் பின் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.


முரிதீன்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து ஞானத்தெளிவை வழங்குகிறார்கள்.


வீடியோ - 1




வீடியோ - 2




வீடியோ - 3








சங்கைமிகு ஷெய்குனா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித திரு குடும்பத்தினருமாகிய அஹ்லேபைத் சங்கைமிகு இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் உசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்


20/04/2011 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஜ்லிஸிற்கு வருகைப்புரிந்தார்கள்.


அவர்கள் மஜ்லிஸிற்கு வந்தபோது அனைத்து முரிதீன்களும் எழுந்து நின்று யாநபி பைத்(பாடல்)பாடிய வண்ணம் உற்சாகமாக வரவேற்றனர்.







சங்கைமிகு ஷைகுனா துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் வளைகுடாவிற்கு ஆன்மீக சுற்றுப் பயணமாக ஏப்ரல் 14ம் தேதி குவைத்திற்கு சென்றார்கள்.

அவர்களுடன் இந்தியாவிலிருந்து ஆலிம் பெருந்தகை புலவர் கலீபா S.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களும், ஷாஜகான் மகனார் அலிஅக்பர் அவர்களும், துபாயிலிருந்து சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A அவர்களும் உடன் சென்றிருந்தனர்.

குவைத் சுற்றுப்பயணத்தை நிறைவுச் செய்துவிட்டு, ஏப்ரல் 19ம் தேதி இரவு 10.00 மணிக்கு, 14ஆம் ஆண்டு, விஜயமாக துபாய் வருகைப் புரிந்துள்ளார்கள்.

சங்கைமிக்க ஷைக்குனாவை வரவேற்கும் முகமாக துபாய் முரீதீன்கள் மிக ஆர்வத்துடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்து அவர்களை சங்கையுடன் வரவேற்றனர்.


சங்கைமிகு ஷெய்குனாவை வரவேற்க துபாய் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆன்மீக சகோதரர்கள்







விமான நிலையத்திலிருந்து வெளியில் வருகிறார்கள்

















நன்றி
புகைப்படங்கள் - அமீர்அலி,RAJA MOHAMED

ரோல்பேனர் - அபுல்பஸர்