கவலை நீங்க ஒருவழி!

எந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான்
அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறிய விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக்
கொண்டிருந்தால், அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து
கொண்டிருக்கும். ஆதலால், எந்தக் கஷ்ட நிலையிலும் சந்தோஷப்பட்டால் அவனுக்கு அந்தக்
கஷ்டம் நீங்கிச் சந்தோசம் நிலை கொள்ளும். இது இயற்கை. கவலை வருமாயின் அவற்றை
மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
நன்றி - சிராஜிதீன் மதுக்கூர்