செப்டம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 9.9.2011 வெள்ளி மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் செப்டம்பர் மாதக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கண்ணியமிக்க மௌலானாமார்கள் முன்னிலையிலும் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை தாங்கியும் நடாத்தினார்கள்.

கூட்டத்தின் துவக்கமாக கோட்டக்குப்பம் முஹைய்யதீன் அவர்கள் திருமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார்.


மதுக்கூர் முஹம்மது தாவூது ஹுவல்வுஜுது அறபு பாடலை பாடினார்.

அதன் தமிழாக்கத்தை (ஏகக்காட்சி) ஜெகபர்சாதிக் கூறினார்.

பாடகர் சாகுல்ஹமீது ஞானப்பாடலும்
முஹம்மது இத்ரீஸ் நபிப்புகழ் பாடலும் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் தலைவர் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து மதுக்கூர் முஹம்மது இத்ரீஸ் உரை நிகழ்த்தினார்.

பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வு உரையை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.

M.S.அப்துல்வஹாப் இமெயிலில் நிகழ்ந்துவரும் வஹ்காபிய சாடல்களை பற்றி உரை நிகழ்த்தினார்.

மன்னார்குடி ஷேக்தாவூது முழுமை என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.


திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் உரை நிகழ்த்தினார்.




தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவடைந்தது.