This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஹர்ரம் பிறை 10 கர்பலா நினைவலை நிகழ்ச்சி


முஹர்ரம்பிறை 10 –ல் சனிக்கிழமை ஞாயிறு இரவு இஷா தொழுகைக்குப் பின் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கர்பலா நினைவு தினத்தை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் தலைமை வகித்தார்.
விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் காதர்ஷாகிப் கிராத் ஓதினார்.பின் மதுக்கூர் பாடகர் தாவுத் அவர்கள் ஹுவல் வுஸூது பாடலைப்பாட மன்னார்குடி ஷேக்தாவுது அதன் தமிழாக்கத்தை கூறினார்.
பின் மதுக்கூர் இதிரீஸ் கர்பலா நினைவுப் பாடலை பாடினார்.

ஏ.பி.சஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்களின் பேரர்களான இமாம் ஹஸன் (ரலி) ஹ_ஸைன் (ரலி) அவர்களின் தியாகங்களையும் கர்பலாவின் வரலாற்று சான்றுகளையும் சுமார் ஒரு மணிநேரம் நெஞ்சுறுக உரை நிகழ்த்தினார்.

உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

கர்பலாவின் நினைவலைகளை ஏற்படுத்தும் வண்ணம் பல நிழற்படங்களை சுவரொட்டிகளாக சகோதரர் அக்பர் மற்றும் அமீர்அலி முஹம்மது அலி தாவுது ஆசிக் அப்துல் ரஹ்மான் அப்துல் குத்தூஸ் ஷேக் மைதீன் ஜாகிர் உசேன் முஹம்மது ரியாஸ் மற்றும் சபை அறை நண்பர்கள் பதித்திருந்தார்கள்.

இரவு 9.30 மணிக்கு இனிதே நிகழ்சி நிறைவடைந்தது.











அறியாத மக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒருவர் தன் உறவுகள் மற்றும் அனைவரையும் விட நேசம் வைக்காதவரை- உண்மை விசுவாசியாக முடியாது.

அதேபோல அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் மீது உள்ளன்பு கொள்ள வேண்டும் என்பதை “நபியே! என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள்!”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களுக்கு அஹ்லபைத்துகளைத் தெரியாது. அண்ணலாரின் வாரிசுகளைப் புரியாது.

அஹ்லபைத்துக்கள் மீது பிரியம் வைக்காமலிருப்பது கூட ஏதோ அறியாத நிலை என எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் மீது வெறுப்புக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது என்றால் அது வியப்பான செய்தியாகத்தான் தெரியும்.

ஆனால் உண்மை அதுதான்! முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) . ஏர்வாடி இப்றாஹிம் பாதுஷா (ரலி) நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா (ரலி) திருச்சி தப்லே ஆலம் பாதுஷா (ரலி) இன்னும் இவர்கள் போன்ற இறைநேசர்களான அவ்லியாக்களை முஸ்லிம்களில் ஒரு சிலர் தூற்றுகின்றனர். பெரும்பாலானோர் அதை ஆமோதிப்பதுபோல அமைதியாக இருந்து அவ்லியாக்கள் மீது உள்@ர ஒரு வெறுப்பை புதைத்து வைத்திருக்கின்றனர்.

இந்த அவ்லியாக்களெல்லாம் யார் தெரியுமா? அஹ்லபைத்துகள் என்னும் நபிகுல வாரிசுகள்.

அவ்லியாக்களை ஏசுறோம் என்ற பெயரில் அஹ்லபைத்துகளை ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வோ அவர்களை நேசிப்பது கடமை என வலியுறுத்தி இருக்க அவர்கள் மீது கோபம் கொள்வது அவர்களை வெறுப்பது போன்ற நிலை முஸ்லிம்கள் செய்யக் கூடிய செயலா? ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது? முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா? என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழுகையின் உள்ளும் அல்லாகும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மதின் இறiவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக! ஏன தாம் சொல்வது இன்னதென அறியாமலே கூறும் சமுதாயம் தொழுகைக்கு உள்ளே அவர்களை நினைத்து புகழ்பாடுவதுபோல தொழுகைக்கு வெளியேயும் அவர்களை நினைப்பது-புகழ்வது அவர்களின் வாழ்க்கைமூலம் பாடம் பெறுவது சிர்க் அல்ல. தவறல்ல என்பதை அறிந்து விளங்கவேண்டும்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது அஹ்லபைத்துகளாகிய வாரிசுகள். இந்த இரண்டையும் பற்றி நிற்கும் வரை நீங்கள் வழிமாறிப்போக மாட்டிர்கள்!

-தலையங்கம் மறைஞானப் பேழை

மக்காவில் அடிமை மதீனாவில் காதலர்

இதயமே!
எம்பெருமானை நேசி!
அவர்களைப்பற்றியே
எப்போதும் யோசி!

அண்ணலை நேசிக்காத நெஞ்சம்
துடிப்பதை விட வெடிப்பதேமேல்!
அவர்களின் நேசம் நிரம்பாத ஈமான்
கஃபா இல்லாத மக்கா போன்றது!
ஆயத்துகள் இல்லாத குர்ஆன் போன்றது!
ஸஜ்தா இல்லாத தொழுகை போன்றது
இரசூலை நேசிக்காமல்
இறைவனுக்கு மட்டும் ஸஜ்தா செய்து
கொண்டிருந்தால்
போதும் என நினைக்காதே!
சற்றுயோசித்தால்- நீ யாருக்கு
ஸஜ்தா செய்து கொண்டிருக்கின்றாய்
என்பது புரியும்!

ஆமீன் சொல்வதால் மட்டும்
மூமினாக முடியுமா?-நீ
உன்னை-மனைவி-தாய்-எனும்
பெண்ணை
குழந்தை-தந்தை எனும் கண்ணை
அனைத்தையும் விட அவர்களை
நேசித்தால்தான்
மூமின் எனும் ஹக்மார்க் முத்திரை
கிடைக்கும்!

தஸ்பீஹ்சொல்வதில் மட்டும்
இன்பம் காண்கிறாயே!- இறைவன்
ஸலவாத்து கூறிக்கொண்டிருப்பதை
மறந்து போனாயா?

இறைவனின் சந்நிதானத்திற்கு
நீ மட்டும்- நாயகமில்லாமல்
சென்றுவிடலாம் எனும் தலைக்கனமா?

சிலருக்கு
மக்கா சென்று விட்டு மதீனா செல்லாமல்
திரும்பிவர யோசனை!
வரலாற்றில்-மதினாவில்
அபீஅய்யுப் அன்சாரி(ரலி)அவர்களின்
வீட்டையும்
மஸ்ஜிதுன் னபவீயின் இடத்தையும்
ஒர் ஒட்டகை தானாகக் கண்டு நின்றதே!
உனக்கு
ஒட்டகையின் உணர்வும் ஒட்டிப்போனதோ!

மூமின்களே-நீங்கள்
மக்காவில் அடிமையாக நிற்கின்றீர்கள்
மதீனாவில்-நாயகக்
காதலர்களாக பதவி உயர்வு
பெறுகின்றீர்கள்.
இறைவன்
நாயகத்தைக் காதலிக்கும்
அடிமைகளையே
விரும்புகின்றான்!

- ஆலிம் புலவர்
நன்றி-மறைஞானப் பேழை

புனித புர்தா நிகழ்ச்சியும் மாதாந்திர கூட்டமும்

வெள்ளிக்கிழமை அஷர் தொழுகைக்குப் பின் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் புர்தா ஷரிப் ஒதப்பட்டது. பின் மாதந்திர கூட்டம் நடந்தது.

இம் மாதக் கூட்டத்திற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தார்கள்.தலைமையுரையுடன் விழா ஆரம்பமானது.

நிர்வாகத் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் உரை நிகழ்த்தினார் அவரைத்தொடர்ந்து
மதுக்கூர் இதாயத்துல்லா உரை நிகழ்த்தினார்

இன் நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.மஃரிப் தொழுகையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அரியாசனம் யாருக்கு?

லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற திருக்கலிமா இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஆணிவேராக இருக்கின்றது.இறைவனைத் தவிர வேறு இறையில்லை.முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பது எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்று.
இரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றிலே நாம் படித்துள்ளோம்.

இஸ்லாத்தை பூரணமாக்கி இகத்தைக் காக்க வந்த ஏந்தல் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இறைவன் என்னும் சொல்லைத் தானே கேட்டிருக்கிறோம். அந்த சொல்லுக்குத் தானே அச்சப்படுகிறோம். அப்படி என்றால் இறைவன் யார்? என்ற கேள்வி இதயங்களை குடைந்து கொண்டிருந்தாலும் இதைப்பற்றி ஆராயக் கூடாது என்று சிலர் கூறுவதைக் கேட்டு வெறுமனே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போர் அனேகர். ஆனால் சிலர் மட்டும் அந்த உண்மையை அறிய ஆவலாகவே உள்ளனர். அதை யாரிடம் கற்பது என்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த இறை நாடிய சிலருக்கு மட்டும் தன்னை அறிவிக்கக் கூடிய நல்லவர்களைக் காட்டித் தருகிறான்.

இந்த இறைத்தேட்டம் என்னில் எழுந்தபோது தாஹிர் பாவா அவர்களின் “சுயம் பிரகாசம்” எனும் நூல் என் கைக்கு கிடைத்தது. அதில் பத்தாவது ஜபம் என்ற ஒரு தலைப்பில் ஒருபக்கத்தில் சில வரிகள் இருந்தன. அதைப் படித்தபோது அது இறைவனைப் பற்றிய சில உண்மைகளை உணர்த்துவது போல் இருந்தன. ஆனாலும் அதன் முழு உண்மை என்னவென்று அறிய ஆவல் ஏற்பட்டபோது எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் வந்த நம் செய்கு நாயகம் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்களின் ஞான வெளிப்பாடான “நான”; எனும் பாடலைப் படிக்கும் பேறு பெற்றேன். அது மெய்யாகவே இறைவனைப் பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை அளிப்பது போலிருந்தது. அவர்களிடமே ஞானத்தை அறிய வேண்டும். அதுவே பரிபூரணமான தெளிவை நமக்கு அளிக்கும் என்னும் எண்ணத்தில் அவர்களின் இந்திய வருகைக்காக காத்து இருந்தேன். அந்த நன்னாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத பொன்னாள்.

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திருச்சியில் யாசீன் மன்ஸிலுக்கு வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் அங்கு சென்றோம். உள்ளே முரீதீன்கள் கூட்டம் நடக்க காத்திருந்தனர். நாங்கள் கூட்டம் முடிந்ததும் உள்ளே செல்ல எத்தனித்தோம். அப்போது ஒரு ரம்மியமான குரல் யாரிடமோ கூறிக் கொண்டிருந்தது என் காதில் கேட்டது.

ஹக்கை அடைய விரும்புபவர்கள் மட்டும் நம்மிடம் வாருங்கள். வேறு எதையும் நாடி நம்மிடம் வரவேண்டாம். ஹக் நாடினால் அனைத்தையும் தரும். இந்தக் குரல் நமது சங்கைக்குரிய செய்கு பிரான் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களிடமிருந்து முதல்முதலில் கேட்ட ஞானமொழியே அதுதான்.

ஒரு செய்கிடம் ஒரு முரீது எதை நாடிச் செல்லவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த ஆன்மீக மொழி அது. பறவையை வேட்டையாடும் வேடனுக்கு அம்பு எய்ய வேண்டிய பறவையுடைய உடலின் அந்தப் பாகம் மட்டும் தெரிய வேண்டும். அதைப்போன்று ஹக்கை அடைதல் ஒன்று மட்டும் முரீதின் இலட்சியமாக இருக்க வெண்டும். அதை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். ஹக்கின் நாட்டப்படி பெற வேண்டிய அனைத்தையும் பெற்றார்கள். வேறு விஷயங்களை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். எதைப் பெற வேண்டுமோ அதை இழந்தார்கள்.

கடலின் மேற்பரப்பின் அலைகளைக் கண்டு பயந்தவர்களுக்கு கடலின் உள்ளிருக்கும் விலை மதிப்பில்லா பொக்கிஷங்களைப் பெறமுடியாது. சிறிய விஷயங்களை அறிந்து கொண்டு தான் முழுமையும் அறிந்ததாக எண்ணுபவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை அறிய மாட்டார்கள்.

மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள். மனதை காற்றுக்கும் ஒப்பிடுவார்கள். மனம் அங்கும் இங்கும் அசைந்து கொண்டே இருக்கும். அது தாவிக் கொண்டிருக்கும். தனது இச்சைக்குத் தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கும் தனது இச்சைகளை எல்லாம் மனசாட்சி எனக் கருதுபவரும் உண்டு. தன் மன இச்சைகளை அவர்கள் மனசாட்சி என எண்ணி அதற்கு மாறாக தான் நடக்கவில்லை என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு தவறான வழிகளில் செல்வதும் உண்டு. ஆனால் தான் சரியாகவே நடப்பதாகவும் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாகவும் எண்ணுவதும் உண்டு. தனது மன இச்சைகளையே மனசாட்சியாக தன் நாயனாக கருதி வாழ்பவர்களும் உண்டு.

ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஸஜ்தா செய்யச் சொல்லும்போது தன் மனசாட்சிப்படி தான் சரியாக நடப்பதாகவே எண்ணி அகம்பாவத்துடன் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய அஜாஜீல் (சைத்தான்) மறுக்கிறான். மனசாட்சி மனசாட்சி என தம்பட்டம் அடிப்பவர்கள் அஜாஜீலின் கூற்று சரியானது என்று தானே எண்ணுவார்கள்? அவன் கேட்ட கேள்வியோ அவன் சொன்ன பதிலோ சரியானது போலத்தான் தோன்றும் ? ஏனெனில் இவர்கள் நினைக்கும் அறிவின்படியும் மனசாட்சியின்படியும் அது சரிதானே. பிறகு ஏன் அல்லாஹ் அஜாஜீலை முனிந்தான்- சபித்தான்? அவன் ஈமானை இழந்த காரணத்தால் இறைவனால் சபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டான். அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்திருப்பானே? அல்லாஹ் எதைக் கூறினாலும் அது உண்மை என்று ஏற்று இருப்பானே? இறைவனைவிட தான் அதிக அறிவு பெற்றிருப்பதாக நினைத்ததால்தானே அவன் இறையுடன் தர்க்கம் செய்தான்? மாறு செய்தான். இறைவனுக்கு எதிராக கியாம பரியந்தம் போரிடத் துணிந்தான் ? இந்த மன இச்சைகளை நீங்கள் உங்கள் நாயகனாக கருதுகிறீர்களா?

மனித மனம் என்பது ஓர் இருக்கை போன்றது. அதில் யார் இருக்கிறார்களோ அதைப் பொருத்துத்தான் அந்த மனிதன் இயக்கப்படுகிறான். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் “குலூபுல் முஃமினீன அர்ஷ{ல்லாஹ”; விசுவாசிகளின் மனங்களே அல்லாஹ்வின் அர்ஷ் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். மனமென்ற இருக்கையில் ஈமான் முழுமையாக இருந்தால் அது அல்லாஹ்வுடைய இருக்கையாக அமைந்துவிடும். ஒருவன் தன் மனம்போனபடி மனோ இச்சைகளை அதில் வைத்தால் அது ஷைத்தானுடைய இருக்கையாக அமைந்துவிடும் அதனால்தான் அல்லாஹ{ ஹாளிர் அல்லாஹ{ நாளிர் அல்லாஹ{ ஷாஹித் என்று மகான்கள் திக்ரு செய்கின்றனர். மனதில் இறைவன் பிரசன்னமானால் அவனே நோட்டமிடுபவனாகவும் அவனே சாட்சியாளனாகவும் அமைந்து விடுவான். மனதில் ஒருவன் தன்னை அமர்த்திவிட்டால் சுயநல ஆட்டம் அங்கு ஆக்கிரமித்துக் கொள்ளும். அவனுடைய மனோ இச்சைகளே அவனுக்கு நாயனாகத் தோன்றும். சைத்தான் தன் ஆதிக்கத்தை அரசாட்சியைத் தொடங்கி விடுவான்.

காமிலானா செய்கு இல்லாதவனுக்கு சைத்தானே செய்காக இருக்கும் என்று அபாயஜீது பிஸ்தாமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த மொழியிலிருந்து நாம் என்ன விளங்கிக் கொள்கிறோம்? மனமென்னும் இருக்கையில் அல்லாஹ் அமர வேண்டுமென்றால் அதற்கு காமிலான செய்கு அவசியம். இல்லையெனில் சைத்தானே அமருவான். அதேபோல சைத்தானை மனோ இச்சைகளை உங்கள் குருவாகக் கொள்ள நினைக்கிறீர்களா? குரங்கினைப் போல கிளைக்குக் கிளை தாவ நினைக்கிறீர்களா ? அல்லது ஈமானைக் கொண்டு மனதை திடப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்ந்து அல்லாஹ்வைத் தம் மனதிலே (அர்ஷிலே) வைத்திருக்கக்கூடிய செய்கினைக் கொண்டு (ஈமான்) விசுவாசம் கொண்டு உங்கள் இதயங்களையும் அல்லாஹ்வின் அர்ஷாக்க விரும்புகிறீர்களா?

காமிலான செய்குமார்கள் இறையின் பொருத்தத்தைக் கொண்டவர்கள். ரசூல் (ஸல்) அவர்களுடைய குணங்களைக் கொண்டும் குணம் பெற்றவர்கள். குணங்களின் முழுமையத் தன்னகத்தே கொண்டவர்கள். அவர்கள் அப்படி இருப்பார்கள். இப்படி இருப்பார்கள் என்றும் தங்கள் கற்பனைக்குத் தக்கவாறு அவர்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணுபவர்கள் ஒருபொழுதும் செய்கைக் கண்டு கொள்ள முடியாது. அவர்களுடைய குணங்களுக்குத் தக்கவாறு தன்னை தாற்றிக் கொள்பவனே உண்மையான முரீதாவான். காலத்தின் அதிபராக விளங்கிய முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் கோபம் வராதவன் கழுதை கோபத்தை அடக்காதவன் முட்டாள் என்று கூறுகிறார்கள். ஆனால் நம்மில் சிலரோ செய்கு என்றால் கழுதையைப் போன்று பொறுமையாக இருப்பவர்கள் தாம் செய்கு என்று கருதுகிறார்கள். அது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது.

தண்டிக்க வேண்டிய விஷயத்தில் மன்னிப்பதும் மன்னிக்க வேண்டிய விஷயத்தில் தண்டிப்பதும் மோசமானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரலைக் கடித்த ஹிந்தாவை மன்னித்த பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் அனேகர் வேண்டியும் திருடிய ஒரு பெண்ணின் கையைத் துண்டிக்க ஆணையிட்டார்கள். எதை எதை எவ்வாறு கையாளுவது என்பது செய்குமார்கள் நன்கறிவார்கள். நம்முடைய விருப்பத்திற்குத் தக்கவாறு அவர்கள் கையாள வேண்டும் என்று எண்ணுவது அப்துல்லா இப்னு உபை என்ற முனாபிக் பெருமானார் (ஸல்) அவர்கள் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணியது போலாகும். எந்த விஷயத்தைப் பற்றியும் ஸஹாபாக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டாலும் இறையால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் ரசூலுமே அறிவார்கள் என்று தான் கூறினார்கள். தவிர தாங்கள் ஏதோ பெரிய அறிவாளிகள் போல தங்கள் விருப்பத்திற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுமில்லை. கூறியதுமில்லை. பெருமானாரிடம் ஒரு விஷயத்தில் அல்லாஹ் அறிவான் என்று கூறிய ஸஹாபமக்களையே பெருமானார் (ஸல்) அவர்கள் விலக்கி வைத்த வரலாறும் உண்டு.

தவ்ர் குகையிலே சிலந்தி வலையைக் கொண்டு எதிரிகளை முறியடித்த பெருமானார் (ஸல்) அவர்கள் பதுறு போர்க் களத்திலே ஸஹாபாக்களை ஒன்று கூட்டி இறையைத் துதித்து போரிடுகிறார்கள். அது பெருமானார் (ஸல்) அவர்களின் இயலாமையைக் காட்டவில்லை. அது பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியைக் காட்டுகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் கரங்களை தன் கரங்களாக இறைவன் கூறுகிறான். அந்தக் கரங்கள் எந்த எதிரிகளையும் வெல்லக் கூடியது. ஆனால் உலக நியதிக்காகவே அவர்கள் போர் வீரர்களையும் போர்க்களத்தையும் நாடினார்கள். இந்த உண்மையை அறிந்தால் பெருமானார் (ஸல்) அவர்களின் வல்லமை நன்கு விளங்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் நான் இரண்டினை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது வாரிசுகள் என்றார்கள். அறிவின் கண்ணைக் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கும் அறிஞர்களுக்கு ஒன்று நன்கு விளங்கும். குர்ஆன் அது அசலிலே பெருமானார் (ஸல்) அவர்களாகவே இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றாலும் அவர்கள் முழுமையாக பெருமானார் (ஸல்) அவர்களின் அம்சங்கள். ஆகவே புற நிலையிலும் இன்று இஸ்லாத்தைக் காத்து நிற்பது பெருமானார் (ஸல்) அவர்கள்தான். பெருமானார் (ஸல்) அவர்களுடைய அத்தனை நிலைகளும் இந்த இரண்டிற்கும் உள்ளன. இறைவனின் கரங்கள் குர்ஆனுக்கும் உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் புனித வாரிசுகளான அஹ்லபைத்துக்களுக்கும் உண்டு. இதை அறியாதவன் செய்கையும் அறிய முடியாது. செய்குடைய வல்லமையையும் அறிய முடியாது.
இவ்வளவு வல்லமை கொண்ட அஹ்லபைத்துக்களை சாராதவன் தன்னை அஹ்லபைத் எனக் கூறும் ஆஷாடபூதி நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தவன் ஆவான். இறையோடும் போரிட நினைக்கும் ஷைத்தானுக்கு ஒப்பாவான். நற்பிறப்பு பிறக்காதவனாயும் நற்குடியைச் சாராதவனாயும் அவன் இருப்பான். ஆகவே இது விஷயங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அறிவுடனும் நடந்துக் கொள்ளவேண்டும்.

சிறிய விஷயங்களை மிகச் சாதரணமாக விளங்கிக் கொண்டு தன்னை பெரிய ஆலிம் போலவும் ஞான ஆட்சியை விளங்கியது போலவும் பேசுகிறார்கள்.
கொட்டாங்கச்சியின் மூத்திரம் கொசுவிற்கு சமுத்திரம் என்பார்கள். கொசுக்களுக்கு அது சமுத்திரம் தான். ஆனால் ஞானவான்களுக்கு சமுத்திரமே முழங்கால் மட்டம்தான்.


ஞான சமுத்திரமான சங்கைக்குரிய செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஷ{ல் வுஜுது ஜமாலியா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் பரம்பரையிலே உதித்தவர்கள். அவர்களின் விளக்கங்கள் நமக்கு புத்துயிர் ஊட்டின. ஆம்! நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டோம். அவர்களின் விளக்கங்கள் இறைவனை நமக்கு வெளிப்படுத்தின. எம் பெருமானார் (ஸல்) அவர்களின் உண்மையை நாம் அறிய அறிய அவர்கள் மீது நேசமும் பக்தியும் அதிகரித்துக் கொண்டே சென்றன. அந்த அறிவே குருவின் தத்துவத்தை நமக்குக் காட்டியது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வேதத்தால் எழுதப்பட்ட இலக்கியம் அண்ணல் நபியின் உயிர் பெற்ற கன்னல் யாஸீனின் குலக்கொழுந்து. அவர்களின் பாதம் தொட்டவர் வேதம் கொண்டார் அவர்களின் பார்வையைப் பெற்றவர் பர நிலை பெற்றார். அவர்கள் காலத்தைக் காட்டிடும் கண்ணாடி. இந்த ஞாலத்தை இயக்கிடும் முன்N;னாடி. அருட்கொடையாய் வந்த அண்ணல் அவரின் அருந்தவத் தூது.

“அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக் கைக்குள் அடக்கி விளையாட வல்லீர் “என்ற குணங்குடி மஸ்தான் சாகிபு (ரலி) அவர்களின் குரு தத்வ உண்மைகள் நமக்குத் தெளிவாயின. சாண் தண்ணீரில் நீச்சல் அடிக்க நினைப்பவர்களுக்கு செய்கு நாயகம் அவர்களின் அருமை புரியாது. ஆற்றல் தெரியாது. அர்ஜுனனை வில்லை எடு என்று கிருஷ்ணன் கூறியது அர்ஜுனன் வில் வித்தையில் வல்லவன் தான் ஏதும் அறியாதவன் என்பதற்காக அல்ல. அர்ஜுனனுக்கு வீரன் என்ற பட்டம் கிடைப்பதற்காகத்தான். கடல் அலைகள் அருகில் வரும்போது காலில் படுகிறது என்பதற்காக கடலே தனக்கு அடிமையாகி விட்டது என்று எண்ணி கடலில் இறங்க நினைப்பவன் கதி என்னவாகும் என்பதை குருவை லேசாக கருதுபவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கற்பு நெறி வழுவியவள் வேசி குருநெறி வழுவியவன் நீசன். துன்னுடைய குருவிற்கு துரோகம் செய்பவன் பிரம்ம ராட்சஷன் ஆகிவிடுவான் என இந்துமதம் கூறுகிறது. சிறுசிறு தவறுக்காகவே ரிஷிகளினால் சபிக்கப்பட்டவர்களை இந்து மத நூல்களில் நாம் நிறையக் காணமுடிகிறது. புpராமணன் எனப் பொய் சொல்லி வில ;வித்தைக் கற்றுக் கொண்டதினால் வள்ளலாக விளங்கிய கர்ணன் ஆபத்து சமயத்தில் கற்ற வித்தை மறந்துவிடும். ஏன பரசுராமனால் சபிக்கப்படுகிறார். கர்ணன் செய்த தர்மம் ஆபத்து சமயங்களில் கை கொடுக்கவில்லை. அவருடைய குரு பரசுராமன் கொடுத்த சாபம் தான் கர்ணனின் உயிருக்கு கேடு விளைவித்தது.

குரு துரோகம் குருவின் சாபம் நிச்சயமாக சக்ராத்துடைய காலத்தில் குரு தந்த உண்மைகள் மறந்து செய்த்தானின் ஊசலாட்டத்திற்கு ஆளாகிக் கேடான முடிவையே கொடுக்கும் என்பது அனைத்து சமயங்களின் கூற்று. பட்டத்தின் நூல் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் நூலை விடவிட பட்டம் மேலே பறந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தூரம் நூல் விடப்படுகிறதோ அவ்வளவு உயரப்பட்டம் மேலே பறக்கும். மேலே பறக்கும் பட்டம் தான் மிக உயரத்தில் இருக்கிறோம் என்றும் பட்டம் விடுபவர் கீழே இருக்கிறார் என்றும் இறுமாந்து இருந்தால் நூல் அறுபடும்போது பட்டத்தின் கதி என்னவாகும்? ஊயரத்திற்கு தக்கவாறு சேதாரம் கூடும் என்று பட்டங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மனைவியும் தானும் ஒரே துணியை மாற்றி மாற்றி தொழும் அளவிற்கு வறுமையில் வாடிய ஸஹாபி ஸஅலபா வுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பெண் ஆட்டினை துவாச் செய்து வழங்கினார்கள். ஆடுகள் பெருகின. மந்தை மந்தையாய்ப் பெருகின. மதீனாவின் எல்லையை விட்டு சென்று ஸஅலபா வெளியில் வசிக்கும் அளவிற்குப் பெருகின. ஜக்காத் முஸ்லிம்களுக்கு விதியானது. ஸஅலபாவிடம் ஜக்காத் கேட்கும் போது ஸஅலபா கொடுக்க மறுத்து தனக்குக் கடமையில்லை என்றார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டபோது ஸஅலபாவிற்கு வந்த கேடே ஸஅலாபாவிற்கு வந்த கேடே என்று மூன்று முறை சபித்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஸஅலபா அதைக் கொடுக்க வந்தபோது பின் வந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) கலீபா உமர் (ரலி) அவர்களும் அதைவாங்க மறுத்ததாக வரலாறு கூறுகிறது. ஸஅலபா என்றாலே குள்ள நரி என்றும் பொருள். ஆம் குள்ளநரிகளுக்கு உலகிற்கே அருட்கொடையாய் வந்த சற்குரு நாயகத்தின் ஆற்றல் எப்படி அறிய முடியும்? ஓர் ஆட்டை மந்தையாக மாற்றியவர்களுக்கு மந்தையை மண்மேடாக மாற்ற அதிக காலம் தேவையில்லை. குருவிடம் முழுமையாக திடமாக அசையா நேசத்தில் இருப்பவனே ரசூல் (ஸல்) அவர்களின் மீது முழு நேசத்துடன் இருப்பான்.

ரசூல் (ஸல்) அவர்கள் மீது முழு நேசத்துடன் இருப்பவனே இறைவனின் நேசத்தில் முற்றிலும் முழ்கி இருப்பான் இறையுடன் இருப்பான் நிறைவடைவான்.!

-கலீபா அட்வகேட் A.N.M.லியாகத்அலி B.Sc;B.L மதுக்கூர்

நன்றி- மறைஞானப்பேழை

தியாகத் திருநாளின் நல் வாழ்த்துக்கள்...

இன்று காலை ஏழு மணிக்கு ஈத் பெருநாளின் தொழுகையை முடித்துக் கொண்டு காலை 8.30 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி துவா செய்தார்கள்.
பெருநாளின் வாழ்த்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.



மத ஒப்பியல் அறிஞர்.!


வாப்பாவை நான் சந்தித்திருக்கிறேன்.
அவர் ஒரு ஆன்மீகவாதியாக இறைநேச செல்வராக ஆழ்ந்த மார்க்க ஞானமும் மதங்களிடையே நல்லிணக்க கருத்துக்களை சிறப்பாக எடுத்துக்காட்டும் மத ஒப்பியல் அறிஞராகத் திகழ்பவர்.
அவருடைய அரபி ஞானமும் தமிழ் இலக்கிய இலக்கணப் புலமைத்தன்மையும் வியப்பூட்டக் கூடியது.

ஏகத்துவ(ஒரிறை)கோட்பாடுகளைக் கவிதை நடையில் வடித்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் படிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுடன் எளிய முறையில் தத்துவ விளக்கமும் செய்து வருகிறார்.

அவருடைய எளிமை தூய்மை யாரையும் புண்படுத்தாத வகையில் மக்களுக்கு உபதேசங்களை சொல்வதோடு எல்லா இடத்துக்கும் சென்று நடமாடும் நல்லிணக்க பிரச்சாரகராக இருக்கிறார்.(மொபைல் பிரபகண்டா)என்று வாப்பாவைக் கூறலாம்.


இன்றைய காலகட்டத்திற்கு இவர் சேவை மிக மிக அவசியமானது.அவரை நபிகள் நாயகத்தின் வாரிசு எனச் சொல்வதில் தவறில்லை.ஆன்மீக வரிசையில் தரிக்காவில்(ஞான வழி) இப்படி எல்லாம் சொல்வது இயற்கைதான்.இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.என்று கூறுகிறார்
தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் (முன்னால்)நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்.


விழிப்புணர்வு

மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”


“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயே அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல்இ இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”


“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

நன்றி – குரு கதைகள் வலைப்பூ

புனித விசால்தின நிகழ்ச்சி


குதுபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 45வது வருட விசால் கந்தூரிதினம் 4/11/2009 புதன் மாலை வியாழன் இரவு மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.

கந்தூரி விசால் தினத்தை துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5.11.2009 வியாழன் மாலை வெள்ளி இரவு இஷாத் தொழுகைக்குபின் பெரியநாயகத்தின் புகழ்மாலை ஒதப்பட்டது.
பின்னர் விழா ஆரம்பமானது.
இவ்விழாவில் மௌலானாமார்கள் கலந்துக் கொண்டார்கள்....

திண்டுக்கல் நூருல்ஹக் அவர்கள் கிராஅத் ஒதி விழாவை துவங்கினார்.

ஹ+வல் வுஜ+து பாடலை சிராஜ்தீன் பாடினார்....அந்தபாடலுக்கான தமிழில் விளக்கத்தை அமீர்அலி கூறினார்

பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஞானப்பாடல் பாடினார்கள்...
இக்கூட்டத்திற்கு பொதுச்செயளாளர் A.N.M.முஹம்மது யூசுப் தலைமைத்தாங்கினார்...
துவக்க உரையாக முஹம்மது யூசுப் அவர்கள் விழாநாயகரைப்பற்றியும் பெருமானார் (ஸல்அலை)அவர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.


மன்னார்குடி ஷேக்மைதீன் உரையாற்றுகையில் மகான்களின் மகத்துவத்தை விளக்கினார்...


சித்தமருத்துவர் மாலீக் அவர்கள் குருவைப்பற்றியும் குருமருந்தின் தன்மையைப்பற்றியும் விவரித்து பேசினார்.


ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சஹாபுதீன் பேசுகையில் பெரிய நாயகத்தின் பிறப்பு மற்றும் அவர்களின் தொண்டு இவைகளை விவரித்தார்...



துணைத்தலைவர் அப்பாஸ் ஷாஜகான் பேசுகையில் விழாநாயகரைப்பற்றி செய்குனா கூறிய பல நிகழ்ச்சிகளை விவரித்தார்...


துணைத்தலைவர் காதர்ஷாகிப் உரையாற்றுகையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் மகான்களின் மூலம் அவர் பெற்ற நன்மைகளைபற்றியும் விவரித்தார்...


கிளியனூர் இஸ்மத் பேசுகையில்
மகான்களிடம் ஞானங்களை நாம்பெறவேண்டும் வெறும் நோய்களுக்காகமட்டும் அவர்களிடம் நாம் போய் நிற்கக்கூடாது என்று வழியுறுத்திபேசினார்....

வீடியோ காட்சிகள்




இறுதியாக மதரஸா வளர்ச்சிப் பணிக்காக ஆர்வத்துடன் செயலாற்றிய பல ஆன்மீக சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது....










பின் துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...

ஐயமும் தெளிவும்

ஒரு அமானிதத்தை எடுத்து மிருகங்கள் மரங்கள் மலைகளிடம் சுமக்க முடியுமா…?என இறைவன் கேட்டதற்கு அவைகள் மறுத்துவிட்டன.ஆனால் மனிதன் அவற்றை சுமந்து அநியாயக்காரனாகவும் மூடனாகவும் திரிகிறான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறதே அதன் விளக்கம் என்ன..?

மிருகங்கள் என்பது அது மிருகங்கள்தான். ஆனால் இரண்டுகால் மிருகத்தைவிட நான்கு கால் மிருகம் மிகவும் சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அது அப்படியே இயற்கையிலேயே இருக்கிறது.அதற்கு ஒன்றும் தெரியாது.ஏதாவது ஒன்றில் முட்டினாலும் அதற்கு தெரியாது.

ஆனால் மனிதனுக்கு இறைவன் கொடுத்திருப்பது பெரிய அமானிதம் எதுவென்றால் அறிவு. மனிதன்அறிவை சுமந்திருக்கிறான்.அவனிடம் இருக்கக் கூடிய ஒவ்வொரு உறுப்புகளும் அறிவுடையதாகும் விஷயமுடையதாகவும் இருக்கிறது. அதிலிருந்து எல்லா நன்மைகள் தீமைகள் பெறக்கூடியவனாகவும் மனிதன் இருக்கிறான்.

மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று இறைவன் வரையறுத்துள்ளான்.அதற்கு மாற்றமாக ஒருவன் நடந்து விட்டானென்றால் அவனுடைய அமானிதத்தை இழந்துவிடுகிறான்.

எல்லாவகையிலுமே மனிதன்தான் முக்கியமானவன்.அவனுக்கு எல்லா அறிவையும் இறைவன் வழங்கியிருக்கிறான்.

கொடுத்த அமானிதத்தை மனிதன் காப்பாற்ற வேண்டும்.அவன் இறைவனுக்கு மாற்றமாக நடந்துக் கொண்டால் ஆபத்து உண்டாகும்.

மனிதனிடம் அறிவுகள் இருந்தும் அதை விளங்காமல் கேடுகளை சுமந்துக் கொண்டிருக்கிறான்.
மனிதனுக்கு தடுக்கப்பட்டதை உண்ணுகிறான் குடிக்கிறான் ஏனென்றால் அவன் அந்த உண்மையை விட்டுவிட்டான். ஆபத்தான விசயங்களை செய்யக்கூடிய நிலமை வந்துவிட்டது.
அமானிதம் என்று சொன்னால் என்ன…?
இறைவன் தன்னுடைய இரகசியத்தை மனிதனுக்குதான் கொடுத்திருக்கிறான்.ஆனால் மனிதன் அதை மறந்துவிட்டான்.

- இமாம் கலீல்அவன் மௌலானா

புனித கந்தூரிவிழா

புனித இராத்தீபு நிகழ்ச்சி



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 1.11.2009 ஞாயிறு மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சியும் ,
குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாசீன் மௌலானா அல்ஹாஷிமிய்(ரலி) அவர்களின்

45வது கந்தூரிவிழா எதிர்வரும் 4.11.2009 அன்று பிறை 17ல் நடைபெற உள்ளதால் அவர்களின் புகழ்மாலையும் ஒதப்பட்டது.
இன் நிகழ்ச்சியில் மௌலானா மார்களும் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன்நிகழ்ச்சிக்கு பின் இஷாத் தொழுகை அங்கே நடைப்பெற்றது.

பன்னிரெண்டு நாளிதே பாடல்

"பன்னிரெண்டு நாளிதே"-
பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை மிக அழகாக பொருள்பட எழுதி உள்ள பாடல் இது...நீளமான பாடலாக இருப்பதால் யூடிப்பில் அப்லோட் ஆக மறுக்கிறது...
இந்தப்பாடலை இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள் எழுதி உள்ளார்கள்.
இதைப்பாடியவர்கள் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி அவர்களும் எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி (ஆலிம்புலவர்)அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப்பாடல் பிரபலமாகிவருகிறது...


"யா நபி சலாம் அலைக்கும்" - பாடல்

"யா நபி சலாம் அலைக்கும்" - சின்டா ரசூல் குழுவினரின் பாடல் கேட்டு மகிழுங்கள்

ஐயமும் தெளிவும்...2

மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.?

எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோசமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறு விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்த ஒரு கஷ்ட நிலையிலும் சந்தோசப்பட்டால் அவனுக்கு அந்தக் கஷ்டம் நீங்கி சந்தோச நிலை உண்டாகும். இது இயற்கை.
கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(0)

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகி விடுவோமா.?

எல்லாமே ஒன்றான பரிபூரண ஒன்றைப் பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால் ஏகமெனும் நிலை உண்டாகிவிடும்.(அது எவ்வாறெனில்) குதம்பைச் சித்தர் வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயமேதுக்கடி, குதம்பாய் பட்டயமேதுக்கடி- என்று பாடினார்.
வெட்டவெளியை மெய்யாகவைத்துக் கொண்டால் அவனுக்கு எதைப்பற்றிய பிரச்சனையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நினைத்து வருபவன் சில காலங்களில் இதில் சித்தமடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.


- செய்குனா பதில்கள் - மறைஞானப்பேழை

அறிவை அறியுமிடத்தில் தற்பெருமை ஆடை அவசியமா.?

ஒரு செய்குவிடம் முரீத் அதிககாலம் இருந்து விட்டு செய்குவை விளங்காமல் பொறாமை தற்பெருமை திமிர் அகம்பாவம் இவைகளினால் விலகிச் சென்றால் அவர்களின் நிலை என்னவாகும்.?
அவர்களுக்கு ரசூல் (ஸல்)அவர்களின் ஷபாஅத் மற்றும் அல்லாஹ்வின் கருணைக் கிடைக்குமா.?

அவர்கள் செய்குவிடம் ஏதேனும் தவறு கண்டு போனதாச் சொல்வார்கள். அதிக காலம் இருந்தவருக்கு எப்படி தவறொன்று உண்டாகிறது.? அதற்கு முன்பு தவறு ஏற்படவில்லையா.? இப்போதுதான் தவறு ஏற்பட்டுள்ளதா.?
முரீதுக்கு பொறாமை தற்பெருமை அகம்பாவம் திமிர் இப்படி சிலருக்கு ஏற்பட்டால் அது பெரிய ஆபத்தான நிலை. எந்த இடத்தில் கொண்டுபோய் விடுமென்றுச் சொல்ல முடியாது.

சரி இல்லை என்றால் போய் மௌனமாக இருக்கவேண்டும். மௌனமாக இல்லாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு தேவையில்லாத கதைகளை கதைச்சுக் கொண்டு அசிங்கமான விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பதாக இருந்தால் இவ்வளவு காலம் (செய்குவிடம்)இருந்து கேட்டுக் கொண்ட நன்மைகளெல்லாம் அவர்களுக்குப் போய் அம்புகளாக குத்தும்.

இவ்வளவு காலம் பெற்ற நன்மைகள் அறிவுகள் அது சம்பந்தபட்டவைகள் இதற்கு முன்பு செய்குவை பற்றிப் புகழ்ந்து பேசின புகழ்ச்சிகள் எல்லாம்சேர்ந்து மோசமான இடங்களில் போய் அம்பாக குத்தும். அது எங்கெங்கே குத்தும் எனச் சொல்ல இயலாது. அது இதயத்திலேயும் குத்தலாம். முக்கியமான நரம்புகளிலேயும் குத்தலாம் உறுப்புகளிலேயும் குத்தலாம்.

அப்படி குத்துபட்டது என்றுச் சொன்னால் கடைசியில் யாராலேயும் திரும்பமுடியாது நெருங்கமுடியாது தடுக்க முடியாது அதுதான் பெரிய ஆபத்து.
அதனால்தான் மித்த கவனமாக இருக்கவேண்டும் எனச்சொல்வது. ஏனென்றால் அப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும்.

முன்பிருந்த வலிமார்கள் காலத்தில் அதற்கு பின்னால் இருந்த காலத்திலும் இனிமேலும் இருக்கக்கூடிய காலத்திலும் இப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அது பெரிய ஆபத்தாக போய்விடும். அக்குபஞ்சரல்ல இது.
இது மோசமானது மித்தம் பயப்படவேண்டும் அல்லாஹ்வுக்கு.

அதாவது நீங்கள் ஏதோ ஒரு பரிட்சை எடுக்குறீர்கள் அதன் ரிசல்ட் வரும்வரை எவ்வளவு காலம் யோசிக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ பார்ப்பீர்கள். ரிசல்ட் வரவில்லை என்றால் திரும்ப அவரிடம் சென்று கேட்பீர்கள்.

இந்தமாதிரி விஷயங்களுக்கு சோதனைகளுக்கு ரிசல்ட் இதுமாதிரிதான் வரும். ஆனால் அந்த ரிசல்ட் மிக மோசமான ரிசல்ட் மிக ஆபத்தான ரிசல்ட். அப்படி எத்தனையோ பேர்களுக்கு அது மாதிரியான ரிசல்ட் வந்துவிட்டது. அது எல்லோருக்கும் தெரியும். அறியவில்லை என்று சொல்லவும் கூடாது. தெரியாது என்று சொல்லவும் இயலாது.

கண்முன்னால் கண்ட விஷயங்கள் நிறைய உண்டு. ஆகவே எனக்கு எல்லாம் முடியும் என்று துள்ளுகிற நேரத்தில் ஆபத்துகள் தான் வந்து முடியும். கல்லு கரடு உடைந்த கண்ணாடித் துண்டுகளில் குத்திக் கொண்டார்கள் என்றால் ஆபத்துதான்.

ஒவ்வொரு வகையான ஆபத்தான நோய்கள் மனிதனுக்கு மனிதன் உண்டாகிறது. அது மிக பயங்கரமான பலவகையான நோய்கள் இருக்கின்றன. நீங்கள் அறியாத நோய்களும் உள்ளது. புதிது புதிதான நோய்கள் அவரவர்கள் எதைச் செய்கிறார்களோ அல்லாஹ் அதைப்பார்த்து உங்களுக்கு இதுதான் ஜிஸா என்று கொடுத்திடுவான்.

ஓவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையான நோய்களில் மக்கள் அவதிப்படுவதை கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு காலில் ஒரு நோவு பிடித்தது. டாக்டர் கூறினார் இந்த நோய் ஆபத்தானது இவர் நன்றாக குடிக்கவேண்டும் குடித்தால் நரம்புகள் விரிவடைந்து சரியாகிவிடும் என்றார்.
அவர் நன்றாக தொழுது கொண்டிருந்த மனிதர் குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பிறகு விரல்களில் புண் உண்டாகி காலில் உண்டாக கொஞ்சம் கொஞ்சமாக இரு கால்களையும் வெட்டி கையை வெட்டவருகிற நேரத்தில் மருந்தைப்போல் குடிக்க ஆரம்பித்தார்.ஏதோ அவரின் மனைவி நல்ல பெண்ணானதால் மித்தம் கவனமாக குழந்தை பிள்ளையைப்போல் பாதுகாத்து நீராட்டி துடைத்து பவுடரெல்லாம்போட்டு நல்ல நிலையில் வைத்திருந்தார்.

அந்த மனைவி எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு சென்றாலும் விரட்டிவிட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவோ உதவிசெய்துள்ளார். யாருமே அவரைமதிக்கவில்லை. இப்படியான நிலை ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. முன்பே யோசிக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்கு பயப்புடவேண்டும் அவனுக்கு இந்தமாதிரி சில விஷயங்கள் இருக்கிறது நாடி செய்து விட்டான் என்றால் என்ன செய்வது.?

மனிதனுடைய தற்பெருமை எங்கே போகப்போகிறது. ஓன்றும் செய்யஇயலாது.
அல்லாஹ்வுடைய நாட்டம் அது. எந்த டாக்டரும் ஒன்றும் செய்ய முடியாது. சித்ரவதை என்று சொல்வது இதுதான்.அல்லாஹ் யாவரையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் முரட்டுதனமாகவும் மிருகத்தனமாகவும் அல்லாஹ்வுக்கு மாறாகவும் அநியாயமான முறையில் நடக்கிறவனுக்கு அல்லாஹ் கொடுக்கவும் வேண்டும். அப்போது தான் மற்றவன் பார்த்து பயப்படுவான்.

அப்படி எவ்வளவோ மோசமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. என்னென்ன நோய்கள் எல்லாம் இருக்கிறது. அதற்கு நாம் பயப்புடவேண்டும். அல்லாஹ் எங்களுக்கு வராமல் காப்பாற்றவேண்டும். மனநிம்மதியாக நாம் இருக்கவேண்டும். எப்பவுமே அந்தமாதிரியான நிலைதான் மனிதனுக்கு அவசியம். அதை நினைத்து பயந்து நாம்வாழவேண்டும்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் எவன் துள்ளுகிறான் என்று.!
துள்ளினால் சரிவந்து விடுமா,?
அல்லாஹ்வுடைய சக்திக்கு முன்னால் யாருமே நிற்க முடியாது. சுனாமி வந்தது என்ன நடந்தது பார்த்தீர்களா.?
பத்து பதினைந்து நிமிடம்தான் தான் சுனாமி .பிணங்களெல்லாம் எங்கெங்யோ போனது. ஒருகடல் அதனுடைய ஆபத்தைப் பாருங்கள். நெருப்பும் அப்படித்தான் பனிபெய்கிறதே அதுவும் அப்படித்தான். இந்தமாதிரியான நிலைகள் மனிதனுக்கு வரவும் கூடாது. அல்லாஹ்விடம் இருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சாபங்களை பெற்றுக் கொள்ளவும் கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.

- இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள்

புதுப்பொலிவுடன் உதயதின விழா


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை சங்கைமிகு செய்கு நாயகம் இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் அவர்களின் 74 வது உதய தின விழா புதுப் பொலிவுடன் கொண்டாடப்பட்டது.

காலை 9.00 மணிக்கு புர்தா ஓதப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு பின் காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர். இவ்விழாவின் தலைவராக
A.P.சஹாபுதீன் BE M.B.A அவர்கள்.

விழா ஆரம்பமாக ஆலிம் அப்துல் கரீம் அலிதாவி அவர்கள்
கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்கள்.

கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன்
"ஹ_வல் வுஜூது" பாடலை பாடினார்.

மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவூது B.COM அவர்கள் "மாநபியின் மாணிக்கமே வரவேண்டும்" என்ற பாடலை பாடினார்.

மதுக்கூர் பாடகர் சிராஜ்தீன் B.COM அவர்கள்
"குத்துபியத்தின் பெருமையுடன்" என்ற பாடலைப் பாடினார்.

பாடல்களுக்கு பின் தலைவர் A.P.சஹாபுதீன் BE. M.B.A அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சங்கைமிகு செய்குனா அவர்களின் பிறப்பு, அவர்கள் வளர்ந்தவிதம், அவர்களின் கல்வி, அவர்கள் தங்களின் தந்தை நாயகத்திடம் படித்த ஞானம், அவர்களின் பண்பு, அவர்களின் அன்பு, அவர்களின் பாசம், அவர்களின் கருணை, அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உபதேசங்கள், அவர்களின் வாழ்க்கைசரிதையை மிகஅழகாக எளிமையாக எடுத்துரைத்தார்.
இகக்கல்வியை கற்ற அறிஞர்கள் தங்களிடமுள்ள பெருமை, பொறாமை, நயவஞ்சகத்தன்மை இவைகளை அழிக்காமல் ஏகத்துவ மெய்ஞ்ஞானத்தை அறிந்திட முடியாது என்று சங்கைக்குரிய செய்குனா விளக்கிய சரித்திர சம்பவத்தை மீட்டுரைத்தார்.

இவரைத் தொடர்ந்து கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் தன்னுடைய அனுபவங்களை தன் செய்கு நாயகத்திடமிருந்து தான் பெற்றுக் கொண்டிருக்கும் பேரின்;பங்களையும். இந்த ஜமானுக்கு குத்புல் திலகமாக நமது ஆருயிர் செய்குனாதான் விளங்குகிறார்கள் என்று கூறினார்.

அடுத்து அதிராம்பட்டினம் S. ஷர்புத்தீன் D.COM உரையில்
கடந்த மாதம் செய்குனா அவர்களின் திரு இல்லத்திற்கு சென்று வந்த செய்தியும் அங்கு தங்கிருந்த அனுபவங்களையும் செய்குனா உபதேசித்த ஞானங்களைப் பற்றியும் கூறினார்.
பெருமானார் (ஸல்)அவர்கள் மக்களுக்கு இஸ்லாத்தை போதித்து பூர்த்தி செய்தார்கள் ஆனால் இதற்கு இந்த மக்களிடமிருந்து என்ன பிரதிஉபகாரம் கேட்டார்கள் என்றால் தன்னுடைய திருகுடும்பத்தை (அஹ்லுல்பைத்)நேசிக்க சொன்னார்கள்என்று அல்லாஹ் தனது மறையில் கூறுகிறான் என்றும்
இன்றைய காலத்தில் மாபெரும் செய்குவாக குத்புஸ்ஜமானாக நமது ஆருயிர் செய்குனா விளங்குகிறார்கள். இவர்களின் சிறப்பு என்னவென்றால் ரசூல் ஸல்லாலாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்களின் திருப்பேரராக விளங்குகிறார்கள் என்றும்
சமீபத்தில் பாக்கிஸ்தான் கராச்சி நகரத்தில் அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறினார்.

அடுத்து கீழக்கரை காதர் சாஹிப் M.B.A அவர்கள் பேசுகையில்
நான் இந்த ஞானசபைக்கு வரவில்லை எனில் என்னுடைய வாழ்க்கை மிகவும் கைசேதப்பட்டிருக்கும் என்றும் இங்கு வந்ததினால் தன்னுடைய வாழ்க்கையில் எழில் பொங்குவதையும் தன்னுடைய பணியில் தலைசிறந்து விளங்குவதின் காரணத்தையும் தனக்கே உரித்தான கவித்தோனியில் அடுக்கு மொழியுடன் மிகஅழகாக பேசினார்.

அவரைத்தொடர்ந்து கிளியனூர் M.S.முஹம்மது சபீர் M.B.A அவர்கள் பேசுகையில் பத்தாண்டுக்குப்பின் இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்று ஆரம்பித்து இன்றையக் காலக்கட்டத்தில் ஞானவிசயங்களை முதலில் நம்குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் போதிக்கவேண்டும். இன்றைய உலகம் இளைஞர்களை இன்டெர்நெட்டின்பால் கவனத்தை மிகஅதிகமாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது. பலரும் சேட்டிங் பேஸ்புக் என்று தங்களுடைய நேரங்களை அதில் சிலவுசெய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்கு நாம் நம்முடைய மீடியாவை இணையதளத்தின் பக்கம் திருப்பவேண்டும் என்று எழுச்சியான உரை நிகழ்த்தினார்.

இவரைத் தொடர்ந்து கடையநல்லூர் அப்துல்காதிர் (இளவரசன்) அவர்கள் செய்குனா அவர்களைப்பற்றி நீளமான கவிதையை கம்பீரகுரலுடன் வாசித்தார்.

அவரைத் தொடந்து கிளியனூர் இஸ்மத் பேசினார்.
பிறந்தநாள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் அவசியத்திற்குரிய நாளாக இருக்கிறது.
பள்ளியில் கல்லூரியில் அரசுநிறுவனங்களின் ரேசன் கார்டு போன்றவற்றிற்காகவும் வேலை வெளிநாடு பாஸ்போர்ட் போன்ற அனைத்திற்கும் தன்னுடைய பிறந்த தினத்தை நினைவுப்படுத்தப்படுகிறது. பிறந்த தேதியை மட்டும் நினைவு படுத்தக்கூடியவர்களால் இந்த சமூகத்தில் எந்த மாற்றமுமில்லை ஆனால் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களுக்கு இந்த சமூகத்தில் சிலர் பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்ததில்லை.
பெருமானார் (ஸல்)அவர்களின் பிறந்தநாளையும் மகான்களின் பிறந்தநாளையும் கொண்டாடுவது தரீக்காவாதிகள் தனக்காக தானே பிறந்தநாளை கொண்டாடுபவர் அரசியல்வாதி.என்றும் செய்குவிடம் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கையுடன் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

அடுத்து திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா B.SC அவர்கள் உரைநிகழ்த்துகையில்
அல்லாஹ் ஏழுவானத்திற்கு மேல் இருப்பதாக சிலரும் அர்ஷில் மட்டும் இருப்பதாக சிலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நன்மையான விசயத்திற்குமட்டும் தான் இறைவன் அதே ஒரு கஸ்டம் வந்தால் அந்த இறைவனை மறந்துவிடுவதுமாக இருக்கிறார்கள். அன்றை காலத்தில் இலக்கியங்களில் எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று தெளிவாக இறையைப்பற்றிய உண்மைகளை ஞானங்களை அறபு இலக்கியங்கள் தெளிவுப்படுத்தியது. அது காலப்போக்கில் அந்த இலக்கியங்களை மறைத்துவிட்டு இறைவனை ஏழுவானங்களுக்கு மேல் உயர்திவிட்டார்கள்.
எங்கும் நிறைந்த இறைவனை அனைத்திலும் அனைத்துமாய் நிறைந்த இறைவனை விளங்கவைத்துக் கொண்டிருப்பதுதான் இந்த ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை.
ஆரம்பக்காலத்தில் அணுவில் ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின் அணுவைப்பிளந்தால் அதில் ஒரு சக்தி இருக்கிறது என்று அறிந்தார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் இறைவனுடைய சக்தி இருப்பதை விஞ்ஞானம் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறது என்று பேசினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து அப்பாஸ் ஷாஜகான் B.SC அவர்கள்
பேசுகையில் செய்குனாவின் மேன்மைகளையும் அவர்களின் திருக்குடும்பத்தார் கராமத் நிறைந்தவர்கள் என்றும் செய்குனாவின் மூத்தசகோதரர் அவர்கள் சிறுவயதில் செய்த கரமத் சம்பவங்களை எடுத்துக்கூறினார்.

இவரை அடுத்து தீன் இசைமுரசு தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் தங்களின் இனிமையான குரலில் பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.


அடுத்து மதுக்கூர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் பேசுகையில்
நமது செய்குனா அவர்கள் நமக்கு இறைவனைப்பற்றி விளக்கத்தை அறியத்தருகிறார்கள். நாம் தாயின் கருவறைக்கு முன் எங்கிருந்தோம் தந்தையின் முதுகந்தண்டிலே இருந்தோம் அதற்குமுன் உணவு பண்டங்களிலிருந்தோம் அதற்கு முன் பஞ்ச பூதங்களிலிருந்தோம் அதற்குமுன் இறைவனுடைய அமாவாக இருந்தோம் என்றும்
மற்ற தரீக்காவில் இருந்த சிலர் நமது செய்குனாவிடம் பைஅத் பெறவந்தபோது அவர்களை ஏற்கனவே பைஅத் பெற்ற தரீக்காவிலேயே இருக்கும்மாறு பணித்தார்கள் என்றும் மாற்று சமயத்து சகோதரர்கள் ஆர்வத்துடன் நமது செய்குனா அவர்களை அனுகிறார்கள் அவர்களின் ஞான உபதேசங்களை கேட்டு அவர்கள் மதம்மாறுவதற்கும் சிலர் கேட்டபோது இந்த உண்மைகளை விளங்கிக்கொள்ளுங்கள் மதம்மாற்றம் தேவைஇல்லை உங்களுக்கு மனம்மாற்றம்தான் தேவை ஞானம் உங்கள் மதங்களிலும் இருக்கிறது என்று கூறினார்கள் என்று சில நிகழ்ச்சிகளை கூறினார்.

இறுதியாக துவா சலவாத்துடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பைஜி தரீக்காவிலிருந்து ஆலிம் சபியுல்லாஹ் ஜமாலி அவர்களும் ஆலிம் அப்துல்கரீம் அல்தாவி அவர்களும் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர்.

இன் நிகழ்ச்சிக்கு அலங்காரங்கள் செய்து அழகுபடுத்தியவர்கள் இக்பர் ஷாஜகான் அபுல்பசர் திருச்சி சாதிக் முஹம்மது அலி ஆசிக் அப்துல்ரஹ்மானின் மகனார் அமீர்அலி ஜாகிர்உசேன் ரியாஸ்அஹமது மற்றும் அறை நண்பர்கள்.


ஜூம்மா தொழுகைக்கு பின் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு புகைப்படங்கள் எடுத்தவர்கள்.
மதுக்கூர் ராஜாமுஹம்மது
அதிரை அப்துல்ரஹ்மான்
மதுக்கூர் சாதிக்
மற்றும் பலர்.

அபுதாயிலிருந்து ஜெகபர் சாதிக், கிளியனூர் பத்தாஹ் மற்றும் வழுத்தூர் அப்துல்ரசீது, ஆதம் அப்துல்குத்தூஸ் ,அப்துல்ரவூப் ,ஹாஜாஅலாவுதீன், அன்வர்உசேன், வாவாமுஹம்மது, பஷீருல்லாஹ், ஜெய்னுலஆபுதீன், அப்துல்ஹக், மன்னார்குடி முஹம்மது தாவூது , ஷேக்முஹைத்தீன், ஜெகபர்தீன்,கவிஞர் நாசர், சாகுல்ஹமீது மற்றும் அமீரகத்திலிருந்து பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி…!