This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தாகிபிரபம் ஒரு ஆய்வு


ஞானவெட்டியான்
சங்கைமிகு இமாம் அஸ்சையிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் எழுதிய ஞாக்கிரந்தமான தாகி பிரபம் நூலை ஞானவெட்டியான் எனும் புனைப்பெயருடைய செயச்சந்திரன் அவர்கள் ஆய்வுச் செய்து தனது சித்தன்.காம் - ல் சென்ற ஆண்டு ஞான வேட்கை உள்ளவர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
அவருடைய நூலின் ஆய்வை அவரின் அனுமதியின்றி இங்கு இந்த வலையில் மறுபதிவிடுவதால் அவர்கள் மன்னிக்க.
ஆர்வமுள்ளவர்கள் இதுபோன்ற ஞான நூற்களின் ஆய்வுகளையும் விளக்கங்களையும் கற்பதற்கு பெருமுதவியாக இருக்குமென நல்லெண்ணத்தில் இங்கு பதிவிடுகிறேன்.


ஞானவெட்டியான்
என்னைப் பற்றிச் சில வார்த்தைகள் :

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு.

இயற்பெயர் – அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A.,

தந்தை – திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம்

தாய் – திருமதி.சீதை அம்மாள்

எளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம்
(பவுதீகம்) பெற்று, விமானியாக 5 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணிமுடித்துப் பின்னர் State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு.

1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம்.

விருப்பம் – பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும்.


ஞானவெட்டியான்

திண்டுக்கல்

தமிழகம்

தாகி பிரபம்*************


ஆக்கியோர்:


பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் – இலங்கை

இவ்வறிய கருவூலத்தைப் பற்றி சகோதரர் எனக்குத் தனிமின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்குஅறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன்.
இவ்வரிய நூலைப்பற்றி சகோதரர் என் கருத்துக்களையும்
கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்கருத்துக்களும், மனுவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவைப் பற்றியும்,எப்படி இருந்தோம்? எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கப் போகிறோம்?என்னும் வினாக்களுக்கு விடைகளும் பொதிந்து கிடக்கும் இந்நூலுக்குக்கருத்துக் கூற எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.

அப்படியே கூறினும் அது: “பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இருப்பினும்:

“கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்…..”(தொழுகைநாமா)

“சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே”(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)

இக்கருவூலத்தை நான் மட்டிலும் அநுபவிக்க மனமில்லாமையாலும், பிரபம்
என்னும் ஞானத் தண்ணீர் வாய்க்கால் வழியோடி ஆங்கிருக்கும் புல்லுக்கும்பொசிய வேண்டும் என்னும் தாளாத ஆசையாலும், பெரியவர்(இந்நூலாசிரியர்)அவர்களிடமிருந்தும், சகோதரரிடமிருந்தும் முன் அநுமதி பெறாமல்இதைத் இணைய தளத்தின் குழுக்களிலுள்ள நண்பர்களுடன் பங்கிட்டுக்கொண்டமைக்கு அவர்கள் இருவரும் மன்னிப்பார்களாக.

“நம்மை மதிப்பதற்காக நாம் ஞானத்தை மக்களுக்கு கூறவில்லை” என்று
அடக்கத்தோடு ஆரம்பமாகும் இந்நூல் பல அரிய கருத்துக்களக் கூறுகிறது.

மார்க்கங்கள்(வழிகள்) நான்கு:

ஷரீஅத் – சரியை – தோல் – வித்து
தறீக்கத் – கிரியை – தசை – மரம்
ஹக்கீகத் – யோகம் – எலும்பு – பூ
ம்·றிபா – ஞானம் – மூளை – கனி
(முரீதுப் படலம் – 854)

ஞானம் என்றால் என்னவென அறிந்துகொள்ளத் துடிப்பவர்களுக்கும், சூபித்துவம்என்றால் என்ன என்றறியத் துடிப்போர்க்கும் இந்நூலில் (ற)சூல்
விடையிறுக்கும்.

சூபித்துவம்:

“லா இன்ன வலா அன்த”

“நானுமில்லை;நீயுமில்லை;இருப்பது இறைவன் ஒருவனே.”

இக்கருத்தை வலியுறுத்துகிறது இந்நூல்.

“தம்மைத் தாமே அறிவது பூரணத்துவம்.”

அதற்கு வழி:

‘மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
நினைவையொரு அம்பாக்கி நினைவேவ லெந்நாளோ”
(ஈரடி கொச்சகப் படலம் 451)

முகக்கண் மூடி அகக்கண் திறக்கக் குரு அவசியம்:

குருவின் முக்கியத்துவம்: பிசுமில் குறம்(பீர்முகமது அப்பா)

“வழியான குருவில்லாத வணக்கம் முழுதெல்லாம்
வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும்
தெரியாத குருமாரின் திருமொழி கேட்பதுதான்
தெரிவையர்கள் குசறாவைச் சேர்ந்திருந்த துவமை
சரியான குருவில்லா வணக்கமுள தெல்லாம்
சாவலில்லாக் கோழி முட்டையிட்டது போலுவமை”

ஆகவே பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானாஅல் ஹசனிய்யுல் ஹாஷிமிய் அவர்களை (காணாதிருந்தும்) மானசீகக் குருவாகஏற்றுக்கொண்டு, அவர்களின் புனிதத் தாள் பணிந்து, இக்கருவூலத்தைஇணையத்தில் ஏற்றுகிறேன்.

“ஆரு மடிக்க வந்தால் அன்னைமுந்தி மீதில் மக்கள்
சேரு மதுபோற் புகுந்தேன் செய்யிதத்தே பாத்திமத்தே”

என்னும் ஞானத் தாலாட்டின் படி குருபிரான் அவர்கள் தாள் தஞ்சம் புகுந்தேன்.

குற்றங்குறை இருப்பின், எல்லோரும் என்னை சிறுபயலென நினந்து மன்னிக்க.

எல்லாம் படைத்தாளும் ஏகபெரியவனை எண்ணி மனதில் தொழுதுகொள்ளும்,

அன்புடன்,
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)
*********************

“மானுட உண்மையை அறிவதே ஞானத்தின் நோக்கம். மனிதனை மனிதனாக வாழவைப்பதேஷரியத். சாந்தியும் சமாதானமும் எங்கும் நிலவ, மனிதன் மனிதனாக, மனித நேயம்பேணி வாழ்ந்து, மானுட உண்மையை அறியவேண்டும்” என்று கூறி அவைகளையே
தமது குறிக்கோளாக வைத்துள்ளார் ஞானாசிரியர்.

ஞானாசிரியர் கருத்து:

இந்நூற் “றாகி பிரபம்” எனும் பெயருடைத்து. இதன் கருத்து,
தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.

எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ, அவருக்கிந்நூல் ஒருநீர்ப் பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையைஇந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்திற் கிளர்ந்தவை ஏகபேட்டியாகிஉதித்ததே இ·தெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டி விடைவிடுத்ததே இஃதாம்.

குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத்
திருவருளிசையுமென்பதில் ஐயமின்று.

இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இ·து அமைக்கப்பட்டுள்ளது. ஞானசூனியங்களுக்கன்று.

வாழ்க மெய்ப்பொருள்!
வாழ்க மெய்ஞானம்!!
வாழ்க ஞானிகள்!!!

- அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்

விளக்கம்:

இங்கு கருத்தா என்பது சிருட்டி கருத்தா (கருத்தாகிய நினைவு). சிருட்டி என்பது சிருட்டிக்கப்பட்ட ஆன்மா தங்கியுள்ள உடல் (நினைவால் சிருட்டிக்கப்பட்ட எண்ணங்கள்).

இறை கேட்டது: முதன் முதலில் நீர் எங்கிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து, நான், நீ யென்றன்றி இல்லாதிருந்த நிலையிலிருந்தபோது, நான் உன்னுடன் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: அப்போது நீர் உம்மைக் கண்டீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். என்னை யான் கண்டேன்.

இறை கேட்டது: எப்படிக் கண்டீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் என்னைக் கண்டேன். அப்போது என்னில் உன்னைக் கண்டேன்.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, உன்னில் யான் கலந்திருந்தேன்.

இறை கேட்டது: என்னில் நீர் எப்படிக் கலந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, இடைவெளியின்றிக் கலந்தேன்.

இறை கேட்டது: இடைவெளியற்றிருந்தது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல்.

இறை கேட்டது: அப்போது உமது நிலை யெப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: ஏகாந்த நிலையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.

இறை கேட்டது: அப்போது நீர் எப்படியிருந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.

இறை கேட்டது: அப்போது உமக்குப் பார்வையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம் என்றேன்.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால் பரிபூரணமாய்ப் பார்த்தேன்.

இறை கேட்டது: எப்படிக் கேட்டீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற் சொன்னவாறே கேட்டேன்.

இறை கேட்டது: எவ்வாறு சுவாசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, மேற்சொன்னவாறேதான்.

இறை கேட்டது: நீர், எவ்வாறு ருசித்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அவ்வாறேதான்.

இறை கேட்டது: எவ்வாறு உணர்ந்தீர்?

யான் விடுத்தது : இறைவா, அதுவும் அவ்வாறே.

இறை கேட்டது: உமக்குக் கண்ணிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் கண்ணாக விருந்தது.

இறை கேட்டது: உமக்குச் செவியிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் செவியாயிருந்தது.

தாகி பிரபம்-2

இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா?
யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது.

இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது.

இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன.

இறை கேட்டது: அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

இறை கேட்டது: நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தனவே.

இறை கேட்டது: அஃது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அதுவே (பரிபூரணம்) தானே அதற்கு உள்ளூம் புறமும்.

இறை கேட்டது: அதற்குத் திக்குத் திசைகளிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இருந்தன. அதற்குத் திக்குத் திசைகளும் அதுவே தானே.

இறை கேட்டது: அதற்கு மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தனவா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம் அதற்கு அதுவே யாயிருந்தன.

இறை கேட்டது: பரிபூரணத்திற்கு இவ்வளவுதான் என்னும் மட்டும் அளவும் கனமுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, பரிபூரணம்(நான்) அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை.

இறை கேட்டது: அதற்கு(பரிபூரணத்திற்கு)க் கால எல்லையுண்டா? முடிவு உண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையே.

இறை கேட்டது: அப்படியானால் அதன் நிலை என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது நான் நீயாகவே நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: அவ்வாறு நிலைபெறும் எனக்கும் உமக்குமிடையே வித்தியாசங்களுண்டா? வேறுபாடுகளுண்டா?

யான் விடுத்தது : இறைவா, அது நான், நீ, அது, இது, அவள், அவன், அவர்கள், இவர்கள், நீங்கள், நாங்கள் எனும் வேறுபாடின்றி நிலை பெற்றிருக்கும்.

இறை கேட்டது: வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவை எல்லாம் பூரணமாய் என்னிலிருந்துதானே வெளியாயின?

யான் விடுத்தது : இறைவா, ஆம். அது, நீ, நான், எனது, உனது, என், உன், என்றில்லாத உன்னிலிருந்துதான் வெளியாயின.

இறை கேட்டது: என்னிலிருந்து என்று யான் கூறியதன் தாற்பரியத்தைக் கூறுவீரா?

யான் விடுத்தது : ஆம், இறைவா. நீயாகவே வெளியானாய் என்பதை நீ மறைத்துக் கூறுகிறாய்.

இறை கேட்டது: சிருஷ்டிப் பொருட்கள் எனக் கூறப்படுவன எவை?

யான் விடுத்தது : இறைவா, யார் சிருஷ்டித்தார்? நீயிருந்து நீயல்லா வேறு பொருள்களச் சிருஷ்டிப்பின், உனக்கும் பொருள்களுக்கும் இடையே வேறுபாடுண்டல்லவா? அதுதானே இணையென்பது? ஆதலால் நீயாகவேயிருந்து உன்னிலிருந்து வெளியானவற்றைத்தான்
சிருஷ்டிகள் என்கிறோம்.

இறை கேட்டது: அப்படியாயின் எனக்கும், என்னிலிருந்து வெளியானவைகளுக்குமிடையே வேற்றுமையுண்டா?

யான் விடுத்தது : இறைவா, உனக்கும் உன்னிலிருந்து வெளியான சிருஷ்டிகளுக்குமிடையே எவ்வேறுபாடுமில்லை. நீ முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கிறாய்.

இறை கேட்டது: என்னிலிருந்தே வெளியான மனித இனம், என்னை மறந்து விட்டதே?

யான் விடுத்தது : இறைவா, உண்மைதான். வெளியாகும்வரை நானும் நீயும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது நீயார்? நான்யார்? நீயும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

இறை கேட்டது: மனித இனமல்லாத மற்ற இனங்களின் நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் உன்னில்தானே உள்ளன. அவை உன்னிடத்தே நீயாகி வணக்கம்செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இறை கேட்டது: என்னில்தான் அவையிருக்கின்றன என்பதற்கும் அவை என்னில் நானாய் வணக்கம் செலுத்துகின்றன என்பதற்கும் நீர் கண்ட முக்கியத் தத்துவம் யாது?

யான் விடுத்தது : இறைவா, அவை சிருஷ்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. உன்னிலிருந்து நீயாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையைஅறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும் தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்கள்களும் (விதிவிலக்கல்களும்) இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே நீயான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

இறை கேட்டது: மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?

யான் விடுத்தது : இறைவா, குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் நீயாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனை இருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப்பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். உன்னிலிருந்து வேறுபட்டு விட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான்.

இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறை கேட்டது: வந்த பாதை எது?

யான் விடுத்தது : இறைவா, உன்னிலிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அதுதான் அந்தப் பாதை.

இறை கேட்டது: அவன் தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

யான் விடுத்தது : இறைவா, அவன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிபனானமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.

இறை கேட்டது: அதன் முன் அவனது நிலையென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது சிசுவாகத் தன் தாயின் கற்பவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று.

இறை கேட்டது: இஃது எவ்வாறு உண்டாயது?

யான் விடுத்தது : இறைவா, இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது.

இறை கேட்டது: இதற்கு முன் அது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது.

இறை கேட்டது: அது எப்படி இவ்வாறாயது?

யான் விடுத்தது : இறைவா, தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறுண்டாயது.

இறை கேட்டது: அது அங்கே எப்படியிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அது சத்துப்பொருளாயிருந்தது.

இறை கேட்டது: இச்சத்துப் பொருட்களை இவர்கள் எங்கிருந்து பெற்றனர்?

யான் விடுத்தது : இறைவா, இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இறை கேட்டது: அப்பொருள்கள் யாவை?

யான் விடுத்தது : இறைவா, அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும்.

இறை கேட்டது: இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளியாயின.

இறை கேட்டது: பஞ்ச பூதங்களெல்லாம் எவை?

யான் விடுத்தது : இறைவா, அவையெல்லாம் இயற்கை.

இறை கேட்டது: அப்படியானால் செயற்கை யென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை.

இறை கேட்டது: அப்படியாயின் செயற்கையும் இயற்கைதானே?

யான் விடுத்தது : இறைவா, ஆம். செயற்கையும் இயற்கைதான்.

இறை கேட்டது: அவ்வாறாயின் இயற்கை எங்கிருந்து வந்தது?

யான் விடுத்தது : இறைவா, பஞ்ச பூதங்களிலிருந்து இயற்கை வெளியாயிற்று. பஞ்ச பூதங்களும் இயற்கையே.

இறை கேட்டது: இப்பஞ்ச பூதங்களெல்லாம் எங்கிருந்து வந்தவை?

யான் விடுத்தது : இறைவா, இவையெல்லாம் வானின்றிழிந்தவைகளே.

இறை கேட்டது: அப்படியாயின் என்ன?

யான் விடுத்தது : இறைவா, பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்த அதிலிருந்து வந்தவை. இஃதுமியற்கையே.

இறை கேட்டது: இதற்குமுன் இஃது எங்கிருந்தது?

யான் விடுத்தது : இறைவா, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை யெனவில்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணையில்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளியற்று யாங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்துறைந்த ஒன்றிலிருந்தே வெளியாயது.

இறை கேட்டது: இதற்குமுன் எது இருந்தது?

யான் விடுத்தது : இறைவா, இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றுமிருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

இறை கேட்டது: நித்திய சத்தியமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவுமில்லை. மாற்றமுமில்லை, குறைவதுமில்லை, கூடுவதுமில்லை. எல்லாம் பரி பூரணம்.

இறை கேட்டது: அஃறிணைப் பொருளில் அது என்கிறீரே, அது என்ன?

யான் விடுத்தது : இறைவா, அது, இது, அவைகள், இவைகள், அவன், இவன், அவர், இவர், அவள், இவள், இவர்கள், அவர்கள், (இவர்கள்), நான், நாம், நீ, நாங்கள், நீங்கள், முதலான தன்மை, முன்னிலை, படர்க்கை, பன்மைகள் யாவுமற்ற மொழிதற்கியலாத ஒன்றே அந்த தனித்த வொன்று; அதனை அழைக்க எந்த வார்த்தையும் இல்லாத ஒன்றே அதுவான பரிபூரணம்.

இறை கேட்டது: ஒன்று என்பது எது?

யான் விடுத்தது : இறைவா, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே, அது.

இறை கேட்டது: மேலும் என்னை உம்மால் வருணிக்க முடியுமா?

யான் விடுத்தது : இறைவா, உன்னை வருணிக்க என் நா எழவில்லை. கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய
பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போற் சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவனீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய்.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், வருணிப்பதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், எனக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நீ புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையேயில்லை. அதனால் உனக்கு எந் நன்மையுமில்லை.

இறை கேட்டது: என்னை நீர் புகழ்வதாலும், எனக்கு மதிப்புக் கொடுப்பதாலும், வருணிப்பதாலும், உமக்கு என்ன நன்மையுண்டு?

யான் விடுத்தது : இறைவா, நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும்.

இறை கேட்டது: என்னை ஒரு கூட்டம் மிகவும் மதித்து நடப்பதுபோலும், மரியாதை கொடுப்பதுபோலும் நடந்து கொள்கிறார்களே, இதன் உண்மையென்ன?

யான் விடுத்தது : இறைவா, உன்னையறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடைத்தாகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மையில்லையே? உனக்குக் காலும் கையும் முகமும் வைத்து உன்னை இணைவைத்து வணங்குகிறவர்கள் உன்னை எப்படித்தான் அறியப் போகிறார்கள். அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

இறை கேட்டது: நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். இப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும் விரும்பினேன்.

இறை கேட்டது: அப்போது பரிபூரணத்திற்கு என்னவாயது?

யான் விடுத்தது : இறைவா, அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.

இறை கேட்டது: சலனமென்பதென்ன?

யான் விடுத்தது : இறைவா, அது தோன்றவிருக்கும் நிலை.

இறை கேட்டது: அது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, அஃது யானென்னவிருந்தது, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை.

இறை கேட்டது: நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, நானெனக் கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

இறை கேட்டது: அப்போது என்ன நடந்தது?

யான் விடுத்தது : இறைவா, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று.

இறை கேட்டது: நானானது நாமானது எப்படி?

யான் விடுத்தது : இறைவா, நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்களானேன். அப்படிப் பிரிந்த என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு.

இறை கேட்டது: இஃதெல்லாம் என்ன?

யான் விடுத்தது : இறைவா, இவைகள்தாம் இயலாகத் தாமாயியன்ற இயற்கை.

இறை கேட்டது: இயற்கையென்பது என்ன?

யான் விடுத்தது : இறைவா, செயற்கையும் சேர்ந்த இயற்கையென்றேன்.

இறை கேட்டது: இதற்குமேல் வேறேதுமுண்டா?

யான் விடுத்தது : இறைவா, இல்லையென்றேன்.

இறை கேட்டது: இதனை வேறு என்னவெனக் கூறலாம்?

யான் விடுத்தது : இறைவா, இதனை, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழுச்சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம்.

இறை கேட்டது: அப்படியாயின் என்னிலிருந்து நீர் வெளியாகாமல் இருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மையென்கிறீரா?

யான் விடுத்தது : இறைவா, ஆம். உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவின்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றேயெனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின், வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றியிருப்பினும், இரண்டும் பிரம – இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும். சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

இறை கேட்டது: நான் ஏன் வெளிப்பட விருபினேன்?

யான் விடுத்தது : இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத் தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழிற்றோற்றங் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றங் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்னவிண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித்தட்டென விண் மிதக்கும் வண்ணத்தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப்பந்தரெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பன்னிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கை என்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்ட தென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயனிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மையறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை யெய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மையெனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கென்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாவும் ஊரே யாவருங்கேளிர் எனும் ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்ற மனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேன ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி , இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!
(முற்றும்)


தாகி பிரபம்-3
இந்நூல் கூறும் கருத்துக்கள்:


இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம்.

இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன்
கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன்.

ஏகாந்தம்:

நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய்ப் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக் கண்ட நிலை.

யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன். அப்போது பார்வையிருந்தது; கேட்கும் நிலையிருந்தது; சுவாசிக்க முடிந்தது; உருசிக்க முடிந்தது; உணர முடிந்தது; பரிபூரணமும் கண்ணாயும், செவியாகவும், நாசியாகவும், வாயாகவும், ஆக்கையாகவும் இருந்தது;

பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால்
பரிபூரணமாய்ப் பார்த்தேன்; கேட்டேன்; சுவாசித்தேன்; உருசித்தேன்;
உணர்ந்தேன்;

பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்.

நானே பரிபூரணமானபோது பரிபூரணமான எனக்கு நானே ஆரம்பமும் முடிவுமானேன்.

நான் எனும் பரிபூரணத்திற்கு உள்ளும் புறமுமிருந்தன; திக்குத்
திசைகளிருந்தன; மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாமிருந்தன; பரிபூரணம் தானே பரிபூரணத்திற்கு உள்ளூம் புறமும், திக்கு திசைகளும், மேல், கீழ், உயரம், பள்ளம் எல்லாம்;

நானாகிய பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது;

பரிபூரண நிலை, நான் இறைவனாகவே நிலை பெற்றிருக்கும் நிலை. அந்த நிலையில், எனக்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசங்களும் வேறுபாடுகளுமில்லை.

வானம், பூமி, சூரியன், சந்திரன் முதலியனவையெல்லாம் பூரணமாய்
இறைவனிடமிருந்துதான் வெளியாயின.

இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருட்டிகள். சிருட்டிக்குப்பின்னும், இறை முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும். இறைவனிருந்து, இறையம்சமில்லாத வேறு பொருட்களைச் சிருட்டிக்கின், இறைக்கும் அப்பொருளுக்கு வேறுபாடு உண்டு. அதுதான் இணையென்பது.

இறையிலிருந்தே வெளியான மனித இனம், இறையை மறந்து விட்டது உண்மைதான். வெளியாகும்வரை நானும், இறையும் வேறில்லை. ஒன்றேயென்று கூறிக்கொண்டிருந்த மனித இனமெல்லாம், இப்போது இறையார்? நான்யார்? இறையும் நானும் ஒன்றல்லவே எனக்கூறிக் கொண்டிருக்கின்றன. தாய் தந்தையரை அறியா, தாய் தந்தையர் இல்லா மக்களைப் போன்றுதான் இவர்கள் உள்ளனர்.

மனித இனமல்லாத மற்ற இனங்கள் இறையிடத்தே இறையாகி, இறைக்குள் இருந்து, வணக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றன.

அவை சிருட்டி என அறியாமல் முன்னிருந்த நிலையிலேயே உள்ளன. இறையிலிருந்து இறையாகவே அவை வெளியாகியும், அவை வெளியாகிய தன்மையை அறியவில்லை. அவற்றிற்கு புத்தியில்லையே! (மனிதனைப் போன்று) சிந்தனையுமில்லையே! அதற்கு நல்லது, கெட்டதும் தெரியவில்லையே! இது கூடும், இது கூடாது என்பனவும்
தெரியவில்லையே. அவற்றிற்கு விதிவிலக்குகளும் இல்லையே. கையால் அவைகளின் வணக்கம் தாமே தம்மையறியாத அவையே இறையான நிலையில் வணக்கம் செலுத்துகின்றன.

மனித இனத்தைப் பற்றி :

குழந்தை பிறந்தபோது அது பூரணத்திலிருந்து (இறையிலிருந்து)
பிரிவுபட்டிருந்த போதும் அது தன் தாற்பரியத்தில் இறையாகவே யிருந்தது. அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது இறையிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை. அதற்கு எந்தவகையான விதிவிலக்குகளும் இருக்கவில்லை. இறையில் இறையாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும், நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று. தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று. விதிவிலக்குகளும் உண்டாயின. அது மனிதனாயது. தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, இறை வேறு எனும்
பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான். தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும், உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித் தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான். இறையிலிருந்து வேறுபட்டுவிட்டான். இதனால், தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான். தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப்படைக்கப்பட்ட மனிதன், இந்நிலை அடைந்தமையால், தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான். தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன், பூரண மனிதனானான். இதை மறுத்தவன் மறுப்பாளனானான்.(காபிரானான்)

இறைவனிடமிருந்து எவ்வாறு மாற்றமடைந்து வந்தானோ அந்தப் பாதைதான் வந்த பாதை.

மனிதன், தன்னை யெப்படி அறிதல் வேண்டும்?

மனிதன் தன்னைப்பற்றிச் சிறிதேனும் சிந்திக்கவேண்டும். தான் வயோதிகன் ஆனமையும் அதற்கு முன்னிருந்த குழந்தைப் பருவம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். மனிதனின் முன் நிலை, சிசுவாகத் தன் தாயின் கருவறையிலிருந்தது. அதற்கு முன் தாயின் கற்பவறையில் சிறு கருவாய்த் தங்கிற்று. இஃது தாயினதும், தந்தையினதும் சத்துப் பொருளில் இருந்து உண்டாயது. இவைகளை இவர்களைச் சூழ்ந்துள்ள பொருள்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். பஞ்ச பூதங்களிலிருந்து வெளியான அவை தாவரப் பொருள்களும், மிருக இனங்களும், மீன் வகைகளும், பட்சி இனங்களும், தட்ப வெப்பங்களும், காற்று முதலான மற்றுமுள்ளவைகளும். தாயினதும் தந்தையினதும் முதுகந்தண்டிலிருந்தது. தாயும் தந்தையும் கூடினமையால் இவ்வாறு உண்டாயது.

வானின்றிழிந்த பஞ்ச பூதங்களெல்லாம் இயற்கை. இயற்கைப் பொருள்களை ஒன்று கூட்டி இயற்றியவைகளே செயற்கை. செயற்கையும் இயற்கைதான். பஞ்ச பூதங்களெல்லாம், பரந்து விரிந்து நிறைந்து தன்னை வெளிப்படுத்தும் நிலையிலிருந்து வந்தவை. இதற்குமுன் இஃது, அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்றிலிருந்தே வெளியானது. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும்,
இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.

ஒன்று என்பது, அதற்குப் பதிலாக அல்லது அதுபோன்ற அல்லது அதுபோன்ற எத்தனையோ இல்லாத, பிறக்காத, பிறப்பிக்காத, அனைத்துமே ஒன்றிலான, அனைத்துமே ஒன்றான அந்த ஒன்றே.


இறைவனை வருணித்தல்:

கடலுக்கும் எல்லையுண்டு. ஆயினும் உனக்கோ, உன் புகழுக்கோ எல்லையில்லை. உன் வருணிப்புக்கும் எல்லையில்லை. முடிவுமில்லை. எங்கும் நீ யாகிய பரிபூரணமே. எங்கு சென்றாலும், நீயாகிய பரிபூரணமே. பிரபஞ்சம் கூடாது, குறையாது. அதற்கு எல்லையில்லை. அது நிறைகோற்போல்(தராசு) சமமானது. திணையோ, பாலோ, எண்ணோ அற்றவன் நீ. இடத்தினுக்கு இடனானாய், காலத்திற்குக் காலமானாய். நீ
புகழுக்குப் புகழானவன். வருணிப்புக்கு வருணிப்பானவன். மதிப்புக்கு
மதிப்பானவன். உன்னை எவன் புகழ்ந்தாலும், அப்புகழுக்கு எல்லையுண்டு. ஆனால், உன் புகழுக்கோ எல்லையில்லை. வருணிப்புக்கும் அவ்வாறே, மதிப்புக்கும் அவ்வாறே. நீ தேவையற்றவன். உனக்கு எதுவும் தேவையே இல்லை. அதனால் உனக்கு எந்த நன்மையுமில்லை. நான் உன்னைப் புகழும் புகழ்ச்சிகளும், மதிக்கும் மதிப்புகளும், வருணிக்கும் பண்புகளும், என்னையே வந்தடைகின்றன. அதுவே, யான் பெறும் நன்மைகள். உன்னை நான் இழிவு படுத்தினால் அதுவும் என்னையே வந்தடையும். உன்னை அறிந்தவன் உன்னை மதித்தால் தானே அந்த மதிப்பு சிறப்புடையது ஆகும். அறியாதவன் உன்னை எப்படி மதிப்பான்? அதில் உண்மை இல்லையே? அவர்கள் வணங்கும் வணக்கமும் வணக்கமல்ல. துதிக்கும் துதியும் துதியல்ல.

நான் இப்படியே பரிபூரணமாய் இருப்பதோடு என்னை வெளிக் கொணரவும் விரும்பினேன். அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று. சலனம் தோன்றவிருக்கும் நிலை. அஃது யானென்னும் நிலையிலிருந்து, நாமாகத் தோன்ற இருந்த ஆரம்ப நிலை. நானெனக் கூறும் இறை வெளித்தோன்ற நினைத்ததாலேதான் நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்துகொள்ள முடியும்.

அப்போது, சிறிது சிறிதாய், முழுமை பிரியத் தொடங்கிற்று. நான் மிக
நுணுக்கமாய்ப் பிரிந்தேன். நுண்ணணுக்கள் ஆனேன். அப்படிப் பிரிந்த
என்னிலிருந்தே, ஐம்பூதங்களும் பிரிந்தன. இதுவே, தான் நானாயிருந்த, நான் நாமானவாறு. இதுவே, ஆரம்பம் முடிவற்ற, எதற்குமிணையற்ற, முழு சத்தியமான, பரிபூரணமான, பிரபஞ்சம் எனவும் கூறலாம். அப்படியாயின் இறையிலிருந்து நாம் வெளியாகாமலிருந்தால் இந்தத் தோற்றமும் பார்வையும் இருந்திருக்கா என்பது உண்மைதானே. என்னில் உன்னை நான் பார்க்கிறேன். நீ உன்னில் என்னைப் பார்க்கிறாய். இதிற்றான் நான், நீ என்னும் பிரிந்த பார்வை வந்தது. அதில் நான், நீ எனப்பாராமலும் முழுமையாகக் காண்பதே முழுமையாகும். நான் நீயாகவும், நீ நானாகவும், பிரிவு இன்றி எப்போதும் என்னில் உன்னையும், உன்னில் என்னையும், பார்த்துக் கொண்டிருப்பதே உண்மையான முழுத் தோற்றமாகும். இப்போதும், எப்போதும், யான் உன்னிலிருந்து வெளியான போதும் எல்லாத் தோற்றமும் ஒன்றே எனக்கொண்டு பரிபூரணத்தில், கடலில் அலை கலப்பது போலக் கலந்து, இலயித்து, நிலைத்து, நிற்பதிலே இன்பம் கண்டிருப்பின்,
வெளியாகாதிருப்பினும், வெளித்தோன்றி இருப்பினும், இரண்டும் பிரம – இரண்டறக்கலந்த சூனிய அமாவான, அந்தகமான, தத்துவ மசி நிலையாகும்.

ஒன்று மற்றொன்றுடன் சேருவது சங்கற்பம். சேராதது விகற்பம். இப்படி,இரண்டும் அற்ற, 96 தத்துவங்களையும் கடந்த தயாபரனின் கடலாகியதும், நித்திலம் எனும் முத்து (புத்தியில் தெளிவு பெறும் சிறந்த கருத்தான முத்துக்கள்) விளையும் கடலாகவும், நீ வேறு – நான் வேறு என்ற வேற்றுமை நீங்கிய, அழியாத கடலாகவும் உள்ளது நித்தியம். ஆத்துமக் கடல் என்பது எத்து எனும் உபாயங்களின் அறிவால் எட்டப்படுகின்ற அறிவாகும். இது இரண்டற்றது – ஒன்றேயானது – இதை வேதங்கள் அத்துவிதம் என மொழிகின்றன. இந்த இரண்டற்றதுதான் துணையாக நிற்கின்றது.

சூனியமாய் எப்படியிருந்தோமோ, அப்படியே இப்போதுமிருக்கிறோம் எனும் நிலை கொள்ளல் வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.

பற்றிக்கொள்ளும் பற்றில் உலகு எங்கும் பரந்து, விரிந்து, பற்றிக்
கொள்ளாத் தத்துவத்தில் பற்றாது இருந்து ஓங்கி, இப்படிப் பற்றியும்,
பற்றாமலும் இருக்கும் பற்றற்ற இடத்தில் திடமாக இருத்தல் நன்று என்பாம்.

இறைவா, நீ வெளியானமையால் நாம் அளவுகடந்த நன்மை பெற்றோம். ஊமை போலிருந்த நாம், வெளிப்படையாகப் பேசத் தொடுத்தோம். பார்வையற்றவர்கள் போலிருந்த நாம் வெளிப்படையாய்ப் பார்க்கத் தொடுத்தோம். மறைந்திருந்த செயல்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின. பொது வாகவிருந்த நாம் தனித்துச் செயற் படத்தலைப்பட்டோம். கடல் நீர்போன்றிருந்த நாம் உப்பாகி உபயோகமானோம். வித்தாகியிருந்த நாம் ஆல் போல் விரிந்து உபயோகமானோம். மொட்டா யிருந்த நாம், பூவாகி எழில் தோற்றம் கொண்டோம். வெற்று நிலமாகவிருந்த நாம், பூங்காவானோம். வண்ணத்தோற்றம் கண்டோம். இன்புற்றோம். தங்கத் தகடன்ன
விண்தோன்றும் கதிரவனைக் கண்டோம். வெள்ளித் தட்டென விண் மிதக்கும் வண்ணத் தகடான வெண்மதியைக் கண்டோம். விண்ணில் விரித்த நீல நிறப் பந்தலெனத்திகழும் நீல வானில் முத்தங்கள் பதிக்கப்பட்டு மின்னிலங்கும் விண்மீன்களில் வண்ண அழகினைக் கண்டோம். பல நிறங்கள் தோன்றிச் செக்கர் வானின் இயற்கையென்னும் கைவண்ணம் விளையாடும் திருவிளையாடலைக் கண்டோம். கடலைக் கண்டோம். மலையைக் கண்டோம். விளையக் கண்டோம். பச்சைப் பரமதாணி விரிக்கப்பட்டதென்னத் தோன்றும் பசும் புற்றரையின் எழிலையும், வயல் நிலங்களின் வண்ண வடிவங்களையும் கண்ணுற்றோம். கண் குளிர்ந்தோம். பயனடைந்தோம். நாமும் நம்மை அறிந்தோம். இவ்வள(வு) மகா சக்தி நம்மில் மறைந்திருந்ததை உணர்ந்தோம். நீயும் நானும் ஒன்றேயெனும் நித்திய நிலை எய்தினோம். பெறும் பேறு பெற்றோம். இதுவே வெளியானதன் நன்மை எனக்கண்டு உனக்கு சாட்டாங்கம் செய்தோம். நிலை மாறாத இதே நிலையை எமக்கு என்றென்றும் தந்தருள் பாலிப்பாயாக எனப்பிரார்த்தித்தோம். யாதும் ஊரே யாவருங்கேளிர் எனும்ஒற்றுமையும், எல்லாம் ஒன்றே எனும் ஒருமைத்துவமும், வேற்றுமையற்றமனிதநேயமும், என்றென்றும் எங்கணும் மிளிர்க. ஞான மார்க்கம் எங்கணும் பரவ, மானிடவினம் ஒன்றேயென ஞாலமெல்லாம் பறைசாற்றி சங்கநாதம் பரப்புவோம். ஞாலமெல்லாம், ஞான ஒளி பரவி, இன வேற்றுமைகளும் பகையும் பொறாமையும், பொய்யும் வேரறுந்து போகத் துணை புரிவோம்.


நாட்டுப் புறத்தில் ஒரு வாக்கியமுண்டு:

“என்னதான் தலைகீழாக நின்றாலும் இக்காரியத்தை முடிக்க முடியாது” என்று கூறுவர்.

இதன் பொருள் என்ன என சிந்தித்திருப்போமா? சிந்திக்காவிடில், இப்பொழுது சிந்திப்போம். இப்பொழுதுமில்லையெனில் நாம் மனுவே இல்லை. ஏனெனில், மனுவுக்குத்தான் சிந்திக்கும் ஆற்றலை இறைவன் தந்திருக்கிறான்.

தலைகீழாக நின்றால் மட்டும் காரியம் முடிந்துவிடுமா? முடியாது.
உட்பொருளைச் சிந்திப்போம். இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன்.

“என்னதான் இயற்கையொடு ஒன்றினாலும் முடிக்க முடியாது” என்பது பொருள்.

நாம், மேலிருக்கும் வாய்வழி உண்ணுகிறோம். ஆனால், இயற்கையாகிய மரம், செடி முதலியவை கீழிருக்கும் வேர்மூலம் உண்ணுகின்றன.

ஆக, நாம் இயற்கையொடு ஒன்ற, தலைகீழாக மாறவேண்டும். எப்படியெனில், எதை எல்லாம் புறத்தே செய்கிறோமோ அதையெல்லாம் அகத்தே செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளிமூச்சுக்குப் பதில், உள்மூச்சு வாங்க வேண்டும்.

இதே பிரகாரம், நம் தாகி பிரபத்தையணுக:

பரிபூரணத்தில் இருந்தேன். சலனமடைந்து, பரிபூரணத்திலிருந்து, துகள் துகளாய்ப் பிரிந்து வந்தேன். தந்தையின் விந்தால் தாயின் கருப்பத்தில் உதித்துப் பத்து மாதம் கழித்துப் பிரபஞ்சத்தில் விழுந்தேன். அதுவரை, பரிபூரணத்தில் பூரணமாய்க் கலந்திருந்தேன். பின்னர், வளர வளர கதை தலைகீழாயிற்று. பரிபூரணனை மறந்தேன்; இல்லை மறக்கவில்லை; மற்ற இகபர இச்சைகள் முதலியவைக்கு முன்னிடம் கொடுத்தேன். ஆக இறைவனை மறந்தேன். மறுசந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அப்பொழுதாவது திருந்தவேண்டுமே. அதற்கு வழி என்ன? சிந்தித்தேன். நாம் தலைகீழாக மாறவேண்டும். வழி என்ன? நாம் எந்த நிலையிலிருந்து இந்நிலைக்கு வந்தோமோ? அந்நிலைக்குத் திரும்பவேண்டும். அது என்ன நிலை? அதுதான் தாயின் கருப்பத்தில் வசித்தபோது இருந்த நிலை. அப்போது எப்படி இருந்தோம்?

பசியில்லை.
தூக்கமில்லாத் தூக்கம்.
வியர்வை இல்லை.
(அசைவ) உணவில்லை.
மலங்கள் கழிப்பதில்லை.
வெதுவெதுப்பான இளஞ்சூட்டு வெப்பநிலை.
மனத்தில் எண்ணமில்லை;
கருத்தில் சலனமில்லை;
நினைவிலும் சலனமில்லை;
சர்வமும் சூனியம்.
சூனியத்திலும் கன்சூல் மகபியாவெனும் இருள்.

அதற்குள்தானே இறையுள்ளது.
அங்கேயே நாட்டம்.
இதுபோல் இன்னும் பல.

ஆக, இந்நிலைக்கு வர நாம் என்ன செய்யவேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த எண்ண அலைகளைத் தூண்டவே இத் “தாகி பிரபம்”
இது நான் உணர்ந்தவரை.

ஞானம் வாழ்க! வளர்க! மிளிர்க!

இன்னிசை நிகழ்வு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 27.05.2010 அன்று வியாழன் மாலை மஃரிப் தொழுகை;குப்பின் இராத்திபு ஓதப்பட்டது.சபையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

இஷா தொழுகைக்கு பின்னர் புதுக்கோட்டை இளைய இசைமுரசு E.M.பாட்ஷா அவர்களின் இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது.

இன் நிகழ்ச்சியில் நாகூர் கவிஞர் சலீம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

மற்றும் தேரிழை தாஜிதீன் அவர்களும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, திட்டச்சேரி ஜெகபர் சாதிக் பைஜி மற்றும் பல அமைப்பிலிருந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.

பாடகர் இளைய இசைமுரசு E.M.பாட்ஷா அவர்களுக்கும் நாகூர் கவிஞர் சலீம் அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

புகைப்படங்கள் - மதுக்கூர் ராஜாமுஹம்மது













தனக்கு பெயரை தானே அமைத்தான்: மஜ்லிஸ் - 3.

நாள்: சனிக்கிழமை

தேதி: 03/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)


பரம் என்றால் பொருள்.?
அது எப்பவுமே இருக்கின்ற பொருள். அது பழையது அல்ல. அது இப்போதுதான் உண்டானது என்று சொல்ல இயலாது. தமிழில் பரம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒரே கருத்துதான். ஆனால் அறபுச் சொல் அல்லாஹ்விற்கு நிகரான வேறு எந்தச் சொல்லும் எந்த மொழியிலேயும் இல்லை.
God, இறைவன், கடவுள், பரம் என்று பலவகையிலும் எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் அல்லாஹ் என்று மட்டும்தான் சொல்கிறோம். ரஹ்மான், ரஹீம் என்பதெல்லாம் அவனுக்குரிய பெயர்கள்தான். ஆனால் முழுமையான பெயர் என்னவென்று கேட்டால் அல்லாஹ்.
அந்த அல்லாஹ் என்று சொல்லுக்கு நிகரான எந்தவொரு வார்த்தையுமே வேற எந்தவொரு மதத்திலேயுமே வரவில்லை. அல்லாஹ் என்ற ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து பார்க்கின்ற நேரத்திலேயும், பல எழுத்துக்கள் சேர்ந்த ஒரு சொல் அல்லாஹ் என்பது. அவ்வளவு சீக்கிரமாக, சிறுசாக, அழகாக அல்லாஹ் தனக்கு பெயரை அமைத்து வைத்திருக்கின்றான். பொதுவாக பரம் என்று சொல்வது பரம்பொருள். மிகப் பழமையானவன்.கதீம். அளவில்லாதவன் எப்ப பழசானான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு பழசு. போக போக போய்க்கொண்டேயிருக்கும் அது.
அது நித்திய பரம். எப்பவுமே அழிவதுமில்லை, கூடுவதுமில்லை, குறைவதுமில்லை, அகலப்படுவதுமில்லை. அதற்கு உயர்வு, தாழ்வு, உயரம், பள்ளம், வலது, இடது எதுவுமே அந்த அல்லாஹ்விற்கு இல்லை. அதைப்பற்றி நாங்கள் விளங்கினால்தான் மனம் போய் சேரும்.
அறிவு அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் போய் சேரலாம். அல்லாமல் நாங்கள் சும்மா அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிவிட்டு, போய் சேர வேண்டுமென்றால் எப்படி போய் சேர்வது.
மெட்ராஸுக்கு போய் சேர வேண்டுமென்று ராமேஸ்வரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி போய் சேர்வது?
ராமேஸ்வரத்தில்தான் அவர் இருப்பார். ஏன்? மெட்ராஸுக்கு போகத் தெரியாதே. ஆக மெட்ராஸ் என்றால் என்ன, எப்படி போக வேண்டும் என்று அந்த Mapபை (வரைப்படம்) எடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதற்கு போகிற வழி என்ன?, எந்தமாதிரியெல்லாம் போகலாம் என்பதை அறிய வேண்டும். அறிந்து நாங்கள் போனால்தான் மெட்ராஸுக்கு போய்ச் சேர இயலும். இல்லாவிட்டால் ராமேஸ்வரத்தில்தான் இருப்போம். அதுபோல், அல்லாஹ்வைப்பற்றி அறியக்கூடிய அந்த பாதைகளை, வழிகளை நாங்கள் அறிய வேண்டும். அறிந்து நாங்கள் அதோடு சங்கமமாக வேண்டும். சங்கமம்தான் நெருங்குவது. அல்லாஹ் ஒருவன் என்பதை அறிந்த பிறகுதான் அந்த இடத்திற்கு நாங்கள் போகலாம். அல்லாஹ் ஒருவன். அவன் எப்படி ஒருவன்? அவன் எங்கே இருக்கிறான்? எந்த மாதிரி இருக்கிறான்? எல்லாவற்றையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிய பிறகுதான் எங்களுக்கு அங்கே போக இயலும். அவனைப்பற்றி அறிய வேண்டும். அதற்கு பிறகுதான் சங்கமம்.



அறிவைக் கொண்டு அறிந்தால் சங்கமம்:



"ஸித்ரதுல் முன்தஹா" வரையில்தான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும், ஜிப்ரீல்(அலை) அவர்களும் போனார்கள். அதுவரை சேர்ந்த பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொல்கிறார்கள், இதற்கு பிறகு என்னால் போக இயலாது, நீங்கள் போய் கொள்ளுங்கள் என்று. அப்போது ரசூலுல்லாஹ்(ஸல்) போனார்கள் அதுதான் சங்கமம். அங்கு போனதுதான் சங்கமம். அதுவரை இருந்ததெல்லாம் அறிவு. அந்த அறிவோடு போய் அந்த இடத்திற்கு போனால் சங்கமம் உண்டாகும். அதற்குண்டான மாதிரி நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது அறிவுதான். அறிவைக் கொண்டுதான் அல்லாஹ்வைப்பற்றி அறிய இயலும். எவ்வளவுதான் நீங்கள் அல்லாஹ், அல்லாஹ் என்று உருட்டினாலும் புண்ணியமில்லை. அல்லாஹ் என்ற அறிவை நாங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப்பற்றி அறிய வேண்டும். "மன் அரப நப்ஸஹு ஃபகத் அரப ரப்பஹு". ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்படி போய் அல்லாஹ்வை சேர்ந்தார்களோ, இரண்டற கலந்தார்களோ அப்படி போய் ஹக்கைச் சேர வேண்டும். அல்லாஹ்வோடு ரசூல்(ஸல்) பேசினார்கள் என்று சொல்வது இரண்டற கலந்தார்கள் என்ற கருத்து. போகும் வரையில் நாங்கள் அறிவோடு சென்று பின்னால் பரிபூரணமாக ஹக்கோடு கலப்பதுதான் சங்கமம் என்று சொல்வது.



காட்டை விட வீடே சிறந்தது:



துறவறத்தில் சொல்கிறார்கள் இல்லத்துறவு. வீட்டில் இருந்து கொண்டு துறவறம் பூண்டுவது. மற்றது வெளியே போய் காட்டில் துறவறம் பூண்டுவது. காட்டிற்கு போய் தனியாய் இருந்து துறவறம் செய்வதை விட வீட்டிலேயே இருந்து நாங்கள் துறவறம் செய்வது மிக நல்லது. நாங்கள் வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறோம். குடும்பத்தை கவனித்தல் ஃபர்ளாகிவிட்டது. அதோடு எங்கள் மனத்தை கட்டுப்படுத்தி அதன்படி நாங்கள் நடந்து வருவதுதான் முக்கியமானது. அதுதான் இல்லறம், இல்லத்துறவு. காட்டிற்கு போய் துறவறம் செய்வதனால் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. அதில் திடீரென்று ஒரு நிலையை அடைய முடியாது. காட்டிற்கு போய் பழகும் வரையில் பல வகையான கஷ்டங்களை நாங்கள் அநுபவிக்க வேண்டிய சந்தர்பம் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் இங்கேயே இருந்துக் கொண்டு பலவகையான சந்தர்ப்பங்களையும் பெற்றுக் கொள்கிறோம். அவர்கள் காட்டில் போய் இருப்பதை விட இந்த உலகத்திலேயே நாங்கள் நடந்துக் கொள்வது சில முக்கியமான விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம். ரசூல்(ஸல்) அவர்களுக்கு மக்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்திலேயே வஹீ வந்துவிடும். அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் மக்களோடும் பேசிக் கொண்டு, இங்கு வஹீயையும் சொல்வார்கள். இதெல்லாம் இல்லறத் துறவு. வீட்டை, மற்ற எல்லோரையும் விட்டுவிட்டு போவது துறவல்ல. இருந்தே நாங்கள் துறவு செய்வதுதான் நல்லது. அதில்தான் எல்லா வகையான பயிற்சிகளும் எங்களுக்கு உண்டாகிறது. துறவு என்றால் அல்லாஹ் அல்லாததை துறந்துவிடுதல். அல்லாஹ் அல்லாதது இல்லை. எல்லாமே பரிபூரணமாக அதுதான் என்று மற்ற எல்லாவற்றையும் துறந்து விடுவது. மனிதனாக நினைப்பதை, மற்றவகையாக நினைப்பதையெல்லாம் மறந்துவிடுவது. நாங்களே இல்லையென்று நினைப்பது. இதுதான் முக்கியமான துறவு. ரசூல்(ஸல்) அவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஹீராவில் போய் கொஞ்ச காலம் இருந்தார்கள். அது அவர்களுடைய மனம் rest க்காக இருந்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்களே. அதற்கு பிறகு வந்ததெல்லாம் வீட்டில் கதைச்சு கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு வஹீ இறக்கப்பட்டது. ஆகவே வீட்டில் இருந்து கொண்டே துறவு செய்வதுதான் மித்த நல்லது. வேறோன்றுமில்லை நான் மட்டும்தான் என்று நினைத்துவிட்டால் அதுவே கல்வத் ஆகிவிட்டது.



ஊழ்வினையை போக்குவோமே ....



ஊழ்வினை என்றால் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடிய வினை என்று சொல்வது. பழங்காலச் செயல்கள். அதுதான் எங்களை வந்து இது செய்கிறது என்று ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஊழ்வினையை போக்கி அல்லாஹ்வுடைய உறுதுணையை நாடுவது. அவனுடைய உறுதுணையை நாடிவிட்டோம் என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் இருந்து வரக்கூடிய ஊழ்வினைகள் எங்களுக்கு இருக்காது. எல்லாவற்றிற்குமே அல்லாஹ் போதுமானவன். வேறு எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) போதும் என்பதுதான் அதனுடைய கருத்து.

ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

நன்றி - அமீர்அலி
ஆதம் அப்துல்குத்தூஸ்

சபைச் செய்திகள்

“காமூஸ்” நூல் வெளியீட்டு விழா !

இமாம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவ்லானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களால் தொகுத்து வடிவமைக்கப்பட்ட “ காமூஸ் “ எனும் அறபு – தமிழ் அகராதி நூல், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு – திருமுல்லைவாசல் சங்கைக்குரிய யாஸீன் மவ்லானா (ரலி) அவர்களின் தர்கா ஷரீஃபில் வைத்து வெளியிடப்பட்டது.

மதியம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின்னர், மதிய உணவு பறிமாறப்பட்டது. சரியாக 4 மணிக்கு, திருச்சியிலுள்ள நமது மதுரஸா மாணவர் ஹாபிழ்.V.M. ஜகரிய்யா அவர்களின் கிராஅத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்கியது.

கலீஃபா. அட்வகேட்.பீர் முஹம்மத் அவர்கள் “வஹ்ததுல் உஜூத்” பாடலைப் பாட, அதனைத் தொடர்ந்து, கலீஃபா. ஆலிம்புலவர். ஹுஸைன் முஹம்மது அவர்கள் நபிப்புகழ் ஒன்றை இசைத்தார்கள்.

பின்னர், நூலை கலீஃபா.ஆலிம்புலவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து சிறிது நேரம் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து, நூல் வெளியிடும் சிறப்பான நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திருச்சி – தஞ்சை மாவட்டங்களுக்கான அரசு டவுன் காழியார் அல்ஹாஜ். மவ்லவி. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பயீ அவர்கள் முதல் பிரதியை வெளியிட, சங்கைக்குரிய ஸய்யித் மஸ்ஊத் மவ்லானா அவர்கள், முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இரண்டாம் பிரதியை சங்கைக்குரிய ஸய்யித் நூருல் அமீன் மவ்லானா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மூன்றாம் பிரதியை தலைமை கலீஃபா. H.M. ஹபீபுல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

விழாவின் நிறைவாக சங்கைக்குரிய மஸ்வூத் மவ்லானா அவர்கள் துஆ ஓதி துஆச் செய்தார்கள். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாயகமவர்களின் கலீஃபாக்களும் முரீதீன்களும் மற்றும் உள்ளூர் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------------------------------------------
கீழக்கரை ஹள்ரத் மஹானந்த பாபா (என்ற)
முஹம்மது அப்துல் காதிர் (ரலி) அவர்களின்

52 – ஆவது புனித கந்தூரி தின விழா!

கீழக்கரையில் மறைந்து வாழும் சங்கைக்குரிய மஹானந்த பாபா (ரலி) அவர்களின் இந்த வருட நினைவு தினம் கடந்த 10-05-2010 – திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.

சென்ற மாதம் 30 – ஆம் தேதியன்று கொடியேற்றப்பட்டு, பத்து நாட்கள் தொடர்ந்து அவர்களின் இராத்திபு மஜ்லிஸ் ஓதப்பட்டு வந்தது.

இம்மாதம் 10 – ஆம் தேதியன்று காலை 7 மணிக்கு திருக்குர்ஆன் ஷரீஃப் முழுமையாக ஓதப்பட்டு கத்தம் செய்யப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டு 18 – ஆம் ஜுஸ்வை ஓதி பரக்கத்தான 10 ரூபாய் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

பின்னர், மாலை மஃரிபுத் தொழுகை முடிந்தவுடன் “மகானந்த கீதம்”, “அத்வைத கானம்” மற்றும் “இனாயதுர் ரஹ்மானிய்யா” போன்ற கிதாபுகள் ஓதப்பட்டு, சங்கை செய்யப்பட்டது.

திண்டுக்கல், திருச்சி, மதுக்கூர், எமனேஸ்வரம், பாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் ஏனைய மற்ற ஊர்களிலிருந்தும் ஏராளமான அஹ்பாபுகள் வந்து, கந்தூரி தின விழாவைச் சிறப்பித்தனர்.

மதியமும் இரவும் சுவையான கந்தூரி உணவு பறிமாறப்பட்டு, தப்ரூக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கந்தூரிக்கான நன்கொடைகள் திண்டுக்கல் ஜனாப்.J. முஹம்மது ரஹ்மதுல்லாஹ் B.A., அவர்கள் மூலமாக வசூல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.

சங்கைக்குரிய பாபா நாயகம் அவர்களின் ரவ்ளா மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, பரவசமாகக் காட்சியளித்தது.

NEWS - JAHFAR SATHIK

நாகூர் நாயகத்தின் நினைவுதின விழா


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில்
தாஹா நபியின் திருவழித் தோன்றல் காருண்ய நபியின் திருப்பேரர் கருணை கடல் குத்புல் மஜீத் குத்புல் ஃபரீத் செய்யிது சாதாத் செய்யிது அப்துல் காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ்
ஷாகுல் ஹமீது மீரான் சாஹிபு காதிரி நாகூரி(ரலி) நாயகத்தின்
453 ம் வருட (உரூஸ்) கந்தூரி விழா மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

காலை 8.00 மணிக்கு நாகூர் நாயகத்தின் புனித மவ்லிது ஃஷரீப் ஒதப்பட்டது.
மௌலானாமார்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.

9.15 மணிக்கு மவ்லவி அப்துல்ஹமீது நூரி அவர்களின் கிராஅத்துடன் விழா துவங்கியது.

மதுக்கூர் முஹம்மது தாவுது அவர்கள் நபிப்புகழ் பாடல்களை பாடினார்கள்.

இந்த விழாவிற்கு எஸ்.எம்.செய்யிது அலி மௌலானா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

அஹ்லபைத்தின் அகமியம் என்ற தலைப்பில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாத்தலைவர் ஏ.பி.சஹாபுதீன் 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

நாகூர் நாயகத்தின் புகழ் பாடல்களை தேரிழை தாஜிதீன் பைஜி பாடினார்.

குருவின் அவசியத்தை பற்றி பெருமானார் (ஸல் அலை) அவர்களிடம் சஹாபாக்கள் எப்படி நடந்துக் கொண்டா சரித்திரத்தை தொட்டு மஹான்களின் அவசியத்தை எடுத்து கூறி பொதுச் செயலாளர் ஏ.என்.எம் முஹம்மது யூசுப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்கள் கலந்து நாகூர் பாதுஷா நாயகத்தின் பாடல்களை நெஞ்சமுருக பாடினார்கள்.

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி அவர்களின் சொற்பொழிவு எல்லோருக்கும் உற்சாகத்தை வழங்கியது.அல்லாஹ் அறியவேண்டுமானால் அல்லாஹ்வை அறிந்தவரிடம் தான் தெரிந்துக் கொள்ளமுடியும் என்று பல உதாரணங்களைக் கொண்டு விளக்கினார்கள்.

கடலூர் ஆசிக் எம்.கே.அப்துல்ரஹ்மான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் காதர்ஷாகிப் அப்பாஸ் ஷாஜகான் கிளியனூர் இஸ்மத் அதிரை ஷர்புத்தீன் மதுக்கூர் அபுசாலிஹ் பல தரிக்காவிலிருந்தும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், உப தலைவர்கள் குத்தாலம் அஸரப்அலி, முஹம்மது பாருக், சங்கமம் தொலைக்காட்சியின் நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்) கலந்துக் கொண்டனர்.
வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, கிளியனூர் பஹாவுதீன் பைஜி மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடு கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் அவர்களும் முஹம்மது ரியாஸ் மற்றும் சபையின் ரூம் சகோதரர்கள் செய்யிது அலி மௌலானா, முஹம்மது தாவூது, ஆதம் அப்துல்குத்தூஸ், நத்தர்ஷா, அமீர்அலி, அஹது, ஜெய்னுதீன், முஹம்மது யூனூஸ், ஷேக்தாவ+து, ஷேக்மைதீன் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பேனர் வழங்கிய அபுல்பசர் மற்றும் அலங்காரங்கள் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றியினை சபையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியினை புகைப்படம் எடுத்துக் கொடுத்த மதுக்கூர் ராஜாமுஹம்மது மற்றும் ஒலி ,ஒளி அமைப்பு அதிரை அப்துல்ரஹ்மான்

மற்றும் கணினியில் நிகழ்ச்சி நிரலை ஒளிப்பரப்பிய ஆதம் அப்துல் குத்தூஸ் இன்னும் இந்நிகழ்ச்சிக்காக உதவிய அனைவருக்கும் வருகைப்புரிந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.
அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.


நாகூர் நாயகத்தின் மௌலூது நிகழ்ச்சி
----------------------------------------------------------

கிராஅத் மௌலவி அப்துல் ஹமீது நூரி
-----------------------------------------------------------



பாடகர் மதுக்கூர் முஹம்மதுதாவூது
------------------------------------------------------------

திருமுல்லைவாசல் செய்யிது அலி மௌலானா
---------------------------------------------------------------

நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் BE.M.BA
------------------------------------------------------------




பொதுச் செயலாளர் M.முஹம்மது யூசுப் MA
----------------------------------------------------------------


தீன்னிசைத் தென்றல் தேரிழை தாஜிதீன் அவர்களுக்கு பொன்னாடை
-----------------------------------------------------------------------

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
-------------------------------------------------------------------------

இஸ்லாமியப் பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்களுக்கு பொன்னாடை
----------------------------------------------------------------------


பாடகர் பாஷா அவர்களுக்கு அகில அற்புத நாதர் ஆடியோ CD வழங்கப்பட்டது
------------------------------------------------------------------------

தேரிழை தாஜிதீன் பைஜி
-----------------------------------------------------------------------

சங்கமம் டிவி நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்)
-----------------------------------------------------------------------

குத்தாலம் அஸரப்அலி
---------------------------------------------------------------------

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
----------------------------------------------------------------------

கிளியனூர் பஹாவுதீன் பைஜி
-------------------------------------------------------------------




கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி நன்றிவுரை நிகழ்த்துகிறார்
-----------------------------------------------------------------------------

பேராசிரியர் அப்துல்லாஹ்வின் அல்லாஹ் பிரச்சாரம்



பேராசிரியர் பெரியார்தாசன் என்ற அப்துல்லாஹ் துபாயில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அறிமுகவிழாவிற்கு அழைப்பட்டிருந்தார்.இந்த அமைப்பில் ஆட்சிமன்றக் குழுவில் நானும் இருப்பதினால் அவரைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்கு ஆவலுற்றேன்.

பேராசிரியர் அப்துல்லாஹ்வைப் பற்றி ஊடகங்கள் சில அமைப்புகள் பலவித கருத்துக்களை அவர்கூறியதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.அவற்றை மையமாக வைத்து அவரிடம் கேட்கப்பட்ட போது சில கேள்விகளுக்கு விளக்கமளித்தார் சில கேள்விகளுக்கு அப்படியெல்லாம் நான் கூறவில்லை என்று மறுக்கவும் செய்தார்.

தன்னைப்பற்றி அவர் கூறியபோது

இந்துவாக பிறந்து தனது 17வது வயதில் பெரியாரைப்பற்றி ஒரு கவிதை எழுதினேன் அந்த கவிதையை பெரியார் பாராட்டினார் அதனால் எனக்கு அவரின்மேல் பற்று ஏற்பட்டது.அந்தப்பற்று அவரின்மேல் நேசத்தைக் கொடுத்தது.அந்த தருணங்களில் அவரின் கொள்கையைப்பற்றி எனக்கு அவ்வளவு தூரம் தெரியாது.நாளடைவில் அதைத் தெரிந்துக் கொண்டு இந்து மதத்திலிருந்து நாத்தீக கொள்கைக்கு என்னை மாற்றிக் கொண்டேன்.பல மேடைகளில் முழங்கினேன்.தர்க்க சாஸ்திரம் பயின்றேன்.சில காலத்திற்கு பிறகு பெரியாரின் கொள்கையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன், பௌத்தத்தையும் படித்தேன் அந்த தருணங்களில் இஸ்லாமியர்களின் மீலாதுவிழாக்களில் கலந்து உரையாற்றியும் உள்ளேன் என்றார்.
இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்பஇராமாயணம் போன்ற இலக்கியப் பாடல்களை படித்து மனனம் செய்திருப்பவர்.

தற்போது அப்துல்லாஹ்வாக இருக்கும் தாங்கள் மீலாதுவிழாவில் கலந்துக் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு

பெரியார்தாசனாக இருந்தபோது முஹம்மது நபியை ஒரு சமயத்தின் தூதர் என்றளவில் தெரிந்திருந்தேன் இன்று அப்துல்லாஹ்வாக ஆனப்பின் முஹம்மது நபி என்று மொட்டையாக கூறமுடியவில்லை அலைஹி வஸல்லாம் என்று கூறுகிறேன் அந்த அலைஹி வஸல்லாம் அவர்களை
முழுமையாக தெரிந்துக் கொண்டு அவர்களின் பிறந்ததின விழாவில் கலந்துக் கொள்வேன். ஆனால் சிலர் மீலாதுவிழாக்களில் கலந்துக் கொள்ளாதீர்கள் என்று என்னை கட்டுப்பாடு இடுகிறார்கள் நான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல எந்த அமைப்புக்கும் கட்டுப்பட்டவன் அல்ல.இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவன் இஸ்லாத்தை முழுமையாக தெரிந்துக் கொள்ளவேண்டும் அதைவைத்து வியாபாரம் செய்யவரவில்லை என்று கூறினார்.

துபாயில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செய்யதுசலாவுதீன் அவர்கள் தனது இல்லத்தில் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு விருந்து உபசரிப்பு வழங்கினார் அதுசமயம் அப்துல்லாஹ் பேசுகையில்


நானே இஸ்லாத்துக்கு புதுசா வந்துள்ளேன்.என்னை பார்ப்பதற்கு பேசுவதற்கு பல அமைப்புகளிலிருந்து வருகிறார்கள் ஒவ்வொருவர்களும் இதை செய்யாதீங்க, அதை செய்யாதீங்க என்று சொல்கிறார்கள்.ஒருவர் நேற்று ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று நீங்கள் குர்ஆனை மட்டும் பின்பற்றுங்கள் ஹதீஸ் வேண்டாம் என்று கூறினார் என்று சொன்னார்.
அதற்கு செய்யது சலாவுதீன் அவர்கள் ஹதீஸ் இல்லாமல் மார்க்கத்தை பின்பற்ற இயலாது அது முழுமைப்பெறாது என்று கூறிவிட்டு
திருக்குர்ஆன் யாருடைய மொழிபெயர்ப்பை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று கேட்க
மௌலானா மௌதூதியின் மொழிப் பெயர்ப்பை வாசிக்கிறேன் என்று கூறியதும் அதைவிட அப்துல்வஹாப் (பிறை ஆசிரியர்)அவர்களின் மொழிபெயர்ப்பு இன்னும் தெளிவாக இருக்கும் என்று கூறியதும்
என்னிடம் பிஜே மொழிப்பெயர்த்த குர்ஆனும் இருக்கிறது என்றார்.

இந்த உரையாடலில் நானும் இருந்ததினால் நான் குறுக்கிட்டு பிஜே மொழிப் பெயர்ப்பில் தவறுகள் இருப்பதாக ஆலிம்கள் அந்த குர்ஆனை தடை செய்துள்ளார்கள் என்றதும்

செய்யது சலாவுதீன் அவர்கள் அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டுவிட்டு அவருடைய கொள்கைகளை அதில் புகுத்தி இருப்பார்; அப்துல் வஹாப்பின் மொழிபெயர்ப்பை நீங்கள் வாசித்துப்பாருங்கள் என்று கூறியதும்
அது எங்கு கிடைக்கும் என்று அப்துல்லாஹ் கேட்டதும் தன்னிடம் உள்ள அந்த குர்ஆனை கொண்டுவரும்படி தன் பணியாளரிடம் கூறினார்.

உங்களைப்போன்ற விஞ்ஞானிகள் உண்மையறிந்து இஸ்லாத்திற்கு வந்திருப்பது சந்தோசமான விசயம் ஆனால் உங்கள் நேரத்தை அமைப்புகளுக்கு பிரச்சாரத்திற்காக சிலவளிக்க வேண்டாம் உங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு எத்திவையுங்கள் நம்மவர்களுக்கு ஆலிம்கள் இருக்கிறார்கள் என்றார்.

பேராசிரியர் அப்துல்லாஹ் பல இலக்கியதத்துவப் பாடல்களை படித்திருப்பவர் நாத்திகக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் மனோதத்துவ நிபுணர் பல மேடைகளில் மனோதத்துவத்துடன் தான் தனதுரையை துவங்குகிறார்.

உளவியலையும், திருக்குர்ஆனையும் ஆய்வுசெய்தபின்னரே இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களை சில அமைப்பினர்கள் சூழ்ந்து மார்க்க உபதேசம் என்ற பெயரில் அவருக்கு மதம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.அதுபோன்ற கொள்கைகளில் அமைப்புகளில் அடைப்பட்டிடாமல் தன்னை தற்காத்துக் கொள்வார் என்று அவருடைய பேச்சில் தெளிகிறது.

தொலைபேசியில் பல மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாக கூறினார்.

பேராசிரியர் அப்துல்லாஹ் பல கல்விக் கற்றிருந்தாலும் தன்னை அறியும் ஞானக்கல்வியையும் கற்று விஞ்ஞானியாகத் திகலும் பேராசிரியர் மெய்ஞ்ஞானியாக இஸ்லாத்தை முழுமையாக பேணுவார் என உங்களைப்போன்று நானும் நம்புகிறேன்.

மௌலுதுன்னபி ஆடியோ

தேரிழந்தூர் தாஜிதீன் மற்றும் அவர்களின் குழுவினர்கள் வெளியிட்டுள்ள மௌலுதுன்னபிஆடியோ
14 மௌலுதுகளை அரபியில் பாடப்பட்டு கவிஞர் தேங்கை ஷர்புதீன் மிஸ்பாஹி அவர்களின் தமிழ் விளக்கங்களுடன் வெளிவந்துள்ளது.

மஜ்லிஸ் - 2.







நாள்: வெள்ளிக்கிழமை



தேதி: 02/04/2010



இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)



அவர்களின் இல்லம், தேரா, துபை.



நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)











பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், என் அன்பிற்குரிய முரீதுகளே, இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).



நேற்று, நாங்கள் தொடக்கமாக ஒரு சில விஷயங்களை பேசி வந்திருந்தோம். இன்று பொதுவாக ஷெய்கு எப்படி இருக்க வேண்டும். அதே நேரத்தில் முரீதீன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பொதுவான ஒரு இலக்கணம்.





ஷெய்குக்குரிய‌ இலக்கணம்.





ஒரு ஷெய்கு என்பவர் ஞானம் தெரிந்தவராக இருக்க வேண்டும். உலகத்தில் வழி நடத்துவது மட்டுமல்ல ஆகிராவுடைய விஷயங்களை பற்றிய விளக்கங்களையும், அவர்களை எப்படி அங்கு வழி நடத்த வேண்டும் என்பதையும் அறிவதற்க்காகத்தான் இந்த ஞானம் என்ற அறிவு ஒரு ஷெய்குவிற்கு மிகவும் கட்டாயம். ஆகவே, இந்த ஞானம் தெரியும் என்று சொல்லிவிட்டு, பாதியிலேயே அவர் (ஷெய்கு) இருக்கிறார் என்பதை எப்படி அறிந்துக் கொள்வீர்கள்? ஒரு சிலர் அப்படியும் இருக்கிறார்கள்தானே. ஞான விஷயத்தை கேட்டால், அவர் சொல்வது பொருத்தமில்லாத விளக்கங்களாக‌ இருக்கும். ஜாடிக்கு சரியான மூடி என்பார்களே, அந்த மாதிரி தான் கேள்விக்கு மறுமொழி இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கருத்து விளங்காத விஷய விளக்கமாய் இருக்கும் அது. தெளிவாக சொல்ல முடியாத சில விஷயங்களும் உண்டு. அதை விளங்கக் கூடிய முறையில்தான் அதை விளங்க வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே ஒருவரை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

ஒருவர் வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் நிலைமை என்னவென்று அவருடைய பேச்சைக் கொண்டே கண்டு பிடித்து விடலாம். அல்லது அவருடைய முகப் பார்வையை கொண்டும் கண்டு பிடித்துக் கொள்ளலாம். இல்லை, அவர் பேசக் கூடிய வார்த்தைகள் கலங்கமாய் இருக்கும். நல்லதாய் இருக்கும், இந்த வகையில் பேசுகிறவர்களைக் கொண்டு கண்டு பிடித்து கொள்ளலாம். அதாவது, மழுப்பக் கூடிய சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்க‌ள். தெரியாதவர்கள் மழுங்கி போய்விடுவார்கள். ஆனால் தெரிந்தவர்கள் அந்த மழுப்பை மனதுக்கு எடுக்காமல் இந்த பொருள் சரியில்லையென்று இருந்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் பொருந்தும். யாராக இருந்தாலும் எந்த ஷெய்குவாக‌ இருந்தாலும் அந்த ஷெய்கிற்கு அது பொருத்தமானது. என்னையும் கூட்டித்தான் சொல்கிறேன். ஆக, ஷெய்கிற்கு முக்கியமாக தேவைப்படுவது ஞான விளக்கம். அதுதான் மிகவும் அவசியம். பைஅத் என்று சொல்வது அல்லாஹ் வரை போகக் கூடிய விஷயம். அந்த பைஅத் எப்படி இருக்க வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கொடுப்பதனாலேயும், ஞானத்தை இரண்டு புத்தகங்களில் வாசித்து விட்டு பேசுவதனாலேயும் ஞானம் ஆகாது. அதில் விஷய விளக்கம் நுணுக்கமானதாய் இருக்கும். சில விஷயங்களை நுணுக்கமாய் அறிந்துக் கொள்ள வேண்டும். நுண்ணியது, நுண்ணியது என்று சொன்னாலும் அதில் எந்தவொரு கருத்தும் இருக்காது. அந்த நுண்ணியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.







ஒரு பேச்சில் கூட நுணுக்கம் இருக்கிறது. அதை விளங்கி பேசுபவர்களுக்குத்தான் அது தெரியும். ஞானத்தில் மிகவும் நுண்ணியமான விஷயங்களை விளங்க கூடிய தன்மை மனிதனுக்கு இருக்க வேண்டும். "ஸிராத்துல் முஸ்தகீம்" பாலம் என்று சொல்வது அதுதான். சரியான தவ்ஹீதுடைய நிலை இல்லையென்று சொன்னால் அவர் கீழே விழுந்துவிடுவார். கீழே விழுந்தால் அதுதான் நரகம். அப்படியானவர்கள்தான் ஞானிகள், ஷெய்குமார்கள் என்ற நிலைமையில் இருக்க வேண்டும். இது எல்லோருக்குமே பொருத்தமான ஒரு இலக்கணம். இப்படியான ஷெய்குகளுக்கு முரீதுகள் எப்படி இருக்க வேண்டும்?







முரீதுகளின் இலக்கணம்







ஷெய்குவிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்க வேண்டும். ஷெய்கு சொல்வதை விளங்ககூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஷெய்குவிற்கு முன்னால் முரீது மய்யித்தை போன்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்படி, எதை சொன்னாலும் சரி என்று போக வேண்டும்.







ஆனால் கேட்பதை திரும்ப, திரும்ப மரியாதை இல்லாத முறையில் கேட்பதாக இருந்தால் ஒரு முரீது ஒரு ஷெய்குவிடம் கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அப்ப அந்த முரீது பொருத்தமானவர் அல்ல. அவர் ஏதோ தன்னுடைய கெட்டித்தனத்தை காட்டுவதற்காக வந்து பேசுகிறார் என்றவொரு நிலை உண்டாகிவிடும். எந்த ஒரு நிலையிலும் மய்யித் போன்று இருக்க வேண்டும். மய்யித்தை கழுவுகிற நேரத்தில் கையை உயர்த்துவது, காலை உயர்த்துவது எல்லாம் கழுகிறவர்களுக்கு உள்ள வேலை. அதற்கு (மய்யித்) ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும் இவர் செய்து முடித்து விடுவார். அந்த மாதிரி ஷெய்குவிடம் இருக்கின்றவருக்குத்தான் ஞானம் என்று சொல்கின்ற விளக்கம் உட்புகும்.







ஒரு அரசன் ஞானியை காண்பதற்காக போயிருந்திருக்கிறார். அங்கு வாயிலில் ஒரு காவலாள் இருந்துள்ளார். நான் சாமியை பார்க்க போக வேண்டும் என்று சொல்ல, இல்லை இப்ப உங்களுக்கு பார்க்க முடியாது என்று காவலர் சொல்லிவிட்டார். இல்லை நீ போய் சொல் அரசன் "நான்" வந்துள்ளேன் என்று. இல்லை போய் என்னால் சொல்ல இயலாது என காவலர் கூற, இல்லை, நீ போய் சொல் “அரசன் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என உத்தரவிடுகிறார். இப்படி இரண்டு மூன்று தடவை சொல்லியாகிவிட்டது காவலர் போய் சொல்லிவிட்டார் ஞானியிடம். அந்த ஞானி மறுமொழி சொல்கிறார் "நான்" செத்த பிறகு அவரை வரச் சொல் என்று. அப்படியென்றால் “நான்” என்ற‌ அகந்தை போன பிறகு வரச் சொல் என்று.







தற்பெருமை, அகந்தை இருந்தால் ஒருக்காலமும் அதில் எந்தவொரு புண்ணியமும் இருக்காது. ஆனால், முரீதீன்கள் எல்லாவற்றையும் விளங்கினவர்களாக கேட்டுக் கொள்ள வேண்டும். பலமுறை கேட்கின்ற நேரத்தில் இன்றைக்கு ஒரு விஷயத்தை கேட்கிறார் விளங்கவில்லை. அவர் அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக வருகிறார் என்றால் விஷய விளக்கம் அவருக்கு சும்மாவே வந்துவிடும். ஒரு நூலை படிக்கின்றீர்கள் இன்றைக்கு விளங்கவில்லை, நாளைக்கு படிக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள். திடீரென்று யாரோ சொல்லி தந்தது போல ஞாபகம் வரும். இதுதான், ஞானத்துடைய முழுமையான கருத்து விரும்பி படிக்க வேண்டும். குர்ஆனைக் கூட சும்மா பொதுவாக‌ எல்லோரும் ஓதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விஷய விளக்கமுள்ளவர்கள் குர்ஆனை ஓதினால் பல்லாயிரக்கண‌க்கான கருத்தை அதற்கு எடுத்துக் காட்டுவார்கள். குதுபு நாயகம் அவர்கள் குர்ஆனுக்கு எத்தனையோ பொருளை சொல்வார்களாம். முரீதீன்கள் அந்த மாதிரியான முழுமையான விளக்கம் பெற்று இருக்க வேண்டும். ஷெய்குவிடம் முழுமையான நம்பிக்கையும் இருக்க வேண்டும். ஷெய்கைப் பற்றி சந்தேகத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு சபை இல்லாமல் ஆக்குவதற்கு எண்ணம் வைத்திருந்தார்கள் என்றால் அது நடக்காது, அவரவர்களே சபையிலிருந்து போய்விடுவார்கள். முனாஃபிக்தனமாக ஒரு சிலர் நடக்கிறார்கள். முனாஃபிக் என்று சொல்லிவிட்டால் ஒரு பாரமான வார்த்தை மாதிரி கருதுகிறார்கள். ஒரு பாரமான வார்த்தைதான் அந்த நேரத்தில். எப்படியென்றால், முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் ஒன்றை பேசுகிறார். நிஃபாக், முனாஃபிக் தனம் அது ஒன்றுக்கொன்று மாற்றமாக இருக்கும். சரியாக இருக்காது. அது மற்றவர்களிடம் பகையை உண்டாக்கும். ஒரு ஷெய்குவிடம் வரக்கூடிய முரீது தனக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் வர வேண்டும். நிறைகுடமாக இல்லாமல் குறை குடமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதில் ஏதேனும் ஊற்ற இயலும். ஷெய்கு இருக்கிறார்கள், ஷெய்குக்குரிய மரியாதையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற அளவில் இருந்தால்தான் அவருக்கு எவ்வளவோ நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியில்லாமல் எனக்கு தெரியும், ஏற்கனவே நான் படித்துவிட்டுத்தான் வந்தேன் என்று சொன்னால் அவருக்கு இங்கு இடமில்லை.







ரசூல் (ஸல்) இடத்தில் எத்தனையோ சஹாபாக்கள் இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) இருந்தார்கள். இவர்கள், நான்கு பேருக்குள்ளேயே எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. ரசூல் (ஸல்) அவர்கள், அலி (ரலி)அவர்களோடு மித்தம் ரகசியமாக சில விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த இடத்திற்கு அபூபக்கர் (ரலி) வந்தார்களாம். அவர்கள் வந்தவுடன் மாமாவும், மருமகனும் பேச்சை நிறுத்திவிட்டார்களாம். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கோ பெரிய கவலை. ஏனென்றால் எந்தவொரு விஷயமும் தெரியாமல் இல்லை. எந்த ஆபத்து நேரத்திலும் கூட இருந்தவர்கள். ரசூல் (ஸல்) எது சொன்னாலும் சரியென்று போகிறவர்கள். இப்படியான நேரத்தில், ஏன் ரசூலுல்லாஹ் (ஸல்) என்னிடம் மறைத்தீர்கள்? என்று கேட்க‌, இல்லை அபூபக்கரே (ரலி) அது உங்களுக்கு சரிவராது என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற, இல்லை, எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் எனக் கேட்டார்களாம் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள்.







ரசூல் (ஸல்) அவர்கள் சும்மா லேசான ஒரு விஷயத்தை எடுத்து போட்டார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் திண்டாடிவிட்டார்கள். அப்போது ரசூல் (ஸல்) சொன்னார்களாம், அபூபக்கரே நீங்கள் மூஸவிய்யத்து இவர்கள் (அலி ரலியல்லாஹ்) ஈஸவிய்யத்து. ஞான விஷயத்தில் இந்த இரண்டு பேருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பாருங்கள். அல்லாஹ்வைப் பற்றி கொடுக்கக் கூடிய அறிவில் அவர்களுக்கு அவ்வளவு தூரத்திற்கு தூக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுடைய உயிர் அவர்கள்தான் (அபூபக்கர் ரலியல்லாஹ்).







உமர் (ரலி) இருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் கடுமையாகவும் இருந்தார்கள். நல்லவர்களாக‌வும் பெரும் கெட்டிக்காரராகவும் இருந்தார்கள். ஆனால் சில விஷயங்கள் அவர்கள் சொன்னதற்கு நேர்பாடா குர்ஆனில் வஹீயும் வந்துள்ளது ரசூலுல்லாஹ் (ஸல்) விற்கு. ஒரு தடவை ரசூல் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள் நான் இல்லாவிட்டால் உமர் கூட நபியாக வந்திருக்கலாம் என்று. அதுமாதிரியான நிலைமை அவர்களிடம் இருந்திருக்கின்றது.







முரீதுகளில் பல நிலைமை இருந்திருக்கின்றது. இருந்தவர்களில் யாரும் ரசூல் (ஸல்) அவர்களுக்கு விரோதியாக இருக்கவில்லை. ஒரு சிலரை தவிர. அபுஜஹல், அபுலஹப் அவர்களெல்லாம் கடுமையாகவே ரசூல் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் அவர்கள் ஒரு பகுதி. கொஞ்சம் பேர் முனாஃபிக் என்று தள்ளியே விட்டுவிட்டார்கள் ரசூல் (ஸல்) அவர்கள். முன்னாலும் பேசுவது பின்னாலும் பேசுவது அந்தமாதிரி இருந்தார்கள். ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள் யுத்ததிற்கு போகிறார்கள். யுத்தத்தை இங்கு நடத்துவதா? அல்லது மதினாவிற்கு வெளியே போய் நடத்துவதா? என்று ரசூல் (ஸல்) கேட்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) நாங்கள் வெளியே போய் யுத்தம் செய்தால்தான் நல்லது. மதீனாவின் உள்ளேயே இருந்து யுத்தம் செய்வது நன்றாக இல்லை. மற்றவர்கள் சொன்னார்கள் இல்லை ரசூலுல்லாஹ் (ஸல்) இங்கேயே யுத்தம் செய்வோம் என்று. விஷயம் என்னவென்றால் ஒன்று ரசூல்(ஸல்) அவர்கள் உள்ளுக்குள்ளேயே யுத்தம் செய்தார்கள் என்றால் பெண்கள் இருக்கிறார்கள். அடுத்தது, யுத்தம் நடக்கின்ற இடம் மித்தம் மோசமாக போய்விடும். ஆகையால் நாம் வெளியே போய் யுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.







ஏற்றுக் கொண்டு யுத்தம் நடக்கின்ற நேரத்தில், கொஞ்சம் பேர் சுமார் 10, 15 நபர்கள் நாங்கள் இங்கே யுத்தம் செய்யவில்லை எங்களால் முடியாது என்று சொல்லி வெளியே போய்விட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் இருந்தவர்களோடு போய் யுத்தம் செய்து அவர்கள் வெற்றியை எடுத்துக் கொன்டு வந்துவிட்டார்கள். அவர்களைத்தான் முனாஃபிக் என்று சொல்வது. ஏனென்றால் முன்னால் யுத்தம் செய்வோம் என இருந்துவிட்டு பின்னால் ரசூல்(ஸல்) அவர்களை விட்டு வெளியே போய்விடுகிறார்கள். இப்படி ஒரு சரித்திரம் உள்ளது.







சஹாபாக்களுக்குள்ளேயே இப்படியிருந்தால், முரீதுக்களுக்குள்ளும் இப்படி இருக்கத்தான் வேண்டும் இல்லையா? ஆனால் எல்லா முரீதுகளும் அப்படி இருக்கமாட்டார்கள். நான் நினைக்கின்றேன் எங்க முரீதுகள் நன்றாகத்தான் இருப்பார்கள். ஷெய்கைப் பற்றி சின்ன ஒரு சந்தேகமோ அல்லது இவர்கள் ஒருவகையாக பேசுகிறார்களே, அவரைப் பற்றி பேசுவதற்கு இவர்கள் யார்? இவர்கள் ஏன் இதைப் பற்றி பேச வேண்டும்? என்று கேள்வி வந்துவிட்டாலும், மனதுக்குள்ள ஊசலாட்டம் வந்துவிட்டாலும், அவருடைய பைஅத் முறிந்து விடும். அதை நாங்களாக நீக்க தேவையில்லை அவர்களே நீங்கி விடுகிறார்கள். உதாரணமாக ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கிறோம், அந்நேரத்தில் இன்னொருவர் வருகிறார். "இப்படி வாப்பா பேசினார்கள்” என்று ஒருவர் கூற, அவர்கள் ஏன் அதையெல்லாம் பேச வேண்டும், அவர்களுக்கு அதை பேசத் தேவையில்லையே என்று அந்த வார்த்தையை சொல்லி விட்டால், அப்பொழுது ஷெய்குக்கு மேலாக அவர் பேசுவதை மாதிரி ஆகுவதனால் அவருடைய பைஅத் முறிந்துவிடும். சந்தேகங் கொண்டாலும் சரி. இப்படி எழுதியிருக்கிறார்கள் இது சரியா? என்று பெரிய மனிதனாக என்னை சந்தேகிக்கின்றது. சந்தேகிக்கின்றது அல்லாமல் அதற்கு மேலாக பேசுவது. ஒரு ஷெய்குவிற்கு மேலாக பேசுவது ஒரு முரீதிற்கு தகுதியே இல்லை. அப்படி இருந்ததென்றுச் சொன்னால் அவருடைய முரீது/பைஅத் எடுபட்டே போய்விடும். ஷெய்குவின் மேல் கொஞ்சம் கோபமாக நடந்துக் கொள்கிறார் என்றால் அப்பவும் பைஅத் போய்விடும். திரும்ப முரீது என்று சொல்லி வருவதில் கருத்து இல்லை, வா இருக்கட்டும் என்று போவதுதான். இப்படி செய்கிறார்களே சரியா? என்று ஆராய்ச்சி செய்ய போனால் போச்சு. இப்ப இஸ்லாத்தில் ஆராய்ச்சி செய்கிறார்களே, சஹீயான ஹதீஸ் இருக்கின்ற நேரத்தில் சொன்னவர் சரியில்லை எடுத்தவர் சரியில்லை என்று சொன்னால், அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஹதீஸ் சஹீதான். கிதாபே அப்படி போடப்பட்டுள்ளது. அந்தமாதிரி சந்தேகப்படுவதாக இருந்தால் அந்த இமாமில் இவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத் அவருக்கு பொருத்தமற்றது.







ஒரு ஷெய்கு ஞான விளக்கங்கள் அறிந்தவராய் இருந்தால்தான் முரீதின்களை நேர்வழி காட்ட முடியும். ஏனென்றால் என்னிலிருந்து இன்னவர், என்னிலிருந்து இன்னவர் என்று இப்படி போய் அங்கே போவோம் நாங்கள். அங்கு போகும் வரையில் அந்த தொடர்பு இருக்கும். ஆனால் இடையில் முறிந்து விட்டது என்றால், சூரியனை விட்டு பூமி பிரிந்தது போலத்தான் ஆகும். சூரிய குடும்பம் உள்ளது. பூமி, சந்திரன் மற்ற கோள்களில் இருக்கக்கூடிய எல்லா நட்சத்திரங்களும் சூரியனுடைய ஆர்டர்ஷிப்பில்தான் (ordership) அது இருந்து கொண்டிருக்கிறது. அது ஒவ்வொன்றும் பூமியை ஒவ்வொரு வகையில் சுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு பிடிப்பு இருப்பதனால்தான் இது அப்படியே சுத்துகிறது. திடீரென்று இந்த சக்தி எந்த வகையிலோ எடுப்பட்டு போய்விட்டது என்றால் இந்த பூமி வீசப்பட்டு போய் விடும். எரி நட்சத்திரங்கள் (shooting stars) எங்கெங்கெல்லாம் போகிறது, அது மாதிரி வீசப்பட்டு விடும். பூமியும் ஒரு நட்சத்திரம்தான் அந்த பூமியினுடைய ஹாலே (நிலையே) போய்விடும், அதுபோலத்தான் முரீதுகளுடைய நிலையும். ஒரு ஷெய்குவினுடைய தொடர்பில் இருந்து திடீரென்று விடுப்பட்டு போவதென்றால், அவனுடைய நிலைமை அவ்வளவுதான். ஒரு முரீது ஒரு ஷெய்குவினிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். அந்த அளவோட நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு தெரியாத விஷயங்களை பேச போகக் கூடாது. தவ்ஹீதுடைய இல்மு மிக நுணுக்கமானது. அல்லாஹ் இருக்கிறான் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று எல்லோரும் சொல்வதுதானே. அல்லாஹ் இருக்கின்றான் என சொல்லும் நேரத்தில் எங்களுடைய நிலைமை உண்மையானதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான நிலைமை கருதி அல்லாஹ் என்றால் என்ன? இருக்கின்றான் என்றால் என்ன? என்பதை தெரிந்து சொன்னால் பரவாயில்லை. இருக்கின்றான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? அடுத்த கேள்வி. அல்லாஹ் இருக்கின்றான், அவன் ஆணா? பெண்ணா? இருக்கின்றான் என்றால் ஆண். இருக்கின்றாள் என்றால் பெண். எப்படி நாங்கள் சொல்வது? அல்லாஹ் இருக்கின்றான். எதில் இருக்கின்றான்? நாற்காலியில் இருக்கின்றானா? அப்படித்தானே சொல்கிறார்கள்.







ஆக இந்த வகையில் பார்க்கும் நேரத்தில், அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்வதிலும், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்று சொல்வதிலும், எல்லாவற்றிலுமே கருத்து இருக்கிறது. அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்பதில் எப்படி? கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்றானா? கொஞ்சம் பேர் அப்படித்தான் யோசிப்பார்கள். அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கின்றதால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடத்திலேயும் இருப்பான் போல் தெரிகிறது என்று. அதனால் எல்லாமே அவனுக்கு தெரியும். ஆக எப்படி இருக்ககின்றான்? எல்லாவற்றிலுமே சேர்ந்து முழுமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இருக்கின்றான் என்றால் அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. ஆண் என்று சொல்வது ஒரு பேச்சுக்காகத்தான். இருக்கின்றான் என்று ஆண் விகுதியை வைத்து பேசுகின்றோம். இருக்கிறாள் என்று சொல்ல முடியாது அதற்காக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்கின்றோம் அந்த கருத்தோடு. ஆனால் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல. சிலர் சொல்வார்கள் எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுக்கு கண்ணிருக்கிறதா? எங்கே இருக்கிறது கண்? ஒரே நேரத்தில் இங்கே அங்கேயெல்லாம் எப்படி பார்க்கிறது? எப்படியென்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். அவனுக்கு கண்ணாக நாங்கள் இருக்கிறதாக அவனே சொல்கிறானே. பொதுவாக, மஹ்லூதுகத்துகளுடைய கண்ணே அவனுடைய கண்தான். அவன் இல்லாவிட்டால் நாங்கள் பார்க்க முடியுமா? அவன் அந்த சத்தியை (Power) எங்களுக்கு தந்திருக்கிறான். அவன் அதனால் பார்த்துக் கொண்டிருக்கிறான்.







எல்லா அறிவையும் ம‌னித‌னுக்கு கொடுத்திருக்கிறான். எல்லா பொருள்க‌ளிலும் அந்தந்த‌ அறிவு இருக்கிற‌து. அந்த‌ அறிவை தந்து அவ‌ன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அறிந்து கொண்டிருக்கிறான். அவ‌ன் இல்லாவிட்டால் எங்க‌ளுக்கு அறிவே இருக்காது. அவ‌ன் கொஞ்ச‌ம் த‌ள்ளிவிட்டுவிட்டான் என்றால் அந்த‌ அறிவு எங்க‌ளுக்கு இருக்காது. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அதிக‌மாக‌ வெளியே போக‌மாட்டார்க‌ள். ஞான‌த்தை அறிந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ ஞான‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளின்தான் கால‌த்தை அதிக‌மாக‌ போக்கினார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ஓதிய‌ ஒரு ஆள் ஏதோ ஒரு ச‌பையை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறார். அவ‌ர் சொல்லி இருக்கிறார், க‌ஸ்ஸாலி கூட‌ என்னிட‌ம்தான் ப‌டித்தார் என்று. பாருங்க‌ள், ம‌னித‌னில் எத்த‌னையோ வகையான ம‌னித‌ இன‌ம் இருக்கு.







க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் அவ‌ன் ப‌டித்துவிட்டு, ம‌னித‌னாகி வ‌ந்த‌திற்கு பின்பு அவ‌ன் சொல்கிறான் அவ‌னிட‌ம்தான் க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) ப‌டித்தார்க‌ள் என்று. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் ஒருவ‌ர் வ‌ந்து சொல்லிவிட்டார் இமாம் அவ‌ர்க‌ளே, நீங்க‌ள் ப‌டித்த‌து அவ‌னிட‌ம்தானாம் என்று. இது இர‌ண்டாவ‌து த‌ட‌வை இமாமிட‌ம் செய்தி வ‌ந்த‌போது, அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ளாம் அவ‌ன் என்னிட‌ம் ப‌டித்த‌தை ம‌ற‌ந்துவிடுவான் என்று. அவ‌ன் ம‌ற‌ந்தான் எப்ப‌டி? அவருக்கு பைத்திய‌ம் பிடித்துவிட்ட‌து. அத‌ற்கு பிற‌கு ஏதேனும் ஞாப‌க‌ ச‌க்தி இருக்குமா?







ப‌டித்த‌ மாண‌வ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்துவ‌து பெரிய‌ பாவ‌மான‌ விஷ‌ய‌ம். நாங்க‌ள் எப்ப‌வும் எங்க‌ளுடைய‌ ஆசிரிய‌ரை க‌ண்டால், சைக்கிளில் போகும் நேர‌த்தில் உட‌னே இற‌ங்கிவிடுவோம். அந்த‌ நேர‌த்தில் இற‌ங்கி பேசிவிட்டு ம‌ரியாதை செய்துவிட்டுத்தான் போவோம். அது ஹிந்து ஆசிரியராகவோ, முஸ்லிம் ஆசிரிய‌ராக‌வோ இருந்தாலும் ச‌ரி எல்லோருக்கும் ஒரே ம‌ரியாதைத்தான். ஏனென்றால் எங்க‌ளுக்கு ப‌டித்துக் கொடுத்த‌வ‌ர்க‌ள். ஒரு சின்ன‌ டிராயிங் பாட‌த்துக்கு வ‌ந்து இப்ப‌டி கீறுங்க‌ள் என்று சொல்ப‌வ‌ருக்கும் நாங்க‌ள் ம‌ரியாதை செய்திருக்கின்றோம். ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌மும் கீற‌, எழுத‌ ப‌ழ‌கியிருக்கிறோம். அத‌னால் எந்த‌வொரு ஆசிரிய‌ராக‌ இருந்தாலும் நாங்க‌ள் அவ‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்தி பேச‌க் கூடாது. நல்ல விஷயங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டும். யாரும் எப்போதும் பொய்யே சொல்லக் கூடாது. பொய் பெரிய பாவமான வேலை. பொய்யால் குடும்பமே கெட்டு போய்விடும். உண்மையே பேச வேண்டும் அதுதான் முக்கியம். பொய்யினால் எல்லா கெடுதிகளும் உண்டாகும். மற்றவர்களை கெடுப்பதற்கும், நாங்கள் கெட்டு போவதற்கும் பொய் ஒரு ஆயுதம். பொய் சொல்பவர்கள் அடுத்த நிமிடமே அகப்பட்டுக் கொள்வார்கள். முகத்தை பார்த்தாலே பொய் சொல்லிவிட்டார் என்பது விளங்கும்.







ஞானம் பற்றிய அறிவு







ஞான விஷயங்களை நன்றாக எல்லோரும் நுணுக்கமாக விளங்கி கொள்ளுங்கள். தேவையான கேள்விகள், ஞானத்தில் சம்பந்தப்பட்டவைகள், புத்தகத்தை வாசித்துவிட்டு underline பண்ணி, அதில் கேள்விகள் கேட்க வேண்டும். ஞான விஷயத்தை பேசுவதற்கு, கேட்பதற்கு எல்லாம் வெட்கப்படக்கூடாது. ஒரு மாணவர் வகுப்பில் இருக்கின்ற நேரத்தில் கேள்விகள் கேட்டால்தான் கெட்டிக்காரராக ஆக முடியும். அப்போதுதான் அவருடைய சந்தேகமெல்லாம் போய்விடும். அடுத்தவர் கேட்பார் என்றிருந்தால் கேள்வி வராது. ஞானத்தை விளங்காது போனால் வேறு எதுவிலும் புண்ணியமில்லை. ஞானத்தை விளங்கினவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டு. பல படிப்புகள் இருக்கின்றது. எல்லாவற்றிலுமே சில சில விளக்கங்கள் உண்டாகி கொண்டேயிருக்கும். அது அல்லாஹ்வுடைய ஞானம். அல்லாஹ்வுக்குரியது மஹ்ரிஃபா. அது அவனுடைய ஒளிவு. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டோம் என்றால் அந்த ஒளிவு வந்துக் கொண்டேயிருக்கும்.







ஞானம் தெரிந்த எங்கள் பிள்ளையையும், பொதுவான ஒரு மனிதனையும் வைத்து பேசி பார்த்தால் தெரியும். எங்க பிள்ளைகள் பேசுவதற்கும், அவர்கள் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம். நானே பலருடன் பல முறையில் பேசுகின்றேன். ஞானம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி, ஞானம் தெரிந்தவர்கள் வந்தால் அவர்கள் விரும்பி கேட்பார்கள் விஷய விளக்கங்களை. ஒரு பொதுவான அறிவுள்ளவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி பேசுவோம். இந்தியாவில் தப்லீக்கில் இருந்த ஆள் ஒருவர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசியது, என்ன செய்கிறீர்கள்? என கேட்டதற்கு, கடலை வியாபாரம் செய்வதாக சொன்னார். எங்கெல்லாம் எவ்வளவு போடுகிறீர்கள்? தொழில் நல்லபடியா இருக்கின்றதா? என்று அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். வெளியே போய் சொன்னாராம், “வாப்பா பேசினார்கள் ஆனால் ஒரு ஞானமும் பேசவில்லை” என்று. அவரோடு நான் என்ன பேசுவது? கடலைக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? கடலை தொழில் செய்பவரோடு, நான் கடலையை பற்றித்தான் பேச வேண்டும். ஞானம் பேச வந்தவர்கள் என்றால் ஞானம் பேச இயலும். எங்க பிள்ளைகள் வந்தால் ஞானத்தைப் பற்றி பேசுவோம். ஏதாவது ஒரு தமாஷா பண்ணி தமாஷாவிலாவது ஒரு ஞானத்தை போட்டுக் கொண்டு இருப்போம். கடலை வியபாரி வந்தால், கடலையைப் பற்றித்தான் பேச வேண்டும். மீன் வியபாரி வந்தால், மீனை பற்றித்தான் பேச வேண்டும்.







அல்லாஹ்வே சொல்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன், சுப்ஹானல்லாஹ் என்று. அல்லாஹ் எப்படி பரிசுத்தமானான்? எல்லாமே அதுதானே குப்பையும் அதில் சேர்ந்ததுதானே? அது சுத்தமானதா? குப்பை சுத்தமானதல்ல. இதனின் தாத்பரியம் என்னவென்றால் எல்லாம் ஒன்று சேர்கின்ற‌ நேரத்தில் அது சுத்தமாகின்றது. பரிபூரணமாய் எல்லாமே ஒன்று சேர்கின்ற நேரத்தில் அது பரிசுத்தமாகின்றது. மெட்ராஸுக்கு போனால் முக்கியமான ஒரு விஷயம் கூவம். இந்த கூவத்தை போன்று இன்னும் எத்தனையோ கூவங்கள் ஓடத்தான் செய்யும். இவையெல்லாம் ஓடி கடலில் போய் கலக்கின்றது. அசுத்தங்கள் எல்லாம் கலக்கின்றது கடலில். பரிபூரணத்தில் நிறைய உள்ள தண்ணீரில் போய் அசுத்தங்கள் கலந்து, ரோல் (roll) ஆகின்றது. ஆனால் எங்களுக்கு கடல் தண்ணீர் என்றால் மொத்தமான தண்ணீர். அதில் நாம் ஒலு எடுக்கின்றோம். ஆக அசுத்தம், சுத்தம் என்பது அல்லாஹ்விடம் இல்லை ஆனால் ஷரியத்தில் உண்டு. ஷரியத்தில் அசுத்தம் என்றால் மனிதனை கெடுத்துவிடும் சுத்தம் என்றால் மனிதனை நல்லதாக்கும். அசுத்தம் என்றால் ஒருவன் குடிக்கின்றான் அவனுக்கு ஆபத்து உண்டாகும், ஈரல் கெட்டுவிடும், அவனுடைய பேச்சுக்கள் எல்லாமே மாறி போய்விடும். இவையெல்லாம் ஷரியத்தில் ஹராம் ஆக்கப்பட்டது. அதை செய்தால் அவனுக்கு ஆபத்து ஆகையால் அதை செய்யக் கூடாது. தவ்ஹீதில் கூடும் என நினத்துவிட்டு குடித்து விடாதீர்கள். ஷரியத்தில் இருக்கின்றவர்க்குத்தான் தவ்ஹீதும் இருக்கின்றது.







இது ஞான தத்வார்த்த கதைகளில்தான் முக்கியமான விஷயங்களில்தான் நாங்கள் இப்படி பேசுகின்றோம். ஆகவே ஹராம் எப்பவுமே ஹராம்தான். அதை தரீகத்திற்கோ, ஹக்கீகத்திற்கோ ஹலால் ஆக்க இயலாது, ஹலால் அல்ல. மனிதனுக்கு ஷரியத்துதான் அடிப்படை. மனிதனுக்கு முக்கியமானது ஷரீயத். ஷரீயத் படியில் ஏறிக்கொண்டுத்தான் நாங்கள் அடுத்த படியில் ஏற வேண்டும்.







தொழுகை பற்றிய அறிவு







கொஞ்சம் பேர் சொல்கின்றார்கள் ஞானத்தில் தொழ தேவையில்லை. ஞானத்தில் அலிஃப், பே‍ யை பார்த்து விட்டு தொழ தேவையில்லை என்கின்றனர். அவன் பார்த்தானா? தொழுகையினுடைய origianal (அசல்) எங்கிருந்து வந்தது என்று? யார் சொன்னது தொழ சொல்லி? அல்லாஹ் சொன்னான். அல்லாஹ் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் தொழ சொன்னார்கள். அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) சொல்லியிருக்கும்பொழுது எங்களால் தொழாமல் இருக்க முடியுமா? ரசூல்(ஸல்) அவர்களே தொழுதிருக்கிறார்கள். காட்டி தந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி சொல்வது ஞானத்தில் தொழுகை இல்லையென்று? ஆகவே தொழுகை முக்கியமாக உள்ளது. எந்த ஞானியாக இருந்தாலும் தொழத்தான் வேண்டும். ஆனால் சிலர் இருந்திருக்கிறார்கள் ஃபைசுல்லாஹ் ஹைர்(ரஹ்) (பெயர் சரியாக விளங்கவில்லை) அவர்களுடைய தம்பி மஹானந்த பாபா(வலி) போன்று உள்ளவர்கள். அவர்கள் தேவையான நேரம் தொழுது கொள்வார்கள். ஞானிகளுடைய தொழுகையே வேறு அது வித்தியாசமானது. அவர்கள் ஹக்கின் உள்ளேயே புகுந்து இருப்பவர்கள். அவர்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களைப்பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர்களை பார்த்துவிட்டு நாங்களும் தொழாமல் இருக்கவும் கூடாது. அவர்களின் நிலைமை வேறு எங்களின் நிலைமை வேறு. ஞானத்தில் முக்கியமானது எதை ரசூல்(ஸல்) அவர்கள் செய்தார்களோ, உள்ரங்கமாகவும், வெளிரங்கமாகவும் அத்துனையும் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு மாற்றமாக எங்களுக்கு எப்பவுமே போக இயலாது. தொழுகையை விட்டுவிட்டு ஞானியாகவும் முடியாது. மனிதனாக வாழ்வதற்கு ஷரீயத் மிக முக்கியம் என்பது விளங்குகிறது. எந்த விஷயத்திலும் ஷரீயத்தை விடவே கூடாது. ரசூல்(ஸல்) அவர்கள் தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏன் தொழுதார்கள்? அவர்கள் ஹக்குவுடனே இருப்பவர்கள். தொழுகைதான் அவர்களின் வாழ்க்கையே. தொழுகை அவசியம் என காட்டுவதற்காகத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ஒவ்வொரு வகையில் தொழுகை நடந்துள்ளது. நின்ற நிலையில் தொழுவது, ருக்உவில் தொழுவது, சஜ்தாவில் தொழுவது, இப்படி எத்தனையோ வகையான தொழுகை நடந்துள்ளது. மரம் நின்ற நிலையிலேயே தொழுகிறது. மிருகங்கள் ருக்உவிலேயே தொழுகின்றது. பறவைகள் சஜ்தாவிலேயே தொழுகின்றன. இயற்கையினுடைய எல்லா தொழுகைகளையும் சேர்த்து அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) ஹதியாவாக மனிதனுக்கு கொடுத்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் செய்த ஒன்றை தொழ தேவையில்லை என்று சொன்னால் ஒருகாலும் முஸ்லீமாக இயலாது. ஷாஃபி மத்ஹப்படி மூன்று தொழுகைகளை தொழ தேவையில்லை என்று விட்டுவிட்டார் என்றால் அவர் காஃபிர். அவரை கஃபுன் இடக்கூடாது, நீராட்ட கூடாது, முஸ்லிம்கள் அடக்கக் கூடிய இடத்தில் அந்த மய்யித்தை அடக்க கூடாது. இப்படியெல்லாம் ஷரீயத்துடைய சட்டம் உள்ளது ஆக கட்டாயம் தொழ வேண்டும். ஆஹிராவில் தொழுதவர்களை பார்க்கும் நேரத்தில் இரண்டு கையும், காலும், முகமும் வெண்மையாக இருக்குமாம். ரசூல்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் அருகில் ஓடும் நீரோடையில் ஐந்து நேரமும் குளிப்பதற்கு சமம் இந்த ஒழு எடுப்பது. தொழுகையை கொண்டுதான் மனிதனுடைய மனம் கட்டுப்படுத்தப்படுகிறது. கஷ்டமான நேரங்களில் ரசூல்(ஸல்) அவர்கள் சென்று சுன்னத் தொழுவார்களாம். அதற்குரிய தொழுகைதான் அது. தொழுகை வேண்டாம் என சொல்வது பெரிய பாவம். ஷரீயத்துடைய ஒழுங்கு பிரகாரம் நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.







குத்பு நாயகம் தொழுதிருக்கிறார்கள். ஷாதுலி நாயகம், பெரும் பெரும் இமாம்கள், ஞானிகள் எல்லாம் தொழுதிருக்கிறார்கள். இப்னு அரபி (ரலி) என்று சொன்னால் வெள்ளையர்களுக்கு கூட பெரிய பேர் அவர்களைப் பற்றி. அவர்களே தொழுதிருக்கிறார்கள். ஆக தொழுகையை எங்களை போன்ற சிறியவர்கள் விட்டுவிடக் கூடாது. ஷரீயத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்களுடைய மதத்துக்கு நன்மை இருக்கும். ஷரீயத்தோடு ஹக்கீக்கத்தை நாங்கள் பேணி நடக்க வேண்டும்.







அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வை தந்து, சீரையும், சிறப்பையும், மேன்மையும் தந்து, நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல வணக்கங்களையும் தந்து, அந்த வணக்கத்தினுடைய நன்மைகளையும் உங்களுக்கு கொடுத்து, கொடிய நோய்கள், ஆபத்துகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டு, நல்ல வாழ்வினை அல்லாஹ் உங்களுக்கு தரட்டும்.







ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.