This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இராத்திபத்துல் காதிரிய்யா






துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் பிறை 14 லில் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.

மௌலானாமார்கள் சபையின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் இதில் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள் - அதிரை எம்.அப்துல்ரஹ்மான்

மதுக்கூரில் சமத்துவ பொங்கல்விழா








அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்கம் , இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 13.01.2011 காலை 10.30மணியளவில் கலீபா அட்வகேட் லியாக்கத் அலி B.sc.,B.L ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலீபா அட்வகேட் லியாக்கத் அலி B.sc.,B.L ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள் தலைமையேற்க , ரோட்டரி சங்கதலைவர் டாக்டர் A.வாஞ்சிலிங்கம் ,ரோட்டரி சங்கசெயலாளர் தேவதாஸ் ,ரோட்டரி சங்க பொருளாளர் செல்வமணி அவர்களும் முன்னிலை வகிக்க அனைத்து மத சகோதரர்களும் பொது மக்களும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்ச்சிஅமைந்தது

முடிவில் பொங்கல் உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது .மேலும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக அன்னை நர்சிங் கல்லூரி ஏழை மாணவிகளுக்கு பொங்கல் பரிசாக புடவைகள் வழங்கப்பட்டது

தகவல் : கலீபா அட்வகேட் லியாக்கத் அலி ஹக்கியுள் காதிரிய்யி B.sc.,B.L
புகைப்படங்கள் : Er.A.இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,
மதுக்கூர்.

புனித புர்தா நிகழ்ச்சி





துபாய் : துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 14.01.2011 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புனித புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
புர்தா நிக‌ழ்ச்சிக்கு ஏக‌த்துவ‌ மெய்னஞ்ஞான‌ ச‌பை த‌லைவ‌ர் க‌லீபா ஏ.பி. ச‌காபுதீன் த‌லைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு நினைவு பரிசாக காமூஸ் அறபு-தமிழ் அகராதியை தலைவர் கலீபா A.P.சகாபுதீன் வழங்கி அகராதியைப்பற்றிய அறிமுகத்தை கொடுத்தார்.
அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள் குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூய தமிழில் எழுதப்பட்ட அற‌பு-தமிழ் அகராதி சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ரசூலே கரீம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லாம் அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக இலங்கை வெலிகமையில் க‌ட‌ந்த‌ ஆண்டு நடைபெற்ற மீலாதுப் பெருவிழாவில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும் ம‌ற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் அவர்கள் இவ்விழாவில் கலந்து அறபு-தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் மௌலானாமார்களும், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் மற்றும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப், இணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத், பொருளாளர் முஹம்மது தாவுது, ஆடிட்டர் ஆதம் அப்துல்குத்தூஸ், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. அஹ‌ம‌து இம்தாதுல்லாஹ் மற்றும் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.













புகைப்படங்கள் - அதிரை அப்தல்ரஹ்மான்

ஜனவரி 2011 மாதக்கூட்டம்















துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜனவரி 2011 மாதாந்திரக் கூட்டம் 06.01.2011 வியாழன் மாலை வெள்ளி இரவு இஃஷா தொழுகைக்கு பின் நடைப் பெற்றது.

மௌலானாமார்கள் முன்னிலையுடன்,
இந்த மாதக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் தலைமை வகித்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து கோட்டைகுப்பம் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

மதுக்கூர் தாவுது அவர்கள் வஹ்தத்துல் வுஜூது மற்றும் நபிப்புகழ்பாடலையும் பாடினார்கள்.

மன்னார்குடி ஷேக்தாவுது வஹ்தத்துவ் வுஜூது பாடலின் தமிழாக்கத்தையும் கவிதையும் வாசித்தார்.

மதுக்கூர் அலிஅக்பர் ஞானப்பாடலைப் பாடினார்.

இவ்விழாவில் பேசியவர்கள்

மதுக்கூர் முஹம்மது யூசுப் தலைமையுரை நிகழ்த்த அவரைத் தொடர்ந்து
அபிவிருத்தீஸ்வரம் ஜெகபர்தீன் உரை நிகழ்த்தினார்கள். 28 ஆண்டுகள் அமீரகத்தில் ஒரே கம்பெனியில் பணிபுரிந்துவிட்டு கம்பெனியிலிருந்து பணிஓய்வு பெற்று தாயகத்தில் நிரந்தரமாக தொழில் தொடங்குவதற்கு இம்மாதம் இறுதியில் தாயகம் செல்ல இருப்பதாகவும் மதரஸாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை எண்ணி இனி அந்த பொறுப்பை இருக்ககூடிய சகோதரர்கள் எடுத்தக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

ஜெகபர்தீன் அவர்களுக்கு சபையின் சார்பாக அவர்களின் சேவைகளை பாராட்டி கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா அவர்களும், பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும் மற்றும் தலைவர் கலீபா சஹாபுதீன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கொளரவப்படுத்தினார்கள்.

மன்னார்குடி ஷேக்மைதீன் ,பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா,சையதுஅலி மௌலானா,கலீபா சஹாபுதீன் அனைவரும் உரையாற்றினார்கள்.

தௌஃபா பைத்துடன் இனிதே இந்த மாதக்கூட்டம் நிறைவுப் பெற்றது.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்