This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...?...1


(ஆகஸ்ட் 9ம்தேதி ஷெய்குனா இமாம் அஸ்ஸய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் 12வது விஜயமாக துபாய் வந்தார்கள். அவர்களின் வருகையையொட்டி தினமும் மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின் ஞான விளக்கங்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு நடைப்பெற்றது… அதில் 11ம்தேதி அவர்கள் ஆற்றியஉரை இதோ…)

அன்பிற்குரிய முரீதின்களே…!
அனைவருக்கும் எனது நன்றியும் ஸலாமும் உரித்தாகுக…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தகு…

இங்கே ஏகத்துவமெய்ஞ்ஞான சபை துபாயில் துவங்கி சுமார் 27 வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் இதைக்கொண்டு நீங்கள் என்ன அறிந்துக் கொண்டீர்கள்…? என்ன நன்மையை அடைந்தீர்கள் என்பதை ஒருவகையாக நாங்கள் பேச்சுக்கு முன்பு கேட்டுக்கொள்வோமே எனக்கூறி கேள்விக்கு மறுமொழி வினவினார்கள்.

ஒருவர் கூறினார்… சரியான குருவை அடைந்து நேரிய வழியை அடைந்தோம். என்றார்

சரி நேரியவழி என்றால் என்ன ? என்று ஷெய்குனா கேட்டார்கள்.

அல்லாஹ்வை பற்றிய தாத்பரியத்தை அறிந்துக்கொண்டு வருகிறோம் பெருமானார் ரசூல் (ஸல் அலை) அவர்களை பற்றி பூரணமாக கற்றுத்தந்தீர்கள். ஷரிஅத்தை அதன் வேலியுடன் எங்களுக்கு காண்பித்தீர்கள். மேலும் தரீக்கத் ஹக்கீகத் மஃரிபத் பற்றிய உண்மையை அறிகின்றோம். வயதில் மூத்தவர்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துனீர்கள் மேலும் நேராகவும் மறைமுகமாகவும் நாங்கள் பல விளக்கங்கள பெற்றுக்கொண்டதும் உண்டு இன்னும் அளித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். என்றார்.

இன்னொருவர் கூறினார்… பைஅத் பெருவதற்கு முன் அல்லாஹ்வை ஏழு வானத்திற்கு மேல் உள்ளான் என்ற பொதுவான கற்பனையான கருத்தைக் கொண்டிருந்தோம். தங்களிடம் வந்தப்பின் தான் இறை என்பது இப்பிரபஞ்சத்தில் இடைவெளியன்றி எல்லாமாக நெருக்கமாக இணக்கமாகவும் அதுதான் உள்ளது என்ற பேருண்மையை தங்களிடம் கற்றோம். என்றார்.

இன்னுமொருவர் கூறினார்… நான் ஆரம்பத்தில் ஜூம்மா தொழுகைக்கு கூட நேரம் கிடைத்தால் மட்டுமே செல்பவனாக இருந்தேன். தங்களிடம் பைஅத் பெற்றபிறகு ஐவேளை தொழுது வருகிறேன்… ஹஜ் முடித்துள்ளேன் இறைவனை விளங்கி வருகிறேன் நல்ல பணியில் உள்ளேன் முழுமனிதனாக மாறி திருப்தி அடைந்துள்ளேன். என்றார்.

ஓவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினீர்கள். அதே நேரத்தில் 26 வருடங்களாக (சபைக்கு) வந்தும் ஒரு நன்மையும் அடையவில்லை என ஒருசிலர் சொல்கிறார்கள் அல்லாஹ்தான் அறிவான்.
ஓன்று அவர்களுக்கு அறிவு குறைவாக இருக்க வேண்டும் அல்லது நான் பேசும் பாஷை புரியாமல் இருந்திருக்க வேண்டும்.
அது அவர்களுடைய மூளையின் கெப்பாசிட்டியை பொறுத்தது.
ஒருவேளை இங்கு வந்து தூங்கியிருப்பார்கள். தூங்குபவர்களுக்கும் இடையில் ஓரு ஞானம் வரும்.(அதாவது) ஏதோ சொல்கிறார்களே என்ற எண்ணம் வரும்.

நீங்களெல்லாம் ஒரு ஷெய்கை ரப்பாக(கடவுளாக) நினைக்கிறீர்களா…?
ரப்பு என்றால் வளர்த்து பாதுக்காகின்ற இறைவனுக்கு சொல்வது…
ஒரு ஷெய்கை அல்லாஹ்வாக நினைப்பது(ஷிர்கு) பாவம்… அப்படி நினைக்கக்கூடாது. ஷெய்கிற்கு (இணைவைத்தலை) பாவத்தை தருகிறீர்கள்.

நான் அல்லாஹ் எனச் சொல்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள்.
சில ஞானப் பாடல்கள் உள்ளது. அந்தப் பாடல்களை எப்படி பாடியிருக்கிறார்கள்…? ஏன் பாடியிருக்கிறார்கள் என்று ஒரு ஞானியிடம்
கேட்டால் தான் அந்தப்பாட்டை விளங்க முடியும்…!
அரபியில் அரபுஞானிகள் எழுதிய பாடல்கள் நிறைய உள்ளது. தமிழில் மஹானந்த பாவா இன்னும் சிலரின் எண்ணற்ற பாடல்கள் உண்டு. இவர்கள் யாரும் தங்களை அல்லாஹ் எனக் கூறியது இல்லை. அதில் உள்ள வார்த்தைகளை பொதுமக்கள் அதாவது வாசிக்கத் தெரியாதவர்கள் (விளக்கமில்லாதவர்கள்) பார்க்கும்போது வேறு மாதிரியாகத்தான் கருத்து தெரியும்.
ஒரு புலவர் ஒரு பாட்டை எழுதினால் அதை அவர்களுக்கு தெரியமல் கருத்தை கண்டுபிடிக்க முடியாது.
உதாரணத்திற்கு
கொம்புள்ளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முளம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே-அல்லாத
வம்புசரி தீங்கினர்தம் கண்ணுக்கு எட்டாத தூரத்து
நீங்குவதே நல்லநெறி…

(இந்த பாடலுக்கு பொருள்)
கோம்புள்ளதற்கு என்றால் ஆடு மாடுகளுக்கு ஐந்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
குதிரைக்கு பத்துமுளம். அதற்கு கொம்பில்லையென்று அருகே சென்றால் ஓங்கி காலால் உதைத்துவிடும். ஆகையால் குதிரைக்கு பத்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
கரி என்றால் யானை வெம்புக்கரி என்றால் கொடிய யானையெனப் பொருள். அதற்கு ஆயிரம் முளம் தள்ளியிருக்க வேண்டும். பாரதியாரை கொன்றது அதுதானே.
வம்புசரி தீங்கினர்தம்-தீங்கு செய்பவர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு செல்லவேண்டும். அதுவே நல்ல செயல் என்பது பொருள்.
இப்போது இதன் கருத்து அந்த (புலமை)ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே விளங்கும்.

ஒருமுறை ஒளவையார் ஒரு அரசவைக்குச் சென்று ‘வரப்புயர’ என்று சொன்னார்களாம். ‘வரப்புயர’ என்றால் ஏதோ வரம்பு உயர்ந்து கொண்டுள்ளது என எண்ணிக் கொண்டிருப்பார்கள். பின்னாலில் வருவது அவர்களுக்கு தெரியாது. அதன் கருத்து அதை விளங்கியவர் மட்டுமே கூறமுடியும். ஓளவையாரிடம் கேட்டதற்கு
வரப்புயர நீருயரும் என்றார்கள் வரப்பு என்றால் வரம்பு. நீரின் வரம்பை உயர்த்தினால் நீரும் உயரும் என்பது கருத்து. ‘நீருயர்ந்தால் நெல்லுயரும்’
நீர் உயர்ந்தால் நெல் பசுமையுடன் வளரும். ‘நெல்லுயர குடியுரும்’ நெல் உயர்ந்தால் நன்றாக சாப்பிட்டு சந்தோசமாக குடி வாழமுடியும்.
‘குடியுயர கோனுயர்வான்’ – கோன் என்றால் அரசன். குடி நன்றாக இருந்தால் அரசன் உயர்வான் என்பது கருத்து. இப்போது இது யாருக்குத் தெரியும்…?
அதை படித்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

நான் ஒரிடத்தில் எழுதி உள்ளேன் ‘மானீக்கி அருவாடு ஆனந்தமே’ என்று. சிலோனில் ஒருவர் இதன் அர்த்தத்தை தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறார். கடைசியில் அவருக்கு மானீக்கி அருவாடு என்று பெயரே வைத்துவிட்டார்கள். இறுதியா என்னிடம் வந்தார். இப்போது இதன் கருத்து அந்த ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
மான் + நீக்கி + அரு + ஆடு எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதற்கு இலக்கணமும் தெரிய வேண்டும்.
மானீக்கி – மான் என்றால் உடல்
நீக்கி என்றால் நீக்குதல் உடலை நீக்குதல்
அரு என்றால் உடல் இல்லையென்று நீ ஆடு என்பது பொருள்.
உடலை நீக்கி ஒன்றுமில்லை யென்று நீ ஆடு என்பது பொருள்.
இதைத்தான் வெட்டவெளிப் பயிற்சி என்கிறோம். இதை இன்ஸானுல் காமிலும் மற்ற நூல்களிலும் சொல்லப்படுகிறது. நாங்களும் சொல்கிறோம்.
இது காய்ந்த கருவாடுகளுக்கு விளங்காது.

உதாரணத்திற்கு கானகம் வெட்டினான். எனத் தமிழில் உள்ளது. ஒரு கருத்து கால்நகம் வெட்டினான். மற்றொரு கருத்து காட்டை வெட்டினான். கானகம் என்றால் காடு என்பதாகும். இது எந்தச் சொல்லோடு சேர்ந்து வருகிறதோ அப்போது தான் அதன் பொருள் தெரியும். இப்படி அரபியிலும் தமிழிலும் இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரணம் அது அந்த புலவர்களின் போக்கு. அது அழகை எடுத்துக்காட்டுவதற்காக இவைபோன்று ஞானக்கவிதைகளில் நிறையவரும்.

(நன்றி- சகோதரர் அமீர்அலி)

தொடரும்

மாநபியின் மாணிக்கமே வரவேண்டும்...

மாநபியின் மாணிக்கமே
வரவேண்டும்-உங்கள்
மணம் நிறைந்த அருளினை
அண்ணலே தரவேண்டும்

ஆன்மீக ஞானம்தேடி
அலைபாயும் மனமே
ஆதரவாய் கரம் கொடுக்கும்
எம்குருவின் குணமே

கதியிழந்த உயிர்களுக்கு
மதிநிறைக்கும் மhமதியே
விதிதேடும் விடைகளுக்கு
வீதி தந்த ஒளிவிளக்கே


---- மாநபியின்

நான்-னை நான்-னென்று
நவிழ்கின்ற நாதரே
நான்-னில் நாயகனை
நயம் செய்த சீலரே

பூரணத்தை புரிந்துணர்ந்து
புயலாய் வந்த பூமானே
புறம்பொருள் நீக்கமற-எம்மை
புனிதராக்கும் எம்மானே

---- மாநபியின்

ஏகத்துவ உண்மையினை
ஏற்றிவைத்த தீபமே
ஏக்கங்கள் என்னிடத்தில்
ஏற்றம்செய்யும் எஜமானே

அண்ணலாரின் அகமியத்தை
அணிவகுத்த அற்புதமே
எண்ணுயார் எண்ணத்தை
வண்ணம் தந்த வான்மதியே

---- மாநபியின்

விஞ்ஞானம் பேசும் மனிதன்
விகமனம் மானதேனோ
மெய்ஞ்ஞானம் கற்றவருக்கு
அஞ்ஞானம் நுழைந்ததேனோ

பேரின்பம் படித்ததாய்
பெருமைகள் கொண்டதேனோ
சிற்றின்ப சீற்றத்திலே
சிறகுகள் ஒடிந்ததேனோ

---- மாநபியின்

ஞானக்கலையினிலே
மானம் படிக்கவேனும்
படித்த ஞானமதிலே
மனிதனாய் மலரவேனும்

குருவிடம் கற்றக்கல்வி
பெருநன்றி மறந்ததேனோ
குறைமதி பெற்றதினாலே
வருந்திடும் வாழ்க்கையோடும்

---- மாநபியின்

சத்தியத்தின் நாவினிலே
சத்தியம் பேசிடுமே
சத்துரு கனைகளிலே
சாம்பலாகி போகனுமே

சன்னதி வந்துவிட்டோம்
சரணானோம் சந்திரனே
சாந்தியும் தந்தருள்வீர்
சபையோர்க்கு சமுத்திரமே....
---- மாநபியின்



-
-
- விகமனம் - துர்நடத்தை
- சத்துரு---எதிரி

புதுப் பொலிவுடன் முதல் நிர்வாகக் கூட்டம்


முதல் நிர்வாகக் குழு கூட்டம் ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 9.00 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடந்தது.


புதிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கூட்டத்தை சிறப்பித்து தந்தார்கள்.
அது சமயம் நிர்வாகத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


மாதச்சந்தா, மதரஸா வளர்ச்சி, மறைஞானப்பேழை மாதப்பத்திரிக்கை வளர்ச்சி இவைகளுக்கு புதிய பல நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கபட்டது.
2009 வரையிலான கணக்குகளை ஆடிட் செய்ய புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது.


உதவித் தலைவர் அப்பாஸ் ஷாஜகான் ஐந்து நிமிடம் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
இறுதியாக சபைத் தலைவர் அனைவருக்கும் நன்றி கூறி சலவாத்துடன் இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.


காசிருந்தும் ஏழை

உள்ளாகி வெளியாகி
உண்மைக்கே ஒளியாகி
கொள்ளாமல் கொள்ளுமொரு கூட்டம்!-அது
குதுகலிக்கும் ஜமாலிய்யாத் தோட்டம்!

தேட்டமுண்டு நாட்டமுண்டு
திட்டமுண்டு வட்டமுண்டு
கூட்டமுண்டு கலீல்அவ்ன்தம் பின்னே!-அங்கு
குண்டூசிகூட ஆகும் பொன்னே!

பொருளறிந்து புலனறிந்து
பொய்க்காத நலனறிந்து
அருளறிந்து துய்த்திடுமோர் திருப்பம்!-காண
ஆசையுளோர் வைப்பீர் அவ்ன் விருப்பம்!

குருவாகி இருப்பவரைக்
கொள்ளாமல் இறைஞானம்
உருவாகி வந்திடுமோ ஊரில்?-இதை
உணர்ந்து அவ்னைக் கண்டிடுவீர் நேரில்!

திறவுகோலை எடுக்காமல்
திண்டாட்டம் கொடுக்காமல்
உறவுகோலும் மறைஞானப் பேழை!-அதை
உற்றறியார் காசிருந்தும் ஏழை!

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

இல்லையே...


பராஅத் இல்லை
மிஃராஜ் இல்லை
27ல் லைலத்துல் கத்ரு இல்லை
மீலாது இல்லை
மௌலூது இல்லை
முஹர்ரம் 10 ஆஷ_ரா இல்லை
கர்பலா இல்லை
ஈஸால் தவாபு இல்லை
பாத்திஹா இல்லை
கத்தம் இல்லை
பெருமானாரின் ரவ்ழாஷரீப்
ஜியாரத் இல்லை
மத்ஹபுகள் இல்லை
நான்கு இமாம்கள் இல்லை
நிய்யத் இல்லை
நேர்ச்சை இல்லை
வலிமார்கள் இல்லை
கராமத் இல்லை

இல்லை…இல்லை…இல்லை

புதிய ஷைத்தான்கள்
ஏன் இவ்வாறு குழப்புகிறார்கள்?
முடிவாகப் புரிந்து கொண்டேன்!
இவர்களுக்கு இதயத்தில்
ஈமான் இல்லை
மண்டையில் மூளையில்லை….!

- ஆலிம் புலவர்

இமாம் ஷெய்குனா பன்னிரெண்டாம் ஆண்டு துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஸ்தாபகர் இமாம் செய்யிது கலில் அவுன் மௌலானா அவர்கள் ஆகஸ்ட் 9 ம்தேதி குவைத் நாட்டிலிருந்து துபாய் வந்தார்கள். இது 12 வது வருட விஜயமாகும்.
குவைத் நாட்டில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை நிறுவி ஞானத்தேடல் உள்ளவர்களுக்கு தவ்ஹித் விளக்க சொற்பொழிவு நிகழ்த்தியும் பிறை 14ல் இராத்தீப் ஒதியும் சிறப்பித்துள்ளார்கள்.பலர் ஆர்வத்துடன் இணைந்து பைஅத் பெற்று தங்களை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையுடன் இணைத்துக் கொண்டார்கள்.

துபையில் ஓவ்வொருவருடமும் நடக்கக்கூடிய மஜ்லிஸ் நிகழ்ச்சி போல இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. அனைத்து முரீதின்களும் மஹ்ரிப் தொழுகைக்கு பின் மஜ்லிஸில் கலந்துக் கொண்டார்கள்.

தவ்ஹிதின் அறிவு ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக அவசியம் என்றும் ஷரிஅத்தை எந்த காலக்கட்டத்திலும் மறந்தோ அலட்சியமோ படித்திடாமல் பேணி நடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஐங்காலத் தொழுகையை சந்தோசமான முறையில் தொழவேண்டும் பஜ்ர் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் ஒதவேண்டும் என்றும் கூறினார்கள்.
அண்ணல் பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லாம் அவர்களின் மீது அதிகமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உபந்நியாசம் செய்தார்கள்.

பெற்றோர்களை எந்த காலகட்டத்திலும் கைவிட்டிடாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும் இது ஒவ்வொருவர்களின் மீதும் கடமை என்றும் கூறினார்கள்.

ஆகஸ்ட் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையில் நடந்த மஜ்லிஸில் முரீதின்கள் தங்களின் சந்தேகங்களை கேக்கும்படியும் பணித்தார்கள். பலர் தங்களின் ஐயங்களைக்கேட்டு தெளிவுற்றார்கள்.

துபாய் சபையில் நிர்வாகச் சீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமித்தார்கள். அனைவருமே தலைவர்கள் தான் என்ற மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் புது பொலிவுடன் சபை இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்ளக்கூடாது என்றும் அறிவுரித்தினார்கள்.

20ம் தேதி மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் சிறப்பு துவா ஓதி அனைத்து முரீத்தீன்களுக்காகவும் உலக மக்களின் ஒற்றுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.


21 ம் தேதி மாலை 7.30 மணிக்கு இலங்கைக்கு திரும்பினார்கள்.






புதிய நிர்வாகிகளுடன் இமாம் செய்யிதுகலில் அவுன் மௌலானா அவர்கள்

இசையில்லா சங்கீதம்

இஸ்லாமிய பாடகரான அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடிய புதிய பாடல்.
பெருமானார் (ஸல்) அலை அவர்களை பற்றியும் ஞானமறிந்தால் அதன் பயனைப் பற்றியும் அந்த பாடலின் சுருக்கமான கருத்தாகும்.
இலங்கை வெலிகமையில் இமாம் ஸய்யது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் அவர்களின் முன்னிலையில் இந்தப் பாடல் அரங்கேற்றப் பட்டது.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலை எழுதியவர் கிளியனூர் இஸ்மத்.

புதுப் பொலிவுடன் நிர்வாகச் சீரமைப்பு

துபையில் 14.08.2009 அன்று காலை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஸ்தாபகர் இமாம் ஸய்யிது கலீல் அவுன் மௌலானா அவர்களின் முன்னிலையில் துபை சபையின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் அனைத்து உறுப்பினர்களுக்கு மத்தியில் நடைப்பெற்ற மஜ்லிஸ்சில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டார்கள்.

துபாய் சபையில் கலீபா பதவியை மிகமிக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்ட இருவர்கள்
கண்ணியமிக்க கலீபா முஹம்மது காலீது அவர்களும்
கண்ணியமிக்க கலீபா முஹம்மது முஸ்தபா அவர்களும்


புதுப் பொலிவுடன் மிளிரும்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபை



------------------------------------------------------------------------------------
நிர்வாகத் தலைவர்

A.P.சஹாபுதீன் BE.M.B.A
திருமக்கோட்டை



------------------------------------------------------------------------------------
துணைத் தலைவர்கள்

K.S.அப்பாஸ் ஷாஜகான் B.SC
திண்டுக்கல்




S.J.காதர் சாகிப் D.E.E
கீழக்கரை



--------------------------------------------------------
கௌரவ ஆலோசகர்கள்
---------------------------------------------------------

M.ராஜா முஹம்மது
மதுக்கூர்





A.அப்துல் சுபஹான்
மதுக்கூர்




M.அபுசாலிஹ் B.A
தஞ்சாவூர்


-------------------------------------------------------------------------------------
பொதுச் செயலாளர்

A.N.M.முஹம்மது யூசுப் M.A
மதுக்கூர்



----------------------------------------------------------------------------------------------
இணைச் செயலாளர்

இஸ்மத்
(k.லியாக்கத்அலி)
கிளியனூர்





------------------------------------------------------------------------------
துணைச் செயலாளர்கள்


S.ஷர்புத்தீன் D.COM
அதிராம்பட்டினம்



M.அப்துல் ரவூப் B.SC
மதுக்கூர்




-------------------------------------------------------------------------------------
பொருளாளர்கள்


M.முஹம்மது தாவூது B.COM
மதுக்கூர்




S.ஷேக்தாவூது M.B.A
மன்னார்குடி



-------------------------------------------------------------------------------------
ஆடிட்டர் குழு


ஆதம் A.அப்துல் குத்தூஸ்
மதுக்கூர்



A.ஷேக்மைதீன் M.B.A
மன்னார்குடி





M.A.அப்துல் கபூர் B.COM
மதுக்கூர்



-------------------------------------------------------------------------------------
அவை முன்னவர்கள்

S.ஹாஜா அலாவுதீன்
கொடிக்கால்பாளயம்



------------------------------------------------------------------------------------
மதரசா வளர்ச்சி /சந்தா


A.ஹாஜா அலாவுதீன்
மதுக்கூர்




A.S.அக்பர் ஷாஜகான் B.B.A
திண்டுக்கல்



M.S.அப்துல் வஹாப்
மதுக்கூர்



M.A.அமீர்அலி D.C.T
மதுக்கூர்




K.S.அப்பாஸ் ஷாகிர்உசேன் M.COM
திண்டுக்கல்



-------------------------------------------------------------------------------------
விழா அமைப்பாளர்கள்

A.அஹமது இம்தாதுல்லாஹ் D.E.C.E
முதுகுளத்தூர்





A.M.ஜெய்னுல்ஆபுதீன் B.COM
திண்டுக்கல்




M.அக்பர்
மதுக்கூர்



------------------------------------------------------------------------
செயற்குழு உறுப்பினர்கள்

M.அப்துல் ரஹ்மான்
அதிராம்பட்டினம்





A.P.தாஜ்தீன் B.E M.B.A
திருமக்கோட்டை




H.அன்வர் உசேன் M.A
பேராவூரணி





K.மதார்ஷா
பட்டுக்கோட்டை




S.உமர் பாருக் D.M.E
திண்டுக்கல்


A.பஷிருல்லாஹ்
சென்னை





M.A.ஜெகபர் சாதிக் M.C.A
மதுக்கூர்




M.J.ரியாஸ்
அடியக்க மங்கலம்





A.சிராஜ்தீன் B.COM
மதுக்கூர்




A.P.பக்ருதீன்
திருமக்கோட்டை




M.A.A.சாதிக்
மதுக்கூர்




அப்துல்மாலிக் (வைத்தியர்)





அபுல்பஸர் ஆலியூர்

கோட்டக்குப்பம் முஹைய்தீன்


------------------------------------------------------------------------------------

இதில் இடம்பெற்றுள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

புனித ஷபே பராஅத் நிகழ்வும் இராத்தீப் நிகழ்ச்சியும்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் புனித நிகழ்ச்சியான ஷபே பராஅத் நிகழ்ச்சி மஃரிப் தொழுகைக்கு பின் ஆரம்பிக்கப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து மூன்று யாசீன்கள் ஒதப்பட்டன. பின் பிறை 14 லின் இராத்தீப் நிகழ்ச்சியும் நடைப்பபெற்றது இராத்தீப் நிகழ்ச்சிக்குபின் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.ஷபே பாராஅத் தைப் பற்றி விளக்கமாக பேசினார்கள். அவர்களை தொடர்ந்து கலீபா முஹம்மது காலீத் அவர்கள் வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்ந்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். பாடகர் மதுக்கூர் தாவூது அவர்கள் பெருமானார் (ஸல்-அலை) அவர்களின் புகழ்பாக்களை பாடினார். இவ்விழாவில் மரியாதைக்குரிய ஜாவித்அலி மௌலானா , துணைத்தலைவர் ஏஎன்எம்.முஹம்மது யூசுப் , அதிரை அப்துல்ரஹ்மான் , கீழை காதர்சாகிப் ,கொடிக்கால்பாளயம் அலாவுதீன் ,கிளியனூர் இஸ்மத் ,அதிரை சர்புதீன் , திண்டுக்கல் முஹைய்யத்தீன் ,வழுத்தூர் ரஷீத் , மதுக்கூர் சுபாஹான், பாடகர் சாகுல்ஹமீது ,திருச்சி ஜெகபர்சாதிக் , சார்ஜாவிலிருந்து அக்பர் ராஜாமுஹம்மது ஜெகபர்தீன் , அபுதாபியிருந்து ஜெகபர்சாதிக் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.