மதுக்கூரில் சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா

மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞான சபையில் செப்டம்பர் 14-ல் மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் சங்கைமிகு நமது உயிரினும் மேலான சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வஹ்தத்துல் உஜூத் பாடலை அல்லாமா அப்துல் கரீம் அவர்களும் கலீபா முகம்மது காலிது அவர்களும் Er.இத்ரீஸ் அவர்களும் அப்துர் ரஹ்மான் அவர்களும் சேர்ந்து பாடினார்கள் ,அதன் தமிழாக்கம் பின்னர் வாசிக்கப்பட்டது

.அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யாவும் கஸிதத்துல் அஹ்மதிய்யா வும் ஓதப்பட்டன.
கலீபா அட்வகேட் A.N.M.லியாக்கத் அலி அவர்களும் முகைதீன் அமானுல்லா அவர்களும் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.