This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இலங்கை வெலிகமையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் மீலாதுப் பெருவிழா படங்கள்

























இணையதளத்தில் பத்திரிக்கையை வெளியீடுவதற்கு கலந்தாலோசனைகள்
































































































































இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தின விழா மிகச் சிறப்புடன் பிப்ரவரி 26 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கப்பட்டு ரசூல் மாலை ஓதப்பட்டது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், குவைத் மற்றும் அமீரகம் துபையிலிருந்து பல இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியை கௌரவிக்கும்முகமாக வருகை புரிந்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 மாலை சிறப்புவிருந்தினராக "இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாரளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ" அவர்களும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும் இலங்கை வெலிகம சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் திரு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளர்கள்.

மஃரிப் தொழுகைக்குப்பின் சங்கைமிகு கலீல்அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் நடைப்பெற்ற இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா (இராத்தீபு மஜ்லீஸ்)நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியை வெலிகமையிலிருந்து நேரடியாக இங்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வெலிகமையில்




கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும்முகமாக இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 27,28,மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள்

சிறு மக்கம் என இலங்கைவாழ் முஸ்லிம்களால் சிறப்பித்துக் கூறப்படும் வெலிகமையில் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக மீலாதுவிழா மற்றும் கந்தூரிவிழாவை நடத்திவரும் அத்தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில்

சங்கைமிகு ஷைகுநாயகம் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் தலைமையில்

அவர்களது புஹாரி மஸ்ஜித் மாவத்தையில் உள்ள “பைத்துல் பரக்கா” இல்லத்தில் குத்புகள் திலகம் செய்யிது யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் அரங்கில் நடைப்பெற உள்ளது.

இவ்விழாவை அலங்கரிப்பதற்காக பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையினரான அஹ்லு பைத்துக்கள் ஆலிம் பெருமக்கள் மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது அன்பு கொண்ட வெலிகம நகர மக்கள் இவர்களுடன் பல நாடுகளிலிருந்து வருகைப்புரிய உள்ள உலக முஸ்லிம்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தென்றல் வானொலி அலைவரிசையில் பிப்ரவரி 28 ஞாயிறு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது.
அதன் இணையதள .slbc.lk முகவரி இதில்கேட்டு மகிழலாம்.

மதி பிறந்தநாள்


பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.



நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

மௌலுதுக்குப் பின் மதுக்கூர் முஹம்மது தாவுது நபிப்புகழ் பாடல்களை பாடினார்.

நிர்வாகத் தலைவர் A.P.சஹாபுதீன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இஃஷா தொழுகைக்கு பின்னர் முப்பது தினங்களுக்கு மௌலுது நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

புனித புர்தா நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் மாதாந்திர புனித புர்தா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைப் பெற்றது.நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் மாதாந்திரக் கூட்டம்


துபாய் பிப்ரவரி 4ம் தேதி இரவு இஷாத் தொழுகைக்குப் பின் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் மாததந்திரக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகுத்தனர்.கிளியனூர் இஸ்மத் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தி தந்தார்.

கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலாவுதீன் கிராத் ஓதி துவங்கினார்.
"ஆன்மீக அருள்முரசு" அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி ஞானப்பாடலும், நபிப் புகழ் பாடல்களையும் பாடினார்.
மதுக்கூர் முஹம்மது தாவூது "ஊவல் வுஜூது” என்ற ஏகத்துவ அரபுபாடலைப் பாட மன்னார்குடி ஷேக்தாவவுது தமிழில் விளக்கவுரை வாசித்தார்.
நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன், பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப், அதிரை அப்துல் ரஹ்மான், மதுக்கூர் அமீர்அலி ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.

இணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன், முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ், மதுக்கூர் எம்.எஸ்.அப்துல்வஹாப் மற்றும் பல நிர்வாகிகளும் ஆன்மீக சகோதரர்களும் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்து தந்தார்கள்.

சலவாத்துடன் இனிதே இக்கூட்டம் நிறைவு பெற்றது.