This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மதுரசதுல் ஹசனைன் பீ ஜாமிஆ அரபிக் கல்லூரியின்





















அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.

அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.

மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.

அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.

நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.

உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

Thanks Dinamalar

Regards,

S. Abul Bazar

கறுப்பு கர்பலா நினைவு தினம்

மெளலவி அப்துல் ஹமீது நூரி கிராஅத்
=====================================


ஆலிவூர் அபுல்பஸர்
=======================


அப்துல் காதர்
=================


கலீபா A.P.சஹாப்தீன் அவர்கள்
==============================


A.N.M.முஹம்மது யூசுப்
===============================





உலகையே உறையவைத்து உதிரத்தால் எழுதப்பட்ட வரலாற்று நாள். உண்மை ஓய்வெடுக்க பொய்யும், வஞ்சகமும், சூழ்ச்சியும் புத்தாடையென கந்தலை அணிந்து அழகுப்பார்த்த தினம். உலகுக்கே பண்பை போதித்து அன்பால் அனைவரையும் ஆட்கொண்ட எங்களது இருலோக இரட்சகர் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் புனித குடும்பத்தார்களுக்கு சொல்லவியலா துன்பமும், அநீதியும் இழைக்கப்பட்ட தினம் ,

அப்புனித குடும்பத்தார்களின் கண்ணீரை தாங்கிய பூமீ வெட்கத்தால் தலைகுணிய, எங்கள் அஹ்லபைத்தின பெண்களின் அழுகையின் ஒலியை சுமக்கவியலாத காற்று உறைந்துபோன தினம். எங்கள் புனித நபிகளாரின் புனித எச்சிலால் உடல்முழுதும் சுவைக்கப்பட்ட அருமை பேரராம், வீரச்சீலராம், குத்புமார்களுக்கெல்லாம் தந்தையாம் எங்கள் இமாம் ஹுசைன் (ரலி)சிரம் தந்து உயிர்த்தியாகம் செய்யப்பட்ட கறுப்பு கர்பலா நினைவு தினம் நமது துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 16-12-2010 வியாழன் மாலை வெள்ளி இரவு நினைவுக்கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கைமிகு பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மெளலானா அவர்களும், திருமுல்லைவாசல் செய்யது அலி மெளலானா அவர்களும் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் கலீபா எ.பி.சஹாப்தீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.நிகழ்ச்சியின் துவக்கமாக மெளலவி அப்துல் ஹமீது நூரி கிராஅத் ஓதினார்கள். வஹ்தத்துல் உஜூது பாடலை மதுக்கூர் தாவுது பாட அதன் தழிழாக்கத்தை ஆலிவூர் அபுல்பஸர் வாசித்தார்கள்.
ஞானப்பாடலை மதுக்கூர் தாவுது பாடினார்கள். மேலும் கர்பலாவை பற்றிய சிறப்பான கவிதையை அப்துல் காதர் படித்தார்கள்.

கலீபா A.P.சஹாப்தீன் அவர்கள் கர்பலாவின் வரலாற்றை நீண்ட உரையுடன் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.புனித குடுப்பத்தார்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும், அனீதத்தையும் அனைவரும் புரியும் வகையில் அவர்களின் உரை அமைந்தது.மேலும் ஹஸனைன் மெளலீது கிதாபை சிறப்பான முறையில் விரைவாக அச்சிட்டு தந்த ஆலிவூர் அபுல்பஸர் அவர்களுக்கு சபையின் சார்பாக நன்றியை கூரினார்கள். அதைத்தொடர்ந்து நன்றியுரையை பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் பேசினார்கள்.

வருகைதந்து சிறப்பையெய்த அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு நிகழ்ச்சி செவ்வென நிறைவேறியது.

Thanks - AMIRALI

சிறப்புக்குரிய ஆஷூரா மௌலூது நிகழ்ச்சி

சிறப்புக்குரிய ஆஷூரா மௌலூது நிகழ்ச்சி


துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் இஃஷா தொழுகைக்கு பின்னர் முஹர்ரம் ஆஷூரா பிறை 9 -ல் கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாகு அலைஹி வஸல்லாம் அவர்களின் இதயங்களான தியாகச்செம்மல்கள் சங்கைமிக்க ஹஜ்ரத் ஹஸன் (ரழி)ஹுசைன் (ரழி) அவர்களின் பெயரில் புனித மௌலுது ஷரீப் மிக சிறப்பாக ஓதப்பட்டன.சிறப்பு சொற்பொழிவும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சங்கைக்குரிய ஷெய்குனா அவர்கள் தங்களது கலீபாவாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத்தலைவர் A.P.சகாபுதீன் M.B.A. ஹக்கியுல்காதரி அவர்களை நியமித்ததையொட்டி கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் கலீபா அவர்களின் குண நலன்களைப் பற்றியும் தியாகங்களைப் பற்றியும் எடுத்துக்கூறி இச்சபையின் அனைத்து சகோதரர்களின் சார்பாக கலீபா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
இறுதியாக கலீபா அவர்கள் ஏற்புரை நிழ்த்தினார்கள்.
அனைத்து சகோதரர்களும் கலீபாவிற்கு முசபாஹ் செய்து தங்களின் சந்தோசங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இனிதே தப்ரூகுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இன்ஷாஅல்லாஹ் 16/12/2010 இரவு 8.00 மணிக்கு ஆஷூரா கர்பலா பிறை 10 தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. துபாய் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.









புதிய கலீபாவிற்கு உற்சாக வரவேற்பு



புதிய கலீபாவான துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சகாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்கள் கடந்த 12.12.2010 அன்று இலங்கை மற்றும் தாயகத்திலிருந்து அதிகாலை துபாய் திரும்பினார்.

கலீபாவை வரவேற்கும் முகமாக கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா, பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும், மற்றும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப், M.S.அப்துல்வஹாப், துணைச் செயலாளர் அதிரை S.ஷர்புத்தீன், இணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத், பாடகர் சாகுல்ஹமீது ஆகயோர் ஜமாலியா டெக்னிக்கல்ஸ் அலுவலகத்தில் புதிய கலீபா அவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.






இறைவன் தன்னையறிய நாடியபொழுது
கலீபா என்ற புனிதமிக்க பிரதிநிதி உருவானான்
இறைவனை முழுமையாக உணர்ந்தறிந்த சம்பூரண
ஷெய்கிலிருந்து இந்த கலீபா உருவானார்

இறைவன் தன் தத்துவங்கள் அனைத்தையும் தன்
கலீபாவிற்கு கற்றுதந்து அனுப்பிவைத்தான்
நம் உயிரினும் மேலான நம் ஷெய்கு
அனைத்து விசயங்களையும் ஞானக்கலையின்
உயிரோட்டத்தையும் கற்று தந்து அனுப்பி இருக்கிறார்கள்

ஷெய்குனுடைய பாராட்டுதலையும் பதவியையும்
பெற்று வந்திருக்கும் எங்கள் மரியாதைக்குரிய
கலீபா தலைவர் அவர்கள் மென்மேலும்
ஞானத்திலே பல படித்தரங்களை பெறவேண்டும்
அவர்கள் எல்லாவிதமான வள நலன்களையும் பெறவேண்டும்
துபை ஏகத்துவமெய்ஞ்ஞான சபை மேலும் மேலும் விரிவடைந்து
வளரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

-கா.மீ.மு.அ.சாகுல்ஹமீது

புதிய கலீபா நியமனம்


இன்று 07/12/2010 இலங்கை வெலிகமையில் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையதுகலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள்
தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள் என்ற நற்செய்தியை அனைவருக்கும் எத்திவைப்பதில் அளப்பெரும் சந்தோசமடைகிறோம்.

கலீபா A.P.சிஹாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு துபாய் சபையின் சார்பாக வாழ்த்துக்களை அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.

இலவச கண் சிகிச்சை முகாம்


அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவனர் சங்கைக்குரிய
செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்கள் இல்ல திருமண நாளை
முன்னிட்டு அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை மற்றும் மதுக்கூர்
ரோட்டரி சங்கம் , கோவை சங்கரா கண் மருத்துவமனை , தஞ்சாவூர்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண்
சிகிச்சை முகாம் இன்று 05.12.2010 காலை 9.30 முதல் மதியம் 1.30
வரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண் சம்பந்தமான அணைத்து நோய்களுக்கும்
இலவச மருத்துவ ஆலோசனை தரப்பட்டது. இதில் 137ஆண்கள்,
69 பெண்கள் ,6 குழந்தைகள் உள்பட 212 நபர்கள் பயனடைந்தனர்.

அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உணவு ,
தங்குமிடம் ,மருந்து,கோவை சென்று வர போக்குவரத்து ச்செலவு
அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது, அறுவை சிகிச்சைக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள் (7 நபர்கள் ) உடனே அறுவை சிகிச்சைக்காக
கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்

கண் சிகிச்சைமுகாம் சேர்மனாக கலீபா அட்வகேட் A.N.M.லியாக்கத் அலி
ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் ,அவர்களுக்குத் துணையாக கலீபா
M.முஸ்தபா ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் , டாக்டர் A. முஹம்மது
கலீல் ஹக்கியுள் காதிரிய்யி அவர்களும் செயல் பட்டனர்

எழுத்துப்பணிகளை ,Er.A. இத்ரீஸ்
ஹக்கியுள் காதிரிய்யி, J.ஹாரிஸ் ஹக்கியுள் காதிரிய்யி, A.நத்தர்ஷா
ஹக்கியுள் காதிரிய்யி,நூருல் பகுருதீன் ஹக்கியுள் காதிரிய்யிஅவர்களும் மேற்
கொண்டனர் .
மேற்பார்வை பணிகளை செயலாளர் முஹம்மது இஸ்ஹாக்
ஹக்கியுள்காதிரிய்யி,பக்கீர் மைதீன் ஹக்கியுள் காதிரிய்யி,M.முஹைதீன்
அமானுல்லா ஹக்கியுள் காதிரிய்யி,அஹமது கபீர் ஹக்கியுள் காதிரிய்யி
மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அனைவரும் மேற்
கொண்டனர்
மற்றும் ரோட்டரி சங்கதலைவர் டாக்டர்A. வாஞ்சிலிங்கம்
,ரோட்டரி சங்கசெயலாளர் T.P.R தேவதாஸ் ,ரோட்டரி சங்க பொருளாளர்
K.செல்வமணி அவர்களும் இதர ஏற்பாடுகளை செய்தனர்.மேலும் மதுக்கூர்
நர்சிங் கல்லூரி மாணவிகளும் உதவி புரிந்தனர்.

முடிவில் சேவைப்பணியாற்றியவர்கள் அனைவருக்கும் உணவு
வழங்கப்பட்டது
















தகவல்
Er.A.இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,
மதுக்கூர்.