இறையை மறந்திடாதே!!!

கௌதுல் அஉளமே! பாபிகளுக்கு வரிசை கொண்டும் சங்கை கொண்டும் நன்மாராயம் கூறுவீராக.
அகப்பெருமை (ஆரம்பத்தில் ) உடையோருக்கு பழிப்பைக் கொண்டும், வேதனையைக் கொண்டும்
துன்மாராயம் கூறுவீராக.




விளக்கம் : வழிபாடுடையவர்கள் சுவர்க்கம் அல்லது சௌகரியம் அல்லது செழுமை அல்லது
சுகபோகங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். பாபத்தையுடையவர்கள் இறைவனுடைய
கிருபை அல்லது தயை அல்லது கருணையை எண்ணிக் கொண்டிருப்பார்கள். நன்மை செய்து
கொண்டிருப்பர்வகள் நன்மையில் மருண்டு இறைவனல்லாதவற்றை விரும்பிக்கொண்டிருப்பார்கள்.
பபிகளோ தாம் செய்த பாபங்களுக்காக இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
அதிக நன்னடத்தைகளும் சுதந்திரமும் சுபிட்சமும் இறைவனை மறக்கச்செய்யும்
திரைகளாகிவிடுகின்றன. தாம் செய்த குற்றத்திற்கு அழுங்கிப் பயந்திருப்பவர்களுக்குத் திரை
அறுந்து இறையை மறந்திடாதிருக்க அது உதவுகிறது.


கௌதுல் அஉளம் அவர்களுடைய ரிஸாலதுல் கௌதிய்யா எனும் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து......


மொழி பெயர்த்தவர்கள் சங்கைமிகு குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்.


விளக்கம் சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா அவர்கள்.

Thanks- Sirajudeen Madukkur