சத்தியம் அதிலே நித்தியம் நீ செய்

அறிவில் சிறந்த பெரியார் ஒருவர்
கல்வி ஞானத்தில் சிறந்தே திகழ்ந்தார்
இறைவன் ஒருவன் என்றே பகன்றார்
இதற்கென சான்றுகள் ஆயிரம் கொடுத்தார்

இவரை ஒருநாள் மரணம் நெருங்க
சிந்தை தடுமாற மிரண்டார்
அவர் சக்தி இழந்தே தவித்தார்
இறைவன் ஒருவன் என்றே கூறி

ஆயிரம் சான்றுகள் அதனை
அவர் ஒவ்வொன்றாகவே அழைத்தார்
ஆயிரம் அதனை செய்த்தான் அவனும்
வொவ்வொன்றாகவே வுடைத்தான்

அவர் வேதனை தொடரவே வதைத்தான்
கல்வி ஞானத்தின் பலத்தினை இழந்தே
தன் ஷெய்குவின் வுதவியை அழைத்தார்
சிந்தையை அவரிடம் குவித்தார்

'குல்ஹூவல்லாஹூ அஹத்' அதுவே
மும்முறை ஷெய்குவின் வாக்கு
கொண்டார் ஷெய்கில் நம்பிக்கை
பற்றிய உறுதியில் வெற்றி

ஆயிரம் சான்றுகள் தாரா வுதவி
தன்பலம் முழுதும் தாரா வுதவி
ஷெய்குவில் நம்பிக்கை கொடுத்தது
வெற்றியை அவர்பக்கம் அழைத்தது

சக்தியும் திடமும் இருக்கும் நாளில்
மானிடர் அறியார் உண்மை
மரணம் நெருங்கும் இயலாநாளில்
அறிய கிடைக்கவே நேரும்

சாரும் நீரும் ஷெய்கில் சரணம்
சத்தியம் அதிலே நித்தியம்-நீ செய்
சத்தியம் அதிலே நித்தியம்
ஜெயம் தர அதுவே போதும்-உன்
ஜெயம் தர அதுவே போதும்

ஆக்கம் : M.A. சிராஜுதீன் ஹக்கிய்யுள் காதிரிய்யி B.COM , D.T.Ed, துபாய்.