ஹக்கை அறியாமல் எங்ஙனம் வணங்க இயலும்?

"அல்லாஹ்" என்னும் ஒருவனே ஏகன், அனைத்தும் அவனே என்பதுதான் வஹ்தத்துல் வுஜூத் ஆகும்.
அடிப்படைத் தத்துவார்த்தமான அதனை எங்ஙனம் அறியாமல் இருப்பது? எப்படி உணராமல் இருக்கின்றனர்?
என்பது வியப்பிற்குரியதாக இருக்கின்றது.


ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை என உருவத்தில் படைத்தேன் எனது ரூஹை அவரிலே ஊதினேன்
என ஏக இறை கூறுவதே தவ்ஹீதின் கருத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.


இதிலிருந்து (த்ஜல்லியாக) வெளியாகியிருப்பது ஹக்கே என்பதும் எல்லாமும் அதிலிருந்தே வெளியாயின
என்பதும் தெளிவாகின்றன. இதுவேதான் தவ்ஹீதும், ஷரீஅத்தும், இதனை எங்ஙனம் பிரிக்க இயலும்?

அல்லாஹ்வை ஆராயக்கூடாது, சிந்திக்கக்கூடாது எனச் சிலர் அறியாமையினால் கூறித் திரிகின்றனர்.
ஹக்கை அறியாமல் அவனை நாம் எங்ஙனம் வணங்க இயலும்? எனவே, ஹக்கை அறிவது மிகவும்
அவசியமாகும்.


------சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen