அழகாய் இருக்கிறது நினைத்தால் அழகாய் இருக்கிறது

சிறுபிள்ளை பிராயத்தில் பளிங்கி (கோலி) விளையாடிய நினைவு. பளிங்குகள் உருண்டையாக கண்ணாடியால் செய்யப்பட்டு உள்ளே வண்ணங்களாக காட்சியளிக்கும். வண்ணங்கள் இல்லாது
தண்ணீர்த் துளிபோல் காட்சியளிக்கும் பளிங்குகளும் உண்டு. அது பார்ப்பதற்கு நிறமில்லாது தண்ணீர்த் துளி போலவே இருக்கும்.

சமீபத்தில் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களின் ஞான வாரிதத்துக்களை படித்துக் கொண்டிருக்கும் போது அதில்...

'நிறமற்ற நீரின் உண்மை
நிரமுற்ற வைகள் தன்மை
மரமற்ற பிர்ம உண்மை
வடிவாதல் வாழ்வில் நன்மை'

என்ற வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. நீர்த்துளி போன்ற நிறமே இல்லாத பளிங்குகளின் ஞாபகம்
வந்தது. நீர்போன்று நிறமே இல்லாதவை வண்ணங்களை ஏற்று நிறமாக காட்சியளிக்கின்றது .
வண்ணங்களாக காட்சியளிப்பவற்றின் ஆதியுண்மை நிறமற்ற தன்மையே. நிறமுற்றிருக்கும் அனைத்தின் உண்மையும் நிறமற்ற தன்மையே என நினைத்துப் பார்க்கும்போது அழகாய் இருக்கிறது.

மனிதனாய் நிறமுற்றிருக்கும் நமது உண்மை?.......... think yourself.

-சிராஜுதீன். துபை