ஃபிக்ஹுச் சட்டங்கள் தேவையா ? (பகுதி-2)


இமாம்கள் கியாஸ் செய்து குர்ஆன், கதீஸ்களின் கருத்துக்களை மாற்றி விட்டதாக சிலர் சொல்லித் திரிகிறார்கள். இது தவறு. 

குர்ஆன் கதீஸில் மறைந்துள்ள உட்பொருளை வெளிப்படுத்தி உள்ளனர். நாம் ஆராயும்போது குர்ஆன், ஹதீஸிலிருந்து இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது. 

"விசுவாசிகளே! தர்மம் செய்யக் கருதினால் நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய (தானியம், கனிவர்கம், முதலிய) வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தானமாகச்) செலவுசெய்யுங்கள். 

அவற்றில் கெட்டவற்றில் செலவு செய்ய விரும்பாதீர்கள். (ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியவர்களாகவேயன்றி எடுக்க மாட்டீர்கள்". (2.227) என அல்லாஹ் கூறியுள்ளான்.