அமீரக அமைப்புகளில் ஆலிம் புலவர்

அமீரகத்திற்கு சங்கைமிகு ஷெய்குனா அவர்களுடன் வருகைப்புரிந்த மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரிய் அவர்களை அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்கு பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை அதன் தலைவர் ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

4.5.2011 புதன்கிழமை அன்று மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சுன்னத்வல் ஜமாஅத் ஆதரவாளர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் உரையாற்றியபோது "நான்கு ஆண்டுகளாக இந்த அமைப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது இதுநாள் வரையில் யாருக்குமே நாங்கள் பொன்னாடை அணிவித்து கொளரவப்படுத்தியது கிடையாது அதில் ஏதும் குறை ஏற்பட்டுவிடுமே என்பதினால் அதை தவிர்த்து வந்தோம். ஆனால் அருமை நாயகம் (ஸல் அலை) அவர்களை தனது கவியினால் புகழ்ந்து பாடிய ஆலிம் புலவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை என்றால் குறைவந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொன்னாடை அணிவிக்கின்றோம்" என்று வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறி ஆலிம் புலவர் அவர்களுக்கும் பாடகர் தேரிழந்தூர் தாஜிதீன் அவர்களுக்கும் அணிவித்தார்கள்.


தேரிழந்தூர் தாஜிதீன் ஆலிம்புலவர் எழுதிய பாடல்களை பாடிக்காண்பிக்கின்றார்

ஆலிம்புலவரின் சிறப்பு சொற்பொழிவு

கீழக்கரை ஜனாப் ஹாஜி சாதிக் காக்கா அவர்கள் ஆலிம் புலவருக்கு பொன்னாடை அணிவிக்கிறார்கள்

தேரிழந்தூர் தாஜிதீனுக்கு மௌலவி தாவூத்அலி மன்பஈ பொன்னாடை அணிவிக்கிறார்கள்

அமீரகத்தில் ஆறு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களின் அமைப்பான வானலை வளர் தமிழ் அமைப்பு மாதந்தோறும் துபாய் கராமா சுவிஸ்ஸ்டார் பவனில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

இந்த மாத நிகழ்ச்சசிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலீபா ஆலிம் புலவர் அவர்களையும் துபாய் சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களையும் அழைத்து கௌரவித்தார்கள்.

இந்த அமைப்பில் பலதரப்பட்ட சமய நல்லிணக்கமுடையர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களுக்கு அபுதாபி பழனி அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்கள்


கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு முத்துப்பேட்டை சர்புதீன் பொன்னாடை அணிவிக்கிறார்கள்



கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு வானலை வளர் தமிழின் பொதுச் செயலாளர் சிம்மபாரதி நினைவு பரிசு வழங்குகிறார்

கிளியனூர் இஸ்மத் கலீபா ஏ.பி.சகாபுதீனைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


அதிரை சர்புதீன் கலீபா ஆலிம்புலவரைப்பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


கலீபா ஏ.பி.சகாபுதீன் உரையாற்றுகிறார் கவிஞர்களின் அமைப்பை வாழ்த்தி வானம் என்பது எல்லையற்றது அதுபோல் இந்த அமைப்பு வளர்ந்து வரவேண்டும் ஒவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சுயசிந்தனையை ஏற்படுத்த ஊக்கமான உரைநிகழ்த்தினார்கள்.




வானலை வளர் தமிழின் ஆலோசகர் காவிரிமைந்தன் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்

வானலை வளர் தமிழ் அமைப்பின் மாத இதழான தமிழ்தேரை வழங்குகிறார் லெட்சுமிநாராயணன்



அங்கு நடந்த கவியரங்கத்திற்கு பிறகு கலீபா ஆலிம்புலவர் சிறப்புரையும் அத்துடன் ஜனநாயகம் எனும் தலைப்பில் கவிதையும் வாசித்தார்கள்


இந்நிகழ்ச்சியில் வானலை வளர் தமிழ் நிர்வாகிகள் கீழைராஜா, சிம்மபாரதி, காவிரிமைந்தன், கிளியனூர் இஸ்மத், பழனி, அத்தாவுல்லாஹ், முகவை முகில், லெட்சுமிநாராயணன், அபுமைமுனா, துரைமலைவேல், நிலவன், மற்றும் பல கவிஞர்களும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள்.