மனம் மகிழும் மாநபியின் மௌலுது நிகழ்ச்சி

கிளியனூர் இஸ்மத் இல்லத்தில் 15/02/2011 அன்று இஷா தொழுகைக்கு பின் மௌலுது ஷரீப் மிக சிறப்பாக மௌலானாமார்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கீழக்கரை அறிஞர் திருக்குர்ஆன் விரிவுரையாளர் மஹ்ரூப் காக்கா அவர்களும் சமூக ஆர்வலர் குத்தாலம் அசரப்அலி மற்றும் வானலை வளர்தமிழ் அமைப்பின் துணைத்தலைவர் கீழைராஸா மற்றும் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

மௌலுது நிகழ்ச்சிக்குப் பின் மஹ்ரூப் காக்கா அவர்களும் சையதுஅலி மௌலானா அவர்களும் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் சிறப்புகளை இயம்பினார்கள்.
நிறைவாக இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இஸ்மத் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

- அதிரை M.அப்துல்ரஹ்மான்