ஒன்றித்த ஒன்று

என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

தன்னையே தேடி தானே அலையும் ஒன்றினை
என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

உள்ளதெல்லாம் ஒன்றேஎன்னும்
உண்மையை அறிந்தும்
தன்னையே தேடி தானே அலையும் ஒன்றினை
என்றெனும் கண்டதுண்டோ
எங்கணும் கண்டதுண்டோ

ஏதுமற்றானை எல்லாமாயுல்லானை
பேதமற்றானை பெயருமற்றானை
வேதம் கொண்டானை வேற்றுமையற்றானை
இல்லாதிருந்தானை இல்லைஎன்பதில்லானை
அருவாய் நிறைந்தானை திருவாய்விரிந்தானை
ஒன்றாய் நின்றானை ஒன்றித்தே உள்ளானை
என் பெயர் கொண்டு நான் அழைப்பெனோ
நான்
என் பெயர் கொண்டு நான் அழைப்பெனோ
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
ஒன்றையன்றி ஒன்றுமில்லை
உள்ளதெல்லாம் அதுவேன்றோ
தன்னில் தானாய் உள்ள நிலையில்
காண்பதெல்லாம் தானன்றோ

-------கலிபா.வக்கீல் . A.N.M.லியாக்கத் அலி
மதுக்கூர்