ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...1


பிரபஞ்சத்தின் எல்லா வகை இயக்கங்களும் இந்த ஸலவாத்தெனும் துஆவால் நிரைபடுத்தப்படுகின்றன. இதனால்தான் அல்லாஹ்வும் வானவர்களும் ஸலவாத்துச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு வேறு தாற்பரியங்களும் நிறைய உள்ளன. இதில் ரசூல் நாயகம்(ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டதும் இஃது அவர்களுக்கு மட்டுமின்றி பரிபூரண பிரபஞ்சத்துக்கும் கேட்கும் பிரார்த்தனையாகும்.
************************************
இஸ்லாத்தில் கொஞ்சமும் ஷிர்கு (இணை வைத்தல்)இல்லாத முழுமையான தத்துவமுள்ளது. இதையறியாத மக்கள்தாம் இஸ்லாத்தில் தத்துவஞானமில்லை என்கின்றனர். இஸ்லாத்தில் உள்ள தத்துவஞானம் தான் மிகச் சிறப்புடையதாகும்.
***************************************
சிலர் இஸ்லாத்தில் தத்துவஞானம் இல்லை எனக்கூறி இஸ்லாத்தையே இழிவுபடுத்துகின்றனர். இஸ்லாத்தில் வணக்க வழிபாடுமுறைகள் மட்டுமே கூறப்படுவதாயும் வேறு மதங்களில் தத்துவங்கள் உள்ளதாயும் முஸ்லிம்களிற் சிலரே கூறத் தொடங்கியுள்ளனர். இஃது இஸ்லாத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
*********************************
அசையதா பக்கி உள்ளவருக்கு எல்லாம் கைகூடும்.
************************************
பில்லி சூனியத்தை நம்பி ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள். அதில் ஒரு புண்ணியமும் இல்லை. நோய் வந்தால் டாக்டரிடம் செல்லவேண்டும். அதுவே நல்லது. சூனியத்திற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நமது முரீதுகளுக்கும் அப்படித்தான்.
*************************************
நாங்கள் ஷரீஅத் தரீகத் ஹக்கீகத் மஃரிபத் என்ற நான்கு படிகளிலுமே ஓரே நேரத்தில் இருக்கிறோம் என்று கூறுங்கள்.
**************************************
டாக்டர்களால் செய்ய முடியாத மருத்துவத்தை நபிகள் நாயகம்(ஸல் அலை)அவர்கள் கற்றுக் கொடுத்த தொழுகை செய்துவிடும். தொழுகையானது கண் காது மூளை உடல் ஆத்மா என அனைத்திற்கும் மருந்தாக விளங்குகிறது. எம்காலில் இருந்த வலியினைக் குணமாக்கியது.
****************************************
தன்னையோ தன் பெயரையோ எமக்குள்ள எதுகைகளையோ நினையாது இஸ்தம்பமான எம்மை மறந்த மறதி நிலையில் நாமாகிவிட வேண்டும். நிஷ்டையும் இதுவே. முஷாஹதாவும் இதுவே. அப்போதே தன்னை அனல் ஹக் என்றும் அனள்ளாஹ் என்றும் அறிந்தவன் கூறுவான்...

-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவுன் மௌலானா