வணங்கச் சொன்னேன்

வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்

காணும் யாவும் நானே என்றேன்

காலம் யாவும் நானே என்றேன்



காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே

காடு மலை கடலும் படைத்தேன்

நட்சத்திர கோளம் படைத்தேன்

சூரியனும் நிலவும் படைத்தேன்

அத்தனையும் படைப்பது எனக்கு

குன் என்ற சொல்லே என்றேன்



வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



தோன்றுவது என்னில் என்றேன்

மறைவதும் என்னில் என்றேன்

மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்

மலக்குகளும் நூரில் படைத்தேன்

அதனையும் படைத்து எனக்கு

அடிமைகள் என்றே சொன்னேன்



வணங்கச் சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



கருவுக்குள் உயிரும் நானே

நெருப்புக்குள் உஷ்ணம் நானே

ஆகாய பெருவெளி நானே

அனைத்திலும் உண்மை நானே



வணங்க சொன்னேன்

என்னை வணங்கச் சொன்னேன்



வேதங்களும் விதிகளும் நானே

போதகனும் தூதனும் நானே

போதனைகள் செய்ததும் நானே

வேதனைகள் செய்ததும் நானே

காணும் யாவும் நானே என்றேன்

காலம் யாவும் நானே என்றேன்

காணமல் இருப்பதும் நானே



எபோதும் இருப்பதும் நானே.



BY

வழுத்தூர் Raja Kamal