This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

"நுஜூல்" - "உரூஜ்"

ஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிகளாகும். மனிதன் தான் "அர்வாஹ்" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் இருந்தான். அப்போது அவன் உயர் அந்தஸ்தில் இருந்தான்.

பின்னால் அவன் உலகத்தில் பிறந்து சிறிது சிறிதாய் உலகத்தை அறியும்போது அவன் முதலிருந்த நிலையை மறந்து விடுகிறான்.
அப்போது அவன் அப்படியே கீழ்ப்படிக்கு இறங்கிவிடுகிறான். முதலில்
அவன் இருந்தது "உரூஜில்" ஆகும். பின்னர் அவன் "நுஜுலுக்கு"
வந்து விட்டான்.

அவன் இப்படியே உலக ஆசாபாசங்களில் கட்டுண்டு அதிலேயே இருந்து
விடுகிறான். ஹக்கு யாருக்கு நேர்வழி காட்டுகிறதோ அவர் அவனின்
அருளைக்கொண்டு படிப்படியாகவும் அமைதியாகவும் பல படிகளை
ஒரே நேரத்தில் கடந்து விரைவாகவும் "உரூஜ்" சென்று விடுகிறார்கள்.

இப்படி உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு "நுஜூல்" "உரூஜ்" என்னும் வித்தியாசம் அற்றுவிடும். அவர்களுக்கு நுஜூல் , உரூஜ் என்பது மிகவும் இலகுவாக இருக்கும்.

அவர்கள் கீழ்ப்படிக்கு வந்து பார்க்கும்போதும் அவர்கள் உயர்படியில்
இருப்பதையே நினைப்பார்கள். உயர்படியை மறந்துவிடவும் மாட்டார்கள்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

நன்றி சிராஜிதீன் துபை

கருவை நோக்கி....

குருவி ஒன்று மரத்தின் கிளையில்
குறிதான் குருவி இலைகிளை அல்ல
நோக்கி நிற்பவன் மற்றவை நோக்கா
குருவியை நோக்கின் அது அவன் கையில்

வெற்றியின் இரகசியம் அதுவே யாயினும்
வாழ்வின் குறியை அடைவதில் தோல்வி
கிளைகளும் இலையும் குருவியைச் சுற்றி
அடைவதில் தடையாய் இருப்பதைப் போலும்

வாழ்வின் குறியை அடைவதில் தடையாய்
உலகியல் செயலும் மதியினை மருட்டும்
நோக்கம் மறந்து புரியும் செயலும்
விழலுக் கிரைத்த நீராய்ப் போகும்

எதுவோ நோக்கம் அதையே நாடி
வழி தனில் நடக்க நீயும்நாடு
சற்குரு நாதரை துணையாய்ச் சேரு
அவர்துணை கொண்டு கருவை நோக்கு

கருவை நோக்கும் வழியில் பெரிதாய்
தடைகளும் வந்தே நிறைந்தே சூழும்
அறிவைப் புரட்டும் மதியை மருட்டும்
சிந்தை கலங்கிட நிதமே நிற்கும்

குரு வழிகாட்டல் குருவழிப் பற்றல்
குருவில் சரணம் உனக்கு பலமாய்
திசையில் கருவை சரியாய்க் காட்டும்
குறியை திடமாய் அடைந்திட வைக்கும்

வாழ்வில் ஜெயம்பெற நலமேநாடி
மனிதா நீயும் குருவை நாடு
நற்குரு தேடல் நலமே பயக்கும்
அவர்வழிச் செல்வது அதனின் நலமே
அதனினும் நலமாம் அவரினில் சரணம்.

--- M.A.சிராஜுதீன்
துபைi.