This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label வழியனுப்புவிழா. Show all posts
Showing posts with label வழியனுப்புவிழா. Show all posts

ஜனவரி 2011 மாதக்கூட்டம்















துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜனவரி 2011 மாதாந்திரக் கூட்டம் 06.01.2011 வியாழன் மாலை வெள்ளி இரவு இஃஷா தொழுகைக்கு பின் நடைப் பெற்றது.

மௌலானாமார்கள் முன்னிலையுடன்,
இந்த மாதக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் தலைமை வகித்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து கோட்டைகுப்பம் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

மதுக்கூர் தாவுது அவர்கள் வஹ்தத்துல் வுஜூது மற்றும் நபிப்புகழ்பாடலையும் பாடினார்கள்.

மன்னார்குடி ஷேக்தாவுது வஹ்தத்துவ் வுஜூது பாடலின் தமிழாக்கத்தையும் கவிதையும் வாசித்தார்.

மதுக்கூர் அலிஅக்பர் ஞானப்பாடலைப் பாடினார்.

இவ்விழாவில் பேசியவர்கள்

மதுக்கூர் முஹம்மது யூசுப் தலைமையுரை நிகழ்த்த அவரைத் தொடர்ந்து
அபிவிருத்தீஸ்வரம் ஜெகபர்தீன் உரை நிகழ்த்தினார்கள். 28 ஆண்டுகள் அமீரகத்தில் ஒரே கம்பெனியில் பணிபுரிந்துவிட்டு கம்பெனியிலிருந்து பணிஓய்வு பெற்று தாயகத்தில் நிரந்தரமாக தொழில் தொடங்குவதற்கு இம்மாதம் இறுதியில் தாயகம் செல்ல இருப்பதாகவும் மதரஸாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை எண்ணி இனி அந்த பொறுப்பை இருக்ககூடிய சகோதரர்கள் எடுத்தக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

ஜெகபர்தீன் அவர்களுக்கு சபையின் சார்பாக அவர்களின் சேவைகளை பாராட்டி கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா அவர்களும், பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும் மற்றும் தலைவர் கலீபா சஹாபுதீன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கொளரவப்படுத்தினார்கள்.

மன்னார்குடி ஷேக்மைதீன் ,பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா,சையதுஅலி மௌலானா,கலீபா சஹாபுதீன் அனைவரும் உரையாற்றினார்கள்.

தௌஃபா பைத்துடன் இனிதே இந்த மாதக்கூட்டம் நிறைவுப் பெற்றது.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

துவக்கத்தின் நிறைவுவிழா

சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் புனித மஜ்லிஸ் ஏப்ரல் 10ம் தேதி துவாவுடன் நிறைவுப் பெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பல நாட்டு இஸ்லாமியர்கள் சங்கைமிகு மௌலானா அவர்களை சந்தித்து துவா பெற்றார்கள்.
முரிதீன்கள் மற்றும் அஹ்பாபுகள் பலரும் பத்துதினங்களாக நடைப்பெற்ற இன்நிகழ்ச்சியில் கலந்து ஞான சந்தேகங்களை கேட்டு தங்களை தெளிவுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

சுங்கைமிகு மௌலானா அவர்கள் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு துபாயிலிருந்து குவைத் புறப்பட்டார்கள்.

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் சங்கைமிகு மௌலானா அவர்களை வரவேற்று தங்களின் மகிழ்ச்சியினை தெரியப்படுத்தினார்கள்.

துபாயில் நடைப்பெற்ற மஜ்லிஸ்சிற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றி தெரியபடுத்தி கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் வீடியோ கிளீப் மற்றும் ஆடியோ மற்றும் உபநியாசங்கள் வெளியீடப்படும்.

புகைப்படங்கள் -மதுக்கூர் ராஜாமுஹம்மது,
கடலூர் -கடலூர் முஹம்மது காசிம்,
ஆடியோ -அதிரை அப்துல்ரஹ்மான்,
வீடியோ -திண்டுக்கல் முஹைய்யத்தீன்,
ஆடியோ ரிக்காடிங் -மதுக்கூர் அமீர்அலி.

இவ்விழா சிறப்பாக அமைவதற்கு உதவியானவர்கள்
நிர்வாகத் தலைவர் சஹாபுதீன், முஹம்மது யூசுப், ஷாஜகான்அப்பாஸ், காதர்ஷாகிப், கிளியனூர் இஸ்மத், அதிரை ஷரபுத்தீன், மதுக்கூர் பாடகர் முஹம்மது தாவுது, சிராஜ்தீன், சாகுல்ஹமீது, அபுசாலிஹ், மற்றும் அக்பர்ஷாஜகான், மன்னார்குடி ஷேக்தாவுது, ஷேக்மைதீன், திருமக்கோட்டை பக்ருதீன், தாஜ்தீன், அலாவுதீன், வாவா முஹம்மது, அபுல்பஸர், அபுதாபி ஜெகபர்சாதிக்

மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்த
முஹம்மது அமீன்,
நிசார்,
யூசுப்தீன்,

மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி




கடந்த வெள்ளிக்கிழமை சுபுஹ் தொழுகைக்குப்பின் புர்தா ஷரீப் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஓதப்பட்டது. அதிகாலை 6.30 மணிக்கு சங்கைமிகு மௌலானா அவர்கள் சபைக்கு விஜயம் செய்தார்கள்.














சங்கைமிகு மௌலானாவை ஆர்வத்துடன் காணவந்த பாக்கிஸ்தான் நாட்டைச்சார்ந்த சகோதரர்.

கண்ணியமிக்க கலீபா முஹம்மதுகாலிது


கண்ணியமிக்க கலீபா முஹம்மதுகாலிது அவர்கள் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் முப்பது ஆண்டுகளாக செயல்பட்டுவந்தாரகள்;. 10.09.2009 அன்று அமீரக வாழ்க்கையை முடித்துக் கொண்டு தாயகம் நோக்கி பயணம் மேற்கொள்ள இருக்கிறாரகள்.

இவர் சிறுவயதில் பர்மா சென்று கல்வி பயின்றவர். பல நூல்களைப் படித்தவர் ஆங்கில புலமையில் கைதேர்ந்தவர்கள். பல சகோதரர்கள் இவர்களிடம் ஆங்கிலம் பயின்று இன்று வங்கிகளிலும் அலுவலகங்களிலும் பொறுப்பான பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகத்துவஞானத்தின் மீது அதிகமான தேட்டம் கொண்டவர். பல குருமார்களைத்தேடி அலைந்து தேடலின் முடிவை இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களிடம் கண்டு தன்னை முழுமையாக ஒப்படைத்தவர்கள்.

இவரை நடமாடும் நூலகம் என்றும் பல்கலைக்கழகம் என்றும் அடைமொழியுடன் அழைப்பதுண்டு.
எந்த ஒரு சப்ஜக்டைப்பற்றி கேட்டாலும் அதைக்கற்றி மிக துல்லியமாக விளக்ககூடியவரகள்;.
ஞானசந்தேககங்களுக்கு ஞானியைப்போன்று பதிலலிக்கக்கூடியவர். இவர் நடமாடும் ஞானியும் ஆவார்.
தான் என்ற அகந்தையோ கர்வமோ துளியும் இல்லாத மனிதர். இவர்களிடம் தன்னடக்கமும் குழந்தைத்தனமான பாசமும் மிகைத்து அதை எல்லோரிடத்திலும் காட்டக்கூடியவர்கள்.எளிமைமிக்கவர்கள்.
பிறருக்கு ஞானத்தை எத்திவைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதற்காகவேண்டி தன்னுடைய ஓய்வுநேரத்தை தியாகம் செய்தவர்.

இவரின் விளக்கத்தை கொண்டு பலர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். அதில் நானும் ஒருவன்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வஹ்ஹாபியிசத்தில் மிக ஈர்ப்புக் கொண்டு அதில் தீவிரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த என்னை கிளியனூர் முஹம்மது சபிர் அவர்கள் கண்ணியத்திற்குரிய கலிபா காலிது அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அச்சமயம் பல தர்க்கங்களை அவர்களோடு நான் செய்திருக்கிறேன்.

திருக்குர்ஆன் ஹதீஸ்களைக் கொண்டு பல வினாக்களை அவர்களிடம் வைத்து வினவியபோது மிக அறிவிப்பூர்வமான பதில்களை எடுத்துக் கூறி ஞான விளக்கங்களை எனக்களித்துள்ளார்கள். சுமார் இரண்டு ஆண்டுகளாய் அவர்களிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
என்னைப்போன்ற பல ஞான வேட்கை உள்ளவர்களுக்கு இன்றளவும் ஞான விளக்கங்களை அளித்துக் கொண்டு வருபவர்.

இவர்களின் அமீரக வாழ்க்கையை முடித்துக் கொண்டு தாயகம் செல்ல இருப்பதையொட்டி செப்டம்பர் 8ம்தேதி மதிப்பிற்குரிய ஆன்மீக சகோதரர் வாவாமுஹம்மது அவர்களின் பத்ருஇல்லத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த விழாவில் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா, முஹம்மது யூசுப், முஹம்மது தாவூது, சாகுல்ஹமீது ,அன்வர்உசேன் ,ஹாஜாஅலாவுதீன் ,சிராஜ்தீன், அப்துல்ஹகது மற்றும் பலர் கலந்து சிறப்பித்தர்கள்.இந்த விழாவை மிகச்சிறப்பாக வாவாமுஹம்மது செய்திருந்தார்..

கண்ணியமிக்க கலிபா காலிது அவர்களின் சேவையை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் தாயகம் சென்று அவர்களின் உடல்நிலையை நன்றாக கவனித்து சுகம்பெற்று மீண்டும் துபாய் வரவேண்டும் என்று பலரும் அவாகொண்டுள்ளார்கள்.
மீண்டும் துபாய் வரவேண்டும் என்று சங்கைமிக்க ஷேய்குனா அவர்களும் திருவாய் மலந்துள்ளார்கள்.

எல்லாவளமும் பெற்று உடல்சுகத்துடன் நீடோடி வாழ துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் அனைவரும் துவாச் செய்கிறோம்.