This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label தேரிழந்தூர் தாஜிதீன். Show all posts
Showing posts with label தேரிழந்தூர் தாஜிதீன். Show all posts

கவிஞர்களை கௌரவித்த சிறப்பு இசை நிகழ்ச்சி

துபாய் நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சிறப்புமிகு கவிஞர்களான கலீபா ஆலிம் புலவர் திண்டுக்கல் எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்களையும் கவிஞர் ஹாபிழ் கொள்ளுமேடு பாரூக் பஜ்லி அவர்களையும் கௌரவிக்கும் முகமாக தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜீத்தீன் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பல அமைப்புகளிலிருந்தும் பலரும் வருகைப்புரிந்து இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற உறுதுணை புரிந்தனர்.

நமது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையிலிருந்து ஆன்மீகச் சகோதரர்கள் பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்புமிகு கவிஞர்களை கௌரவிக்க கண்ணியமிக்க லால்பேட்டை நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் வருகைப்புரிந்து கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிந்தித்துபாரு புதிய இஸ்லாமிய தத்துவப்பாடல்கள் அடங்கிய ஒலி குருந்தகடு வெளியிடப்பட்டது.















கலீபா ஏ.பி.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு கண்ணியமிக்க நூருல்லாஹ் பைஜி நூரானிஷா அவர்கள் நினைவு பரிசு வழங்குகிறார்கள்


P.P ஜுவல்லரியின் மேலாளர் கீழக்கரை M.E.S.அபுதாஹிர் பைஜிக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்

கீழக்கரை கவிஞர் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்.








புகைப்படங்கள் - அஹ்மது ஹிம்தாதுல்லாஹ் முதுவை

வீடியோ காட்சி

தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பாடுகிறார் மற்றும் கிளியனூர் இஸ்மத்தின் அறிமுக உரை வீடியோ காட்சி

துபை கலீபா இல்லத்தில் மௌலுது நிகழ்ச்சி



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை 11/02/2011 காலை 9.30 மணிக்கு கண்மணி நாயகம் ரசூல் (ஸல் அலை) அவர்களின் புகழ்பா சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது.

மௌலுது ஷரீப் ஓதியப்பின்னர் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமையில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.

மதுக்கூர் பாடகர் தாவுது அவர்கள் நபிப்புகழ்பாடலைப் பாடினார்.
மதுக்கூர் கவிஞர் இஸ்மாயில் கவிதையை அரங்கேற்றினார்.
தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜ்தீன் பைஜி அவர்கள் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் அன்புத் தாயாரைப்பற்றிய பாடலை அரங்கேற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காயல்பட்டிணம் மவ்லவி அஹமது அப்துல்காதிர் மஹ்ழரி அவர்கள் கலந்து மீலாதுவிழாவின் சிறப்புகளைப் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். மவ்லவி உசேன் மக்கீ அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

ஜூம்மாஹ் தொழுகக்குப்பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.






























புகைப்படங்கள் மற்றும் ஆடியோ
அதிரை அப்துல்ரஹ்மான்