This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label மறைஞானப் பேழை. Show all posts
Showing posts with label மறைஞானப் பேழை. Show all posts

மிஉராஜ் இல்லாதவருக்கு தொழுகையில்லை

அல்லாஹ்த்தாஅலா சொன்னான்

மிஉராஜானது நானல்லாத சர்வ வஸ்துக்களையும் விட்டு அகன்று விடுதலாகும். மிஉராஜின் பூரணமானது பார்வை மழுங்கவில்லை இன்னம் அது மட்டைக் கடக்கவுமில்லை என்ற குர்ஆனிய திருவாக்கியத்தின் கருத்தாகும்.

விளக்கம்-

மிஉராஜ் என்பது இறைவனல்லாத மற்றெல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது. இறைவனிலேயே தனது நாட்டத்தைச் செலுத்தி அவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவுமொன்றே அதற்கும் எனக்கும் பிரிவுமில்லை. நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய் இறையில் அருப்பணிப்பதே மிஉராஜ் எனும் உயர்ச்சியாகும். இந்த மிஉராஜின் முழுமை இறைவனை முழுமையாய் பார்வை மழுங்காமற் காண்டலாகும்.

பார்வை மழுங்கலென்பது இறைவனைப் பிரிவு பிரிவாய் சிறிதுசிறிதாய் எண்ணி நானும் நீயும் வேறு எனும்நிலையில் எண்ணத்தைச் சின்னபின்னப்படுத்தி ஒரு பொருளைக் கூறுபடுத்துவது போல் இறைவனைக் கூறுபடுத்திச் சித்திரவதை செய்யும் நிலையாகும். இந்த உயர்ச்சியின் நிலை மட்டையும் கடக்காது. அனைத்தும் நானே எனும் மன்சூருல் ஹல்லாஜ்(ரலி) அவர்களின் உன்னத நிலையை அடைவதாகும்.

அனைத்தும் நானே நானே ஹக்கு எனும் நிலையை மட்டைக்கடக்காத உண்மை நிலையாகும்.
நானே இறைவன் என்று மமதையுடன் பிர்அவுன் கூறிவந்த நிலைமையே மட்டைக் கடந்த நிலையாகும். எனவே இதில் இரண்டு நிலையுண்டு ஒரு நிலை ஹக்கையே அறியாது மமதைக் கொண்டு தானே இறைவன் என்று கூறிக் கொண்டது.

இரண்டாவது நிலை அனைத்தும் நானே என்று இறைவனை அறிந்து பூரணமாய் இரண்டறக் கலந்து மாறா இன்பமடையும் நிலை. அறியாத மூடர்கள் இறைவனைக் கூறுபோட்ட இறை தண்டனையை அடையும் நிலையையும் இறையின்பத்தை அடையும் நிலையையும் இரண்டாகக் கலந்து காண்பதோடு உண்மைக்கு மாறாகவும் பேசித்திரிவது பித்துபிடித்த மந்த நிலையாகும்.

கௌதுல் அஉளமே! என்னிடத்தில் மிஉராஜ் இல்லாதவனுக்கு தொழுகையே இல்லை.
விளக்கம்- தொழுகை என்பது எது என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழுகையுடையோரின் தொழுகையே மிஉராஜாகும். அல்லாஹ் இடத்தில் மிஉராஜ் இல்லாதோருக்கு தொழுகையில்லை. எவன் மிஉராஜை மறுத்தானோ அவனுக்கு இறையிடத்துத் தொழுகையுமில்லை. எனவே எம் மூரீதுகள் மிஉராஜைவுடையவர்களாக வாழ்வார்களாக ஆமீன்.!

-மறைஞானப்பேழை (2011 சூன்)
ரிஸாலா கௌதிய்யா நூலிலிருந்து…

மறை ஞானப்பேழை - ஜூன் இதழ்

அஸ்ஸலாமு அலைக்கும்!


லேட்டஸ்ட், மறை ஞானப்பேழை - ஜூன் இதழ் http://emsabai.com - இல் வெளியிட்டுள்ளோம். தங்கள் ப்லாக்-கில் அதை பற்றி அறிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இதுவரை 5 மாத இதழ்கள் வெளியிடபட்டுள்ளது (Feb 2010 to June 2010).


வஸ்ஸலாம்!


ஹைதர் நிஜாம்

ஆன்லைனில் மறைஞானப்பேழை


இலங்கை வெலிகமையில் சங்கைமிகு இமாம் கலீல்அவுன் மௌலானா அவர்களின் முன்னிலையில் அனைத்துசபையின் மறைஞானப்பேழை பத்திரிக்கையின் ஆர்வளர்கள் ஒன்றுக்கூடி மறைஞானப்பேழை மாத இதழை ஆன்லைனில் வெளியீடுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டது.

பலநாட்டின் சபை சகோதரர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் வேலைபாடுகளை சகோதரர் ஹைதர் நிஜாம் சென்னையிலிருந்து இணையதளத்தை உருவாக்கி வடிவமைத்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து மறைஞானப்பேழை மாத இதழ் ஆன்லைனிலிலும் வெளிவரும் என்பதை சகோதரர் ஹைதர் நிஜாம் உறுதி கூறி உள்ளார். அவருடைய இந்த முழு முயற்சிக்கு அனைத்து சபை அங்கத்தினர்களும் வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றோம்.

இந்த இணையதளத்தில் புகைப்படங்கள், மற்றும் கட்டுரைகள், விழாக்கள், வலைதளங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் உங்கள் ஆலோசனைகளையும் வழங்கி இணையதளம் சிறப்பாக அமைவதற்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இணையதளத்தின் முகவரி http://www.emsabai.com/

அறியாத மக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒருவர் தன் உறவுகள் மற்றும் அனைவரையும் விட நேசம் வைக்காதவரை- உண்மை விசுவாசியாக முடியாது.

அதேபோல அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் மீது உள்ளன்பு கொள்ள வேண்டும் என்பதை “நபியே! என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள்!”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களுக்கு அஹ்லபைத்துகளைத் தெரியாது. அண்ணலாரின் வாரிசுகளைப் புரியாது.

அஹ்லபைத்துக்கள் மீது பிரியம் வைக்காமலிருப்பது கூட ஏதோ அறியாத நிலை என எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் மீது வெறுப்புக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது என்றால் அது வியப்பான செய்தியாகத்தான் தெரியும்.

ஆனால் உண்மை அதுதான்! முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) . ஏர்வாடி இப்றாஹிம் பாதுஷா (ரலி) நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா (ரலி) திருச்சி தப்லே ஆலம் பாதுஷா (ரலி) இன்னும் இவர்கள் போன்ற இறைநேசர்களான அவ்லியாக்களை முஸ்லிம்களில் ஒரு சிலர் தூற்றுகின்றனர். பெரும்பாலானோர் அதை ஆமோதிப்பதுபோல அமைதியாக இருந்து அவ்லியாக்கள் மீது உள்@ர ஒரு வெறுப்பை புதைத்து வைத்திருக்கின்றனர்.

இந்த அவ்லியாக்களெல்லாம் யார் தெரியுமா? அஹ்லபைத்துகள் என்னும் நபிகுல வாரிசுகள்.

அவ்லியாக்களை ஏசுறோம் என்ற பெயரில் அஹ்லபைத்துகளை ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வோ அவர்களை நேசிப்பது கடமை என வலியுறுத்தி இருக்க அவர்கள் மீது கோபம் கொள்வது அவர்களை வெறுப்பது போன்ற நிலை முஸ்லிம்கள் செய்யக் கூடிய செயலா? ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது? முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா? என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழுகையின் உள்ளும் அல்லாகும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மதின் இறiவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக! ஏன தாம் சொல்வது இன்னதென அறியாமலே கூறும் சமுதாயம் தொழுகைக்கு உள்ளே அவர்களை நினைத்து புகழ்பாடுவதுபோல தொழுகைக்கு வெளியேயும் அவர்களை நினைப்பது-புகழ்வது அவர்களின் வாழ்க்கைமூலம் பாடம் பெறுவது சிர்க் அல்ல. தவறல்ல என்பதை அறிந்து விளங்கவேண்டும்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது அஹ்லபைத்துகளாகிய வாரிசுகள். இந்த இரண்டையும் பற்றி நிற்கும் வரை நீங்கள் வழிமாறிப்போக மாட்டிர்கள்!

-தலையங்கம் மறைஞானப் பேழை

மக்காவில் அடிமை மதீனாவில் காதலர்

இதயமே!
எம்பெருமானை நேசி!
அவர்களைப்பற்றியே
எப்போதும் யோசி!

அண்ணலை நேசிக்காத நெஞ்சம்
துடிப்பதை விட வெடிப்பதேமேல்!
அவர்களின் நேசம் நிரம்பாத ஈமான்
கஃபா இல்லாத மக்கா போன்றது!
ஆயத்துகள் இல்லாத குர்ஆன் போன்றது!
ஸஜ்தா இல்லாத தொழுகை போன்றது
இரசூலை நேசிக்காமல்
இறைவனுக்கு மட்டும் ஸஜ்தா செய்து
கொண்டிருந்தால்
போதும் என நினைக்காதே!
சற்றுயோசித்தால்- நீ யாருக்கு
ஸஜ்தா செய்து கொண்டிருக்கின்றாய்
என்பது புரியும்!

ஆமீன் சொல்வதால் மட்டும்
மூமினாக முடியுமா?-நீ
உன்னை-மனைவி-தாய்-எனும்
பெண்ணை
குழந்தை-தந்தை எனும் கண்ணை
அனைத்தையும் விட அவர்களை
நேசித்தால்தான்
மூமின் எனும் ஹக்மார்க் முத்திரை
கிடைக்கும்!

தஸ்பீஹ்சொல்வதில் மட்டும்
இன்பம் காண்கிறாயே!- இறைவன்
ஸலவாத்து கூறிக்கொண்டிருப்பதை
மறந்து போனாயா?

இறைவனின் சந்நிதானத்திற்கு
நீ மட்டும்- நாயகமில்லாமல்
சென்றுவிடலாம் எனும் தலைக்கனமா?

சிலருக்கு
மக்கா சென்று விட்டு மதீனா செல்லாமல்
திரும்பிவர யோசனை!
வரலாற்றில்-மதினாவில்
அபீஅய்யுப் அன்சாரி(ரலி)அவர்களின்
வீட்டையும்
மஸ்ஜிதுன் னபவீயின் இடத்தையும்
ஒர் ஒட்டகை தானாகக் கண்டு நின்றதே!
உனக்கு
ஒட்டகையின் உணர்வும் ஒட்டிப்போனதோ!

மூமின்களே-நீங்கள்
மக்காவில் அடிமையாக நிற்கின்றீர்கள்
மதீனாவில்-நாயகக்
காதலர்களாக பதவி உயர்வு
பெறுகின்றீர்கள்.
இறைவன்
நாயகத்தைக் காதலிக்கும்
அடிமைகளையே
விரும்புகின்றான்!

- ஆலிம் புலவர்
நன்றி-மறைஞானப் பேழை

அரியாசனம் யாருக்கு?

லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மதுற் றசூலுல்லாஹ் என்ற திருக்கலிமா இஸ்லாமிய மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஆணிவேராக இருக்கின்றது.இறைவனைத் தவிர வேறு இறையில்லை.முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பது எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்று.
இரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றிலே நாம் படித்துள்ளோம்.

இஸ்லாத்தை பூரணமாக்கி இகத்தைக் காக்க வந்த ஏந்தல் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இறைவன் என்னும் சொல்லைத் தானே கேட்டிருக்கிறோம். அந்த சொல்லுக்குத் தானே அச்சப்படுகிறோம். அப்படி என்றால் இறைவன் யார்? என்ற கேள்வி இதயங்களை குடைந்து கொண்டிருந்தாலும் இதைப்பற்றி ஆராயக் கூடாது என்று சிலர் கூறுவதைக் கேட்டு வெறுமனே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போர் அனேகர். ஆனால் சிலர் மட்டும் அந்த உண்மையை அறிய ஆவலாகவே உள்ளனர். அதை யாரிடம் கற்பது என்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த இறை நாடிய சிலருக்கு மட்டும் தன்னை அறிவிக்கக் கூடிய நல்லவர்களைக் காட்டித் தருகிறான்.

இந்த இறைத்தேட்டம் என்னில் எழுந்தபோது தாஹிர் பாவா அவர்களின் “சுயம் பிரகாசம்” எனும் நூல் என் கைக்கு கிடைத்தது. அதில் பத்தாவது ஜபம் என்ற ஒரு தலைப்பில் ஒருபக்கத்தில் சில வரிகள் இருந்தன. அதைப் படித்தபோது அது இறைவனைப் பற்றிய சில உண்மைகளை உணர்த்துவது போல் இருந்தன. ஆனாலும் அதன் முழு உண்மை என்னவென்று அறிய ஆவல் ஏற்பட்டபோது எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வழியில் வந்த நம் செய்கு நாயகம் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்களின் ஞான வெளிப்பாடான “நான”; எனும் பாடலைப் படிக்கும் பேறு பெற்றேன். அது மெய்யாகவே இறைவனைப் பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தை அளிப்பது போலிருந்தது. அவர்களிடமே ஞானத்தை அறிய வேண்டும். அதுவே பரிபூரணமான தெளிவை நமக்கு அளிக்கும் என்னும் எண்ணத்தில் அவர்களின் இந்திய வருகைக்காக காத்து இருந்தேன். அந்த நன்னாள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத பொன்னாள்.

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் திருச்சியில் யாசீன் மன்ஸிலுக்கு வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டு நானும் என் நண்பர்களும் அங்கு சென்றோம். உள்ளே முரீதீன்கள் கூட்டம் நடக்க காத்திருந்தனர். நாங்கள் கூட்டம் முடிந்ததும் உள்ளே செல்ல எத்தனித்தோம். அப்போது ஒரு ரம்மியமான குரல் யாரிடமோ கூறிக் கொண்டிருந்தது என் காதில் கேட்டது.

ஹக்கை அடைய விரும்புபவர்கள் மட்டும் நம்மிடம் வாருங்கள். வேறு எதையும் நாடி நம்மிடம் வரவேண்டாம். ஹக் நாடினால் அனைத்தையும் தரும். இந்தக் குரல் நமது சங்கைக்குரிய செய்கு பிரான் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களிடமிருந்து முதல்முதலில் கேட்ட ஞானமொழியே அதுதான்.

ஒரு செய்கிடம் ஒரு முரீது எதை நாடிச் செல்லவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த ஆன்மீக மொழி அது. பறவையை வேட்டையாடும் வேடனுக்கு அம்பு எய்ய வேண்டிய பறவையுடைய உடலின் அந்தப் பாகம் மட்டும் தெரிய வேண்டும். அதைப்போன்று ஹக்கை அடைதல் ஒன்று மட்டும் முரீதின் இலட்சியமாக இருக்க வெண்டும். அதை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். ஹக்கின் நாட்டப்படி பெற வேண்டிய அனைத்தையும் பெற்றார்கள். வேறு விஷயங்களை நாடிச் சென்றவர்கள் அதைப் பெற்றார்கள். எதைப் பெற வேண்டுமோ அதை இழந்தார்கள்.

கடலின் மேற்பரப்பின் அலைகளைக் கண்டு பயந்தவர்களுக்கு கடலின் உள்ளிருக்கும் விலை மதிப்பில்லா பொக்கிஷங்களைப் பெறமுடியாது. சிறிய விஷயங்களை அறிந்து கொண்டு தான் முழுமையும் அறிந்ததாக எண்ணுபவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை அறிய மாட்டார்கள்.

மனதை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள். மனதை காற்றுக்கும் ஒப்பிடுவார்கள். மனம் அங்கும் இங்கும் அசைந்து கொண்டே இருக்கும். அது தாவிக் கொண்டிருக்கும். தனது இச்சைக்குத் தக்கவாறு ஆடிக் கொண்டிருக்கும் தனது இச்சைகளை எல்லாம் மனசாட்சி எனக் கருதுபவரும் உண்டு. தன் மன இச்சைகளை அவர்கள் மனசாட்சி என எண்ணி அதற்கு மாறாக தான் நடக்கவில்லை என்று ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு தவறான வழிகளில் செல்வதும் உண்டு. ஆனால் தான் சரியாகவே நடப்பதாகவும் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாகவும் எண்ணுவதும் உண்டு. தனது மன இச்சைகளையே மனசாட்சியாக தன் நாயனாக கருதி வாழ்பவர்களும் உண்டு.

ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஸஜ்தா செய்யச் சொல்லும்போது தன் மனசாட்சிப்படி தான் சரியாக நடப்பதாகவே எண்ணி அகம்பாவத்துடன் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய அஜாஜீல் (சைத்தான்) மறுக்கிறான். மனசாட்சி மனசாட்சி என தம்பட்டம் அடிப்பவர்கள் அஜாஜீலின் கூற்று சரியானது என்று தானே எண்ணுவார்கள்? அவன் கேட்ட கேள்வியோ அவன் சொன்ன பதிலோ சரியானது போலத்தான் தோன்றும் ? ஏனெனில் இவர்கள் நினைக்கும் அறிவின்படியும் மனசாட்சியின்படியும் அது சரிதானே. பிறகு ஏன் அல்லாஹ் அஜாஜீலை முனிந்தான்- சபித்தான்? அவன் ஈமானை இழந்த காரணத்தால் இறைவனால் சபிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டான். அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்திருப்பானே? அல்லாஹ் எதைக் கூறினாலும் அது உண்மை என்று ஏற்று இருப்பானே? இறைவனைவிட தான் அதிக அறிவு பெற்றிருப்பதாக நினைத்ததால்தானே அவன் இறையுடன் தர்க்கம் செய்தான்? மாறு செய்தான். இறைவனுக்கு எதிராக கியாம பரியந்தம் போரிடத் துணிந்தான் ? இந்த மன இச்சைகளை நீங்கள் உங்கள் நாயகனாக கருதுகிறீர்களா?

மனித மனம் என்பது ஓர் இருக்கை போன்றது. அதில் யார் இருக்கிறார்களோ அதைப் பொருத்துத்தான் அந்த மனிதன் இயக்கப்படுகிறான். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் “குலூபுல் முஃமினீன அர்ஷ{ல்லாஹ”; விசுவாசிகளின் மனங்களே அல்லாஹ்வின் அர்ஷ் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். மனமென்ற இருக்கையில் ஈமான் முழுமையாக இருந்தால் அது அல்லாஹ்வுடைய இருக்கையாக அமைந்துவிடும். ஒருவன் தன் மனம்போனபடி மனோ இச்சைகளை அதில் வைத்தால் அது ஷைத்தானுடைய இருக்கையாக அமைந்துவிடும் அதனால்தான் அல்லாஹ{ ஹாளிர் அல்லாஹ{ நாளிர் அல்லாஹ{ ஷாஹித் என்று மகான்கள் திக்ரு செய்கின்றனர். மனதில் இறைவன் பிரசன்னமானால் அவனே நோட்டமிடுபவனாகவும் அவனே சாட்சியாளனாகவும் அமைந்து விடுவான். மனதில் ஒருவன் தன்னை அமர்த்திவிட்டால் சுயநல ஆட்டம் அங்கு ஆக்கிரமித்துக் கொள்ளும். அவனுடைய மனோ இச்சைகளே அவனுக்கு நாயனாகத் தோன்றும். சைத்தான் தன் ஆதிக்கத்தை அரசாட்சியைத் தொடங்கி விடுவான்.

காமிலானா செய்கு இல்லாதவனுக்கு சைத்தானே செய்காக இருக்கும் என்று அபாயஜீது பிஸ்தாமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த மொழியிலிருந்து நாம் என்ன விளங்கிக் கொள்கிறோம்? மனமென்னும் இருக்கையில் அல்லாஹ் அமர வேண்டுமென்றால் அதற்கு காமிலான செய்கு அவசியம். இல்லையெனில் சைத்தானே அமருவான். அதேபோல சைத்தானை மனோ இச்சைகளை உங்கள் குருவாகக் கொள்ள நினைக்கிறீர்களா? குரங்கினைப் போல கிளைக்குக் கிளை தாவ நினைக்கிறீர்களா ? அல்லது ஈமானைக் கொண்டு மனதை திடப்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்ந்து அல்லாஹ்வைத் தம் மனதிலே (அர்ஷிலே) வைத்திருக்கக்கூடிய செய்கினைக் கொண்டு (ஈமான்) விசுவாசம் கொண்டு உங்கள் இதயங்களையும் அல்லாஹ்வின் அர்ஷாக்க விரும்புகிறீர்களா?

காமிலான செய்குமார்கள் இறையின் பொருத்தத்தைக் கொண்டவர்கள். ரசூல் (ஸல்) அவர்களுடைய குணங்களைக் கொண்டும் குணம் பெற்றவர்கள். குணங்களின் முழுமையத் தன்னகத்தே கொண்டவர்கள். அவர்கள் அப்படி இருப்பார்கள். இப்படி இருப்பார்கள் என்றும் தங்கள் கற்பனைக்குத் தக்கவாறு அவர்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணுபவர்கள் ஒருபொழுதும் செய்கைக் கண்டு கொள்ள முடியாது. அவர்களுடைய குணங்களுக்குத் தக்கவாறு தன்னை தாற்றிக் கொள்பவனே உண்மையான முரீதாவான். காலத்தின் அதிபராக விளங்கிய முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் கோபம் வராதவன் கழுதை கோபத்தை அடக்காதவன் முட்டாள் என்று கூறுகிறார்கள். ஆனால் நம்மில் சிலரோ செய்கு என்றால் கழுதையைப் போன்று பொறுமையாக இருப்பவர்கள் தாம் செய்கு என்று கருதுகிறார்கள். அது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது.

தண்டிக்க வேண்டிய விஷயத்தில் மன்னிப்பதும் மன்னிக்க வேண்டிய விஷயத்தில் தண்டிப்பதும் மோசமானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரலைக் கடித்த ஹிந்தாவை மன்னித்த பெருமானார் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் அனேகர் வேண்டியும் திருடிய ஒரு பெண்ணின் கையைத் துண்டிக்க ஆணையிட்டார்கள். எதை எதை எவ்வாறு கையாளுவது என்பது செய்குமார்கள் நன்கறிவார்கள். நம்முடைய விருப்பத்திற்குத் தக்கவாறு அவர்கள் கையாள வேண்டும் என்று எண்ணுவது அப்துல்லா இப்னு உபை என்ற முனாபிக் பெருமானார் (ஸல்) அவர்கள் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணியது போலாகும். எந்த விஷயத்தைப் பற்றியும் ஸஹாபாக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டாலும் இறையால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் ரசூலுமே அறிவார்கள் என்று தான் கூறினார்கள். தவிர தாங்கள் ஏதோ பெரிய அறிவாளிகள் போல தங்கள் விருப்பத்திற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுமில்லை. கூறியதுமில்லை. பெருமானாரிடம் ஒரு விஷயத்தில் அல்லாஹ் அறிவான் என்று கூறிய ஸஹாபமக்களையே பெருமானார் (ஸல்) அவர்கள் விலக்கி வைத்த வரலாறும் உண்டு.

தவ்ர் குகையிலே சிலந்தி வலையைக் கொண்டு எதிரிகளை முறியடித்த பெருமானார் (ஸல்) அவர்கள் பதுறு போர்க் களத்திலே ஸஹாபாக்களை ஒன்று கூட்டி இறையைத் துதித்து போரிடுகிறார்கள். அது பெருமானார் (ஸல்) அவர்களின் இயலாமையைக் காட்டவில்லை. அது பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியைக் காட்டுகிறது. பெருமானார் (ஸல்) அவர்கள் கரங்களை தன் கரங்களாக இறைவன் கூறுகிறான். அந்தக் கரங்கள் எந்த எதிரிகளையும் வெல்லக் கூடியது. ஆனால் உலக நியதிக்காகவே அவர்கள் போர் வீரர்களையும் போர்க்களத்தையும் நாடினார்கள். இந்த உண்மையை அறிந்தால் பெருமானார் (ஸல்) அவர்களின் வல்லமை நன்கு விளங்கும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் நான் இரண்டினை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது வாரிசுகள் என்றார்கள். அறிவின் கண்ணைக் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கும் அறிஞர்களுக்கு ஒன்று நன்கு விளங்கும். குர்ஆன் அது அசலிலே பெருமானார் (ஸல்) அவர்களாகவே இருக்கிறது. பெருமானார் (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்றாலும் அவர்கள் முழுமையாக பெருமானார் (ஸல்) அவர்களின் அம்சங்கள். ஆகவே புற நிலையிலும் இன்று இஸ்லாத்தைக் காத்து நிற்பது பெருமானார் (ஸல்) அவர்கள்தான். பெருமானார் (ஸல்) அவர்களுடைய அத்தனை நிலைகளும் இந்த இரண்டிற்கும் உள்ளன. இறைவனின் கரங்கள் குர்ஆனுக்கும் உண்டு. பெருமானார் (ஸல்) அவர்களின் புனித வாரிசுகளான அஹ்லபைத்துக்களுக்கும் உண்டு. இதை அறியாதவன் செய்கையும் அறிய முடியாது. செய்குடைய வல்லமையையும் அறிய முடியாது.
இவ்வளவு வல்லமை கொண்ட அஹ்லபைத்துக்களை சாராதவன் தன்னை அஹ்லபைத் எனக் கூறும் ஆஷாடபூதி நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தவன் ஆவான். இறையோடும் போரிட நினைக்கும் ஷைத்தானுக்கு ஒப்பாவான். நற்பிறப்பு பிறக்காதவனாயும் நற்குடியைச் சாராதவனாயும் அவன் இருப்பான். ஆகவே இது விஷயங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அறிவுடனும் நடந்துக் கொள்ளவேண்டும்.

சிறிய விஷயங்களை மிகச் சாதரணமாக விளங்கிக் கொண்டு தன்னை பெரிய ஆலிம் போலவும் ஞான ஆட்சியை விளங்கியது போலவும் பேசுகிறார்கள்.
கொட்டாங்கச்சியின் மூத்திரம் கொசுவிற்கு சமுத்திரம் என்பார்கள். கொசுக்களுக்கு அது சமுத்திரம் தான். ஆனால் ஞானவான்களுக்கு சமுத்திரமே முழங்கால் மட்டம்தான்.


ஞான சமுத்திரமான சங்கைக்குரிய செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஷ{ல் வுஜுது ஜமாலியா செய்யிது கலீல் அவ்ன் நாயகம் அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் பரம்பரையிலே உதித்தவர்கள். அவர்களின் விளக்கங்கள் நமக்கு புத்துயிர் ஊட்டின. ஆம்! நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டோம். அவர்களின் விளக்கங்கள் இறைவனை நமக்கு வெளிப்படுத்தின. எம் பெருமானார் (ஸல்) அவர்களின் உண்மையை நாம் அறிய அறிய அவர்கள் மீது நேசமும் பக்தியும் அதிகரித்துக் கொண்டே சென்றன. அந்த அறிவே குருவின் தத்துவத்தை நமக்குக் காட்டியது. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வேதத்தால் எழுதப்பட்ட இலக்கியம் அண்ணல் நபியின் உயிர் பெற்ற கன்னல் யாஸீனின் குலக்கொழுந்து. அவர்களின் பாதம் தொட்டவர் வேதம் கொண்டார் அவர்களின் பார்வையைப் பெற்றவர் பர நிலை பெற்றார். அவர்கள் காலத்தைக் காட்டிடும் கண்ணாடி. இந்த ஞாலத்தை இயக்கிடும் முன்N;னாடி. அருட்கொடையாய் வந்த அண்ணல் அவரின் அருந்தவத் தூது.

“அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக் கைக்குள் அடக்கி விளையாட வல்லீர் “என்ற குணங்குடி மஸ்தான் சாகிபு (ரலி) அவர்களின் குரு தத்வ உண்மைகள் நமக்குத் தெளிவாயின. சாண் தண்ணீரில் நீச்சல் அடிக்க நினைப்பவர்களுக்கு செய்கு நாயகம் அவர்களின் அருமை புரியாது. ஆற்றல் தெரியாது. அர்ஜுனனை வில்லை எடு என்று கிருஷ்ணன் கூறியது அர்ஜுனன் வில் வித்தையில் வல்லவன் தான் ஏதும் அறியாதவன் என்பதற்காக அல்ல. அர்ஜுனனுக்கு வீரன் என்ற பட்டம் கிடைப்பதற்காகத்தான். கடல் அலைகள் அருகில் வரும்போது காலில் படுகிறது என்பதற்காக கடலே தனக்கு அடிமையாகி விட்டது என்று எண்ணி கடலில் இறங்க நினைப்பவன் கதி என்னவாகும் என்பதை குருவை லேசாக கருதுபவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கற்பு நெறி வழுவியவள் வேசி குருநெறி வழுவியவன் நீசன். துன்னுடைய குருவிற்கு துரோகம் செய்பவன் பிரம்ம ராட்சஷன் ஆகிவிடுவான் என இந்துமதம் கூறுகிறது. சிறுசிறு தவறுக்காகவே ரிஷிகளினால் சபிக்கப்பட்டவர்களை இந்து மத நூல்களில் நாம் நிறையக் காணமுடிகிறது. புpராமணன் எனப் பொய் சொல்லி வில ;வித்தைக் கற்றுக் கொண்டதினால் வள்ளலாக விளங்கிய கர்ணன் ஆபத்து சமயத்தில் கற்ற வித்தை மறந்துவிடும். ஏன பரசுராமனால் சபிக்கப்படுகிறார். கர்ணன் செய்த தர்மம் ஆபத்து சமயங்களில் கை கொடுக்கவில்லை. அவருடைய குரு பரசுராமன் கொடுத்த சாபம் தான் கர்ணனின் உயிருக்கு கேடு விளைவித்தது.

குரு துரோகம் குருவின் சாபம் நிச்சயமாக சக்ராத்துடைய காலத்தில் குரு தந்த உண்மைகள் மறந்து செய்த்தானின் ஊசலாட்டத்திற்கு ஆளாகிக் கேடான முடிவையே கொடுக்கும் என்பது அனைத்து சமயங்களின் கூற்று. பட்டத்தின் நூல் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் நூலை விடவிட பட்டம் மேலே பறந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தூரம் நூல் விடப்படுகிறதோ அவ்வளவு உயரப்பட்டம் மேலே பறக்கும். மேலே பறக்கும் பட்டம் தான் மிக உயரத்தில் இருக்கிறோம் என்றும் பட்டம் விடுபவர் கீழே இருக்கிறார் என்றும் இறுமாந்து இருந்தால் நூல் அறுபடும்போது பட்டத்தின் கதி என்னவாகும்? ஊயரத்திற்கு தக்கவாறு சேதாரம் கூடும் என்று பட்டங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மனைவியும் தானும் ஒரே துணியை மாற்றி மாற்றி தொழும் அளவிற்கு வறுமையில் வாடிய ஸஹாபி ஸஅலபா வுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பெண் ஆட்டினை துவாச் செய்து வழங்கினார்கள். ஆடுகள் பெருகின. மந்தை மந்தையாய்ப் பெருகின. மதீனாவின் எல்லையை விட்டு சென்று ஸஅலபா வெளியில் வசிக்கும் அளவிற்குப் பெருகின. ஜக்காத் முஸ்லிம்களுக்கு விதியானது. ஸஅலபாவிடம் ஜக்காத் கேட்கும் போது ஸஅலபா கொடுக்க மறுத்து தனக்குக் கடமையில்லை என்றார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டபோது ஸஅலபாவிற்கு வந்த கேடே ஸஅலாபாவிற்கு வந்த கேடே என்று மூன்று முறை சபித்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஸஅலபா அதைக் கொடுக்க வந்தபோது பின் வந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) கலீபா உமர் (ரலி) அவர்களும் அதைவாங்க மறுத்ததாக வரலாறு கூறுகிறது. ஸஅலபா என்றாலே குள்ள நரி என்றும் பொருள். ஆம் குள்ளநரிகளுக்கு உலகிற்கே அருட்கொடையாய் வந்த சற்குரு நாயகத்தின் ஆற்றல் எப்படி அறிய முடியும்? ஓர் ஆட்டை மந்தையாக மாற்றியவர்களுக்கு மந்தையை மண்மேடாக மாற்ற அதிக காலம் தேவையில்லை. குருவிடம் முழுமையாக திடமாக அசையா நேசத்தில் இருப்பவனே ரசூல் (ஸல்) அவர்களின் மீது முழு நேசத்துடன் இருப்பான்.

ரசூல் (ஸல்) அவர்கள் மீது முழு நேசத்துடன் இருப்பவனே இறைவனின் நேசத்தில் முற்றிலும் முழ்கி இருப்பான் இறையுடன் இருப்பான் நிறைவடைவான்.!

-கலீபா அட்வகேட் A.N.M.லியாகத்அலி B.Sc;B.L மதுக்கூர்

நன்றி- மறைஞானப்பேழை

ஐயமும் தெளிவும்...2

மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.?

எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோசமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறு விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்த ஒரு கஷ்ட நிலையிலும் சந்தோசப்பட்டால் அவனுக்கு அந்தக் கஷ்டம் நீங்கி சந்தோச நிலை உண்டாகும். இது இயற்கை.
கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(0)

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகி விடுவோமா.?

எல்லாமே ஒன்றான பரிபூரண ஒன்றைப் பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால் ஏகமெனும் நிலை உண்டாகிவிடும்.(அது எவ்வாறெனில்) குதம்பைச் சித்தர் வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயமேதுக்கடி, குதம்பாய் பட்டயமேதுக்கடி- என்று பாடினார்.
வெட்டவெளியை மெய்யாகவைத்துக் கொண்டால் அவனுக்கு எதைப்பற்றிய பிரச்சனையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நினைத்து வருபவன் சில காலங்களில் இதில் சித்தமடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.


- செய்குனா பதில்கள் - மறைஞானப்பேழை

ஐயமும் தெளிவும்

கைர் - ஷர்ரு என்றால் என்ன.?

கைர் - ஷர்ரு இந்த இரண்டும் ஆரம்ப காலமான அல்லாஹ்வுடைய காலத்தில் இருக்கவில்லை. மனிதனாகப் பிறந்த பிறதுதான் லநவ - இடறு எனும் இரண்டும் உருவாகியது. சுpல நன்மைகளை நாம் செய்து கொண்டால் அது நன்மையாக முடியும். கெடுதலைச் செய்து கொண்டால் இடறாக முடியும். மனிதனுடைய வாழ்க்கை சீராக அமையவேண்டும் என்பதற்காக நன்மையும் தீமையும் கற்பிக்கப்பட்டன. இறந்த பிறகும் அசுத்தப்பட்ட ஆத்மா கேடையத்தான் செய்யும். தன்னுடைய நோக்கத்தை அடைய முடியாமல் போன இறந்த ஒரு ஆன்மாவாக இருந்தால் அது அந்தக் கஷ்டநிலையை அடையும். பரிசுத்தமாகவிருந்த ஆத்மாஇறையை அடைந்துவிடும்.

நன்றி - மறைஞானப்பேழை

உலக அமைதிக்கு உண்மை வழி

இன்று உலகத்திற்குத் தேவையானது எது.?

அமைதி .

மனிதர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் பொது அமைதிதேவை. ஆமைதி நிலவாவிட்டால் எவ்வளவு பணம் பொருள் இருந்தும் நிம்மதி இருக்காது.

உலகம் அமைதியாக இருக்க என்ன வழி.?

மக்களுடைய மனதில் ஆழமாக பதித்து கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் அனைத்தும் மனதில் இருந்து நீங்கினால்தான் ஒற்றுமைக்கு வழிபிறக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் அமைதி தானாகவே வந்து விடும். ஆனால் காலகாலமாக இருக்கும் வேற்றுமை உணர்வுகளை நீக்க முடியுமா.?

நிச்சயமாக முடியும்.

அதற்கான வழிகள் என்ன.?
இந்த வேற்றுமை உணர்வுகளை மக்கள் மனதில் இருந்து பிடுங்கி எறியவது எப்படி.? அல்லது இதற்கு என்ன வழி.?

ஆருயிர் செய்கு நாயகம் ஆன்மீக குருநாதர் சங்கைமிகு மகான் ஜமாலிய்யா கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் சீரிய வழியைக் காட்டுகிறார்கள். இவர்களின் ஞானக் கருத்துக்களை மக்கள் உணர்ந்தார்களேயானால் தங்களது மனதில் மிகமிக ஆழமாக பதிந்து பரவிக்கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் சூரியனைக் கண்ட பனிப்போல உருகி மறைந்துவிடும்.
அவர்ளுடைய இறையருட்பா எனும் ஞானக்கவிதை நூலில் இருந்து சில உதாரணங்களைக் காண்போம்.

வேரொடு தண்டு கோடு
வேறிலை பூவுங் காயும்
பூரண மாக நின்ற
போதினில் மரம தாகும்
ஓரிலை யேனு நீங்கின்
உருபெயர் மரமும் நீங்கி
சீரிலை யென்ற நாமம்
சீர்த்திடு முண்மை யாலே.

வேர், தண்டு, இலை, பூ, காய், கனி இவைகள் அனைத்தும் பூரணமாக மரத்தில் இருக்கும்போது அதனைத் தனித்தனியாக நாம் பார்க்க மாட்டோம். அதை மரம் என்று சொல்வோம். அந்த மரத்தில் இருந்து இலையை மட்டும் பிரித்து மரத்திலிருந்து நீக்கிவிட்டால் மரம் என்ற சொல் நீங்கி இலை என்ற நாமத்தை அது பெறுகிறது. அதைப் போலவே

அவ்வகைத் தேயும் கொம்பும்
அருவேர் தண்டு மெல்லாம்
அவ்வுரு மரத்தினின்று
அற்றிடுங் காலை யாவும்
இவ்விகை யாவும் தத்தம்
இடுபெயர் மரமு நீங்கி
ஓவ்வொரு பெயரி னாலே
உணர்த்திடும் தம்மை யாமே.

கோம்பு, இலை, வேர், தண்டு ஆகியவைகளை அம்மரத்திலிருந்து நீக்கும்போது மரம் என்ற பெயர் நீங்கி கொம்பு வேர் தண்டு என்ற தனிப் பெயரையடைகிறது. அதைப்போலவே

சினைபல கொண்ட தாக்கை
சீரதற் குண்டு நாமம்
நினைவினற் கொள்ளு தற்கு
நிறுத்துக மனித னையே
சினைபல யாவுங் கொண்ட
சீருட லுயிரி னோடு
அனையது தானே மாந்தன்
ஆவது காண்க நீரே.!

மனிதனுடைய உடல் பல உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மொத்தத்தில் மனிதன்தான் உடல் என்று சொல்கிறோம்.

பல உறுப்புகளைக் கொண்ட மனிதனுடைய உடலுடன் உயிரும் சேரும்போது மனிதன் என்று சொல்கிறோம் அது போல

தன்னுட னின்று கையைத்
தானே நீக்கி வேறே
பின்னிடம் வைப்ப தாகில்
பிரிந்த வென் கையு மென்றன்
இன்பெயர் கொண்ட தாமோ
இவ்வகை உலகி னிற்கும்
மண்பொருள் யாவு மென்க
மாண்பிணி னான தானேன்.

விளக்கம்.
மனிதனுடைய உடம்பில் இருந்து கையை தனியாக நீக்கி (வெட்டி) தனியாக வைத்து விட்டாலும் அந்தக் கை மனிதனுடைய கை தானே.
இது என்னுடைய கை என்று தான் சொல்வேன். இதைப்போலவே இவ்வுலகத்திலுள்ள சிருஷ்டிப் பொருள்கள் அனைத்தும் தனித்தனியாப் பெயரைக் கொண்டு நிலைத்து நின்றாலும் அவை அனைத்தும் மாபெரும் சக்தியாகிய இறையிலிருந்து வந்தது தான் என்பதை உணரவேண்டும்.

கையது பிரிந்த போது
கொண்டதோர் நாம(ம்)நீங்கி
கையென வான போலும்
கருத்தினி றைந்த வொன்றாம்
மெய்யிறை நின்று வந்த
மேன்மிகு சிருட்டி யெல்லாம்
பெய்ம்முதற் பெயரு நீங்கிப்
பெற்றது வேறு பெயரே.

மனிதனுடைய உடம்பிலிருந்து கையைத் தனியாகப் பிரித்தவுடன் மனிதன் என்ற பெயர் நீங்கி கையென்ற பெயர் பெற்றாலும் கருத்தினில் எங்கும் நிறைந்து ஒன்றாய் விளங்கும் இறையிடமிருந்து வந்த மேன்மைமிக்க சிருஷ்டிகள் எல்லாம் இறை என்ற பெயர் நீங்கி தனித்தனிப் பெயர்களைப் பெற்று நிற்கின்றன.

கரமது பிரிந்த போதும்
மனிதறன் கரம தாகும்
அருமிறை தன்னி னின்று
அற்புத சிருட்டி யெல்லாம்
உருவதிற் பிரிந்த போதும்
உத்தம வொன்றி னின்றாம்
அருவமு முருவ மெல்லாம்
ஆதிய தாகு மம்மே.

மனிதனுடைய உடலிலிருந்து கரத்தைப் பிரிந்த போதும் அது மனிதனின் கரமதாகும். அதைப்போல இறைவனிடமிருந்து தோன்றிய சிருட்டிகளெல்லாம் உருவத்தில் தனித்தனி பெயரைக் கொண்டாலும் அதுஇறையின் அங்கங்களாகும்.
மனிதனின் அருவமான உயிரும் வெளியில் கண்களுக்குத் தோன்றக்கூடிய உடலும் இறைவனின் பகுதிகளாகும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? சிருட்டிப் பொருள்கள் அனைத்தும் இறையிலிருந்து வந்த இறைவனின் பகுதிகள் அங்கங்கள் என்று வைத்துக் கொள்வோமே.!
இக்கருத்தினை உணர்ந்தால் ஜாதி மதம் இனம் மொழி பணக்காரன் ஏழை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றும்.?
வேற்றுமை உணர்வுகள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும். அப்போது ஒருவருக்கொருவர் உண்மையிலேயே பாசம் நேசம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். ஒருவருக்கு கஷ்டம் வந்தால் தனக்கு வந்தது போல நினைத்து உதவிகள் செய்வார்கள்.

ரசூல் (ஸல்)அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து காட்டினார்கள். ஏன்.? இன்றைக்கு நமது சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களும் தங்களின் முரீதுப் பிள்ளைகளோ அல்லது பொது மனிதரோ தங்களது கஷ்டத்தைக் கூறும்போது அதை உளமார பொறுமையாக இருந்து கேட்டு மனமுருகி அல்லாஹ்விடம் துஆச் செய்து அவர்களது துன்பத்தை நீக்குகிறார்கள்.
புத்தர் ஓர் ஆட்டுக்குட்டி நொண்டிச் செல்வதைக் கண்டு மனமுருகி அதைத்தன் தோளில் சுமர்ந்தார்.
சிபிச் சக்கரவர்த்தி புறாவை வேடனிடமிருந்து காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தார்.
வள்ளல் பாரி பரிதவித்துக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்கு தன் தேரை நிறுத்திச் சென்றார்.
ஒரு பெரியார் தங்களது சட்டையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பூனையை விரட்டாமல் அது விழிக்கும்வரை பொறுமையாக இருந்தார்.
வள்ளலார் இராமலிங்க சுவாமி அவர்கள் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடினார். இவைகளெல்லாம் உதாரணங்கள். இதை நாம் கருத்தற்ற செயலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிந்தித்தால்தான் அதன் தாற்பரியம் புரியும்.

இத்தகையசர்கள் மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். தானாகவே எங்கும் இன்பம் பொங்கும். மக்கள் சந்தோசமாகவும் வாழ்வார்கள். அதன் பயனாக உலகமே அமைதியடையும். ஆகவே உண்மையான இறைத் தத்துவத்தை
அறிந்துக் கொண்டால்தான் தான் யார் மற்றவைகளும் எது ?
இறைவனுக்கும் நமக்கும்முள்ள தொடர்பு என்ன வென்பது விளங்கும். இதுதான் உண்மையான ஆன்மீகம். ஆகையால் சங்கைமிகு நாயகம் அவர்களின் உபதேசங்கள் ஞானப் பாக்களை ஆராய்ந்து பயனடைவோமாக…!

நன்றி – எஸ். காஜா நஜ்முத்தீன் ஹக்கியுல் காதிரிய் திண்டுக்கல்

நன்றி – மறைஞானப் பேழை

அவ்ன் நாயகர் 74

1. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருமரபாகிய அஹ்லபைத்தில் 34ஆவது தலைமுறைப் பேரராக உதித்தது.

2. முஹிய்யத்தீன் ஆண்டகை(ரலி) உதித்த பகுதாதில் அவ்ன்நாயகரின் பாட்டனார் ஜமாலிய்யா மௌலானா (ரலி) பிறந்து - வளர்ந்து - வாழ்ந்து - படைத்தளகர்த்தராக பணியாற்றியது.

3. தன்னிகரற்ற மாமேதையாக அறபு மொழிக் களஞ்சியமாக குத்புல்பரீதாக விளங்கிய மாமேதை யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் மகவாகப் பிறந்தது.

4. புகாரி ஷரீபுக்கு அறபு மொழியில் விரிவுரை எழுதிய பல்கலைக் கழகமான தந்தையிடமே அறபுக் கல்வியை - ஆலிமுக்குரிய கலைகளைப் படித்துக் கொண்டது.

5. தந்தையார் தோற்றுவித்த "தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா"வை தொடர்ந்து வழி நடத்தும் காமில் ஷைகாக உயர்ந்தது.

6. தந்தையாரைப் போலவே அறபு மொழியில் பாக்களும் இயற்றுவது.

7. முன்னோர்களிலிருந்து இவர்கள்வரை "விலாயத்" எனும் வலித்துவம் அறுபடாமல் தொடர்ந்து வருவது.

8. தமிழ் ஆங்கிலம் பயின்று இலங்கையில் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து கல்வி அதிகாரியாக உயர்ந்தது.

9. தாங்களே தமிழ் மொழியின் உயர் கல்வியைப் படித்து தமிழ் வித்துவான்களும் திகைக்குமளவு தமிழாற்றலை வளர்த்துக் கொண்டது. தமிழில் அத்துணை பா வகையிலும் இலக்கணப் பிழையின்றி மரபுக் கவிதைகள் யாப்பது.

10. முந்தி வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் போல சித்திரக்கவி வரையும் ஆற்றல் பெற்றிருப்பது.

11. அழகான ஓவியங்கள் வரையும் தனித்திறன் பெற்றிருப்பது.

12. திரு.வி.க. போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்களைப் போல தீந்தமிழில் உரைநடைகள் எழுதுவது.

13. அறபு மொழியிலிருந்து அழகு தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பது.

14. ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர் - இறையருட்பா - மகானந்தாலங்காரமாலை - நாயகர் பன்னிரு பாடல் - அற்புத அகில நாதர் - இறைவலிய் சய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களும் பேரின்பப்பாதை - யாசீன் (ரலி) - தாகிபிரபம் - ஹகாயிகுஸ்ஸபா போன்ற உரைநடை நூற்களும் பர்ஜன்ஜீ மௌலிது - ரிஸாலா கௌதிய்யா - பத்ருமவ்லிது - துற்பத்துல் முர்ஸலா ஆகிய மொழிபெயர்ப்பு நூற்களும் உமர் (ரலி) புராணம் எனும் காவியமும் யாப்பிலக்கண நூல் ஒன்றும் என பதினாறு நூற்கள் எழுதியது இன்னும் பல நூற்கள் எழுதிக் கொண்டிருப்பது. தந்தை யாசீன்நாயகம் அவர்களின் அறபு - அறபுத் தமிழ் அகராதியை பல புதிய சொற்களுடன் பதிப்பிப்பது.

15. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான முரீதுகளின் குருவாக விளங்குவது.

16. முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) - அப்துல் கறீம் ஜீலி (ரலி) போன்ற மாபெரும் ஞானிகள் நிலை நின்று உலகுக்கு எடுத்தோதிய வஹ்தத்துல் வுஜூது கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு உலகுக்கு வெளியாக்குவது.

17. ஷரீஅத்தை முழுமையாகக் கடைப்பிடித்து நடப்பது.

18. சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு உறுதுணையாக இருப்பது.

19. முன்னோர்கள் ஸாலிஹீன்கள் வழி நின்று மௌலிது - பாத்திஹா - ஜியாரத் போன்ற செயல்களை எடுத்து நடத்தி - பிறரையும் நடத்தத் தூண்டுவது.

20. வஹ்ஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது.

21. எத்துணை எதிர்ப்புகள் வந்த போதும் கொண்ட கொள்கை உறுதிமாறாமல் நிலைநின்று எதிரிகளை வெல்வது.

22. ஞானம் என்ற பெயரில் அறிவுக்கொவ்வாத மூடக் கொள்கையைக் கொண்டிருப்பதை தெளிந்த அறிவால் நீக்குவது.

23. எண்ணற்ற கராமத்துகளை நிகழ்த்தியது- நிகழ்த்தி வருவது. முன்னால் பார்த்து அறியாதவர்களின் கனவில் காட்சி தந்து அவர்களுக்கு நேர்வழி காட்டியது.

24. மார்க்க அறிஞர்கள் - உலகியல் அறிவு பெற்ற படித்தவர்கள் - பட்டதாரிகள் டாக்டர்கள் என பலதரப்பட்டவர்களை முரீதாக பெற்றிருப்பது.

25. ஏழை பணக்காரர் படித்தவர் பாமரர் அனைவரையும் சமமாக நடத்துவது.

26. நீண்ட நேரம் உரையாற்றாமல் சுருக்கமாக - எளியமுறையில் ஞானத்தை விளங்க வைப்பது.

27. குர்ஆன் - ஹதீஸில் உள்ளவற்றை மறுக்காமல் அப்படியே நம்பி அவற்றின் உள்ளார்த்தமான தத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது.

28. சூனியம் மலக்கு ஜின் நப்ஸ் ஆலமுல் பர்ஜக் - ரூஹ_ - மலகூத் - ஜபரூத் போன்றவைகளின் உண்மைத் தத்துவத்தை உரைத்தது.

29. குர்ஆன் ஷரீபின் அதிமுக்கியத்துவத்தை விளங்க வைத்தது.

30. ரசூல்(ஸல்) அவர்களின் அந்தரங்கத்தை விளங்க வைத்தது.

31. அவர்களின் நேசத்தை ஆழமாக விளங்கவைப்பது.

32. அல்லாஹ்வை இன்னதென்று விளக்கி குழப்பமில்லாமல் விளங்கவைப்பது.

33. நம் மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு நாம் கேட்காமலே விடைபகர்வது.

34. நாம் வைக்கும் கோரிக்கைகளை அன்போடு கேட்டு ஏற்று அல்லாஹ்வின் அருள் உதவியால் நிறைவேற்றித் தருவது.

35. இறைஞானத்தை மத பேதமின்றி ஒன்றுபட்டு சிந்திக்க ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைத் தோற்றுவித்து முப்பத்து ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வருவது.

36. ஆன்மீகத்திற்கென மறைஞானப் பேழை மாத இதழைத் தொடங்கச் செய்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரச் செய்வது.

37. மார்க்க கல்வி - உலகக் கல்வி தஸவ்வுப் ஆன்மீகக் கல்வி தொழிற்கல்வியைக் கற்றுத் தரும் "மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன்" அறபுக் கல்லூரியை நிறுவி 10 மாணவர்களிலிருந்து இன்று நூறு மாணவர்கள் பயில வசதி செய்து "யாஸீனிய்" எனும் பட்டமும் வழங்கி நிர்வகித்து வருவது.

38. அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவி சமூக சேவை செய்து வருவது.

39. எழுபத்து நான்கு வயதிலும் சற்றும் ஒய்வின்றி பல நாடுகளுக்குச் சென்று வருவதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருப்பது.

40. மிகவும் எளிமையாக உடை அணிவது.

41. தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்வது.

42. விருந்தினர்களை அவர்கள் வியந்து மலைக்கும் வண்ணம் கவனித்து கவுரவிப்பது.

43. பாராட்டு முகஸ்துதி அறவே வெறுப்பது.

44. முரீதுகளுக்கு தாங்கமுடியாத அமல்கள் அவ்ராதுகள் என அதிகச்சுமைகளை சுமத்தாமலிருப்பது.

45. ஏழைகளின் அழைப்பை ஏற்று அவர்களின் இடத்துக்கேசென்று துஆச் செய்து மகிழ்விப்பது.

46. குழந்தைகள்மீது பேரன்பு செலுத்துவது குழந்தைகள் வலிமார்கள் என்று இதுவரை யாரும் சொல்லாத உண்மையை எடுத்துரைத்தது.

47. முரீதுகள் அண்ணன் தம்பிகளைவிட ஆதரவான உறவு உள்ளவர்கள் என அறிவித்தது.

48. பணக்காரர்கள் ஏழைகளின் வீட்டில் பெண் எடுப்பது.

49. உலகை வெறுக்கத் தேவையில்லை. உலகம் இன்னதெனப் புரிந்து நன்கு படித்து - நன்கு சம்பாதித்து சொந்த வீடு வாகனங்கள் என மகிழ்ச்சியாக வாழ்வதோடு ஏழைகளை நன்கு கவனித்து உதவி செய்து உயர்த்த வேண்டும் என உரைத்து அதன்படியே முரீதுகள் வாழச் செய்வது.

50. எந்த நேரத்திலும் மனம் சோர்வடையாமல் எந்த ஓர் இலக்கையும் தைரியமாக அடையஊக்கம் தருவது.

51. அவர்களின் கரம் பிடித்தவர்கள் எவரும் இருந்த நிலையிலிருந்து இறங்காமல் மேலே மேலே முன்னேற அறிவுரை தருவது.

52. முரீதுகளைப் பல ஆபத்துகளிலிருந்து கண்கூடாகக் காப்பாற்றி வருவது.

53. கொடிய நோய்களான தீர்க்க முடியாத நோய்களை நீக்கி சுகவாழ்வை அருள்வது.

54. குழந்தைவரம் கேட்டவர்களுக்கு அவர்கள் நம்பியபடி குழந்தை பாக்கியத்தை பெற வைப்பது.

55. ஞான விளக்கத்தில் முதிர்ந்தவர்களாக தங்கள் முரீதுகளை உயரச்செய்தது.

56. எமக்கு கூட்டம் தேவையில்லை. எம்மிடம் ihஅத் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஞானத்தை விளங்கி இறைவனை அறிந்து வாழ்ந்தாலே போதுமென்பது.

57. உள்ளே மஃரிபத்தும் வெளியே ஷரீஅத்தும் நிறைந்த முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்பது.

58. புதிய சுன்னத் வல் ஜமாஅத் பரிசுத்தமான சமுதாயம் அமைய வேண்டும் என ஆசைப்படுவது.

59. அனைத்து மார்க்கங்களின் அடிப்படையான ஞானத்தைச் சிந்தித்து அதில் மனிதர்கள் ஒன்றுபட்டால் வேற்றுமைகளற்ற ஒற்றுமையான மனித சமுதாயம் உருவாகும் என வழிகாட்டுவது.

60. தொழுகையில் பல எண்ணங்கள் வருகின்றன அதை நீக்க வழி என்னவென்று வினவியபோது அந்த எண்ணமும் ஹக்கே என எண்ணிவிடுவதே அதற்குரிய வழி என்று விடைபகர்வது.

61. ஹக்கும் ஹல்கும் இரும்பும் நெருப்பும் போல என காலம் காலமாக ஞானிகள் கூறிவந்த உதாரணத்திற்கும் மேலாக அது ஒருவகை படித்தரமே ஆனால் உயர்ந்த நிலை கடலும் அலையும்போல இருப்பதுதான் ஹக்கும் ஹல்கும் என தெளிவுபடுத்துவது.

62. எதை எதையோ பாவம் என நினைத்திருக்க தன்னை அறியாதிருப்பதே பாவம் என தெளிவுபடுத்துவது.

63. ஹக்கு வெளியாகி இருக்கும் ஹ+வல்ஆன கமாகான என்பதனை சுருக்கமாக "தானே தன்னில் தானானான்" என சுலோகமாக்கியது.

64. இறைவன் எப்போதும் மறவாமலிருக்க எந்நேரமும் திக்ரு செய்யுங்கள் என சுப்ஹானல்லாஹ் - மாஷா அல்லாஹ் - அல்ஹம்துலில்லாஹ் எனவெல்லாம் வரிசையாக அச்சிட்டுப் பள்ளிகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் அனைத்திலும் ஹக்கைக் காண்பதே ஹக்கை கணந்தோறும் மறவாமல் இருப்பதற்குரிய வழி யென்று நயமாக உரைப்பது.

65. மனிதன் இருக்கும்போது அவனுக்கு அறிவுண்டு எனக்கருத வேண்டாம் இறந்தாலும் அவனுக்கு அறிவுண்டு என அறிவுறுத்துவது.

66. ஹக்கின் ஒன்றிப்பே சுவர்க்கம் என சொர்க்கத்தை அறிமுகம் செய்வது.

67. பொருள்களில் வித்தியாசம் காணாதிருப்பதே ஃபாவில் முதல்படி என ஃபனா நிலையை விபரிப்பது.

68. ரசூல்(ஸல்) அவர்கள் தம் உடலை கவனித்தால் அவர்கள் ஹக்கின் அப்து. ஹக்கின் பகுதிகளில் ஒருபகுதி. அவர்கள் தம் சூக்குமத்தையும் தூலத்தையும் சேர்த்துக் கவனிக்கும் போது ஹக்கான(இறையின் பூரணத்)தோன்றல் என பெருமானார் (ஸல்) அவர்களின் அகமியத்தை உணர்த்துவது.

69. கவலையும் வேண்டாம் சந்தோசமும் வேண்டாம் ஹக்கே நமக்கு வேண்டும் என வாழ்க்கை வழிகாட்டுவது.

70. உலக வாழ்க்ககையை தவ்ஹிதில் சிந்தித்தால் எல்லாவற்றிலும் மோட்சம் காணலாம் என உரைப்பது.

71. எப்போதும் நேர்மையாக நடக்கவேண்டும் என வலியுறுத்துவது. கோபம் பொறாமை தற்பெருமை இவற்றை ஒழித்தே தீரவேண்டும் என வற்புறுத்துவது.

72. தொழுகையை சந்தோசமாக தொழச் சொல்வது.

73. முரீதுகள் எப்போது நினைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் உயிரோடு உயிராக கலந்து அணுவோடு அணுவாக பதிந்து எந்த சந்தேகமுமின்றி உதவிக்காப்பது.

74. இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும். எம்மை இந்த ஜமானில் அண்டியவர்கள் பெறும் பேறு பெற்றவர்களே!
எம்மைவிட்டு கைசேதப்பட்டவர் எம்மைப் போன்றவர் இதற்கு பின்னால் எவரும் தோன்றமாட்டார். இதுவே ஹக்கின் பஷாரத் (நன்மாராயம்)ஆகும் என முத்திரை பதித்தது.....!


நன்றி---- ஆலிம் புலவர்

நன்றி--- மறைஞானப்பேழை

காசிருந்தும் ஏழை

உள்ளாகி வெளியாகி
உண்மைக்கே ஒளியாகி
கொள்ளாமல் கொள்ளுமொரு கூட்டம்!-அது
குதுகலிக்கும் ஜமாலிய்யாத் தோட்டம்!

தேட்டமுண்டு நாட்டமுண்டு
திட்டமுண்டு வட்டமுண்டு
கூட்டமுண்டு கலீல்அவ்ன்தம் பின்னே!-அங்கு
குண்டூசிகூட ஆகும் பொன்னே!

பொருளறிந்து புலனறிந்து
பொய்க்காத நலனறிந்து
அருளறிந்து துய்த்திடுமோர் திருப்பம்!-காண
ஆசையுளோர் வைப்பீர் அவ்ன் விருப்பம்!

குருவாகி இருப்பவரைக்
கொள்ளாமல் இறைஞானம்
உருவாகி வந்திடுமோ ஊரில்?-இதை
உணர்ந்து அவ்னைக் கண்டிடுவீர் நேரில்!

திறவுகோலை எடுக்காமல்
திண்டாட்டம் கொடுக்காமல்
உறவுகோலும் மறைஞானப் பேழை!-அதை
உற்றறியார் காசிருந்தும் ஏழை!

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

இல்லையே...


பராஅத் இல்லை
மிஃராஜ் இல்லை
27ல் லைலத்துல் கத்ரு இல்லை
மீலாது இல்லை
மௌலூது இல்லை
முஹர்ரம் 10 ஆஷ_ரா இல்லை
கர்பலா இல்லை
ஈஸால் தவாபு இல்லை
பாத்திஹா இல்லை
கத்தம் இல்லை
பெருமானாரின் ரவ்ழாஷரீப்
ஜியாரத் இல்லை
மத்ஹபுகள் இல்லை
நான்கு இமாம்கள் இல்லை
நிய்யத் இல்லை
நேர்ச்சை இல்லை
வலிமார்கள் இல்லை
கராமத் இல்லை

இல்லை…இல்லை…இல்லை

புதிய ஷைத்தான்கள்
ஏன் இவ்வாறு குழப்புகிறார்கள்?
முடிவாகப் புரிந்து கொண்டேன்!
இவர்களுக்கு இதயத்தில்
ஈமான் இல்லை
மண்டையில் மூளையில்லை….!

- ஆலிம் புலவர்

சமய நல்லிணக்க விழா


அனைவருக்கும் இணக்கம்!
என்ன?
வணக்கமா?இணக்கமா?
எழுத்துப் பிழையா?
வார்த்தை தடுமாற்றமா?
இல்லை!...

வணக்கம் சொல்வதில்
சிறிது ஆபத்தும்
கலந்து இருக்கிறது!

காந்திஜியைக் கொன்ற
கோட்சேயின் கையில்
மறைந்திருந்த
துப்பாக்கி போல்!

இன்று
வணக்க மனிதர்களிடம்தாம்
பிணக்கும் மிகைத்திருக்கிறது!
வணக்கம் என
மனதார-வாயாராக் கூறும்
தகுதி வரும்வரை
சிறிது காலத்துக்குச் சொல்வோம்
இணக்கம்!
சொல்லப்போனால்
இணக்கம் தான் வணக்கமே!


இது காந்திக்குப் பிடித்த விழா!
காந்திகிராமத்தில்
அவரின் மடியிலேயே நடக்கும்
பொருத்தமான விழா!
அவர்தான்
சமய நல்லிணக்கத்திற்காக
சாவை சந்தித்த சத்தியமனிதர்!
காந்தி வாழ்கிறார்...இன்னும்...
நம் வடிவங்களில்!அதனால்தான்
அவரது நல்லிணக்க விதைகளை
நாட்டில் நாம் விதைக்கிறோம்!
காந்தி வாழலாம்-ஆனால்
கோட்சேக்கள் வாழ்வதில்
நியாயம் இருக்கிறதா?
இந்திய விடுதலை பெற்று
அறுபதாண்டுகள் கடந்த பின்னும்
வேற்றுமைச் சிந்தனைகளின்
வேர்கள் அழியவில்லையே!
அதனால்தான்
காந்தியை
காந்தி நகரிலிருந்து
காந்திகிராமத்திற்கு
அழைத்திருக்கிறோம்!
கோட்சேக்கள்
தலை எடுக்கும் போதெல்லாம்
காந்தியும் அவதரிப்பார்
அழியாமல்!மறையாமல்!

அன்பர்களே!
நாம் அனைவரும்
இதயங்களால் நடந்து வந்து
இங்கு அமர்ந்திருக்கிறோம்!
கை குலுக்கினால்
பிரிந்து விடுமென்று
மெய்குலுக்கி மனம்
விரிந்து மலர்ந்திருக்கிறோம்!
சமூகத்தில் அவ்வப்போது
பற்றிக்கொள்ளும் நெருப்பு
ஊரையே அழித்துவிடக் கூடாதென்ற
சமூக அக்கறை!

ஒருவருக்கொருவர்
கொடுத்து வாங்குவதற்காக
சம்பந்திகள் போல இங்கு
சங்கமித்திருக்கிறோம்!
சமயங்கள் எனும்
சமையலறையில்
அவரவர் தயாரித்த
அறுசுவை உணவை
பரிமாறிக் கொள்ள
ஆவலோடு கூடியுள்ளோம்!

இஸ்லாமிய பிரியாணி
சனாதனப் பொங்கள்
கிறித்துவ அப்பம்-என
வகை வகையாக
வண்ண வண்ண உணவுகள்!
பசிக்கும் ஒருவன்
இதில் எதைச் சாப்பிட்டாலும்
நிச்சயமாக பசி அடங்கும்!
உணவுதான் வேறுவேறு தவிர
உள்ளடக்கம் ஊட்டச்சத்துதான்!
இறைவனை அடையவேண்டுமென்ற
மனிதனின் பசியை அடக்கவே
மதங்கள்-மார்க்கங்கள் தோன்றின!
அந்தப் பசியே
வெறியாக வெடிக்கும்போது
பத்தும்-அன்பு-பண்பு-நட்பு-பாசம்
என பத்தும் பறந்து போகிறது!
பக்தி கத்தியாகப் பரிணாமம் பெறுகிறது!
சடங்கு எனும் கிடங்கில் விழும்போது
அறிவு முடங்கிப் போகிறது!
அரிசியை உண்ண ஆவல் கொண்டவன்
ஆத்திரத்தில் அவசரம் அவசரமாக
உமியை உண்டு
வயிறு ஊதி அலைகின்றான்!
பயிரை வளர்ப்பதற்காகப் பாத்திகட்டி
களையை வளர்க்கிறான்!
முத்துக்களை எறிந்துவிட்டு
சிப்பிகளைச் சேகரிக்கிறான்!
பூக்களைப் பிய்த்து எறிந்து
நாரை அணிந்து
நாட்டியமாடுகிறான்.!
மதங்களின் உள்ளடக்கமான
தத்துவ மாத்திரைகளை எறிந்து விட்டு
கனமாக-அதன்
அட்டைகளை விழுங்குகிறான்.!
அமைதியான வடிவமான இறைவனிடமிருந்து
அன்பு வடிவமான மனிதப் புனிதர்களின்
வழியாக வந்ததே
மதங்கள்-மார்க்கங்கள்-அறநெறிகள்
ஆண்டவனோ-அவர்களோ
அன்பதைத் தவிர வேறு எதையும்
போதித்ததில்லை.!

ஆனால்
காஷ்மீர்-அமர்நாத்
குஜராத்-அகமதாபாத்
ஒரிஸ்ஸா-பெங்களுர்
குடைப்பாறைப்பட்டி-நத்தம்
எதை உணர்த்துகின்றன?
பகுத்தறிவுப் பகலவன்
பெரியார் உரைத்ததைப்போல்
மதங்கள்-வேதங்கள்-தோற்றுவிட்டனவா?
அவர் அழகாக சொன்னார்!
வேதங்கள் தோற்றுவிட்டன!
அதன் நீதி போதனைகளை-அதை
கெட்டியாகப் பற்றி நிற்போரே
பின்பற்றவில்லையே!-என
சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா?
வேதங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்-ஆனால்
வாழ்கிறோமா என்பதே கேள்விக்குறி!
ஏதோ வாழ்வோம் என
ஒரு வழியை தேர்ந்து கொண்ட
ஆன்மீகவாதிகளுக்கு
அதிகப் பொறுப்புகள் உண்டு!
அவர்கள் தேர்ந்து கொண்ட
அறவழித் தொகுப்பின்
சாட்சிகள் அவர்கள்!


ஒரு முஸ்லிம் குர்ஆனின் சாட்சி
ஓர் இந்து கீதையின் சாட்சி
ஒரு கிருத்தவர் பைபிளின் சாட்சி
ஆனால்
சாட்சிகளே பொய் சாட்சியாகலாமா?
குர்ஆன் கூறுகிறது
அனைவரும் ஆதம் பெற்ற மக்கள்!
ஆதமும் ஏவாளும்
இந்த அவைக்கு வருகை தந்தால்
அந்தப் பெற்றோரின் பார்வையில் நாம்
அன்பான பிள்ளைகளாகத்தாமே
தெரிவோம்!
கண்ணன் இங்கு காட்சி தந்தால்
இத்தனை பேரும்
என் உயிர் அல்லவா? என ரசிக்கமாட்டாரா?
இயேசு பெருமான் இங்கு வந்தால்
என் ஒளியிலிருந்து ஏற்றப்பட்ட
எத்தனை மெழுகுவர்த்திகள் என
வியக்கமாட்டாரா?


இந்தப் பார்வை
நம்மிடம் ஏன் இல்லை?
நாம் வேறு வேறாக எண்ணுகிறோம்!
நாம் வேறல்ல
விலக முடியாமல்
பின்னிப் பிணைந்து கிடக்கும்
வேர்கள் நாம்!
உங்கள் நுரையீரல் வரை
சென்று திரும்பிய சுவாசக் காற்றை
நான் சுவாசிக்கிறேன்.!
உங்கள் குருதியை உருவாக்கும்
உணவுப் பொருள்தான்
என் இரத்தத்தையும் உருவாக்குகிறது!
நீங்கள் வாங்கியச் சென்ற
அரிசி மூட்டையில்
பாதியை நான் வாங்குகிறேன்!
நீங்கள் வாங்கிய கடையில்
முதல் வடை நீங்கள் வாங்கினால்
கடைசி வடை எனக்குக் கிடைக்கிறது!
மின்வெட்டில்
இருவரும் இருட்டில் தவிக்கிறோம்!
உங்களைக் கடித்துக்
கொண்டிருக்கும் போதே
என்மீது ஒரு கண் வைத்திருக்கிறது
ஏக்கம் தீராத கொசு!
இந்த அரங்கம் நிரம்ப
அணுக்களின் தொகுப்பாகத்தான்
நாம் அமர்ந்திருக்கிறோம்!
ஒரே பிரபஞ்சம்
ஒரேபூமி-ஒரேசூரியன்-ஒரேசந்திரன்
ஒரேநாடு-ஒரேஊர்
ஒரே நகராட்சிக் குடிநீர்
ஒரே காலை-ஒரே மாலை
அப்படியானால்
வேறுவேறு என்பது வேடிக்கையல்லவா?
சோலை ஒன்று
மலர்கள் பல வண்ணங்களில்
பலவாசத்தில்!
மலர்களின் கூட்டணிதானேசோலை!
மனிதர்களின் கூட்டணிதானே சமூகம்!


அன்பர்களே!
அரசியல்வாதிகளே!
கொள்கையைப் புதைத்து
கூட்டணி சேரும்போது
ஆன்மீகவாதிகளாகிய நாம்
இணக்கம் காண முடியாதா?
அவர்கள் தங்கள்
உயிராக மதிக்கும்
கொள்கைகளையே
ஒத்திவைக்கும்போது
நாம் மயிராக மதிக்கவேண்டிய
தீவிர எண்ணங்களை
தீய்த்துவிட முடியாதா?
விட்டுக் கொடுத்தவர்
கெட்டுப் போனதில்லை!
எட்டி உதைத்தவர்
என்றும் நிலைத்ததில்லை!
நாம்
எட்டி உதைப்பவரின் காலடியிலும்
சகிப்புத்தன்மை-சமரசம் எனும்
சந்தன மலர்களைத் தூவுவோம்!
அது அவர்களின்
சிந்தனை உணர்வுகளைத் தூண்டலாம்!
இதுவே சமயங்களின் முடிவு
வேதங்களின் விடிவு!
காந்தியின் கனவு!
நபிகள் நாயகத்தின் நனவு
அனைவருக்கும் இணக்கம்!
அல்ல...அல்ல...
வணக்கம்.!

---திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற மத நல்லிணக்க விழாவில் எஸ்.உசேன் முஹம்மது ஹக்கியுல்காதியுல் மன்பயீ வாசித்த கவிதை---

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.

-ஆலிம் புலவர்

மனம்


மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது. அதாவது ஆணவம் கொண்டுவிட்டது. நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு. தலைமையை வேண்டாதே. முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே. உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது. அதாவது ஆணவம் கொண்டுவிட்டது. நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு. தலைமையை வேண்டாதே. முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே. உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது. ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு. துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும். அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்

அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். அல்லாஹ்வைத் தவிர
மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய். இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.
-மஸ்னவி மௌலானா ரூமி (ரஹ்)