This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label மாதக்கூட்டம். Show all posts
Showing posts with label மாதக்கூட்டம். Show all posts

ஹஜ்மாத சிறப்புக் கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஹஜ்மாத சிறப்புக் கூட்டம் நவம்பர் 3ம் தேதி மாலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல்காதிரி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
முஹம்மது தாவூது ஹக்கியுல்காதிரி நபிப்புகழ்பாடலை பாடுகிறார்.

கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கியுல் காதிரி அவர்கள் ஞானப்பாடலை பாடியும் தியாகத் திருநாள் எப்படி ஏற்பட்டது என்ற சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள்.

நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கியுல் காதிரி அவர்கள், உரையாற்றுகையில்.. ஆண்டுதோறும் நாம் செய்துவரும் கூட்டுக் குர்பானியின் சிறப்புகளையும், அதனால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைப் பற்றியும், இதைக் கொண்டு நமது மதுரஸா மற்றும் ஏழைகளுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றியும், கூட்டுக் குர்பானியில் பங்கெடுக்காதவர்கள் அவசியம் தங்களின் பங்கை செலுத்தும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் ஹக்கியுல் காதிரி ஹஜ்ஜின் சிறப்புகளை கூறினார்கள்.
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் சிறப்புக்குரியா ஹஜ்பெருநாளின் சிறப்புகளைப் பற்றியும் ஷெய்கு நாயகத்தின் கரம் பற்றியதால் நாம் அடைந்திருக்கும் பலன்களைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார்கள்.

இறுதியாக தௌஃபா பைத் ஓதி இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவடைந்தது.அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அக்டோபர் மாதக்கூட்டம் மௌலானாமார்களின் முன்னிலையில் அப்பாஸ் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கோட்டக்குப்பம் முகைதீன் கிராஅத் ஓதினார்
ஏகத்துவப் பாடல் ஹுவல்வுஜுது கொடிக்கால்பாளயம் ஹாஜா அலாவுதீன் பாடினார் அதன் தமிழாக்கத்தை மதுக்கூர் ஜெகபர்சாதிக் வாசித்தார்.
மதுக்கூர் சிராஜிதீன் புகழ்பாடல் பாடினார்.


மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஞானப்பாடல் பாடுகிறார்
தஞ்சாவூர் அபுசாலிஹ் ஞானப்பாடல் பாடுகிறார்
பேசுவது மன்னார்குடி ஷேக்தாவுது
மதுக்கூர் முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்
மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா உரை நிகழ்த்துகிறார்
மன்னார்குடி அப்துல்மாலிக் உரை நிகழ்த்துகிறார்

திருச்சி அப்பாஸ் ஷாஜகான் உரை நிகழ்த்துகிறார்
புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

செப்டம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 9.9.2011 வெள்ளி மாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் செப்டம்பர் மாதக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கண்ணியமிக்க மௌலானாமார்கள் முன்னிலையிலும் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை தாங்கியும் நடாத்தினார்கள்.

கூட்டத்தின் துவக்கமாக கோட்டக்குப்பம் முஹைய்யதீன் அவர்கள் திருமறை வசனம் ஓதி துவங்கி வைத்தார்.


மதுக்கூர் முஹம்மது தாவூது ஹுவல்வுஜுது அறபு பாடலை பாடினார்.

அதன் தமிழாக்கத்தை (ஏகக்காட்சி) ஜெகபர்சாதிக் கூறினார்.

பாடகர் சாகுல்ஹமீது ஞானப்பாடலும்
முஹம்மது இத்ரீஸ் நபிப்புகழ் பாடலும் பாடினார்கள்.

நிகழ்ச்சியின் தலைவர் கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து மதுக்கூர் முஹம்மது இத்ரீஸ் உரை நிகழ்த்தினார்.

பொருளாதாரத்தைப் பற்றிய ஆய்வு உரையை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.

M.S.அப்துல்வஹாப் இமெயிலில் நிகழ்ந்துவரும் வஹ்காபிய சாடல்களை பற்றி உரை நிகழ்த்தினார்.

மன்னார்குடி ஷேக்தாவூது முழுமை என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.


திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் உரை நிகழ்த்தினார்.




தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூட்டம் நிறைவடைந்தது.

ஆகஸ்ட் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 05/08/2011 வெள்ளிக்கிழமை மாலை இப்தாருக்கு பின் ஆகஸ்ட் மாதக்கூட்டம் மௌலானா முன்னிலையில் நிர்வாகத் தலைவர் ஏ.பி.சகாபுதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ அவர்கள் வருகைப்புரிந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தாயகத்திலிருந்து வருகைப்புரிந்திருக்கும் மூத்த சகோதரர் கண்ணியமிக்க கலீபா முஹம்மது முஸ்தபா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து சொற்பொழிவாற்றினார்கள்.

இன் நிகழ்ச்சிக்கு அஜ்மானிலிருந்து பாம்பன் ஜாஹிர்உசேன் மற்றும் அப்துல்கபூர் வருகை புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக திருக்குர்ஆனிலிருந்து கோட்டைக்குப்பம் முஹைய்தீன் கிராஅத் ஓதி துவங்கினார்.
அதன் பின்னர் வஹ்தத்துல்வுஜீத் அரபுபாடலை முஹம்மது தாவுது பாடினார்
நபிப்புகழ்பாடலை மதுக்கூர் சாகுல்ஹமீது பாடினார்

ஞானப்பாடலை பாடுவது மதுக்கூர் சிராஜ்தீன்






தலைமை உரை நிகழ்த்துகிறார் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள்
பொதுச்செயலாளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் உரை நிகழ்த்துகிறார்




கிளியனூர் இஸ்மத் உரை நிகழ்த்துகிறார்

சிறப்பு சொற்பொழிவு மௌலவி முஹம்மது மூஸா மன்பஈ நிகழ்த்தினார்கள்.


தௌஃபா பைத்துடன் இனிதே ஆகஸ்ட் மாதக்கூட்டம் நிறைவு பெற்றது.



புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான் மற்றும் முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்

மாதாந்திரக் கூட்டம்

ஜுன் மாதக்கூட்டம் வியாழன்கிழமை 02/06/2011 மாலை 8.45 மணிக்கு துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய ஆத்மசகோதரர் ஜனாப் M.S.அப்துல்வஹாப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கு கண்ணியமிக்க ஜனாப் சையது அலி மௌலானா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு அமீரகத்தில் இயங்கும் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளரும், காயல் நலமன்றம் மற்றும் இக்ராஹ் கல்வி அமைப்பின் பொறுப்பாளருமான மதிப்பிற்குரிய சகோதரர் ஜனாப் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத் கோட்டக்குப்பம் முஹைய்தீன் அவர்கள் ஓதி அமர ஹுவல்வுஜுத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்கள் பாடினார்கள்.

அதன் தமிழாக்கம் ஆலியூர் அபுல்பசர்
நபிப்புகழ் பாடல் மதுக்கூர் சாகுல் ஹமீது

ஞானப்பாடல் மதுக்கூர் சிராஜ்தீன்
தலைமை உரையை துக்கம் சையதுஅலி மௌலானா



மதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை கூறி அதன் பொருளையும் விளக்கி பேசினார்
மதுக்கூர் நஜ்முதீன் சுயசிந்தனையை ஏற்படுத்தும் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கூறினார்
கிளியனூர் இஸ்மத் தன்னை அறியும் ஞானமே இஸ்லாத்தின் முக்கியக் கடமை என்பதை வலிறுத்தி பேசினார்.
சிறப்பு பேச்சாளர் காயல் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் சபாஅத்தை பற்றியும் பல விருந்தினர்களை பேசுவதற்கு இச்சபைக்கு நான் அழைத்து வந்திருக்கிறேன் அதன் பொருட்டால் இங்கு நான் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எடுத்தியம்பினார்.




பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையில் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீதும் கொண்ட நேசத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசாக பர்ஜன்ஸி மௌலூது நூலை வழங்குகிறார்கள்
காயல் அப்துல்காதிர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்
தௌபா பைத் ஓதப்பட்டு இனிதே இம்மாதக்கூட்டம் நிறைவு பெற்றது
இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.