This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label முஹிய்யுத்தீன் அப்துல்காதிரி ஜீலானி. Show all posts
Showing posts with label முஹிய்யுத்தீன் அப்துல்காதிரி ஜீலானி. Show all posts

மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா

எல்லாம் இருந்ததொரு காலம். தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்னும் வெளிரங்க வணக்கங்கள் விமர்சையாக கடைபிடிக்கப்பட்ட காலம். கட்டாய கடமை என்பதால் கடமைக்காக கலிமா சொல்லப்பட்ட காலம்.உள்ரங்கம் உருக்குலைய வெளிரங்கத்தில் இஸ்லாமியர் என்னும் அடையாளத்தில் அமோக வரவேற்பை பெற்ற பொய்யர்கள் நிறைந்ததொரு காலம். பற்பல பட்டங்களால் பட்டைதீட்டப்பெற்று பட்டப் பெற்றவர்கள் பசிக்காத பட்டினியாய் படைதிரண்டு நின்றதொரு காலம். மொத்தத்தில் அறியாமையை அறியாத அறிவாளிகள் நிறைந்த அந்த காலக்கட்டத்தில், பிரபஞ்ச சக்கரவர்த்தி, அறிவின் பட்டணம் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் தலைவாயிலாம், எங்கள் அலிபுலியாரின் (ரலி)வழியில் வெளிப்பட்ட ஏனைய கதிரவனில் அதியொளிர் கதிராய், அகமிய சுடராய், அற்புத உருவாய் தோன்றிய முஹையுத்தீன் ஆண்டகை அவர்களின் புனித மவ்லீது மஜ்லிஸ் கடந்த 05-03-2011 முதல் 15-03-2011 வரை 11 நாட்கள் சிறப்பான முறையில் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக ஓதப்பட்டது.

ஒளி அதிகரிக்க இருள் விலகும் என்பதுபோல் அகமிய இறை அறிவை நிறைவாய் தந்து, தம் பாட்டனாரால் விரிக்கப்பட்ட ரத்தினக் கம்பளத்தில் இம்மானிட வர்கத்தை மீண்டும் நடைகொள்ள செய்த மஹ்பூபே சுபுஹானி, மஉசூகே ரஹ்மானி, முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் புனித கந்தூரி விழா கடந்த வியாழன் 17-03-2011 அன்று மஹ்ரிப்பிக்கு பின் புனித மிகு இராத்திப்பத்துல் ஹக்கிகத்துல் காதிரிய்யா ஓதப்பட்டு அதை தொடர்ந்து விழா சிறப்பான முறையில் நிகழ்ந்தது.





இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வ‌கித்தார்க‌ள்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து அப்துல் பாஸித் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
கொடிக்காள்பாளையம் ஹாஜா அலாவுதீன் வஹ்தத்துல் வுஜூது பாடலினை ஓத‌ அத‌ன் த‌மிழாக்க‌த்தை மன்னார்குடி ஷேக்தாவுது அவர்கள் வாசித்தார்கள்.
மதுக்கூர் சாஹுல் ஹமீது ஞானப்பாடலைப் பாடினார்கள்.
நபிப்புகழ் பாடலினை மதுக்கூர் தாவூது பாடினார்கள்.

இவ்விழாவில் பேசியவர்கள்:

நிர்வாகத்தலைவர் கலீபா ஏபி.சஹாபுதீன் - தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
A.N.M.முஹம்மது யூசுப் M.A
மௌலவி அப்துல்ஹமீது நூரி
சுல்தான், ம‌துக்கூர்
ஹிதாய‌த்துல்லா, ம‌துக்கூர்

தவ்பா பைத் ம‌ற்றும் ச‌லவாத்துட‌ன் விழா சிறப்புட‌ன் நிறைவேறிய‌து. வ‌ருகை த‌ந்த‌ அனைவ‌ருக்கும் இரவு உணவு வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து.
இப்புனித மவ்லீதுக்கும், விழாவிற்க்கும் தொடர்ந்து வருகை தந்து சிறப்பித்த சிறப்பை பெற்றுச்சென்ற அனைத்தவருக்கும் துபை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.

தொகுப்பு .மதுக்கூர் அமீர்அலி
புகைப்படம். அதிரை ஷர்புத்தீன்








முப்பெரும் விழா







































துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 26.03.2010 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு முப்பெரும் விழா துவங்கியது.

விழாவின் துவக்கமாக மஹ்பூபே சுப்ஹானிய் கிந்தீலே சமதானி முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் புனித மௌலுது ஷரீப் ஒதப்பட்டது.

காலை 9.30 மணிக்கு மாதாந்திர கூட்டமும் அதனைத் தொடர்ந்து அறபு – தமிழ் (காமுஸ்) அகராதி மற்றும் மனிதா நூற்கள் வெளியீடப்பட்டன.

மௌலவி அப்துல்ஹமீது நூரி கிராஅத் ஓதி விழாவினை துவங்கி வைத்தார்.
நபிப்புகழ் பாடல்கள் அடமங்குடி அப்துல்ரஹ்மான் நூரி அவர்களும், மதுக்கூர் தாவுதும் பாடினார்கள்.

அறிமுகஉரை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்த,
அதிரை ஷர்புத்தீன் அனைவருக்கும் வரவேற்புரை அளித்தார்.
புலவர் அத்தவுல்லா கவிதைப் பாடினார்.

நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன் தலைமை உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில முஸ்லிம் வீக் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்முகைதீன் எம்.ஏ. அவர்கள் கலந்து நூற்களை வெளியீட்டு சிறப்புரை ஆற்றினார்.

முதல் பிரதியை ஜாகித்அலி மௌலானா பெற்றுக் கொண்டார்கள்.

பொதுச் செயராளர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப்,
திருமுல்லைவாசல் சையது அலி மௌலானா
உரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவிற்கு காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் லியாகத்அலி,
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், மற்றும் துணைத்தலைவர் குத்தாலம் அஷரப்அலி,
வானலை வளர் தமிழ் துணைத்தலைவர் ராஜாகான் (கீழைராஸா),
இணையதள வலைப்பதிவர்கள் இலக்கியச் செம்மல் முஹம்மது ஆஸாத்,
மற்றும் அஹமது சுபைர்,

ஊடகத்துறை ஆர்வாளர் முதுவை ஹிதாயத்துல்லா ,

சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது,

அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி, அப்துல்ரஹ்மான் நூரி, மற்றும்
மதுக்கூர் சுன்னத்வல்ஜமாஅத்தினர், தஞ்சாவூர் ஜமாஅத்தினர், லால் பேட்டை ஜமாஅத்தினர், பத்ருசஹாபாக்கள் அறை நண்பர்கள், பாரடைஸ் அறை நண்பர்கள், மற்றும் பல தரீக்காவிலிருந்தும் ஆன்மீக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவினை சிறப்புச் செய்வதற்கு பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா,அப்பாஸ் ஷாஜகான், காதர்ஷாகிப் ,முதுவை ஹகமது ஹிம்தாதுல்லா,அதிரை அப்துல்ரஹ்மான், மதுக்கூர் ராஜா முஹம்மது, மதுக்கூர் வாவாமுஹம்மது, அப்துல்சுபுஹான்,ஆலியூர் அபுல்பசர், மதுக்கூர் அமீர்அலி ,மன்னார்குடி ஷேக்தாவுது பிரதர்ஸ், மற்றும் ரூம்மெம்பர்ஸ் மற்றும் பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு நூற்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.