This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

தனக்கு பெயரை தானே அமைத்தான்: மஜ்லிஸ் - 3.

நாள்: சனிக்கிழமை

தேதி: 03/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)


பரம் என்றால் பொருள்.?
அது எப்பவுமே இருக்கின்ற பொருள். அது பழையது அல்ல. அது இப்போதுதான் உண்டானது என்று சொல்ல இயலாது. தமிழில் பரம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒரே கருத்துதான். ஆனால் அறபுச் சொல் அல்லாஹ்விற்கு நிகரான வேறு எந்தச் சொல்லும் எந்த மொழியிலேயும் இல்லை.
God, இறைவன், கடவுள், பரம் என்று பலவகையிலும் எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் அல்லாஹ் என்று மட்டும்தான் சொல்கிறோம். ரஹ்மான், ரஹீம் என்பதெல்லாம் அவனுக்குரிய பெயர்கள்தான். ஆனால் முழுமையான பெயர் என்னவென்று கேட்டால் அல்லாஹ்.
அந்த அல்லாஹ் என்று சொல்லுக்கு நிகரான எந்தவொரு வார்த்தையுமே வேற எந்தவொரு மதத்திலேயுமே வரவில்லை. அல்லாஹ் என்ற ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து பார்க்கின்ற நேரத்திலேயும், பல எழுத்துக்கள் சேர்ந்த ஒரு சொல் அல்லாஹ் என்பது. அவ்வளவு சீக்கிரமாக, சிறுசாக, அழகாக அல்லாஹ் தனக்கு பெயரை அமைத்து வைத்திருக்கின்றான். பொதுவாக பரம் என்று சொல்வது பரம்பொருள். மிகப் பழமையானவன்.கதீம். அளவில்லாதவன் எப்ப பழசானான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு பழசு. போக போக போய்க்கொண்டேயிருக்கும் அது.
அது நித்திய பரம். எப்பவுமே அழிவதுமில்லை, கூடுவதுமில்லை, குறைவதுமில்லை, அகலப்படுவதுமில்லை. அதற்கு உயர்வு, தாழ்வு, உயரம், பள்ளம், வலது, இடது எதுவுமே அந்த அல்லாஹ்விற்கு இல்லை. அதைப்பற்றி நாங்கள் விளங்கினால்தான் மனம் போய் சேரும்.
அறிவு அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் போய் சேரலாம். அல்லாமல் நாங்கள் சும்மா அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிவிட்டு, போய் சேர வேண்டுமென்றால் எப்படி போய் சேர்வது.
மெட்ராஸுக்கு போய் சேர வேண்டுமென்று ராமேஸ்வரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி போய் சேர்வது?
ராமேஸ்வரத்தில்தான் அவர் இருப்பார். ஏன்? மெட்ராஸுக்கு போகத் தெரியாதே. ஆக மெட்ராஸ் என்றால் என்ன, எப்படி போக வேண்டும் என்று அந்த Mapபை (வரைப்படம்) எடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதற்கு போகிற வழி என்ன?, எந்தமாதிரியெல்லாம் போகலாம் என்பதை அறிய வேண்டும். அறிந்து நாங்கள் போனால்தான் மெட்ராஸுக்கு போய்ச் சேர இயலும். இல்லாவிட்டால் ராமேஸ்வரத்தில்தான் இருப்போம். அதுபோல், அல்லாஹ்வைப்பற்றி அறியக்கூடிய அந்த பாதைகளை, வழிகளை நாங்கள் அறிய வேண்டும். அறிந்து நாங்கள் அதோடு சங்கமமாக வேண்டும். சங்கமம்தான் நெருங்குவது. அல்லாஹ் ஒருவன் என்பதை அறிந்த பிறகுதான் அந்த இடத்திற்கு நாங்கள் போகலாம். அல்லாஹ் ஒருவன். அவன் எப்படி ஒருவன்? அவன் எங்கே இருக்கிறான்? எந்த மாதிரி இருக்கிறான்? எல்லாவற்றையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிய பிறகுதான் எங்களுக்கு அங்கே போக இயலும். அவனைப்பற்றி அறிய வேண்டும். அதற்கு பிறகுதான் சங்கமம்.



அறிவைக் கொண்டு அறிந்தால் சங்கமம்:



"ஸித்ரதுல் முன்தஹா" வரையில்தான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும், ஜிப்ரீல்(அலை) அவர்களும் போனார்கள். அதுவரை சேர்ந்த பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொல்கிறார்கள், இதற்கு பிறகு என்னால் போக இயலாது, நீங்கள் போய் கொள்ளுங்கள் என்று. அப்போது ரசூலுல்லாஹ்(ஸல்) போனார்கள் அதுதான் சங்கமம். அங்கு போனதுதான் சங்கமம். அதுவரை இருந்ததெல்லாம் அறிவு. அந்த அறிவோடு போய் அந்த இடத்திற்கு போனால் சங்கமம் உண்டாகும். அதற்குண்டான மாதிரி நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது அறிவுதான். அறிவைக் கொண்டுதான் அல்லாஹ்வைப்பற்றி அறிய இயலும். எவ்வளவுதான் நீங்கள் அல்லாஹ், அல்லாஹ் என்று உருட்டினாலும் புண்ணியமில்லை. அல்லாஹ் என்ற அறிவை நாங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப்பற்றி அறிய வேண்டும். "மன் அரப நப்ஸஹு ஃபகத் அரப ரப்பஹு". ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்படி போய் அல்லாஹ்வை சேர்ந்தார்களோ, இரண்டற கலந்தார்களோ அப்படி போய் ஹக்கைச் சேர வேண்டும். அல்லாஹ்வோடு ரசூல்(ஸல்) பேசினார்கள் என்று சொல்வது இரண்டற கலந்தார்கள் என்ற கருத்து. போகும் வரையில் நாங்கள் அறிவோடு சென்று பின்னால் பரிபூரணமாக ஹக்கோடு கலப்பதுதான் சங்கமம் என்று சொல்வது.



காட்டை விட வீடே சிறந்தது:



துறவறத்தில் சொல்கிறார்கள் இல்லத்துறவு. வீட்டில் இருந்து கொண்டு துறவறம் பூண்டுவது. மற்றது வெளியே போய் காட்டில் துறவறம் பூண்டுவது. காட்டிற்கு போய் தனியாய் இருந்து துறவறம் செய்வதை விட வீட்டிலேயே இருந்து நாங்கள் துறவறம் செய்வது மிக நல்லது. நாங்கள் வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறோம். குடும்பத்தை கவனித்தல் ஃபர்ளாகிவிட்டது. அதோடு எங்கள் மனத்தை கட்டுப்படுத்தி அதன்படி நாங்கள் நடந்து வருவதுதான் முக்கியமானது. அதுதான் இல்லறம், இல்லத்துறவு. காட்டிற்கு போய் துறவறம் செய்வதனால் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. அதில் திடீரென்று ஒரு நிலையை அடைய முடியாது. காட்டிற்கு போய் பழகும் வரையில் பல வகையான கஷ்டங்களை நாங்கள் அநுபவிக்க வேண்டிய சந்தர்பம் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் இங்கேயே இருந்துக் கொண்டு பலவகையான சந்தர்ப்பங்களையும் பெற்றுக் கொள்கிறோம். அவர்கள் காட்டில் போய் இருப்பதை விட இந்த உலகத்திலேயே நாங்கள் நடந்துக் கொள்வது சில முக்கியமான விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம். ரசூல்(ஸல்) அவர்களுக்கு மக்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்திலேயே வஹீ வந்துவிடும். அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் மக்களோடும் பேசிக் கொண்டு, இங்கு வஹீயையும் சொல்வார்கள். இதெல்லாம் இல்லறத் துறவு. வீட்டை, மற்ற எல்லோரையும் விட்டுவிட்டு போவது துறவல்ல. இருந்தே நாங்கள் துறவு செய்வதுதான் நல்லது. அதில்தான் எல்லா வகையான பயிற்சிகளும் எங்களுக்கு உண்டாகிறது. துறவு என்றால் அல்லாஹ் அல்லாததை துறந்துவிடுதல். அல்லாஹ் அல்லாதது இல்லை. எல்லாமே பரிபூரணமாக அதுதான் என்று மற்ற எல்லாவற்றையும் துறந்து விடுவது. மனிதனாக நினைப்பதை, மற்றவகையாக நினைப்பதையெல்லாம் மறந்துவிடுவது. நாங்களே இல்லையென்று நினைப்பது. இதுதான் முக்கியமான துறவு. ரசூல்(ஸல்) அவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஹீராவில் போய் கொஞ்ச காலம் இருந்தார்கள். அது அவர்களுடைய மனம் rest க்காக இருந்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்களே. அதற்கு பிறகு வந்ததெல்லாம் வீட்டில் கதைச்சு கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு வஹீ இறக்கப்பட்டது. ஆகவே வீட்டில் இருந்து கொண்டே துறவு செய்வதுதான் மித்த நல்லது. வேறோன்றுமில்லை நான் மட்டும்தான் என்று நினைத்துவிட்டால் அதுவே கல்வத் ஆகிவிட்டது.



ஊழ்வினையை போக்குவோமே ....



ஊழ்வினை என்றால் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடிய வினை என்று சொல்வது. பழங்காலச் செயல்கள். அதுதான் எங்களை வந்து இது செய்கிறது என்று ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஊழ்வினையை போக்கி அல்லாஹ்வுடைய உறுதுணையை நாடுவது. அவனுடைய உறுதுணையை நாடிவிட்டோம் என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் இருந்து வரக்கூடிய ஊழ்வினைகள் எங்களுக்கு இருக்காது. எல்லாவற்றிற்குமே அல்லாஹ் போதுமானவன். வேறு எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) போதும் என்பதுதான் அதனுடைய கருத்து.

ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

நன்றி - அமீர்அலி
ஆதம் அப்துல்குத்தூஸ்

நாகூர் நாயகத்தின் நினைவுதின விழா


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில்
தாஹா நபியின் திருவழித் தோன்றல் காருண்ய நபியின் திருப்பேரர் கருணை கடல் குத்புல் மஜீத் குத்புல் ஃபரீத் செய்யிது சாதாத் செய்யிது அப்துல் காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ்
ஷாகுல் ஹமீது மீரான் சாஹிபு காதிரி நாகூரி(ரலி) நாயகத்தின்
453 ம் வருட (உரூஸ்) கந்தூரி விழா மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

காலை 8.00 மணிக்கு நாகூர் நாயகத்தின் புனித மவ்லிது ஃஷரீப் ஒதப்பட்டது.
மௌலானாமார்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.

9.15 மணிக்கு மவ்லவி அப்துல்ஹமீது நூரி அவர்களின் கிராஅத்துடன் விழா துவங்கியது.

மதுக்கூர் முஹம்மது தாவுது அவர்கள் நபிப்புகழ் பாடல்களை பாடினார்கள்.

இந்த விழாவிற்கு எஸ்.எம்.செய்யிது அலி மௌலானா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

அஹ்லபைத்தின் அகமியம் என்ற தலைப்பில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாத்தலைவர் ஏ.பி.சஹாபுதீன் 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

நாகூர் நாயகத்தின் புகழ் பாடல்களை தேரிழை தாஜிதீன் பைஜி பாடினார்.

குருவின் அவசியத்தை பற்றி பெருமானார் (ஸல் அலை) அவர்களிடம் சஹாபாக்கள் எப்படி நடந்துக் கொண்டா சரித்திரத்தை தொட்டு மஹான்களின் அவசியத்தை எடுத்து கூறி பொதுச் செயலாளர் ஏ.என்.எம் முஹம்மது யூசுப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்கள் கலந்து நாகூர் பாதுஷா நாயகத்தின் பாடல்களை நெஞ்சமுருக பாடினார்கள்.

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி அவர்களின் சொற்பொழிவு எல்லோருக்கும் உற்சாகத்தை வழங்கியது.அல்லாஹ் அறியவேண்டுமானால் அல்லாஹ்வை அறிந்தவரிடம் தான் தெரிந்துக் கொள்ளமுடியும் என்று பல உதாரணங்களைக் கொண்டு விளக்கினார்கள்.

கடலூர் ஆசிக் எம்.கே.அப்துல்ரஹ்மான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் காதர்ஷாகிப் அப்பாஸ் ஷாஜகான் கிளியனூர் இஸ்மத் அதிரை ஷர்புத்தீன் மதுக்கூர் அபுசாலிஹ் பல தரிக்காவிலிருந்தும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், உப தலைவர்கள் குத்தாலம் அஸரப்அலி, முஹம்மது பாருக், சங்கமம் தொலைக்காட்சியின் நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்) கலந்துக் கொண்டனர்.
வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, கிளியனூர் பஹாவுதீன் பைஜி மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடு கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் அவர்களும் முஹம்மது ரியாஸ் மற்றும் சபையின் ரூம் சகோதரர்கள் செய்யிது அலி மௌலானா, முஹம்மது தாவூது, ஆதம் அப்துல்குத்தூஸ், நத்தர்ஷா, அமீர்அலி, அஹது, ஜெய்னுதீன், முஹம்மது யூனூஸ், ஷேக்தாவ+து, ஷேக்மைதீன் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பேனர் வழங்கிய அபுல்பசர் மற்றும் அலங்காரங்கள் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றியினை சபையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியினை புகைப்படம் எடுத்துக் கொடுத்த மதுக்கூர் ராஜாமுஹம்மது மற்றும் ஒலி ,ஒளி அமைப்பு அதிரை அப்துல்ரஹ்மான்

மற்றும் கணினியில் நிகழ்ச்சி நிரலை ஒளிப்பரப்பிய ஆதம் அப்துல் குத்தூஸ் இன்னும் இந்நிகழ்ச்சிக்காக உதவிய அனைவருக்கும் வருகைப்புரிந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.
அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.


நாகூர் நாயகத்தின் மௌலூது நிகழ்ச்சி
----------------------------------------------------------

கிராஅத் மௌலவி அப்துல் ஹமீது நூரி
-----------------------------------------------------------



பாடகர் மதுக்கூர் முஹம்மதுதாவூது
------------------------------------------------------------

திருமுல்லைவாசல் செய்யிது அலி மௌலானா
---------------------------------------------------------------

நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் BE.M.BA
------------------------------------------------------------




பொதுச் செயலாளர் M.முஹம்மது யூசுப் MA
----------------------------------------------------------------


தீன்னிசைத் தென்றல் தேரிழை தாஜிதீன் அவர்களுக்கு பொன்னாடை
-----------------------------------------------------------------------

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
-------------------------------------------------------------------------

இஸ்லாமியப் பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்களுக்கு பொன்னாடை
----------------------------------------------------------------------


பாடகர் பாஷா அவர்களுக்கு அகில அற்புத நாதர் ஆடியோ CD வழங்கப்பட்டது
------------------------------------------------------------------------

தேரிழை தாஜிதீன் பைஜி
-----------------------------------------------------------------------

சங்கமம் டிவி நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்)
-----------------------------------------------------------------------

குத்தாலம் அஸரப்அலி
---------------------------------------------------------------------

திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
----------------------------------------------------------------------

கிளியனூர் பஹாவுதீன் பைஜி
-------------------------------------------------------------------




கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி நன்றிவுரை நிகழ்த்துகிறார்
-----------------------------------------------------------------------------

துபாய் சபையில் மீலாதுன்னபி விழா











துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின விழா மிக விமர்சையாக மார்ச் 11 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் துவங்கப்பட்டது.

7 மணிக்கு மௌலுது ஷரீப் ஓதப்பட்டு இஷா தொழுகைக்குப் பின் மீலாதுவிழா துவங்கியது.
இவ்விழாவிற்கு திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமைவகித்து நடாத்தி தந்தார்கள்.

விழாவின் ஆரம்பமாக அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது நூரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.
மதுக்கூர் பாடகர் தாவுது ஹுவுல் வுஜூது அறபு பாடலை பாடினார்.அதன் தமிழாக்கத்தை மன்னார்குடி ஷேக்மைதீன் வாசித்தார்.
நபி புகழ் பாடலை பாடகர் சாகுல்ஹமீதும், மதுக்கூர் சிராஸ்தீனும் பாடினார்கள்.

சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.அண்ணல்நபி (ஸல் அலை)அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை கோடிட்டு பேசினார்கள்.

மதுக்கூர் அமீர்அலி சென்ற மாதம் இலங்கை வெலிகமையில் நடைப்பெற்ற மீலாதுன்னபி நிகழ்ச்சியைப் பற்றியும் அந்த நிகழ்வில் நடைப்பெற்ற அறபு-தமிழ் அகராதி வெளீட்டு நிகழ்வைப் பற்றியும் சங்கைமிகு இமாம் ஷெய்க்குனா கலீல்அவுன் மௌலானா அவர்களைப்பற்றியும் மிக தெளிவாக அழகாக கூறினார்.

அவரைத்தொடர்ந்து

மன்னார்குடி ஷேக்தாவுது மீலாதுன்னபியின் சிறப்புகளை கூறினார்.

அவரைத் தொடர்ந்து கிளியனூர் இஸ்மத் உரையாற்றுகையில்
இறைவன் பெருமானாரை நேசிக்குமளவு இன்னும் மனிதர்கள் நேசிக்கவில்லை என்று திருமறையிலிருந்து எடுத்துக் கூறினார்.

மதுக்கூர் முஹம்மது யூசுப் பேசுகையில்
மனிதனிடம் பொறமை இருக்கக் கூடாது என்று சில சம்பவங்களை சுட்டிக்காட்டி பெருமானாரின் வாழ்வை எடுத்தியம்பினார்.

கீழக்கரை காதர்ஷாகிப் உரையாற்றுகையில்
பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீது அதிகம் நேசம் கொண்டோமானால் பயமில்லாமல் வாழலாம் என்றுரைத்தார்.

கிளியனூர் முஹம்மது சபீர் உரை நிகழ்த்துகையில்
ஹுதைபிய்யா உடன்படிக்கையான வரலாற்று சம்பத்தை எடுத்து கூறினார்.

துபாய் சபையின் தலைவர் ஏ.பி.சஹாபுதீன் பேசுகையில்
பெருமானாரின் திருக் குடும்பத்தினரின் மீது நேசம் வைப்பதைப் பற்றியும் இலங்கை வெலிகமையில் நடைப்பெற்ற மீலாதுன்னபி விழாவினைப் பற்றி சுறுக்கமாக கூறினார்.

இவ்விழாவில் மதுக்கூர் கலீபா அட்வகேட் லியாகத்அலி அவர்கள் மறைஞானப்பேழை மாதஇதழில் 1990 லிருந்து மெய்யொளி பதில்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.அதனை தொகுத்து மன்னார்குடி ஷேக்தாவுது அவரின் சகோதரர் ஷேக்மைதீன் இருவரும் நூலாக அதனை வெளியீட்டுள்ளார்கள்.அன் நூலை இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இறுதியாக ஸலவாத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.

இமாம் ஷெய்குனா பன்னிரெண்டாம் ஆண்டு துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் ஸ்தாபகர் இமாம் செய்யிது கலில் அவுன் மௌலானா அவர்கள் ஆகஸ்ட் 9 ம்தேதி குவைத் நாட்டிலிருந்து துபாய் வந்தார்கள். இது 12 வது வருட விஜயமாகும்.
குவைத் நாட்டில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை நிறுவி ஞானத்தேடல் உள்ளவர்களுக்கு தவ்ஹித் விளக்க சொற்பொழிவு நிகழ்த்தியும் பிறை 14ல் இராத்தீப் ஒதியும் சிறப்பித்துள்ளார்கள்.பலர் ஆர்வத்துடன் இணைந்து பைஅத் பெற்று தங்களை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையுடன் இணைத்துக் கொண்டார்கள்.

துபையில் ஓவ்வொருவருடமும் நடக்கக்கூடிய மஜ்லிஸ் நிகழ்ச்சி போல இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. அனைத்து முரீதின்களும் மஹ்ரிப் தொழுகைக்கு பின் மஜ்லிஸில் கலந்துக் கொண்டார்கள்.

தவ்ஹிதின் அறிவு ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக அவசியம் என்றும் ஷரிஅத்தை எந்த காலக்கட்டத்திலும் மறந்தோ அலட்சியமோ படித்திடாமல் பேணி நடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஐங்காலத் தொழுகையை சந்தோசமான முறையில் தொழவேண்டும் பஜ்ர் தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் ஒதவேண்டும் என்றும் கூறினார்கள்.
அண்ணல் பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லாம் அவர்களின் மீது அதிகமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உபந்நியாசம் செய்தார்கள்.

பெற்றோர்களை எந்த காலகட்டத்திலும் கைவிட்டிடாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும் இது ஒவ்வொருவர்களின் மீதும் கடமை என்றும் கூறினார்கள்.

ஆகஸ்ட் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையில் நடந்த மஜ்லிஸில் முரீதின்கள் தங்களின் சந்தேகங்களை கேக்கும்படியும் பணித்தார்கள். பலர் தங்களின் ஐயங்களைக்கேட்டு தெளிவுற்றார்கள்.

துபாய் சபையில் நிர்வாகச் சீரமைப்பு செய்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமித்தார்கள். அனைவருமே தலைவர்கள் தான் என்ற மனப்பான்மையுடன் செயல்படவேண்டும் புது பொலிவுடன் சபை இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்ளக்கூடாது என்றும் அறிவுரித்தினார்கள்.

20ம் தேதி மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் சிறப்பு துவா ஓதி அனைத்து முரீத்தீன்களுக்காகவும் உலக மக்களின் ஒற்றுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.


21 ம் தேதி மாலை 7.30 மணிக்கு இலங்கைக்கு திரும்பினார்கள்.






புதிய நிர்வாகிகளுடன் இமாம் செய்யிதுகலில் அவுன் மௌலானா அவர்கள்