This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label மதுக்கூர். Show all posts
Showing posts with label மதுக்கூர். Show all posts

மரக்கன்றுகள் நடும் & வழங்கும் விழா

உலக வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்கமும் மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது .

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக மதுக்கூர் கிளையின் செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் அவர்களும் உறுப்பினர் இத்ரீஸ் அவர்களும் கலந்து கொண்டு ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ( தேக்கு , செஞ்சந்தனம் ) மரக்கன்றுகள் நட்டனர் .மேலும் ஆலத்தூர் கூட்டுறவு கடன் சங்க கிளையின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர் . 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வழங்கியது

தகவல் , புகைப்படங்கள் : Er.A.இத்ரீஸ்





மதுக்கூரில் சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா

மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞான சபையில் செப்டம்பர் 14-ல் மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் சங்கைமிகு நமது உயிரினும் மேலான சங்கைமிகு ஷெய்கு நாயகத்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வஹ்தத்துல் உஜூத் பாடலை அல்லாமா அப்துல் கரீம் அவர்களும் கலீபா முகம்மது காலிது அவர்களும் Er.இத்ரீஸ் அவர்களும் அப்துர் ரஹ்மான் அவர்களும் சேர்ந்து பாடினார்கள் ,அதன் தமிழாக்கம் பின்னர் வாசிக்கப்பட்டது

.அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யாவும் கஸிதத்துல் அஹ்மதிய்யா வும் ஓதப்பட்டன.
கலீபா அட்வகேட் A.N.M.லியாக்கத் அலி அவர்களும் முகைதீன் அமானுல்லா அவர்களும் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.










மதுக்கூரில் பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்

ரமலான் பிறை 17 பத்ருசஹாபாக்களின் நினைவு தினம் கலீபா அட்வகேட் ஏ.என்.எம்.லியாகத்அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் வீட்டில் மஃரிபுக்குப் பிறகு நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஏகத்துமெய்ஞ்ஞான சபையின் கலீபாக்கள் மூத்த சகோதரர்கள் மற்றும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.



பிறை 1-லிருந்து பிறை 16 வரை பத்ரு சஹாபாக்களுக்காக முரிதீன்களும் பொதுமக்களும் ஓதிய 172 குர்ஆனும் 1728 யாசினும் ஹத்தம் செய்யப்பட்டது.



மேலும் பத்ரு சஹாபாக்களின் தியாகத்தை பொதுமக்கள் அறியவேண்டும் என்ற நோக்கில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு திறப்பதற்கும் பெண்கள் தொழக்கூடிய அனைத்து இடங்களுக்கும் 1300 க்கும் மேற்பட்ட பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.



மக்களுக்கு நினைவூட்டக்கூடிய வகையில் பிரியாணி பொட்டலத்தின் மேல் அட்டையில் பத்ரு சஹாபாக்களின் நினைவு வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.



உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்றம் வேலை அனைத்திற்கும் ஏகத்துமெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அயராது பாடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் அல்லாஹ்தாலா நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.



தகவல் – புகைப்படங்கள் இஞ்ஜினியர் இத்ரிஸ் மதுக்கூர்





























மதுக்கூரில் மகத்தான மஜ்லிஸ்

அன்புமிக்க சகோதரர்களே கிளியனூர் இஸ்மத் எழுதுகிறேன்.

விடுமுறையின் நிமித்தமாக இந்தியா வந்துள்ளேன். நமது ஆருயிர் சங்கைமிக்க வாப்பா நாயகத்தை மதுக்கூரில் வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்தில் தரிசித்தேன்.

எத்தனை முறைகள் தரிசித்தாலும் மனம் அடையும் ஆனந்தமும், அமைதியையும் என்னால் இங்கு வரிகளாக்க முடியவில்லை. தன்னைத் தேடிவந்த பிள்ளைக்கு அவர்கள் அள்ளித்தரும் அன்பை பருகுவதற்கு நான் திக்குமுக்காடினேன்.

மதுக்கூரின் நூற்றுக்கனக்கான குடும்பங்கள் நம் ஷெய்குநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்பித்து வக்கீல் கலீபா லியாகத்அலி அவர்களின் இல்லத்திற்கு சாரை சாரையாக வருகைப் புரிந்துக் கொண்டிருந்தார்கள்.
வாப்பா நாயகத்தின் உபநியாஷங்களை கேட்பதற்கு அதிகாலை பஜர் தொழுகையை முடித்துவிட்டு பல ஊர்களிலிருந்து முரீதுகளும், நல் அபிமானிகளும் திரளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை நிறைகளைக் கேட்டு ஆதரவான வார்த்தைகளும், அவர்களுக்காக துவாவும், ஏகமயமாய் பரிபூரண எண்ணத்துடன் வாப்பா நாயகம் செய்கிறார்கள்.

அவர்களை கண்டுச் செல்லும் பக்கதர்களின் முகம் மலர்ந்து செல்வதை என்னால் அங்கு காணமுடிந்தது.

வாப்பா நாயகத்தைக் கண்டு விட்டு உடன் ஊர் திரும்ப இருந்த எண்ணை உங்களுடன் நீண்ட நேரம் பேச முடியவில்லையே என்று அவர்கள் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு நான் மாலை வரை தங்கியிருப்பேன் என்றேன்.

மாலை நேரத்தில் எண்ணற்ற பக்தர்களை கண்ட ஆருயிர் நாயகம் அவர்கள் உணவு வேலையின்போது என்னை அருகில் அமரவைத்து உணவு பண்டங்களை அள்ளி அள்ளிவைத்த அந்த தாய்உள்ளத்தை என்ன வார்த்தைகளைக் கொண்டு எழுதுவது என்றே தெரியவில்லை.

இஷா தொழுகைக்குப்பின் பிள்ளைகளுடன் மருத்துவத்தைப் பற்றி உரையாடல் முடியும் நேரம் இரவு பத்து மணியைத் தாண்டியது… நான் ஊர் புறப்படுகிறேன் என்று கூறியபோது இந்நேரத்திலா வேண்டாம் காலையில் செல்லலாம் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார்கள்.
நான் அந்த இரவு புறப்பட்டிருந்தேன் என்றால் கோடைமழையில் நனைந்து சிரமம்பட்டிருப்பேன். அன்று இரவு தங்கியதால் காலை மஜ்லிஸின் ஞான மழையில் நனைந்து சந்தேகங்களை போக்கிக் கொண்டேன்.

இந்த இனிய நாட்களை என்னால் மறக்க இயலாது அதனால் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்… மிக்க நன்றி.!


















மீலாதுந்நபி பெருவிழா

அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் .


19.03.2011 சனிக்கிழமை மதுக்கூர் சிவக்கொல்லை A.K.S திருமண மண்டபத்தில்


தரீக்கத்துள் ஹக்கிய்யத்துள் காதிரிய்யா
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை
மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
சார்பாக
நம் உயிரினும் மேலான ரசூலே கரீம் ஷல்லல்லாகு அலைஹி வசல்லம் அவர்களின் மீலாதுந்நபி பெருவிழா காலை 9.30 முதல் நடைபெற்றது

ஜனாப் கலீபா முஹம்மது காலிது ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள்
அவர்கள் தலைமையேற்க ,


ஜமா அத்தார்கள் முன்னிலை வகித்தனர்

கிராஅத் திணை ஜனாப் M. அல்லாமா அப்துல் கரீம் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள் ஓதினார்கள் .


வரவேற்பினை ஜனாப் N.P.M பக்கீர் முஹைதீன் ஹக்கிய்யுள் காதிரிய் B.S.c., அவர்கள் நிகழ்த்தினார்கள்


நபிப்புகழ்ப்பாவினை ஜனாப் R.செய்யிது சலீம் மௌலானா, ஜனாப் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுள் காதிரிய்,


ஜனாப் M.அஹம்மது கபீர் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்களும் இசைத்தார்கள் .


சிற்றுரை : மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் இமாம் மௌலவி ஹாஜி ஷேக் அலி ரஹீமி அவர்களும்
மேலப்பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மது முஹைதீன் நூரி அவர்களும்
திருமக்கோட்டை பள்ளியின் இமாம் மௌலவி ஜாகிர் ஹுசைன் நூரி அவர்களும் வழங்கினார்கள் .


அண்ணல் நபியும் அஹ்லபைத்துகளும் என்ற தலைப்பிலே காயல் பட்டினம் ஜூம்ஆ பள்ளியின் தலைமை கதீப் மௌலவி ஹாபிழ் H.Aஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்


சிறப்பு சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .


ஆண்கள் பெண்கள் என 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது நிஹழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இருந்தது

நிஹழ்ச்சியின் முடிவில் (1.50p.m) உணவுபொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .


மன நிறைவோடும மகிழ்ச்சியோடும் விழாக்குழுவினர் கலைந்து சென்றனர் , எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே .


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள்.

தகவல் : கலீபா அட்வகேட் லியாக்கத் அலி ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்
புகைப்படங்கள் :Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்