This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.

அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.

மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.

மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.

அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.

நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.

உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.

Thanks Dinamalar

Regards,

S. Abul Bazar

உலக நட(டி)ப்பு

பிறப்பதும், வளர்வதும், உண்பதும், உறங்குவதும், சம்பாரித்தலும், திருமணம் செய்வதும், குழந்தைகள் பெறுவதும், முதியவராவதும், இறப்பதும் மனித வாழ்வில் நடக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள்.

ஆனால் ஏன் பிறந்தேன், பிறக்குமுன் எங்கிருந்தேன், நாம் வருவதற்கு முன்பே அனைத்து உலக வசதிகளும் தந்தது யார்? ஏன் வாழ்வில் கஸ்ட நஷ்டங்கள் சுக துக்கங்கள் இறப்பு ஏன் என்று சிந்தித்தலே வாழ்வின் இரகசியமும் அவசியமும் அறிவுடமையும் ஆகும். இதை அறிந்தால் வாழ்வில் துன்பங்கள் என்று ஒன்று இல்லை என்று அறிந்து வாழ்வை அர்த்தத்துடன் கூடிய வாழ்வாக ஆக்கிக் கொள்ளமுடியும்.

இயற்கையாய் இறைவன் தானே தனக்குள் நடத்தும் இந்த பிரபஞ்ச விளையாட்டில் நமது பங்கு நமது வேலை என்ன என்பதை தெரிந்துக் கொண்டால் அதை திறம்படச் செய்யமுடியும்.

உலகங்களின் ஆரம்பம் ஒன்றுமில்லை என்பதுபோல் தோன்றினாலும் இப்போதுள்ள பஞ்ச பூதங்கள் உயிரின தாவரங்கள் மனிதன் எல்லாம் அந்த ஒன்றிலிருந்துதான் வந்துள்ளது என்பது மறுக்க மறக்க முடியாத உண்மை. ஆதலால் இறைவன் இல்லை என்று கூறுவது மிகத்தவறான வாதமாகும் உலகத்திலுள்ள அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அதன் மூலகாரணியாகிய இறைவனை மறுப்பது குழந்தை தன் தாயை மறுப்பது போலாகும்.

திரைக்கதை ஆசிரியரின் அறிவில் தோன்றும் திரைக் கதைக்கு அவ்வபோது தேவையான கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் உண்டாக்குவது போல் ஒன்றான இறைவனே தன்னிலிருந்து தேவைக்கு ஏற்ப அதுவாகவே மாறுகிறான் என்பதுதான் சரியாகும். இதிலே ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கற்றவர் கல்லாதவர் வெற்றி பெற்றவர் பெறாதவர் உண்டு என்றாலும் எல்லாமே இறைவனின் வெளிப்பாடுகள் தான்.

இதில் அவரவர் அவர்களின் பங்கை சிறப்பாக செய்தால்தான் அந்த திரைப்படம் இரசிக்க தக்கதாக இருக்கும்.நடித்தவர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.ஆனால் எந்த ஒரு நடிகரும் நடிக்கும் அந்த கதாப்பாத்திரங்கள் உண்மையல்ல என்று உணர்ந்தாலும் அதில் ஒன்றித்து தன் முழுத் திறமையையும் காண்பிப்பார்கள் எனவே அவர்களின் கடும் உழைப்பைக் கொண்டு பொய்வேடத்திற்கு புகழ்மாலை கிடைக்கும்.

ஏந்த அளவுக்கு அந்த வேடம் சிறப்பாக செயல்பட்டுள்ளதோ அத்தனை காலம் அதன் தாக்கம் இவ்வுலகில் இருக்கும்.எனவே நம் உண்மை இந்த தோற்றம் இந்த வாழ்வு இல்லை என்றாலும் அதில் ஈடுபாட்டுடன் செய்தலே வாழ்வின் பெருமையாகும்.

ஆனால் நம்மில் பலர் இதுவேடம் என்பதை மறந்து இதுவே நிரந்தரமானது என மனதில் ஆக்கிக் கொண்டு வேடம் கலையும்போது அல்லல் படுகிறார்கள். அதுமட்டுமல்ல நடிப்பில் ஏற்படும் கதைக்கேற்ற கஷ்ட நஷ்ட சுக துக்கங்களை தனதாக்கிக் கொள்கின்றனர்.இது நடிப்பில் அறிவீனம் என்பது எல்வோரும் அறிவர். ஆனால் தனது சொந்த வாழ்வில் இதை சிந்தித்து ஏற்று நடக்க மறுக்கின்றனர்.

நாம் நமக்குள்ள அறிவு, ஆற்றல், திறமை, தகுதிக்கு ஏற்ப வாழ்வை அமைத்து அதில் திறம்பட வாழ்ந்து வேடம் களையும் போது நம் உண்மை நிலைக்கு செல்வதே உண்மையாகும்.இதை அறிந்து வாழும்போது வாழ்வும் சிறக்கும்.
கஷ்டங்களை, நஷ்டங்களை, விருப்பு, வெறுப்புகளை நம்மை வந்து சேராது காத்துக் கொள்ளவும் முடியும்.

இதைத்தான் நபிமார்கள், ரசூல்மார்கள், எல்லாம் வாழ்ந்துக் காட்டி நமக்கும் அதை போதித்துள்ளார்கள்.இதை அப்படியே இன்றும் குத்துபமார்களும், வலிமார்களும், மகான்களும் பின்பற்றி வாழ்ந்தும் வாழ்ந்துக் காட்டி போதிக்கவும் செய்கிறார்கள்.இதை உண்மைதான் என்று அறிந்தவர்கள் இவர்களுடன் சேர்ந்து வாழ்வை வளமாக்கி தமது முடிவை அழகாக்கி என்றும் நிரந்தரமாக இருக்கும் இறைவனுடன் இணைந்துதான் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்று அறிஞர்களாக வாழ்கின்றனர்.

நபிமார்களும், ரசூல்மார்களும் மக்கள் எல்லோரும் இந்த உலக நாடக மேடையில் மனதை பறிக் கொடுத்துவிடாமல் நடிப்பு வாழ்வின் இலக்கணத்தை தமது போதனைகள் மூலம் மதமாக, மார்க்கமாக ஆக்கி தந்துள்ளார்கள்.இந்த உண்மையில் உறுதியாக இருந்து வாழ்ந்து காட்டிய வாழ்வே பின்பு மதமாக, மார்க்கமாக ஆகியது என்றால் வியப்பில்லை.

இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன் புறத்தில் இருந்து வந்து தங்கள் வாழ்வை மக்களுக்கு அர்பணித்து வாழ்ந்த வாழும் மனித புனிதர்களின் சேவைக்கு இந்த உலகில் ஏதும் ஈடாக முடியாது.அவர்களிடம் இருப்பதெல்லாம் அனைவரும் ஓர் உண்மையே அதனால் ஏற்படும் மனிதநேயமே அன்றி வேறில்லை இவர்களை தூற்றுபவர்கள் தங்கள் வாழ்வில் ஏமாளிகளாக வாழ்ந்து வாழ்வில் பல இன்னல்களை தனதாக்கி கொண்டு உடல் இழக்கும் நேரத்திலே சொல்லொன்னா துயரங்களை உணர்வர்.

ஓர் ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல பல வழிகள் இருக்கலாம் எதில் சென்றாலும் சேர்ந்துவிடலாம் அதில் இலகுவானது உண்டு, சுருக்கமானது உண்டு, வசதியானது உண்டு இதில் அவரவர் தங்கள் பிறப்பின் மூலம் அறிந்த மார்க்க வழியை பின்பற்றி அதிலுள்ள உண்மை எதைக் கூறுகிறது என்று வாழ்ந்தால் மனிதர்கள் அனைவரும் ஒரே குறிக்கோளை உடையவர்களாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை இப்படி வாழும்போது நமக்குள் ஏது பிரிவு பிளவு என்பது விளங்கி ஒற்றுமையுடன் வாழ்வோம்.எது பெரிது எது சிறிது என்ற வாதங்கள் இல்லாமல் உண்மை வாழ்வை வாழ்தலே மனித வாழ்வின் இரகசியம் ஆகும்.

A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி
துபாய்

அறியாத மக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒருவர் தன் உறவுகள் மற்றும் அனைவரையும் விட நேசம் வைக்காதவரை- உண்மை விசுவாசியாக முடியாது.

அதேபோல அவர்களின் வாரிசுகளான அஹ்லபைத்துகள் மீது உள்ளன்பு கொள்ள வேண்டும் என்பதை “நபியே! என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கூலியும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுங்கள்!”.என்ற இறைவசனம் உணர்த்துகிறது. ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களுக்கு அஹ்லபைத்துகளைத் தெரியாது. அண்ணலாரின் வாரிசுகளைப் புரியாது.

அஹ்லபைத்துக்கள் மீது பிரியம் வைக்காமலிருப்பது கூட ஏதோ அறியாத நிலை என எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் மீது வெறுப்புக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது என்றால் அது வியப்பான செய்தியாகத்தான் தெரியும்.

ஆனால் உண்மை அதுதான்! முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) . ஏர்வாடி இப்றாஹிம் பாதுஷா (ரலி) நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா (ரலி) திருச்சி தப்லே ஆலம் பாதுஷா (ரலி) இன்னும் இவர்கள் போன்ற இறைநேசர்களான அவ்லியாக்களை முஸ்லிம்களில் ஒரு சிலர் தூற்றுகின்றனர். பெரும்பாலானோர் அதை ஆமோதிப்பதுபோல அமைதியாக இருந்து அவ்லியாக்கள் மீது உள்@ர ஒரு வெறுப்பை புதைத்து வைத்திருக்கின்றனர்.

இந்த அவ்லியாக்களெல்லாம் யார் தெரியுமா? அஹ்லபைத்துகள் என்னும் நபிகுல வாரிசுகள்.

அவ்லியாக்களை ஏசுறோம் என்ற பெயரில் அஹ்லபைத்துகளை ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்வோ அவர்களை நேசிப்பது கடமை என வலியுறுத்தி இருக்க அவர்கள் மீது கோபம் கொள்வது அவர்களை வெறுப்பது போன்ற நிலை முஸ்லிம்கள் செய்யக் கூடிய செயலா? ஆனால் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது? முன்பெல்லாம் அண்ணலாரின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை நினைக்காத-அவர்கள் புகழ்பாடாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா? என்ற பாடல் ஒலிப்பது கூட சிர்க் என்ற அநியாய நிலை. அன்று முஹர்ரம் வந்து விட்டால் கர்பலாவில் ஷஹீதான இமாம் உசேன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவு கூறாத நெஞ்சங்களே இருந்ததில்லை. ஆனால் இன்று இமாம் ஹஸன் உசேன் (ரலி) ஆகியோரின் கண்ணீர்க்கதை அநேக முஸ்லிம்களுக்கு அறிமுகமில்லை. இது போற்றப்பட வேண்டிய நிலைதானா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு தொழுகையின் உள்ளும் அல்லாகும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலா ஆலி முஹம்மதின் இறiவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்-அவர்களின் கிளையார்களான வாரிசுகள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்வாயாக! ஏன தாம் சொல்வது இன்னதென அறியாமலே கூறும் சமுதாயம் தொழுகைக்கு உள்ளே அவர்களை நினைத்து புகழ்பாடுவதுபோல தொழுகைக்கு வெளியேயும் அவர்களை நினைப்பது-புகழ்வது அவர்களின் வாழ்க்கைமூலம் பாடம் பெறுவது சிர்க் அல்ல. தவறல்ல என்பதை அறிந்து விளங்கவேண்டும்.

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆன் மற்றொன்று எனது அஹ்லபைத்துகளாகிய வாரிசுகள். இந்த இரண்டையும் பற்றி நிற்கும் வரை நீங்கள் வழிமாறிப்போக மாட்டிர்கள்!

-தலையங்கம் மறைஞானப் பேழை

உலக அமைதிக்கு உண்மை வழி

இன்று உலகத்திற்குத் தேவையானது எது.?

அமைதி .

மனிதர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் பொது அமைதிதேவை. ஆமைதி நிலவாவிட்டால் எவ்வளவு பணம் பொருள் இருந்தும் நிம்மதி இருக்காது.

உலகம் அமைதியாக இருக்க என்ன வழி.?

மக்களுடைய மனதில் ஆழமாக பதித்து கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் அனைத்தும் மனதில் இருந்து நீங்கினால்தான் ஒற்றுமைக்கு வழிபிறக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் அமைதி தானாகவே வந்து விடும். ஆனால் காலகாலமாக இருக்கும் வேற்றுமை உணர்வுகளை நீக்க முடியுமா.?

நிச்சயமாக முடியும்.

அதற்கான வழிகள் என்ன.?
இந்த வேற்றுமை உணர்வுகளை மக்கள் மனதில் இருந்து பிடுங்கி எறியவது எப்படி.? அல்லது இதற்கு என்ன வழி.?

ஆருயிர் செய்கு நாயகம் ஆன்மீக குருநாதர் சங்கைமிகு மகான் ஜமாலிய்யா கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் சீரிய வழியைக் காட்டுகிறார்கள். இவர்களின் ஞானக் கருத்துக்களை மக்கள் உணர்ந்தார்களேயானால் தங்களது மனதில் மிகமிக ஆழமாக பதிந்து பரவிக்கிடக்கும் வேற்றுமை உணர்வுகள் சூரியனைக் கண்ட பனிப்போல உருகி மறைந்துவிடும்.
அவர்ளுடைய இறையருட்பா எனும் ஞானக்கவிதை நூலில் இருந்து சில உதாரணங்களைக் காண்போம்.

வேரொடு தண்டு கோடு
வேறிலை பூவுங் காயும்
பூரண மாக நின்ற
போதினில் மரம தாகும்
ஓரிலை யேனு நீங்கின்
உருபெயர் மரமும் நீங்கி
சீரிலை யென்ற நாமம்
சீர்த்திடு முண்மை யாலே.

வேர், தண்டு, இலை, பூ, காய், கனி இவைகள் அனைத்தும் பூரணமாக மரத்தில் இருக்கும்போது அதனைத் தனித்தனியாக நாம் பார்க்க மாட்டோம். அதை மரம் என்று சொல்வோம். அந்த மரத்தில் இருந்து இலையை மட்டும் பிரித்து மரத்திலிருந்து நீக்கிவிட்டால் மரம் என்ற சொல் நீங்கி இலை என்ற நாமத்தை அது பெறுகிறது. அதைப் போலவே

அவ்வகைத் தேயும் கொம்பும்
அருவேர் தண்டு மெல்லாம்
அவ்வுரு மரத்தினின்று
அற்றிடுங் காலை யாவும்
இவ்விகை யாவும் தத்தம்
இடுபெயர் மரமு நீங்கி
ஓவ்வொரு பெயரி னாலே
உணர்த்திடும் தம்மை யாமே.

கோம்பு, இலை, வேர், தண்டு ஆகியவைகளை அம்மரத்திலிருந்து நீக்கும்போது மரம் என்ற பெயர் நீங்கி கொம்பு வேர் தண்டு என்ற தனிப் பெயரையடைகிறது. அதைப்போலவே

சினைபல கொண்ட தாக்கை
சீரதற் குண்டு நாமம்
நினைவினற் கொள்ளு தற்கு
நிறுத்துக மனித னையே
சினைபல யாவுங் கொண்ட
சீருட லுயிரி னோடு
அனையது தானே மாந்தன்
ஆவது காண்க நீரே.!

மனிதனுடைய உடல் பல உறுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. மொத்தத்தில் மனிதன்தான் உடல் என்று சொல்கிறோம்.

பல உறுப்புகளைக் கொண்ட மனிதனுடைய உடலுடன் உயிரும் சேரும்போது மனிதன் என்று சொல்கிறோம் அது போல

தன்னுட னின்று கையைத்
தானே நீக்கி வேறே
பின்னிடம் வைப்ப தாகில்
பிரிந்த வென் கையு மென்றன்
இன்பெயர் கொண்ட தாமோ
இவ்வகை உலகி னிற்கும்
மண்பொருள் யாவு மென்க
மாண்பிணி னான தானேன்.

விளக்கம்.
மனிதனுடைய உடம்பில் இருந்து கையை தனியாக நீக்கி (வெட்டி) தனியாக வைத்து விட்டாலும் அந்தக் கை மனிதனுடைய கை தானே.
இது என்னுடைய கை என்று தான் சொல்வேன். இதைப்போலவே இவ்வுலகத்திலுள்ள சிருஷ்டிப் பொருள்கள் அனைத்தும் தனித்தனியாப் பெயரைக் கொண்டு நிலைத்து நின்றாலும் அவை அனைத்தும் மாபெரும் சக்தியாகிய இறையிலிருந்து வந்தது தான் என்பதை உணரவேண்டும்.

கையது பிரிந்த போது
கொண்டதோர் நாம(ம்)நீங்கி
கையென வான போலும்
கருத்தினி றைந்த வொன்றாம்
மெய்யிறை நின்று வந்த
மேன்மிகு சிருட்டி யெல்லாம்
பெய்ம்முதற் பெயரு நீங்கிப்
பெற்றது வேறு பெயரே.

மனிதனுடைய உடம்பிலிருந்து கையைத் தனியாகப் பிரித்தவுடன் மனிதன் என்ற பெயர் நீங்கி கையென்ற பெயர் பெற்றாலும் கருத்தினில் எங்கும் நிறைந்து ஒன்றாய் விளங்கும் இறையிடமிருந்து வந்த மேன்மைமிக்க சிருஷ்டிகள் எல்லாம் இறை என்ற பெயர் நீங்கி தனித்தனிப் பெயர்களைப் பெற்று நிற்கின்றன.

கரமது பிரிந்த போதும்
மனிதறன் கரம தாகும்
அருமிறை தன்னி னின்று
அற்புத சிருட்டி யெல்லாம்
உருவதிற் பிரிந்த போதும்
உத்தம வொன்றி னின்றாம்
அருவமு முருவ மெல்லாம்
ஆதிய தாகு மம்மே.

மனிதனுடைய உடலிலிருந்து கரத்தைப் பிரிந்த போதும் அது மனிதனின் கரமதாகும். அதைப்போல இறைவனிடமிருந்து தோன்றிய சிருட்டிகளெல்லாம் உருவத்தில் தனித்தனி பெயரைக் கொண்டாலும் அதுஇறையின் அங்கங்களாகும்.
மனிதனின் அருவமான உயிரும் வெளியில் கண்களுக்குத் தோன்றக்கூடிய உடலும் இறைவனின் பகுதிகளாகும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? சிருட்டிப் பொருள்கள் அனைத்தும் இறையிலிருந்து வந்த இறைவனின் பகுதிகள் அங்கங்கள் என்று வைத்துக் கொள்வோமே.!
இக்கருத்தினை உணர்ந்தால் ஜாதி மதம் இனம் மொழி பணக்காரன் ஏழை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றும்.?
வேற்றுமை உணர்வுகள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும். அப்போது ஒருவருக்கொருவர் உண்மையிலேயே பாசம் நேசம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். ஒருவருக்கு கஷ்டம் வந்தால் தனக்கு வந்தது போல நினைத்து உதவிகள் செய்வார்கள்.

ரசூல் (ஸல்)அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து காட்டினார்கள். ஏன்.? இன்றைக்கு நமது சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களும் தங்களின் முரீதுப் பிள்ளைகளோ அல்லது பொது மனிதரோ தங்களது கஷ்டத்தைக் கூறும்போது அதை உளமார பொறுமையாக இருந்து கேட்டு மனமுருகி அல்லாஹ்விடம் துஆச் செய்து அவர்களது துன்பத்தை நீக்குகிறார்கள்.
புத்தர் ஓர் ஆட்டுக்குட்டி நொண்டிச் செல்வதைக் கண்டு மனமுருகி அதைத்தன் தோளில் சுமர்ந்தார்.
சிபிச் சக்கரவர்த்தி புறாவை வேடனிடமிருந்து காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தார்.
வள்ளல் பாரி பரிதவித்துக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்கு தன் தேரை நிறுத்திச் சென்றார்.
ஒரு பெரியார் தங்களது சட்டையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பூனையை விரட்டாமல் அது விழிக்கும்வரை பொறுமையாக இருந்தார்.
வள்ளலார் இராமலிங்க சுவாமி அவர்கள் வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடினார். இவைகளெல்லாம் உதாரணங்கள். இதை நாம் கருத்தற்ற செயலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சிந்தித்தால்தான் அதன் தாற்பரியம் புரியும்.

இத்தகையசர்கள் மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டார்கள். தானாகவே எங்கும் இன்பம் பொங்கும். மக்கள் சந்தோசமாகவும் வாழ்வார்கள். அதன் பயனாக உலகமே அமைதியடையும். ஆகவே உண்மையான இறைத் தத்துவத்தை
அறிந்துக் கொண்டால்தான் தான் யார் மற்றவைகளும் எது ?
இறைவனுக்கும் நமக்கும்முள்ள தொடர்பு என்ன வென்பது விளங்கும். இதுதான் உண்மையான ஆன்மீகம். ஆகையால் சங்கைமிகு நாயகம் அவர்களின் உபதேசங்கள் ஞானப் பாக்களை ஆராய்ந்து பயனடைவோமாக…!

நன்றி – எஸ். காஜா நஜ்முத்தீன் ஹக்கியுல் காதிரிய் திண்டுக்கல்

நன்றி – மறைஞானப் பேழை