This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label மஜ்லிஸ் 1/2010. Show all posts
Showing posts with label மஜ்லிஸ் 1/2010. Show all posts

தனக்கு பெயரை தானே அமைத்தான்: மஜ்லிஸ் - 3.

நாள்: சனிக்கிழமை

தேதி: 03/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)


பரம் என்றால் பொருள்.?
அது எப்பவுமே இருக்கின்ற பொருள். அது பழையது அல்ல. அது இப்போதுதான் உண்டானது என்று சொல்ல இயலாது. தமிழில் பரம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒரே கருத்துதான். ஆனால் அறபுச் சொல் அல்லாஹ்விற்கு நிகரான வேறு எந்தச் சொல்லும் எந்த மொழியிலேயும் இல்லை.
God, இறைவன், கடவுள், பரம் என்று பலவகையிலும் எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் அல்லாஹ் என்று மட்டும்தான் சொல்கிறோம். ரஹ்மான், ரஹீம் என்பதெல்லாம் அவனுக்குரிய பெயர்கள்தான். ஆனால் முழுமையான பெயர் என்னவென்று கேட்டால் அல்லாஹ்.
அந்த அல்லாஹ் என்று சொல்லுக்கு நிகரான எந்தவொரு வார்த்தையுமே வேற எந்தவொரு மதத்திலேயுமே வரவில்லை. அல்லாஹ் என்ற ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து பார்க்கின்ற நேரத்திலேயும், பல எழுத்துக்கள் சேர்ந்த ஒரு சொல் அல்லாஹ் என்பது. அவ்வளவு சீக்கிரமாக, சிறுசாக, அழகாக அல்லாஹ் தனக்கு பெயரை அமைத்து வைத்திருக்கின்றான். பொதுவாக பரம் என்று சொல்வது பரம்பொருள். மிகப் பழமையானவன்.கதீம். அளவில்லாதவன் எப்ப பழசானான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு பழசு. போக போக போய்க்கொண்டேயிருக்கும் அது.
அது நித்திய பரம். எப்பவுமே அழிவதுமில்லை, கூடுவதுமில்லை, குறைவதுமில்லை, அகலப்படுவதுமில்லை. அதற்கு உயர்வு, தாழ்வு, உயரம், பள்ளம், வலது, இடது எதுவுமே அந்த அல்லாஹ்விற்கு இல்லை. அதைப்பற்றி நாங்கள் விளங்கினால்தான் மனம் போய் சேரும்.
அறிவு அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் போய் சேரலாம். அல்லாமல் நாங்கள் சும்மா அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிவிட்டு, போய் சேர வேண்டுமென்றால் எப்படி போய் சேர்வது.
மெட்ராஸுக்கு போய் சேர வேண்டுமென்று ராமேஸ்வரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி போய் சேர்வது?
ராமேஸ்வரத்தில்தான் அவர் இருப்பார். ஏன்? மெட்ராஸுக்கு போகத் தெரியாதே. ஆக மெட்ராஸ் என்றால் என்ன, எப்படி போக வேண்டும் என்று அந்த Mapபை (வரைப்படம்) எடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதற்கு போகிற வழி என்ன?, எந்தமாதிரியெல்லாம் போகலாம் என்பதை அறிய வேண்டும். அறிந்து நாங்கள் போனால்தான் மெட்ராஸுக்கு போய்ச் சேர இயலும். இல்லாவிட்டால் ராமேஸ்வரத்தில்தான் இருப்போம். அதுபோல், அல்லாஹ்வைப்பற்றி அறியக்கூடிய அந்த பாதைகளை, வழிகளை நாங்கள் அறிய வேண்டும். அறிந்து நாங்கள் அதோடு சங்கமமாக வேண்டும். சங்கமம்தான் நெருங்குவது. அல்லாஹ் ஒருவன் என்பதை அறிந்த பிறகுதான் அந்த இடத்திற்கு நாங்கள் போகலாம். அல்லாஹ் ஒருவன். அவன் எப்படி ஒருவன்? அவன் எங்கே இருக்கிறான்? எந்த மாதிரி இருக்கிறான்? எல்லாவற்றையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிய பிறகுதான் எங்களுக்கு அங்கே போக இயலும். அவனைப்பற்றி அறிய வேண்டும். அதற்கு பிறகுதான் சங்கமம்.



அறிவைக் கொண்டு அறிந்தால் சங்கமம்:



"ஸித்ரதுல் முன்தஹா" வரையில்தான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும், ஜிப்ரீல்(அலை) அவர்களும் போனார்கள். அதுவரை சேர்ந்த பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொல்கிறார்கள், இதற்கு பிறகு என்னால் போக இயலாது, நீங்கள் போய் கொள்ளுங்கள் என்று. அப்போது ரசூலுல்லாஹ்(ஸல்) போனார்கள் அதுதான் சங்கமம். அங்கு போனதுதான் சங்கமம். அதுவரை இருந்ததெல்லாம் அறிவு. அந்த அறிவோடு போய் அந்த இடத்திற்கு போனால் சங்கமம் உண்டாகும். அதற்குண்டான மாதிரி நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது அறிவுதான். அறிவைக் கொண்டுதான் அல்லாஹ்வைப்பற்றி அறிய இயலும். எவ்வளவுதான் நீங்கள் அல்லாஹ், அல்லாஹ் என்று உருட்டினாலும் புண்ணியமில்லை. அல்லாஹ் என்ற அறிவை நாங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப்பற்றி அறிய வேண்டும். "மன் அரப நப்ஸஹு ஃபகத் அரப ரப்பஹு". ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்படி போய் அல்லாஹ்வை சேர்ந்தார்களோ, இரண்டற கலந்தார்களோ அப்படி போய் ஹக்கைச் சேர வேண்டும். அல்லாஹ்வோடு ரசூல்(ஸல்) பேசினார்கள் என்று சொல்வது இரண்டற கலந்தார்கள் என்ற கருத்து. போகும் வரையில் நாங்கள் அறிவோடு சென்று பின்னால் பரிபூரணமாக ஹக்கோடு கலப்பதுதான் சங்கமம் என்று சொல்வது.



காட்டை விட வீடே சிறந்தது:



துறவறத்தில் சொல்கிறார்கள் இல்லத்துறவு. வீட்டில் இருந்து கொண்டு துறவறம் பூண்டுவது. மற்றது வெளியே போய் காட்டில் துறவறம் பூண்டுவது. காட்டிற்கு போய் தனியாய் இருந்து துறவறம் செய்வதை விட வீட்டிலேயே இருந்து நாங்கள் துறவறம் செய்வது மிக நல்லது. நாங்கள் வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறோம். குடும்பத்தை கவனித்தல் ஃபர்ளாகிவிட்டது. அதோடு எங்கள் மனத்தை கட்டுப்படுத்தி அதன்படி நாங்கள் நடந்து வருவதுதான் முக்கியமானது. அதுதான் இல்லறம், இல்லத்துறவு. காட்டிற்கு போய் துறவறம் செய்வதனால் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. அதில் திடீரென்று ஒரு நிலையை அடைய முடியாது. காட்டிற்கு போய் பழகும் வரையில் பல வகையான கஷ்டங்களை நாங்கள் அநுபவிக்க வேண்டிய சந்தர்பம் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் இங்கேயே இருந்துக் கொண்டு பலவகையான சந்தர்ப்பங்களையும் பெற்றுக் கொள்கிறோம். அவர்கள் காட்டில் போய் இருப்பதை விட இந்த உலகத்திலேயே நாங்கள் நடந்துக் கொள்வது சில முக்கியமான விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம். ரசூல்(ஸல்) அவர்களுக்கு மக்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்திலேயே வஹீ வந்துவிடும். அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் மக்களோடும் பேசிக் கொண்டு, இங்கு வஹீயையும் சொல்வார்கள். இதெல்லாம் இல்லறத் துறவு. வீட்டை, மற்ற எல்லோரையும் விட்டுவிட்டு போவது துறவல்ல. இருந்தே நாங்கள் துறவு செய்வதுதான் நல்லது. அதில்தான் எல்லா வகையான பயிற்சிகளும் எங்களுக்கு உண்டாகிறது. துறவு என்றால் அல்லாஹ் அல்லாததை துறந்துவிடுதல். அல்லாஹ் அல்லாதது இல்லை. எல்லாமே பரிபூரணமாக அதுதான் என்று மற்ற எல்லாவற்றையும் துறந்து விடுவது. மனிதனாக நினைப்பதை, மற்றவகையாக நினைப்பதையெல்லாம் மறந்துவிடுவது. நாங்களே இல்லையென்று நினைப்பது. இதுதான் முக்கியமான துறவு. ரசூல்(ஸல்) அவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஹீராவில் போய் கொஞ்ச காலம் இருந்தார்கள். அது அவர்களுடைய மனம் rest க்காக இருந்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்களே. அதற்கு பிறகு வந்ததெல்லாம் வீட்டில் கதைச்சு கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு வஹீ இறக்கப்பட்டது. ஆகவே வீட்டில் இருந்து கொண்டே துறவு செய்வதுதான் மித்த நல்லது. வேறோன்றுமில்லை நான் மட்டும்தான் என்று நினைத்துவிட்டால் அதுவே கல்வத் ஆகிவிட்டது.



ஊழ்வினையை போக்குவோமே ....



ஊழ்வினை என்றால் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடிய வினை என்று சொல்வது. பழங்காலச் செயல்கள். அதுதான் எங்களை வந்து இது செய்கிறது என்று ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஊழ்வினையை போக்கி அல்லாஹ்வுடைய உறுதுணையை நாடுவது. அவனுடைய உறுதுணையை நாடிவிட்டோம் என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் இருந்து வரக்கூடிய ஊழ்வினைகள் எங்களுக்கு இருக்காது. எல்லாவற்றிற்குமே அல்லாஹ் போதுமானவன். வேறு எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) போதும் என்பதுதான் அதனுடைய கருத்து.

ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

நன்றி - அமீர்அலி
ஆதம் அப்துல்குத்தூஸ்

மஜ்லிஸ் - 2.







நாள்: வெள்ளிக்கிழமை



தேதி: 02/04/2010



இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)



அவர்களின் இல்லம், தேரா, துபை.



நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)











பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், என் அன்பிற்குரிய முரீதுகளே, இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).



நேற்று, நாங்கள் தொடக்கமாக ஒரு சில விஷயங்களை பேசி வந்திருந்தோம். இன்று பொதுவாக ஷெய்கு எப்படி இருக்க வேண்டும். அதே நேரத்தில் முரீதீன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பொதுவான ஒரு இலக்கணம்.





ஷெய்குக்குரிய‌ இலக்கணம்.





ஒரு ஷெய்கு என்பவர் ஞானம் தெரிந்தவராக இருக்க வேண்டும். உலகத்தில் வழி நடத்துவது மட்டுமல்ல ஆகிராவுடைய விஷயங்களை பற்றிய விளக்கங்களையும், அவர்களை எப்படி அங்கு வழி நடத்த வேண்டும் என்பதையும் அறிவதற்க்காகத்தான் இந்த ஞானம் என்ற அறிவு ஒரு ஷெய்குவிற்கு மிகவும் கட்டாயம். ஆகவே, இந்த ஞானம் தெரியும் என்று சொல்லிவிட்டு, பாதியிலேயே அவர் (ஷெய்கு) இருக்கிறார் என்பதை எப்படி அறிந்துக் கொள்வீர்கள்? ஒரு சிலர் அப்படியும் இருக்கிறார்கள்தானே. ஞான விஷயத்தை கேட்டால், அவர் சொல்வது பொருத்தமில்லாத விளக்கங்களாக‌ இருக்கும். ஜாடிக்கு சரியான மூடி என்பார்களே, அந்த மாதிரி தான் கேள்விக்கு மறுமொழி இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கருத்து விளங்காத விஷய விளக்கமாய் இருக்கும் அது. தெளிவாக சொல்ல முடியாத சில விஷயங்களும் உண்டு. அதை விளங்கக் கூடிய முறையில்தான் அதை விளங்க வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே ஒருவரை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

ஒருவர் வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் நிலைமை என்னவென்று அவருடைய பேச்சைக் கொண்டே கண்டு பிடித்து விடலாம். அல்லது அவருடைய முகப் பார்வையை கொண்டும் கண்டு பிடித்துக் கொள்ளலாம். இல்லை, அவர் பேசக் கூடிய வார்த்தைகள் கலங்கமாய் இருக்கும். நல்லதாய் இருக்கும், இந்த வகையில் பேசுகிறவர்களைக் கொண்டு கண்டு பிடித்து கொள்ளலாம். அதாவது, மழுப்பக் கூடிய சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்க‌ள். தெரியாதவர்கள் மழுங்கி போய்விடுவார்கள். ஆனால் தெரிந்தவர்கள் அந்த மழுப்பை மனதுக்கு எடுக்காமல் இந்த பொருள் சரியில்லையென்று இருந்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் பொருந்தும். யாராக இருந்தாலும் எந்த ஷெய்குவாக‌ இருந்தாலும் அந்த ஷெய்கிற்கு அது பொருத்தமானது. என்னையும் கூட்டித்தான் சொல்கிறேன். ஆக, ஷெய்கிற்கு முக்கியமாக தேவைப்படுவது ஞான விளக்கம். அதுதான் மிகவும் அவசியம். பைஅத் என்று சொல்வது அல்லாஹ் வரை போகக் கூடிய விஷயம். அந்த பைஅத் எப்படி இருக்க வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கொடுப்பதனாலேயும், ஞானத்தை இரண்டு புத்தகங்களில் வாசித்து விட்டு பேசுவதனாலேயும் ஞானம் ஆகாது. அதில் விஷய விளக்கம் நுணுக்கமானதாய் இருக்கும். சில விஷயங்களை நுணுக்கமாய் அறிந்துக் கொள்ள வேண்டும். நுண்ணியது, நுண்ணியது என்று சொன்னாலும் அதில் எந்தவொரு கருத்தும் இருக்காது. அந்த நுண்ணியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.







ஒரு பேச்சில் கூட நுணுக்கம் இருக்கிறது. அதை விளங்கி பேசுபவர்களுக்குத்தான் அது தெரியும். ஞானத்தில் மிகவும் நுண்ணியமான விஷயங்களை விளங்க கூடிய தன்மை மனிதனுக்கு இருக்க வேண்டும். "ஸிராத்துல் முஸ்தகீம்" பாலம் என்று சொல்வது அதுதான். சரியான தவ்ஹீதுடைய நிலை இல்லையென்று சொன்னால் அவர் கீழே விழுந்துவிடுவார். கீழே விழுந்தால் அதுதான் நரகம். அப்படியானவர்கள்தான் ஞானிகள், ஷெய்குமார்கள் என்ற நிலைமையில் இருக்க வேண்டும். இது எல்லோருக்குமே பொருத்தமான ஒரு இலக்கணம். இப்படியான ஷெய்குகளுக்கு முரீதுகள் எப்படி இருக்க வேண்டும்?







முரீதுகளின் இலக்கணம்







ஷெய்குவிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்க வேண்டும். ஷெய்கு சொல்வதை விளங்ககூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஷெய்குவிற்கு முன்னால் முரீது மய்யித்தை போன்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்படி, எதை சொன்னாலும் சரி என்று போக வேண்டும்.







ஆனால் கேட்பதை திரும்ப, திரும்ப மரியாதை இல்லாத முறையில் கேட்பதாக இருந்தால் ஒரு முரீது ஒரு ஷெய்குவிடம் கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அப்ப அந்த முரீது பொருத்தமானவர் அல்ல. அவர் ஏதோ தன்னுடைய கெட்டித்தனத்தை காட்டுவதற்காக வந்து பேசுகிறார் என்றவொரு நிலை உண்டாகிவிடும். எந்த ஒரு நிலையிலும் மய்யித் போன்று இருக்க வேண்டும். மய்யித்தை கழுவுகிற நேரத்தில் கையை உயர்த்துவது, காலை உயர்த்துவது எல்லாம் கழுகிறவர்களுக்கு உள்ள வேலை. அதற்கு (மய்யித்) ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும் இவர் செய்து முடித்து விடுவார். அந்த மாதிரி ஷெய்குவிடம் இருக்கின்றவருக்குத்தான் ஞானம் என்று சொல்கின்ற விளக்கம் உட்புகும்.







ஒரு அரசன் ஞானியை காண்பதற்காக போயிருந்திருக்கிறார். அங்கு வாயிலில் ஒரு காவலாள் இருந்துள்ளார். நான் சாமியை பார்க்க போக வேண்டும் என்று சொல்ல, இல்லை இப்ப உங்களுக்கு பார்க்க முடியாது என்று காவலர் சொல்லிவிட்டார். இல்லை நீ போய் சொல் அரசன் "நான்" வந்துள்ளேன் என்று. இல்லை போய் என்னால் சொல்ல இயலாது என காவலர் கூற, இல்லை, நீ போய் சொல் “அரசன் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என உத்தரவிடுகிறார். இப்படி இரண்டு மூன்று தடவை சொல்லியாகிவிட்டது காவலர் போய் சொல்லிவிட்டார் ஞானியிடம். அந்த ஞானி மறுமொழி சொல்கிறார் "நான்" செத்த பிறகு அவரை வரச் சொல் என்று. அப்படியென்றால் “நான்” என்ற‌ அகந்தை போன பிறகு வரச் சொல் என்று.







தற்பெருமை, அகந்தை இருந்தால் ஒருக்காலமும் அதில் எந்தவொரு புண்ணியமும் இருக்காது. ஆனால், முரீதீன்கள் எல்லாவற்றையும் விளங்கினவர்களாக கேட்டுக் கொள்ள வேண்டும். பலமுறை கேட்கின்ற நேரத்தில் இன்றைக்கு ஒரு விஷயத்தை கேட்கிறார் விளங்கவில்லை. அவர் அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக வருகிறார் என்றால் விஷய விளக்கம் அவருக்கு சும்மாவே வந்துவிடும். ஒரு நூலை படிக்கின்றீர்கள் இன்றைக்கு விளங்கவில்லை, நாளைக்கு படிக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள். திடீரென்று யாரோ சொல்லி தந்தது போல ஞாபகம் வரும். இதுதான், ஞானத்துடைய முழுமையான கருத்து விரும்பி படிக்க வேண்டும். குர்ஆனைக் கூட சும்மா பொதுவாக‌ எல்லோரும் ஓதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விஷய விளக்கமுள்ளவர்கள் குர்ஆனை ஓதினால் பல்லாயிரக்கண‌க்கான கருத்தை அதற்கு எடுத்துக் காட்டுவார்கள். குதுபு நாயகம் அவர்கள் குர்ஆனுக்கு எத்தனையோ பொருளை சொல்வார்களாம். முரீதீன்கள் அந்த மாதிரியான முழுமையான விளக்கம் பெற்று இருக்க வேண்டும். ஷெய்குவிடம் முழுமையான நம்பிக்கையும் இருக்க வேண்டும். ஷெய்கைப் பற்றி சந்தேகத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு சபை இல்லாமல் ஆக்குவதற்கு எண்ணம் வைத்திருந்தார்கள் என்றால் அது நடக்காது, அவரவர்களே சபையிலிருந்து போய்விடுவார்கள். முனாஃபிக்தனமாக ஒரு சிலர் நடக்கிறார்கள். முனாஃபிக் என்று சொல்லிவிட்டால் ஒரு பாரமான வார்த்தை மாதிரி கருதுகிறார்கள். ஒரு பாரமான வார்த்தைதான் அந்த நேரத்தில். எப்படியென்றால், முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் ஒன்றை பேசுகிறார். நிஃபாக், முனாஃபிக் தனம் அது ஒன்றுக்கொன்று மாற்றமாக இருக்கும். சரியாக இருக்காது. அது மற்றவர்களிடம் பகையை உண்டாக்கும். ஒரு ஷெய்குவிடம் வரக்கூடிய முரீது தனக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் வர வேண்டும். நிறைகுடமாக இல்லாமல் குறை குடமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதில் ஏதேனும் ஊற்ற இயலும். ஷெய்கு இருக்கிறார்கள், ஷெய்குக்குரிய மரியாதையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற அளவில் இருந்தால்தான் அவருக்கு எவ்வளவோ நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியில்லாமல் எனக்கு தெரியும், ஏற்கனவே நான் படித்துவிட்டுத்தான் வந்தேன் என்று சொன்னால் அவருக்கு இங்கு இடமில்லை.







ரசூல் (ஸல்) இடத்தில் எத்தனையோ சஹாபாக்கள் இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) இருந்தார்கள். இவர்கள், நான்கு பேருக்குள்ளேயே எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. ரசூல் (ஸல்) அவர்கள், அலி (ரலி)அவர்களோடு மித்தம் ரகசியமாக சில விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த இடத்திற்கு அபூபக்கர் (ரலி) வந்தார்களாம். அவர்கள் வந்தவுடன் மாமாவும், மருமகனும் பேச்சை நிறுத்திவிட்டார்களாம். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கோ பெரிய கவலை. ஏனென்றால் எந்தவொரு விஷயமும் தெரியாமல் இல்லை. எந்த ஆபத்து நேரத்திலும் கூட இருந்தவர்கள். ரசூல் (ஸல்) எது சொன்னாலும் சரியென்று போகிறவர்கள். இப்படியான நேரத்தில், ஏன் ரசூலுல்லாஹ் (ஸல்) என்னிடம் மறைத்தீர்கள்? என்று கேட்க‌, இல்லை அபூபக்கரே (ரலி) அது உங்களுக்கு சரிவராது என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற, இல்லை, எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் எனக் கேட்டார்களாம் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள்.







ரசூல் (ஸல்) அவர்கள் சும்மா லேசான ஒரு விஷயத்தை எடுத்து போட்டார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் திண்டாடிவிட்டார்கள். அப்போது ரசூல் (ஸல்) சொன்னார்களாம், அபூபக்கரே நீங்கள் மூஸவிய்யத்து இவர்கள் (அலி ரலியல்லாஹ்) ஈஸவிய்யத்து. ஞான விஷயத்தில் இந்த இரண்டு பேருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பாருங்கள். அல்லாஹ்வைப் பற்றி கொடுக்கக் கூடிய அறிவில் அவர்களுக்கு அவ்வளவு தூரத்திற்கு தூக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுடைய உயிர் அவர்கள்தான் (அபூபக்கர் ரலியல்லாஹ்).







உமர் (ரலி) இருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் கடுமையாகவும் இருந்தார்கள். நல்லவர்களாக‌வும் பெரும் கெட்டிக்காரராகவும் இருந்தார்கள். ஆனால் சில விஷயங்கள் அவர்கள் சொன்னதற்கு நேர்பாடா குர்ஆனில் வஹீயும் வந்துள்ளது ரசூலுல்லாஹ் (ஸல்) விற்கு. ஒரு தடவை ரசூல் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள் நான் இல்லாவிட்டால் உமர் கூட நபியாக வந்திருக்கலாம் என்று. அதுமாதிரியான நிலைமை அவர்களிடம் இருந்திருக்கின்றது.







முரீதுகளில் பல நிலைமை இருந்திருக்கின்றது. இருந்தவர்களில் யாரும் ரசூல் (ஸல்) அவர்களுக்கு விரோதியாக இருக்கவில்லை. ஒரு சிலரை தவிர. அபுஜஹல், அபுலஹப் அவர்களெல்லாம் கடுமையாகவே ரசூல் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் அவர்கள் ஒரு பகுதி. கொஞ்சம் பேர் முனாஃபிக் என்று தள்ளியே விட்டுவிட்டார்கள் ரசூல் (ஸல்) அவர்கள். முன்னாலும் பேசுவது பின்னாலும் பேசுவது அந்தமாதிரி இருந்தார்கள். ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள் யுத்ததிற்கு போகிறார்கள். யுத்தத்தை இங்கு நடத்துவதா? அல்லது மதினாவிற்கு வெளியே போய் நடத்துவதா? என்று ரசூல் (ஸல்) கேட்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) நாங்கள் வெளியே போய் யுத்தம் செய்தால்தான் நல்லது. மதீனாவின் உள்ளேயே இருந்து யுத்தம் செய்வது நன்றாக இல்லை. மற்றவர்கள் சொன்னார்கள் இல்லை ரசூலுல்லாஹ் (ஸல்) இங்கேயே யுத்தம் செய்வோம் என்று. விஷயம் என்னவென்றால் ஒன்று ரசூல்(ஸல்) அவர்கள் உள்ளுக்குள்ளேயே யுத்தம் செய்தார்கள் என்றால் பெண்கள் இருக்கிறார்கள். அடுத்தது, யுத்தம் நடக்கின்ற இடம் மித்தம் மோசமாக போய்விடும். ஆகையால் நாம் வெளியே போய் யுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.







ஏற்றுக் கொண்டு யுத்தம் நடக்கின்ற நேரத்தில், கொஞ்சம் பேர் சுமார் 10, 15 நபர்கள் நாங்கள் இங்கே யுத்தம் செய்யவில்லை எங்களால் முடியாது என்று சொல்லி வெளியே போய்விட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் இருந்தவர்களோடு போய் யுத்தம் செய்து அவர்கள் வெற்றியை எடுத்துக் கொன்டு வந்துவிட்டார்கள். அவர்களைத்தான் முனாஃபிக் என்று சொல்வது. ஏனென்றால் முன்னால் யுத்தம் செய்வோம் என இருந்துவிட்டு பின்னால் ரசூல்(ஸல்) அவர்களை விட்டு வெளியே போய்விடுகிறார்கள். இப்படி ஒரு சரித்திரம் உள்ளது.







சஹாபாக்களுக்குள்ளேயே இப்படியிருந்தால், முரீதுக்களுக்குள்ளும் இப்படி இருக்கத்தான் வேண்டும் இல்லையா? ஆனால் எல்லா முரீதுகளும் அப்படி இருக்கமாட்டார்கள். நான் நினைக்கின்றேன் எங்க முரீதுகள் நன்றாகத்தான் இருப்பார்கள். ஷெய்கைப் பற்றி சின்ன ஒரு சந்தேகமோ அல்லது இவர்கள் ஒருவகையாக பேசுகிறார்களே, அவரைப் பற்றி பேசுவதற்கு இவர்கள் யார்? இவர்கள் ஏன் இதைப் பற்றி பேச வேண்டும்? என்று கேள்வி வந்துவிட்டாலும், மனதுக்குள்ள ஊசலாட்டம் வந்துவிட்டாலும், அவருடைய பைஅத் முறிந்து விடும். அதை நாங்களாக நீக்க தேவையில்லை அவர்களே நீங்கி விடுகிறார்கள். உதாரணமாக ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கிறோம், அந்நேரத்தில் இன்னொருவர் வருகிறார். "இப்படி வாப்பா பேசினார்கள்” என்று ஒருவர் கூற, அவர்கள் ஏன் அதையெல்லாம் பேச வேண்டும், அவர்களுக்கு அதை பேசத் தேவையில்லையே என்று அந்த வார்த்தையை சொல்லி விட்டால், அப்பொழுது ஷெய்குக்கு மேலாக அவர் பேசுவதை மாதிரி ஆகுவதனால் அவருடைய பைஅத் முறிந்துவிடும். சந்தேகங் கொண்டாலும் சரி. இப்படி எழுதியிருக்கிறார்கள் இது சரியா? என்று பெரிய மனிதனாக என்னை சந்தேகிக்கின்றது. சந்தேகிக்கின்றது அல்லாமல் அதற்கு மேலாக பேசுவது. ஒரு ஷெய்குவிற்கு மேலாக பேசுவது ஒரு முரீதிற்கு தகுதியே இல்லை. அப்படி இருந்ததென்றுச் சொன்னால் அவருடைய முரீது/பைஅத் எடுபட்டே போய்விடும். ஷெய்குவின் மேல் கொஞ்சம் கோபமாக நடந்துக் கொள்கிறார் என்றால் அப்பவும் பைஅத் போய்விடும். திரும்ப முரீது என்று சொல்லி வருவதில் கருத்து இல்லை, வா இருக்கட்டும் என்று போவதுதான். இப்படி செய்கிறார்களே சரியா? என்று ஆராய்ச்சி செய்ய போனால் போச்சு. இப்ப இஸ்லாத்தில் ஆராய்ச்சி செய்கிறார்களே, சஹீயான ஹதீஸ் இருக்கின்ற நேரத்தில் சொன்னவர் சரியில்லை எடுத்தவர் சரியில்லை என்று சொன்னால், அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஹதீஸ் சஹீதான். கிதாபே அப்படி போடப்பட்டுள்ளது. அந்தமாதிரி சந்தேகப்படுவதாக இருந்தால் அந்த இமாமில் இவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத் அவருக்கு பொருத்தமற்றது.







ஒரு ஷெய்கு ஞான விளக்கங்கள் அறிந்தவராய் இருந்தால்தான் முரீதின்களை நேர்வழி காட்ட முடியும். ஏனென்றால் என்னிலிருந்து இன்னவர், என்னிலிருந்து இன்னவர் என்று இப்படி போய் அங்கே போவோம் நாங்கள். அங்கு போகும் வரையில் அந்த தொடர்பு இருக்கும். ஆனால் இடையில் முறிந்து விட்டது என்றால், சூரியனை விட்டு பூமி பிரிந்தது போலத்தான் ஆகும். சூரிய குடும்பம் உள்ளது. பூமி, சந்திரன் மற்ற கோள்களில் இருக்கக்கூடிய எல்லா நட்சத்திரங்களும் சூரியனுடைய ஆர்டர்ஷிப்பில்தான் (ordership) அது இருந்து கொண்டிருக்கிறது. அது ஒவ்வொன்றும் பூமியை ஒவ்வொரு வகையில் சுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு பிடிப்பு இருப்பதனால்தான் இது அப்படியே சுத்துகிறது. திடீரென்று இந்த சக்தி எந்த வகையிலோ எடுப்பட்டு போய்விட்டது என்றால் இந்த பூமி வீசப்பட்டு போய் விடும். எரி நட்சத்திரங்கள் (shooting stars) எங்கெங்கெல்லாம் போகிறது, அது மாதிரி வீசப்பட்டு விடும். பூமியும் ஒரு நட்சத்திரம்தான் அந்த பூமியினுடைய ஹாலே (நிலையே) போய்விடும், அதுபோலத்தான் முரீதுகளுடைய நிலையும். ஒரு ஷெய்குவினுடைய தொடர்பில் இருந்து திடீரென்று விடுப்பட்டு போவதென்றால், அவனுடைய நிலைமை அவ்வளவுதான். ஒரு முரீது ஒரு ஷெய்குவினிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். அந்த அளவோட நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு தெரியாத விஷயங்களை பேச போகக் கூடாது. தவ்ஹீதுடைய இல்மு மிக நுணுக்கமானது. அல்லாஹ் இருக்கிறான் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று எல்லோரும் சொல்வதுதானே. அல்லாஹ் இருக்கின்றான் என சொல்லும் நேரத்தில் எங்களுடைய நிலைமை உண்மையானதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான நிலைமை கருதி அல்லாஹ் என்றால் என்ன? இருக்கின்றான் என்றால் என்ன? என்பதை தெரிந்து சொன்னால் பரவாயில்லை. இருக்கின்றான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? அடுத்த கேள்வி. அல்லாஹ் இருக்கின்றான், அவன் ஆணா? பெண்ணா? இருக்கின்றான் என்றால் ஆண். இருக்கின்றாள் என்றால் பெண். எப்படி நாங்கள் சொல்வது? அல்லாஹ் இருக்கின்றான். எதில் இருக்கின்றான்? நாற்காலியில் இருக்கின்றானா? அப்படித்தானே சொல்கிறார்கள்.







ஆக இந்த வகையில் பார்க்கும் நேரத்தில், அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்வதிலும், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்று சொல்வதிலும், எல்லாவற்றிலுமே கருத்து இருக்கிறது. அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்பதில் எப்படி? கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்றானா? கொஞ்சம் பேர் அப்படித்தான் யோசிப்பார்கள். அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கின்றதால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடத்திலேயும் இருப்பான் போல் தெரிகிறது என்று. அதனால் எல்லாமே அவனுக்கு தெரியும். ஆக எப்படி இருக்ககின்றான்? எல்லாவற்றிலுமே சேர்ந்து முழுமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இருக்கின்றான் என்றால் அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. ஆண் என்று சொல்வது ஒரு பேச்சுக்காகத்தான். இருக்கின்றான் என்று ஆண் விகுதியை வைத்து பேசுகின்றோம். இருக்கிறாள் என்று சொல்ல முடியாது அதற்காக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்கின்றோம் அந்த கருத்தோடு. ஆனால் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல. சிலர் சொல்வார்கள் எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுக்கு கண்ணிருக்கிறதா? எங்கே இருக்கிறது கண்? ஒரே நேரத்தில் இங்கே அங்கேயெல்லாம் எப்படி பார்க்கிறது? எப்படியென்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். அவனுக்கு கண்ணாக நாங்கள் இருக்கிறதாக அவனே சொல்கிறானே. பொதுவாக, மஹ்லூதுகத்துகளுடைய கண்ணே அவனுடைய கண்தான். அவன் இல்லாவிட்டால் நாங்கள் பார்க்க முடியுமா? அவன் அந்த சத்தியை (Power) எங்களுக்கு தந்திருக்கிறான். அவன் அதனால் பார்த்துக் கொண்டிருக்கிறான்.







எல்லா அறிவையும் ம‌னித‌னுக்கு கொடுத்திருக்கிறான். எல்லா பொருள்க‌ளிலும் அந்தந்த‌ அறிவு இருக்கிற‌து. அந்த‌ அறிவை தந்து அவ‌ன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அறிந்து கொண்டிருக்கிறான். அவ‌ன் இல்லாவிட்டால் எங்க‌ளுக்கு அறிவே இருக்காது. அவ‌ன் கொஞ்ச‌ம் த‌ள்ளிவிட்டுவிட்டான் என்றால் அந்த‌ அறிவு எங்க‌ளுக்கு இருக்காது. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அதிக‌மாக‌ வெளியே போக‌மாட்டார்க‌ள். ஞான‌த்தை அறிந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ ஞான‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளின்தான் கால‌த்தை அதிக‌மாக‌ போக்கினார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ஓதிய‌ ஒரு ஆள் ஏதோ ஒரு ச‌பையை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறார். அவ‌ர் சொல்லி இருக்கிறார், க‌ஸ்ஸாலி கூட‌ என்னிட‌ம்தான் ப‌டித்தார் என்று. பாருங்க‌ள், ம‌னித‌னில் எத்த‌னையோ வகையான ம‌னித‌ இன‌ம் இருக்கு.







க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் அவ‌ன் ப‌டித்துவிட்டு, ம‌னித‌னாகி வ‌ந்த‌திற்கு பின்பு அவ‌ன் சொல்கிறான் அவ‌னிட‌ம்தான் க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) ப‌டித்தார்க‌ள் என்று. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் ஒருவ‌ர் வ‌ந்து சொல்லிவிட்டார் இமாம் அவ‌ர்க‌ளே, நீங்க‌ள் ப‌டித்த‌து அவ‌னிட‌ம்தானாம் என்று. இது இர‌ண்டாவ‌து த‌ட‌வை இமாமிட‌ம் செய்தி வ‌ந்த‌போது, அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ளாம் அவ‌ன் என்னிட‌ம் ப‌டித்த‌தை ம‌ற‌ந்துவிடுவான் என்று. அவ‌ன் ம‌ற‌ந்தான் எப்ப‌டி? அவருக்கு பைத்திய‌ம் பிடித்துவிட்ட‌து. அத‌ற்கு பிற‌கு ஏதேனும் ஞாப‌க‌ ச‌க்தி இருக்குமா?







ப‌டித்த‌ மாண‌வ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்துவ‌து பெரிய‌ பாவ‌மான‌ விஷ‌ய‌ம். நாங்க‌ள் எப்ப‌வும் எங்க‌ளுடைய‌ ஆசிரிய‌ரை க‌ண்டால், சைக்கிளில் போகும் நேர‌த்தில் உட‌னே இற‌ங்கிவிடுவோம். அந்த‌ நேர‌த்தில் இற‌ங்கி பேசிவிட்டு ம‌ரியாதை செய்துவிட்டுத்தான் போவோம். அது ஹிந்து ஆசிரியராகவோ, முஸ்லிம் ஆசிரிய‌ராக‌வோ இருந்தாலும் ச‌ரி எல்லோருக்கும் ஒரே ம‌ரியாதைத்தான். ஏனென்றால் எங்க‌ளுக்கு ப‌டித்துக் கொடுத்த‌வ‌ர்க‌ள். ஒரு சின்ன‌ டிராயிங் பாட‌த்துக்கு வ‌ந்து இப்ப‌டி கீறுங்க‌ள் என்று சொல்ப‌வ‌ருக்கும் நாங்க‌ள் ம‌ரியாதை செய்திருக்கின்றோம். ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌மும் கீற‌, எழுத‌ ப‌ழ‌கியிருக்கிறோம். அத‌னால் எந்த‌வொரு ஆசிரிய‌ராக‌ இருந்தாலும் நாங்க‌ள் அவ‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்தி பேச‌க் கூடாது. நல்ல விஷயங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டும். யாரும் எப்போதும் பொய்யே சொல்லக் கூடாது. பொய் பெரிய பாவமான வேலை. பொய்யால் குடும்பமே கெட்டு போய்விடும். உண்மையே பேச வேண்டும் அதுதான் முக்கியம். பொய்யினால் எல்லா கெடுதிகளும் உண்டாகும். மற்றவர்களை கெடுப்பதற்கும், நாங்கள் கெட்டு போவதற்கும் பொய் ஒரு ஆயுதம். பொய் சொல்பவர்கள் அடுத்த நிமிடமே அகப்பட்டுக் கொள்வார்கள். முகத்தை பார்த்தாலே பொய் சொல்லிவிட்டார் என்பது விளங்கும்.







ஞானம் பற்றிய அறிவு







ஞான விஷயங்களை நன்றாக எல்லோரும் நுணுக்கமாக விளங்கி கொள்ளுங்கள். தேவையான கேள்விகள், ஞானத்தில் சம்பந்தப்பட்டவைகள், புத்தகத்தை வாசித்துவிட்டு underline பண்ணி, அதில் கேள்விகள் கேட்க வேண்டும். ஞான விஷயத்தை பேசுவதற்கு, கேட்பதற்கு எல்லாம் வெட்கப்படக்கூடாது. ஒரு மாணவர் வகுப்பில் இருக்கின்ற நேரத்தில் கேள்விகள் கேட்டால்தான் கெட்டிக்காரராக ஆக முடியும். அப்போதுதான் அவருடைய சந்தேகமெல்லாம் போய்விடும். அடுத்தவர் கேட்பார் என்றிருந்தால் கேள்வி வராது. ஞானத்தை விளங்காது போனால் வேறு எதுவிலும் புண்ணியமில்லை. ஞானத்தை விளங்கினவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டு. பல படிப்புகள் இருக்கின்றது. எல்லாவற்றிலுமே சில சில விளக்கங்கள் உண்டாகி கொண்டேயிருக்கும். அது அல்லாஹ்வுடைய ஞானம். அல்லாஹ்வுக்குரியது மஹ்ரிஃபா. அது அவனுடைய ஒளிவு. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டோம் என்றால் அந்த ஒளிவு வந்துக் கொண்டேயிருக்கும்.







ஞானம் தெரிந்த எங்கள் பிள்ளையையும், பொதுவான ஒரு மனிதனையும் வைத்து பேசி பார்த்தால் தெரியும். எங்க பிள்ளைகள் பேசுவதற்கும், அவர்கள் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம். நானே பலருடன் பல முறையில் பேசுகின்றேன். ஞானம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி, ஞானம் தெரிந்தவர்கள் வந்தால் அவர்கள் விரும்பி கேட்பார்கள் விஷய விளக்கங்களை. ஒரு பொதுவான அறிவுள்ளவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி பேசுவோம். இந்தியாவில் தப்லீக்கில் இருந்த ஆள் ஒருவர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசியது, என்ன செய்கிறீர்கள்? என கேட்டதற்கு, கடலை வியாபாரம் செய்வதாக சொன்னார். எங்கெல்லாம் எவ்வளவு போடுகிறீர்கள்? தொழில் நல்லபடியா இருக்கின்றதா? என்று அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். வெளியே போய் சொன்னாராம், “வாப்பா பேசினார்கள் ஆனால் ஒரு ஞானமும் பேசவில்லை” என்று. அவரோடு நான் என்ன பேசுவது? கடலைக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? கடலை தொழில் செய்பவரோடு, நான் கடலையை பற்றித்தான் பேச வேண்டும். ஞானம் பேச வந்தவர்கள் என்றால் ஞானம் பேச இயலும். எங்க பிள்ளைகள் வந்தால் ஞானத்தைப் பற்றி பேசுவோம். ஏதாவது ஒரு தமாஷா பண்ணி தமாஷாவிலாவது ஒரு ஞானத்தை போட்டுக் கொண்டு இருப்போம். கடலை வியபாரி வந்தால், கடலையைப் பற்றித்தான் பேச வேண்டும். மீன் வியபாரி வந்தால், மீனை பற்றித்தான் பேச வேண்டும்.







அல்லாஹ்வே சொல்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன், சுப்ஹானல்லாஹ் என்று. அல்லாஹ் எப்படி பரிசுத்தமானான்? எல்லாமே அதுதானே குப்பையும் அதில் சேர்ந்ததுதானே? அது சுத்தமானதா? குப்பை சுத்தமானதல்ல. இதனின் தாத்பரியம் என்னவென்றால் எல்லாம் ஒன்று சேர்கின்ற‌ நேரத்தில் அது சுத்தமாகின்றது. பரிபூரணமாய் எல்லாமே ஒன்று சேர்கின்ற நேரத்தில் அது பரிசுத்தமாகின்றது. மெட்ராஸுக்கு போனால் முக்கியமான ஒரு விஷயம் கூவம். இந்த கூவத்தை போன்று இன்னும் எத்தனையோ கூவங்கள் ஓடத்தான் செய்யும். இவையெல்லாம் ஓடி கடலில் போய் கலக்கின்றது. அசுத்தங்கள் எல்லாம் கலக்கின்றது கடலில். பரிபூரணத்தில் நிறைய உள்ள தண்ணீரில் போய் அசுத்தங்கள் கலந்து, ரோல் (roll) ஆகின்றது. ஆனால் எங்களுக்கு கடல் தண்ணீர் என்றால் மொத்தமான தண்ணீர். அதில் நாம் ஒலு எடுக்கின்றோம். ஆக அசுத்தம், சுத்தம் என்பது அல்லாஹ்விடம் இல்லை ஆனால் ஷரியத்தில் உண்டு. ஷரியத்தில் அசுத்தம் என்றால் மனிதனை கெடுத்துவிடும் சுத்தம் என்றால் மனிதனை நல்லதாக்கும். அசுத்தம் என்றால் ஒருவன் குடிக்கின்றான் அவனுக்கு ஆபத்து உண்டாகும், ஈரல் கெட்டுவிடும், அவனுடைய பேச்சுக்கள் எல்லாமே மாறி போய்விடும். இவையெல்லாம் ஷரியத்தில் ஹராம் ஆக்கப்பட்டது. அதை செய்தால் அவனுக்கு ஆபத்து ஆகையால் அதை செய்யக் கூடாது. தவ்ஹீதில் கூடும் என நினத்துவிட்டு குடித்து விடாதீர்கள். ஷரியத்தில் இருக்கின்றவர்க்குத்தான் தவ்ஹீதும் இருக்கின்றது.







இது ஞான தத்வார்த்த கதைகளில்தான் முக்கியமான விஷயங்களில்தான் நாங்கள் இப்படி பேசுகின்றோம். ஆகவே ஹராம் எப்பவுமே ஹராம்தான். அதை தரீகத்திற்கோ, ஹக்கீகத்திற்கோ ஹலால் ஆக்க இயலாது, ஹலால் அல்ல. மனிதனுக்கு ஷரியத்துதான் அடிப்படை. மனிதனுக்கு முக்கியமானது ஷரீயத். ஷரீயத் படியில் ஏறிக்கொண்டுத்தான் நாங்கள் அடுத்த படியில் ஏற வேண்டும்.







தொழுகை பற்றிய அறிவு







கொஞ்சம் பேர் சொல்கின்றார்கள் ஞானத்தில் தொழ தேவையில்லை. ஞானத்தில் அலிஃப், பே‍ யை பார்த்து விட்டு தொழ தேவையில்லை என்கின்றனர். அவன் பார்த்தானா? தொழுகையினுடைய origianal (அசல்) எங்கிருந்து வந்தது என்று? யார் சொன்னது தொழ சொல்லி? அல்லாஹ் சொன்னான். அல்லாஹ் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் தொழ சொன்னார்கள். அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) சொல்லியிருக்கும்பொழுது எங்களால் தொழாமல் இருக்க முடியுமா? ரசூல்(ஸல்) அவர்களே தொழுதிருக்கிறார்கள். காட்டி தந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி சொல்வது ஞானத்தில் தொழுகை இல்லையென்று? ஆகவே தொழுகை முக்கியமாக உள்ளது. எந்த ஞானியாக இருந்தாலும் தொழத்தான் வேண்டும். ஆனால் சிலர் இருந்திருக்கிறார்கள் ஃபைசுல்லாஹ் ஹைர்(ரஹ்) (பெயர் சரியாக விளங்கவில்லை) அவர்களுடைய தம்பி மஹானந்த பாபா(வலி) போன்று உள்ளவர்கள். அவர்கள் தேவையான நேரம் தொழுது கொள்வார்கள். ஞானிகளுடைய தொழுகையே வேறு அது வித்தியாசமானது. அவர்கள் ஹக்கின் உள்ளேயே புகுந்து இருப்பவர்கள். அவர்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களைப்பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர்களை பார்த்துவிட்டு நாங்களும் தொழாமல் இருக்கவும் கூடாது. அவர்களின் நிலைமை வேறு எங்களின் நிலைமை வேறு. ஞானத்தில் முக்கியமானது எதை ரசூல்(ஸல்) அவர்கள் செய்தார்களோ, உள்ரங்கமாகவும், வெளிரங்கமாகவும் அத்துனையும் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு மாற்றமாக எங்களுக்கு எப்பவுமே போக இயலாது. தொழுகையை விட்டுவிட்டு ஞானியாகவும் முடியாது. மனிதனாக வாழ்வதற்கு ஷரீயத் மிக முக்கியம் என்பது விளங்குகிறது. எந்த விஷயத்திலும் ஷரீயத்தை விடவே கூடாது. ரசூல்(ஸல்) அவர்கள் தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏன் தொழுதார்கள்? அவர்கள் ஹக்குவுடனே இருப்பவர்கள். தொழுகைதான் அவர்களின் வாழ்க்கையே. தொழுகை அவசியம் என காட்டுவதற்காகத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ஒவ்வொரு வகையில் தொழுகை நடந்துள்ளது. நின்ற நிலையில் தொழுவது, ருக்உவில் தொழுவது, சஜ்தாவில் தொழுவது, இப்படி எத்தனையோ வகையான தொழுகை நடந்துள்ளது. மரம் நின்ற நிலையிலேயே தொழுகிறது. மிருகங்கள் ருக்உவிலேயே தொழுகின்றது. பறவைகள் சஜ்தாவிலேயே தொழுகின்றன. இயற்கையினுடைய எல்லா தொழுகைகளையும் சேர்த்து அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) ஹதியாவாக மனிதனுக்கு கொடுத்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் செய்த ஒன்றை தொழ தேவையில்லை என்று சொன்னால் ஒருகாலும் முஸ்லீமாக இயலாது. ஷாஃபி மத்ஹப்படி மூன்று தொழுகைகளை தொழ தேவையில்லை என்று விட்டுவிட்டார் என்றால் அவர் காஃபிர். அவரை கஃபுன் இடக்கூடாது, நீராட்ட கூடாது, முஸ்லிம்கள் அடக்கக் கூடிய இடத்தில் அந்த மய்யித்தை அடக்க கூடாது. இப்படியெல்லாம் ஷரீயத்துடைய சட்டம் உள்ளது ஆக கட்டாயம் தொழ வேண்டும். ஆஹிராவில் தொழுதவர்களை பார்க்கும் நேரத்தில் இரண்டு கையும், காலும், முகமும் வெண்மையாக இருக்குமாம். ரசூல்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் அருகில் ஓடும் நீரோடையில் ஐந்து நேரமும் குளிப்பதற்கு சமம் இந்த ஒழு எடுப்பது. தொழுகையை கொண்டுதான் மனிதனுடைய மனம் கட்டுப்படுத்தப்படுகிறது. கஷ்டமான நேரங்களில் ரசூல்(ஸல்) அவர்கள் சென்று சுன்னத் தொழுவார்களாம். அதற்குரிய தொழுகைதான் அது. தொழுகை வேண்டாம் என சொல்வது பெரிய பாவம். ஷரீயத்துடைய ஒழுங்கு பிரகாரம் நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.







குத்பு நாயகம் தொழுதிருக்கிறார்கள். ஷாதுலி நாயகம், பெரும் பெரும் இமாம்கள், ஞானிகள் எல்லாம் தொழுதிருக்கிறார்கள். இப்னு அரபி (ரலி) என்று சொன்னால் வெள்ளையர்களுக்கு கூட பெரிய பேர் அவர்களைப் பற்றி. அவர்களே தொழுதிருக்கிறார்கள். ஆக தொழுகையை எங்களை போன்ற சிறியவர்கள் விட்டுவிடக் கூடாது. ஷரீயத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்களுடைய மதத்துக்கு நன்மை இருக்கும். ஷரீயத்தோடு ஹக்கீக்கத்தை நாங்கள் பேணி நடக்க வேண்டும்.







அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வை தந்து, சீரையும், சிறப்பையும், மேன்மையும் தந்து, நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல வணக்கங்களையும் தந்து, அந்த வணக்கத்தினுடைய நன்மைகளையும் உங்களுக்கு கொடுத்து, கொடிய நோய்கள், ஆபத்துகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டு, நல்ல வாழ்வினை அல்லாஹ் உங்களுக்கு தரட்டும்.







ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

அறிவைத்தேட குருவை நாடு - மஜ்லிஸ்-2

மஜ்லிஸ் - 2.



நாள்: வெள்ளிக்கிழமை

தேதி: 02/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)





பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், என் அன்பிற்குரிய முரீதுகளே, இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நேற்று, நாங்கள் தொடக்கமாக ஒரு சில விஷயங்களை பேசி வந்திருந்தோம். இன்று பொதுவாக ஷெய்கு எப்படி இருக்க வேண்டும். அதே நேரத்தில் முரீதீன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பொதுவான ஒரு இலக்கணம்.


ஷெய்குக்குரிய‌ இலக்கணம்.


ஒரு ஷெய்கு என்பவர் ஞானம் தெரிந்தவராக இருக்க வேண்டும். உலகத்தில் வழி நடத்துவது மட்டுமல்ல ஆகிராவுடைய விஷயங்களை பற்றிய விளக்கங்களையும், அவர்களை எப்படி அங்கு வழி நடத்த வேண்டும் என்பதையும் அறிவதற்க்காகத்தான் இந்த ஞானம் என்ற அறிவு ஒரு ஷெய்குவிற்கு மிகவும் கட்டாயம். ஆகவே, இந்த ஞானம் தெரியும் என்று சொல்லிவிட்டு, பாதியிலேயே அவர் (ஷெய்கு) இருக்கிறார் என்பதை எப்படி அறிந்துக் கொள்வீர்கள்? ஒரு சிலர் அப்படியும் இருக்கிறார்கள்தானே. ஞான விஷயத்தை கேட்டால், அவர் சொல்வது பொருத்தமில்லாத விளக்கங்களாக‌ இருக்கும். ஜாடிக்கு சரியான மூடி என்பார்களே, அந்த மாதிரி தான் கேள்விக்கு மறுமொழி இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கருத்து விளங்காத விஷய விளக்கமாய் இருக்கும் அது. தெளிவாக சொல்ல முடியாத சில விஷயங்களும் உண்டு. அதை விளங்கக் கூடிய முறையில்தான் அதை விளங்க வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே ஒருவரை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.
ஒருவர் வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் நிலைமை என்னவென்று அவருடைய பேச்சைக் கொண்டே கண்டு பிடித்து விடலாம். அல்லது அவருடைய முகப் பார்வையை கொண்டும் கண்டு பிடித்துக் கொள்ளலாம். இல்லை, அவர் பேசக் கூடிய வார்த்தைகள் கலங்கமாய் இருக்கும். நல்லதாய் இருக்கும், இந்த வகையில் பேசுகிறவர்களைக் கொண்டு கண்டு பிடித்து கொள்ளலாம். அதாவது, மழுப்பக் கூடிய சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்க‌ள். தெரியாதவர்கள் மழுங்கி போய்விடுவார்கள். ஆனால் தெரிந்தவர்கள் அந்த மழுப்பை மனதுக்கு எடுக்காமல் இந்த பொருள் சரியில்லையென்று இருந்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் பொருந்தும். யாராக இருந்தாலும் எந்த ஷெய்குவாக‌ இருந்தாலும் அந்த ஷெய்கிற்கு அது பொருத்தமானது. என்னையும் கூட்டித்தான் சொல்கிறேன். ஆக, ஷெய்கிற்கு முக்கியமாக தேவைப்படுவது ஞான விளக்கம். அதுதான் மிகவும் அவசியம்.
பைஅத் என்று சொல்வது அல்லாஹ் வரை போகக் கூடிய விஷயம். அந்த பைஅத் எப்படி இருக்க வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கொடுப்பதனாலேயும், ஞானத்தை இரண்டு புத்தகங்களில் வாசித்து விட்டு பேசுவதனாலேயும் ஞானம் ஆகாது. அதில் விஷய விளக்கம் நுணுக்கமானதாய் இருக்கும். சில விஷயங்களை நுணுக்கமாய் அறிந்துக் கொள்ள வேண்டும். நுண்ணியது, நுண்ணியது என்று சொன்னாலும் அதில் எந்தவொரு கருத்தும் இருக்காது. அந்த நுண்ணியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.


ஒரு பேச்சில் கூட நுணுக்கம் இருக்கிறது. அதை விளங்கி பேசுபவர்களுக்குத்தான் அது தெரியும். ஞானத்தில் மிகவும் நுண்ணியமான விஷயங்களை விளங்க கூடிய தன்மை மனிதனுக்கு இருக்க வேண்டும். "ஸிராத்துல் முஸ்தகீம்" பாலம் என்று சொல்வது அதுதான். சரியான தவ்ஹீதுடைய நிலை இல்லையென்று சொன்னால் அவர் கீழே விழுந்துவிடுவார். கீழே விழுந்தால் அதுதான் நரகம். அப்படியானவர்கள்தான் ஞானிகள், ஷெய்குமார்கள் என்ற நிலைமையில் இருக்க வேண்டும். இது எல்லோருக்குமே பொருத்தமான ஒரு இலக்கணம். இப்படியான ஷெய்குகளுக்கு முரீதுகள் எப்படி இருக்க வேண்டும்?


முரீதுகளின் இலக்கணம்


ஷெய்குவிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்க வேண்டும். ஷெய்கு சொல்வதை விளங்ககூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஷெய்குவிற்கு முன்னால் முரீது மய்யித்தை போன்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்படி, எதை சொன்னாலும் சரி என்று போக வேண்டும்.


ஆனால் கேட்பதை திரும்ப, திரும்ப மரியாதை இல்லாத முறையில் கேட்பதாக இருந்தால் ஒரு முரீது ஒரு ஷெய்குவிடம் கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அப்ப அந்த முரீது பொருத்தமானவர் அல்ல. அவர் ஏதோ தன்னுடைய கெட்டித்தனத்தை காட்டுவதற்காக வந்து பேசுகிறார் என்றவொரு நிலை உண்டாகிவிடும். எந்த ஒரு நிலையிலும் மய்யித் போன்று இருக்க வேண்டும். மய்யித்தை கழுவுகிற நேரத்தில் கையை உயர்த்துவது, காலை உயர்த்துவது எல்லாம் கழுகிறவர்களுக்கு உள்ள வேலை. அதற்கு (மய்யித்) ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும் இவர் செய்து முடித்து விடுவார். அந்த மாதிரி ஷெய்குவிடம் இருக்கின்றவருக்குத்தான் ஞானம் என்று சொல்கின்ற விளக்கம் உட்புகும்.


ஒரு அரசன் ஞானியை காண்பதற்காக போயிருந்திருக்கிறார். அங்கு வாயிலில் ஒரு காவலாள் இருந்துள்ளார். நான் சாமியை பார்க்க போக வேண்டும் என்று சொல்ல, இல்லை இப்ப உங்களுக்கு பார்க்க முடியாது என்று காவலர் சொல்லிவிட்டார். இல்லை நீ போய் சொல் அரசன் "நான்" வந்துள்ளேன் என்று. இல்லை போய் என்னால் சொல்ல இயலாது என காவலர் கூற, இல்லை, நீ போய் சொல் “அரசன் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என உத்தரவிடுகிறார். இப்படி இரண்டு மூன்று தடவை சொல்லியாகிவிட்டது காவலர் போய் சொல்லிவிட்டார் ஞானியிடம். அந்த ஞானி மறுமொழி சொல்கிறார் "நான்" செத்த பிறகு அவரை வரச் சொல் என்று. அப்படியென்றால் “நான்” என்ற‌ அகந்தை போன பிறகு வரச் சொல் என்று.


தற்பெருமை, அகந்தை இருந்தால் ஒருக்காலமும் அதில் எந்தவொரு புண்ணியமும் இருக்காது. ஆனால், முரீதீன்கள் எல்லாவற்றையும் விளங்கினவர்களாக கேட்டுக் கொள்ள வேண்டும். பலமுறை கேட்கின்ற நேரத்தில் இன்றைக்கு ஒரு விஷயத்தை கேட்கிறார் விளங்கவில்லை. அவர் அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக வருகிறார் என்றால் விஷய விளக்கம் அவருக்கு சும்மாவே வந்துவிடும். ஒரு நூலை படிக்கின்றீர்கள் இன்றைக்கு விளங்கவில்லை, நாளைக்கு படிக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள். திடீரென்று யாரோ சொல்லி தந்தது போல ஞாபகம் வரும். இதுதான், ஞானத்துடைய முழுமையான கருத்து விரும்பி படிக்க வேண்டும். குர்ஆனைக் கூட சும்மா பொதுவாக‌ எல்லோரும் ஓதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விஷய விளக்கமுள்ளவர்கள் குர்ஆனை ஓதினால் பல்லாயிரக்கண‌க்கான கருத்தை அதற்கு எடுத்துக் காட்டுவார்கள். குதுபு நாயகம் அவர்கள் குர்ஆனுக்கு எத்தனையோ பொருளை சொல்வார்களாம். முரீதீன்கள் அந்த மாதிரியான முழுமையான விளக்கம் பெற்று இருக்க வேண்டும். ஷெய்குவிடம் முழுமையான நம்பிக்கையும் இருக்க வேண்டும். ஷெய்கைப் பற்றி சந்தேகத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு சபை இல்லாமல் ஆக்குவதற்கு எண்ணம் வைத்திருந்தார்கள் என்றால் அது நடக்காது, அவரவர்களே சபையிலிருந்து போய்விடுவார்கள். முனாஃபிக்தனமாக ஒரு சிலர் நடக்கிறார்கள். முனாஃபிக் என்று சொல்லிவிட்டால் ஒரு பாரமான வார்த்தை மாதிரி கருதுகிறார்கள். ஒரு பாரமான வார்த்தைதான் அந்த நேரத்தில். எப்படியென்றால், முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் ஒன்றை பேசுகிறார். நிஃபாக், முனாஃபிக் தனம் அது ஒன்றுக்கொன்று மாற்றமாக இருக்கும். சரியாக இருக்காது. அது மற்றவர்களிடம் பகையை உண்டாக்கும். ஒரு ஷெய்குவிடம் வரக்கூடிய முரீது தனக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் வர வேண்டும். நிறைகுடமாக இல்லாமல் குறை குடமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதில் ஏதேனும் ஊற்ற இயலும். ஷெய்கு இருக்கிறார்கள், ஷெய்குக்குரிய மரியாதையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற அளவில் இருந்தால்தான் அவருக்கு எவ்வளவோ நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியில்லாமல் எனக்கு தெரியும், ஏற்கனவே நான் படித்துவிட்டுத்தான் வந்தேன் என்று சொன்னால் அவருக்கு இங்கு இடமில்லை.


ரசூல் (ஸல்) இடத்தில் எத்தனையோ சஹாபாக்கள் இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) இருந்தார்கள். இவர்கள், நான்கு பேருக்குள்ளேயே எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. ரசூல் (ஸல்) அவர்கள், அலி (ரலி)அவர்களோடு மித்தம் ரகசியமாக சில விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த இடத்திற்கு அபூபக்கர் (ரலி) வந்தார்களாம். அவர்கள் வந்தவுடன் மாமாவும், மருமகனும் பேச்சை நிறுத்திவிட்டார்களாம். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கோ பெரிய கவலை. ஏனென்றால் எந்தவொரு விஷயமும் தெரியாமல் இல்லை. எந்த ஆபத்து நேரத்திலும் கூட இருந்தவர்கள். ரசூல் (ஸல்) எது சொன்னாலும் சரியென்று போகிறவர்கள். இப்படியான நேரத்தில், ஏன் ரசூலுல்லாஹ் (ஸல்) என்னிடம் மறைத்தீர்கள்? என்று கேட்க‌, இல்லை அபூபக்கரே (ரலி) அது உங்களுக்கு சரிவராது என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற, இல்லை, எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் எனக் கேட்டார்களாம் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள்.


ரசூல் (ஸல்) அவர்கள் சும்மா லேசான ஒரு விஷயத்தை எடுத்து போட்டார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் திண்டாடிவிட்டார்கள். அப்போது ரசூல் (ஸல்) சொன்னார்களாம், அபூபக்கரே நீங்கள் மூஸவிய்யத்து இவர்கள் (அலி ரலியல்லாஹ்) ஈஸவிய்யத்து. ஞான விஷயத்தில் இந்த இரண்டு பேருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பாருங்கள். அல்லாஹ்வைப் பற்றி கொடுக்கக் கூடிய அறிவில் அவர்களுக்கு அவ்வளவு தூரத்திற்கு தூக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுடைய உயிர் அவர்கள்தான் (அபூபக்கர் ரலியல்லாஹ்).


உமர் (ரலி) இருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் கடுமையாகவும் இருந்தார்கள். நல்லவர்களாக‌வும் பெரும் கெட்டிக்காரராகவும் இருந்தார்கள். ஆனால் சில விஷயங்கள் அவர்கள் சொன்னதற்கு நேர்பாடா குர்ஆனில் வஹீயும் வந்துள்ளது ரசூலுல்லாஹ் (ஸல்) விற்கு. ஒரு தடவை ரசூல் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள் நான் இல்லாவிட்டால் உமர் கூட நபியாக வந்திருக்கலாம் என்று. அதுமாதிரியான நிலைமை அவர்களிடம் இருந்திருக்கின்றது.


முரீதுகளில் பல நிலைமை இருந்திருக்கின்றது. இருந்தவர்களில் யாரும் ரசூல் (ஸல்) அவர்களுக்கு விரோதியாக இருக்கவில்லை. ஒரு சிலரை தவிர. அபுஜஹல், அபுலஹப் அவர்களெல்லாம் கடுமையாகவே ரசூல் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் அவர்கள் ஒரு பகுதி. கொஞ்சம் பேர் முனாஃபிக் என்று தள்ளியே விட்டுவிட்டார்கள் ரசூல் (ஸல்) அவர்கள். முன்னாலும் பேசுவது பின்னாலும் பேசுவது அந்தமாதிரி இருந்தார்கள். ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள் யுத்ததிற்கு போகிறார்கள். யுத்தத்தை இங்கு நடத்துவதா? அல்லது மதினாவிற்கு வெளியே போய் நடத்துவதா? என்று ரசூல் (ஸல்) கேட்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) நாங்கள் வெளியே போய் யுத்தம் செய்தால்தான் நல்லது. மதீனாவின் உள்ளேயே இருந்து யுத்தம் செய்வது நன்றாக இல்லை. மற்றவர்கள் சொன்னார்கள் இல்லை ரசூலுல்லாஹ் (ஸல்) இங்கேயே யுத்தம் செய்வோம் என்று. விஷயம் என்னவென்றால் ஒன்று ரசூல்(ஸல்) அவர்கள் உள்ளுக்குள்ளேயே யுத்தம் செய்தார்கள் என்றால் பெண்கள் இருக்கிறார்கள். அடுத்தது, யுத்தம் நடக்கின்ற இடம் மித்தம் மோசமாக போய்விடும். ஆகையால் நாம் வெளியே போய் யுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.


ஏற்றுக் கொண்டு யுத்தம் நடக்கின்ற நேரத்தில், கொஞ்சம் பேர் சுமார் 10, 15 நபர்கள் நாங்கள் இங்கே யுத்தம் செய்யவில்லை எங்களால் முடியாது என்று சொல்லி வெளியே போய்விட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் இருந்தவர்களோடு போய் யுத்தம் செய்து அவர்கள் வெற்றியை எடுத்துக் கொன்டு வந்துவிட்டார்கள். அவர்களைத்தான் முனாஃபிக் என்று சொல்வது. ஏனென்றால் முன்னால் யுத்தம் செய்வோம் என இருந்துவிட்டு பின்னால் ரசூல்(ஸல்) அவர்களை விட்டு வெளியே போய்விடுகிறார்கள். இப்படி ஒரு சரித்திரம் உள்ளது.


சஹாபாக்களுக்குள்ளேயே இப்படியிருந்தால், முரீதுக்களுக்குள்ளும் இப்படி இருக்கத்தான் வேண்டும் இல்லையா? ஆனால் எல்லா முரீதுகளும் அப்படி இருக்கமாட்டார்கள். நான் நினைக்கின்றேன் எங்க முரீதுகள் நன்றாகத்தான் இருப்பார்கள். ஷெய்கைப் பற்றி சின்ன ஒரு சந்தேகமோ அல்லது இவர்கள் ஒருவகையாக பேசுகிறார்களே, அவரைப் பற்றி பேசுவதற்கு இவர்கள் யார்? இவர்கள் ஏன் இதைப் பற்றி பேச வேண்டும்? என்று கேள்வி வந்துவிட்டாலும், மனதுக்குள்ள ஊசலாட்டம் வந்துவிட்டாலும், அவருடைய பைஅத் முறிந்து விடும். அதை நாங்களாக நீக்க தேவையில்லை அவர்களே நீங்கி விடுகிறார்கள். உதாரணமாக ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கிறோம், அந்நேரத்தில் இன்னொருவர் வருகிறார். "இப்படி வாப்பா பேசினார்கள்” என்று ஒருவர் கூற, அவர்கள் ஏன் அதையெல்லாம் பேச வேண்டும், அவர்களுக்கு அதை பேசத் தேவையில்லையே என்று அந்த வார்த்தையை சொல்லி விட்டால், அப்பொழுது ஷெய்குக்கு மேலாக அவர் பேசுவதை மாதிரி ஆகுவதனால் அவருடைய பைஅத் முறிந்துவிடும். சந்தேகங் கொண்டாலும் சரி. இப்படி எழுதியிருக்கிறார்கள் இது சரியா? என்று பெரிய மனிதனாக என்னை சந்தேகிக்கின்றது. சந்தேகிக்கின்றது அல்லாமல் அதற்கு மேலாக பேசுவது. ஒரு ஷெய்குவிற்கு மேலாக பேசுவது ஒரு முரீதிற்கு தகுதியே இல்லை. அப்படி இருந்ததென்றுச் சொன்னால் அவருடைய முரீது/பைஅத் எடுபட்டே போய்விடும். ஷெய்குவின் மேல் கொஞ்சம் கோபமாக நடந்துக் கொள்கிறார் என்றால் அப்பவும் பைஅத் போய்விடும். திரும்ப முரீது என்று சொல்லி வருவதில் கருத்து இல்லை, வா இருக்கட்டும் என்று போவதுதான். இப்படி செய்கிறார்களே சரியா? என்று ஆராய்ச்சி செய்ய போனால் போச்சு. இப்ப இஸ்லாத்தில் ஆராய்ச்சி செய்கிறார்களே, சஹீயான ஹதீஸ் இருக்கின்ற நேரத்தில் சொன்னவர் சரியில்லை எடுத்தவர் சரியில்லை என்று சொன்னால், அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஹதீஸ் சஹீதான். கிதாபே அப்படி போடப்பட்டுள்ளது. அந்தமாதிரி சந்தேகப்படுவதாக இருந்தால் அந்த இமாமில் இவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத் அவருக்கு பொருத்தமற்றது.


ஒரு ஷெய்கு ஞான விளக்கங்கள் அறிந்தவராய் இருந்தால்தான் முரீதின்களை நேர்வழி காட்ட முடியும். ஏனென்றால் என்னிலிருந்து இன்னவர், என்னிலிருந்து இன்னவர் என்று இப்படி போய் அங்கே போவோம் நாங்கள். அங்கு போகும் வரையில் அந்த தொடர்பு இருக்கும். ஆனால் இடையில் முறிந்து விட்டது என்றால், சூரியனை விட்டு பூமி பிரிந்தது போலத்தான் ஆகும். சூரிய குடும்பம் உள்ளது. பூமி, சந்திரன் மற்ற கோள்களில் இருக்கக்கூடிய எல்லா நட்சத்திரங்களும் சூரியனுடைய ஆர்டர்ஷிப்பில்தான் (ordership) அது இருந்து கொண்டிருக்கிறது. அது ஒவ்வொன்றும் பூமியை ஒவ்வொரு வகையில் சுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு பிடிப்பு இருப்பதனால்தான் இது அப்படியே சுத்துகிறது. திடீரென்று இந்த சக்தி எந்த வகையிலோ எடுப்பட்டு போய்விட்டது என்றால் இந்த பூமி வீசப்பட்டு போய் விடும். எரி நட்சத்திரங்கள் (shooting stars) எங்கெங்கெல்லாம் போகிறது, அது மாதிரி வீசப்பட்டு விடும். பூமியும் ஒரு நட்சத்திரம்தான் அந்த பூமியினுடைய ஹாலே (நிலையே) போய்விடும், அதுபோலத்தான் முரீதுகளுடைய நிலையும். ஒரு ஷெய்குவினுடைய தொடர்பில் இருந்து திடீரென்று விடுப்பட்டு போவதென்றால், அவனுடைய நிலைமை அவ்வளவுதான். ஒரு முரீது ஒரு ஷெய்குவினிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். அந்த அளவோட நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு தெரியாத விஷயங்களை பேச போகக் கூடாது. தவ்ஹீதுடைய இல்மு மிக நுணுக்கமானது. அல்லாஹ் இருக்கிறான் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று எல்லோரும் சொல்வதுதானே. அல்லாஹ் இருக்கின்றான் என சொல்லும் நேரத்தில் எங்களுடைய நிலைமை உண்மையானதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான நிலைமை கருதி அல்லாஹ் என்றால் என்ன? இருக்கின்றான் என்றால் என்ன? என்பதை தெரிந்து சொன்னால் பரவாயில்லை. இருக்கின்றான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? அடுத்த கேள்வி. அல்லாஹ் இருக்கின்றான், அவன் ஆணா? பெண்ணா? இருக்கின்றான் என்றால் ஆண். இருக்கின்றாள் என்றால் பெண். எப்படி நாங்கள் சொல்வது? அல்லாஹ் இருக்கின்றான். எதில் இருக்கின்றான்? நாற்காலியில் இருக்கின்றானா? அப்படித்தானே சொல்கிறார்கள்.


ஆக இந்த வகையில் பார்க்கும் நேரத்தில், அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்வதிலும், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்று சொல்வதிலும், எல்லாவற்றிலுமே கருத்து இருக்கிறது. அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்பதில் எப்படி? கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்றானா? கொஞ்சம் பேர் அப்படித்தான் யோசிப்பார்கள். அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கின்றதால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடத்திலேயும் இருப்பான் போல் தெரிகிறது என்று. அதனால் எல்லாமே அவனுக்கு தெரியும். ஆக எப்படி இருக்ககின்றான்? எல்லாவற்றிலுமே சேர்ந்து முழுமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இருக்கின்றான் என்றால் அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. ஆண் என்று சொல்வது ஒரு பேச்சுக்காகத்தான். இருக்கின்றான் என்று ஆண் விகுதியை வைத்து பேசுகின்றோம். இருக்கிறாள் என்று சொல்ல முடியாது அதற்காக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்கின்றோம் அந்த கருத்தோடு. ஆனால் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல. சிலர் சொல்வார்கள் எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுக்கு கண்ணிருக்கிறதா? எங்கே இருக்கிறது கண்? ஒரே நேரத்தில் இங்கே அங்கேயெல்லாம் எப்படி பார்க்கிறது? எப்படியென்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். அவனுக்கு கண்ணாக நாங்கள் இருக்கிறதாக அவனே சொல்கிறானே. பொதுவாக, மஹ்லூதுகத்துகளுடைய கண்ணே அவனுடைய கண்தான். அவன் இல்லாவிட்டால் நாங்கள் பார்க்க முடியுமா? அவன் அந்த சத்தியை (Power) எங்களுக்கு தந்திருக்கிறான். அவன் அதனால் பார்த்துக் கொண்டிருக்கிறான்.


எல்லா அறிவையும் ம‌னித‌னுக்கு கொடுத்திருக்கிறான். எல்லா பொருள்க‌ளிலும் அந்தந்த‌ அறிவு இருக்கிற‌து. அந்த‌ அறிவை தந்து அவ‌ன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அறிந்து கொண்டிருக்கிறான். அவ‌ன் இல்லாவிட்டால் எங்க‌ளுக்கு அறிவே இருக்காது. அவ‌ன் கொஞ்ச‌ம் த‌ள்ளிவிட்டுவிட்டான் என்றால் அந்த‌ அறிவு எங்க‌ளுக்கு இருக்காது. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அதிக‌மாக‌ வெளியே போக‌மாட்டார்க‌ள். ஞான‌த்தை அறிந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ ஞான‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளின்தான் கால‌த்தை அதிக‌மாக‌ போக்கினார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ஓதிய‌ ஒரு ஆள் ஏதோ ஒரு ச‌பையை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறார். அவ‌ர் சொல்லி இருக்கிறார், க‌ஸ்ஸாலி கூட‌ என்னிட‌ம்தான் ப‌டித்தார் என்று. பாருங்க‌ள், ம‌னித‌னில் எத்த‌னையோ வகையான ம‌னித‌ இன‌ம் இருக்கு.


க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் அவ‌ன் ப‌டித்துவிட்டு, ம‌னித‌னாகி வ‌ந்த‌திற்கு பின்பு அவ‌ன் சொல்கிறான் அவ‌னிட‌ம்தான் க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) ப‌டித்தார்க‌ள் என்று. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் ஒருவ‌ர் வ‌ந்து சொல்லிவிட்டார் இமாம் அவ‌ர்க‌ளே, நீங்க‌ள் ப‌டித்த‌து அவ‌னிட‌ம்தானாம் என்று. இது இர‌ண்டாவ‌து த‌ட‌வை இமாமிட‌ம் செய்தி வ‌ந்த‌போது, அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ளாம் அவ‌ன் என்னிட‌ம் ப‌டித்த‌தை ம‌ற‌ந்துவிடுவான் என்று. அவ‌ன் ம‌ற‌ந்தான் எப்ப‌டி? அவருக்கு பைத்திய‌ம் பிடித்துவிட்ட‌து. அத‌ற்கு பிற‌கு ஏதேனும் ஞாப‌க‌ ச‌க்தி இருக்குமா?


ப‌டித்த‌ மாண‌வ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்துவ‌து பெரிய‌ பாவ‌மான‌ விஷ‌ய‌ம். நாங்க‌ள் எப்ப‌வும் எங்க‌ளுடைய‌ ஆசிரிய‌ரை க‌ண்டால், சைக்கிளில் போகும் நேர‌த்தில் உட‌னே இற‌ங்கிவிடுவோம். அந்த‌ நேர‌த்தில் இற‌ங்கி பேசிவிட்டு ம‌ரியாதை செய்துவிட்டுத்தான் போவோம். அது ஹிந்து ஆசிரியராகவோ, முஸ்லிம் ஆசிரிய‌ராக‌வோ இருந்தாலும் ச‌ரி எல்லோருக்கும் ஒரே ம‌ரியாதைத்தான். ஏனென்றால் எங்க‌ளுக்கு ப‌டித்துக் கொடுத்த‌வ‌ர்க‌ள். ஒரு சின்ன‌ டிராயிங் பாட‌த்துக்கு வ‌ந்து இப்ப‌டி கீறுங்க‌ள் என்று சொல்ப‌வ‌ருக்கும் நாங்க‌ள் ம‌ரியாதை செய்திருக்கின்றோம். ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌மும் கீற‌, எழுத‌ ப‌ழ‌கியிருக்கிறோம். அத‌னால் எந்த‌வொரு ஆசிரிய‌ராக‌ இருந்தாலும் நாங்க‌ள் அவ‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்தி பேச‌க் கூடாது. நல்ல விஷயங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டும். யாரும் எப்போதும் பொய்யே சொல்லக் கூடாது. பொய் பெரிய பாவமான வேலை. பொய்யால் குடும்பமே கெட்டு போய்விடும். உண்மையே பேச வேண்டும் அதுதான் முக்கியம். பொய்யினால் எல்லா கெடுதிகளும் உண்டாகும். மற்றவர்களை கெடுப்பதற்கும், நாங்கள் கெட்டு போவதற்கும் பொய் ஒரு ஆயுதம். பொய் சொல்பவர்கள் அடுத்த நிமிடமே அகப்பட்டுக் கொள்வார்கள். முகத்தை பார்த்தாலே பொய் சொல்லிவிட்டார் என்பது விளங்கும்.


ஞானம் பற்றிய அறிவு


ஞான விஷயங்களை நன்றாக எல்லோரும் நுணுக்கமாக விளங்கி கொள்ளுங்கள். தேவையான கேள்விகள், ஞானத்தில் சம்பந்தப்பட்டவைகள், புத்தகத்தை வாசித்துவிட்டு underline பண்ணி, அதில் கேள்விகள் கேட்க வேண்டும். ஞான விஷயத்தை பேசுவதற்கு, கேட்பதற்கு எல்லாம் வெட்கப்படக்கூடாது. ஒரு மாணவர் வகுப்பில் இருக்கின்ற நேரத்தில் கேள்விகள் கேட்டால்தான் கெட்டிக்காரராக ஆக முடியும். அப்போதுதான் அவருடைய சந்தேகமெல்லாம் போய்விடும். அடுத்தவர் கேட்பார் என்றிருந்தால் கேள்வி வராது. ஞானத்தை விளங்காது போனால் வேறு எதுவிலும் புண்ணியமில்லை. ஞானத்தை விளங்கினவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டு. பல படிப்புகள் இருக்கின்றது. எல்லாவற்றிலுமே சில சில விளக்கங்கள் உண்டாகி கொண்டேயிருக்கும். அது அல்லாஹ்வுடைய ஞானம். அல்லாஹ்வுக்குரியது மஹ்ரிஃபா. அது அவனுடைய ஒளிவு. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டோம் என்றால் அந்த ஒளிவு வந்துக் கொண்டேயிருக்கும்.


ஞானம் தெரிந்த எங்கள் பிள்ளையையும், பொதுவான ஒரு மனிதனையும் வைத்து பேசி பார்த்தால் தெரியும். எங்க பிள்ளைகள் பேசுவதற்கும், அவர்கள் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம். நானே பலருடன் பல முறையில் பேசுகின்றேன். ஞானம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி, ஞானம் தெரிந்தவர்கள் வந்தால் அவர்கள் விரும்பி கேட்பார்கள் விஷய விளக்கங்களை. ஒரு பொதுவான அறிவுள்ளவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி பேசுவோம். இந்தியாவில் தப்லீக்கில் இருந்த ஆள் ஒருவர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசியது, என்ன செய்கிறீர்கள்? என கேட்டதற்கு, கடலை வியாபாரம் செய்வதாக சொன்னார். எங்கெல்லாம் எவ்வளவு போடுகிறீர்கள்? தொழில் நல்லபடியா இருக்கின்றதா? என்று அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். வெளியே போய் சொன்னாராம், “வாப்பா பேசினார்கள் ஆனால் ஒரு ஞானமும் பேசவில்லை” என்று. அவரோடு நான் என்ன பேசுவது? கடலைக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? கடலை தொழில் செய்பவரோடு, நான் கடலையை பற்றித்தான் பேச வேண்டும். ஞானம் பேச வந்தவர்கள் என்றால் ஞானம் பேச இயலும். எங்க பிள்ளைகள் வந்தால் ஞானத்தைப் பற்றி பேசுவோம். ஏதாவது ஒரு தமாஷா பண்ணி தமாஷாவிலாவது ஒரு ஞானத்தை போட்டுக் கொண்டு இருப்போம். கடலை வியபாரி வந்தால், கடலையைப் பற்றித்தான் பேச வேண்டும். மீன் வியபாரி வந்தால், மீனை பற்றித்தான் பேச வேண்டும்.


அல்லாஹ்வே சொல்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன், சுப்ஹானல்லாஹ் என்று. அல்லாஹ் எப்படி பரிசுத்தமானான்? எல்லாமே அதுதானே குப்பையும் அதில் சேர்ந்ததுதானே? அது சுத்தமானதா? குப்பை சுத்தமானதல்ல. இதனின் தாத்பரியம் என்னவென்றால் எல்லாம் ஒன்று சேர்கின்ற‌ நேரத்தில் அது சுத்தமாகின்றது. பரிபூரணமாய் எல்லாமே ஒன்று சேர்கின்ற நேரத்தில் அது பரிசுத்தமாகின்றது. மெட்ராஸுக்கு போனால் முக்கியமான ஒரு விஷயம் கூவம். இந்த கூவத்தை போன்று இன்னும் எத்தனையோ கூவங்கள் ஓடத்தான் செய்யும். இவையெல்லாம் ஓடி கடலில் போய் கலக்கின்றது. அசுத்தங்கள் எல்லாம் கலக்கின்றது கடலில். பரிபூரணத்தில் நிறைய உள்ள தண்ணீரில் போய் அசுத்தங்கள் கலந்து, ரோல் (roll) ஆகின்றது. ஆனால் எங்களுக்கு கடல் தண்ணீர் என்றால் மொத்தமான தண்ணீர். அதில் நாம் ஒலு எடுக்கின்றோம். ஆக அசுத்தம், சுத்தம் என்பது அல்லாஹ்விடம் இல்லை ஆனால் ஷரியத்தில் உண்டு. ஷரியத்தில் அசுத்தம் என்றால் மனிதனை கெடுத்துவிடும் சுத்தம் என்றால் மனிதனை நல்லதாக்கும். அசுத்தம் என்றால் ஒருவன் குடிக்கின்றான் அவனுக்கு ஆபத்து உண்டாகும், ஈரல் கெட்டுவிடும், அவனுடைய பேச்சுக்கள் எல்லாமே மாறி போய்விடும். இவையெல்லாம் ஷரியத்தில் ஹராம் ஆக்கப்பட்டது. அதை செய்தால் அவனுக்கு ஆபத்து ஆகையால் அதை செய்யக் கூடாது. தவ்ஹீதில் கூடும் என நினத்துவிட்டு குடித்து விடாதீர்கள். ஷரியத்தில் இருக்கின்றவர்க்குத்தான் தவ்ஹீதும் இருக்கின்றது.


இது ஞான தத்வார்த்த கதைகளில்தான் முக்கியமான விஷயங்களில்தான் நாங்கள் இப்படி பேசுகின்றோம். ஆகவே ஹராம் எப்பவுமே ஹராம்தான். அதை தரீகத்திற்கோ, ஹக்கீகத்திற்கோ ஹலால் ஆக்க இயலாது, ஹலால் அல்ல. மனிதனுக்கு ஷரியத்துதான் அடிப்படை. மனிதனுக்கு முக்கியமானது ஷரீயத். ஷரீயத் படியில் ஏறிக்கொண்டுத்தான் நாங்கள் அடுத்த படியில் ஏற வேண்டும்.



தொழுகை பற்றிய அறிவு


கொஞ்சம் பேர் சொல்கின்றார்கள் ஞானத்தில் தொழ தேவையில்லை. ஞானத்தில் அலிஃப், பே‍ யை பார்த்து விட்டு தொழ தேவையில்லை என்கின்றனர். அவன் பார்த்தானா? தொழுகையினுடைய origianal (அசல்) எங்கிருந்து வந்தது என்று? யார் சொன்னது தொழ சொல்லி? அல்லாஹ் சொன்னான். அல்லாஹ் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் தொழ சொன்னார்கள். அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) சொல்லியிருக்கும்பொழுது எங்களால் தொழாமல் இருக்க முடியுமா? ரசூல்(ஸல்) அவர்களே தொழுதிருக்கிறார்கள். காட்டி தந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி சொல்வது ஞானத்தில் தொழுகை இல்லையென்று? ஆகவே தொழுகை முக்கியமாக உள்ளது. எந்த ஞானியாக இருந்தாலும் தொழத்தான் வேண்டும்.
ஞானத்தில் முக்கியமானது எதை ரசூல்(ஸல்) அவர்கள் செய்தார்களோ, உள்ரங்கமாகவும், வெளிரங்கமாகவும் அத்துனையும் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு மாற்றமாக எங்களுக்கு எப்பவுமே போக இயலாது. தொழுகையை விட்டுவிட்டு ஞானியாகவும் முடியாது. மனிதனாக வாழ்வதற்கு ஷரீயத் மிக முக்கியம் என்பது விளங்குகிறது.
எந்த விஷயத்திலும் ஷரீயத்தை விடவே கூடாது. ரசூல்(ஸல்) அவர்கள் தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏன் தொழுதார்கள்? அவர்கள் ஹக்குவுடனே இருப்பவர்கள். தொழுகைதான் அவர்களின் வாழ்க்கையே. தொழுகை அவசியம் என காட்டுவதற்காகத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ஒவ்வொரு வகையில் தொழுகை நடந்துள்ளது. நின்ற நிலையில் தொழுவது, ருக்உவில் தொழுவது, சஜ்தாவில் தொழுவது, இப்படி எத்தனையோ வகையான தொழுகை நடந்துள்ளது. மரம் நின்ற நிலையிலேயே தொழுகிறது. மிருகங்கள் ருக்உவிலேயே தொழுகின்றது. பறவைகள் சஜ்தாவிலேயே தொழுகின்றன. இயற்கையினுடைய எல்லா தொழுகைகளையும் சேர்த்து அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) ஹதியாவாக மனிதனுக்கு கொடுத்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் செய்த ஒன்றை தொழ தேவையில்லை என்று சொன்னால் ஒருகாலும் முஸ்லீமாக இயலாது. ஷாஃபி மத்ஹப்படி மூன்று தொழுகைகளை தொழ தேவையில்லை என்று விட்டுவிட்டார் என்றால் அவர் காஃபிர். அவரை கஃபுன் இடக்கூடாது, நீராட்ட கூடாது, முஸ்லிம்கள் அடக்கக் கூடிய இடத்தில் அந்த மய்யித்தை அடக்க கூடாது. இப்படியெல்லாம் ஷரீயத்துடைய சட்டம் உள்ளது ஆக கட்டாயம் தொழ வேண்டும். ஆஹிராவில் தொழுதவர்களை பார்க்கும் நேரத்தில் இரண்டு கையும், காலும், முகமும் வெண்மையாக இருக்குமாம். ரசூல்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் அருகில் ஓடும் நீரோடையில் ஐந்து நேரமும் குளிப்பதற்கு சமம் இந்த ஒழு எடுப்பது. தொழுகையை கொண்டுதான் மனிதனுடைய மனம் கட்டுப்படுத்தப்படுகிறது. கஷ்டமான நேரங்களில் ரசூல்(ஸல்) அவர்கள் சென்று சுன்னத் தொழுவார்களாம். அதற்குரிய தொழுகைதான் அது. தொழுகை வேண்டாம் என சொல்வது பெரிய பாவம். ஷரீயத்துடைய ஒழுங்கு பிரகாரம் நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.



குத்பு நாயகம் தொழுதிருக்கிறார்கள். ஷாதுலி நாயகம், பெரும் பெரும் இமாம்கள், ஞானிகள் எல்லாம் தொழுதிருக்கிறார்கள். இப்னு அரபி (ரலி) என்று சொன்னால் வெள்ளையர்களுக்கு கூட பெரிய பேர் அவர்களைப் பற்றி. அவர்களே தொழுதிருக்கிறார்கள். ஷரீயத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்களுடைய மதத்துக்கு நன்மை இருக்கும். ஷரீயத்தோடு ஹக்கீக்கத்தை நாங்கள் பேணி நடக்க வேண்டும்.



அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வை தந்து, சீரையும், சிறப்பையும், மேன்மையும் தந்து, நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல வணக்கங்களையும் தந்து, அந்த வணக்கத்தினுடைய நன்மைகளையும் உங்களுக்கு கொடுத்து, கொடிய நோய்கள், ஆபத்துகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டு, நல்ல வாழ்வினை அல்லாஹ் உங்களுக்கு தரட்டும்.



ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

நன்றி - மதுக்கூர் அமீர்அலி

நன்றி - ஆதம் அப்துல்குத்தூஸ்

மஜ்லிஸ் - 1

நாள்: வியாழக்கிழமை

தேதி: 01/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)





சபையால் மனதுக்கு சந்தோஷம்



எனது அன்பிற்குரிய முரீதுகளே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய‌ நன்றி உரித்தாக்குக. ஆரம்ப காலத்தில் இந்த சபை சிறியதாக பிள்ளைகள் காலித், முஸ்தபா மற்ற மதுக்கூர் பிள்ளைகள் அதிகமானவர்கள் இருந்துதான் சபைகளை நடத்தி வந்தார்கள். அதற்கு பின்னால், பல பகுதிகளில் இருந்தும் பிள்ளைகள் நிறைய வர தொடங்கினார்கள். அதற்கு பின்னால் ஆட்சி மாறுவது போல எங்களுடைய சபையும், தலைமைத்துவமும், மற்றவைகள் எல்லாம் ஒருவகையில் மாறி, கொஞ்ச காலம் நன்றாக இருந்தது.



அதற்கு பிறகு, அது திரும்ப கீழே போகக்கூடிய நிலைக்கு வந்து கொண்டிருந்தது. காரணம், சபையினுடைய நிர்வாக ஒழுங்கு முறைகள் சரியாக இல்லாமல் இருந்ததுதான் காரணம். ஒரு சபைக்குரிய ஒழுங்கு முறைகள் சரியாக இருக்க வேண்டும். அப்படி அந்த ஒழுங்கு முறைகள் சரியாக இருந்தால் எல்லோரும் அந்த சபையை விரும்புவார்கள். ஒழுங்கு முறைகள் சரியில்லையாகவும், தலைவராக இருக்கின்றவர்கள் மற்றவர்களை நாங்கள் எங்களை விட மிகக் குறைந்தவர்கள் என நினைக்கின்றதாலேயும், அந்த சபை ஒழுங்காக நடக்கக்கூடிய வழியில்லாமல் போய்விடுகிறது. மற்ற முரீதுகளும், அங்கத்தினர்களும் அதை சரியாக செய்ய விரும்பமாட்டார்கள். அந்த நிலை முரீதுகளுக்கு உண்டாகும்.



இந்த நிலையில் இப்பொழுது இன்னொரு தலைமை பீடம் உண்டாகி, அது இப்போது, அழகாக நடந்து வருவதாக எல்லாப் பிள்ளைகளும் சொல்கிறார்கள். எல்லோரும் ஒன்றாய் இருந்து, ஒழுங்கான முறையில், ஒற்றுமையாக அவரவர்கள் விரும்பியப் படி அழகாக செய்து வருகிறார்கள். எவருமே இதை தடுப்பதற்கு இல்லை. தலைவர் கூட தடுப்பது இல்லை. நல்ல முறையில் அவரவர்கள் விருப்பத்தோட செய்து வருகிறார்கள்‌ பிள்ளைகள் என்று கேள்விப்படுகிற நேரத்தில் மித்தம் சந்தோஷம் மனதுக்கு.



சபைகளில் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு தலைவர் இருந்தால் தன் இஷ்டத்துக்கு எந்த ஒரு வேலையும் செய்யக் கூடாது. நானாக இருந்தாலும் கூட என்னுடைய இஷ்டதுக்கு நான் எதையும் செய்ய போறது இல்லை. பத்து பேர்கிட்ட கேட்பேன். கேட்டுத்தான் செய்வேன். ஒருவரிடம் ஒரு குற்றம் இருக்கும் என்றால், அதையும் பலமுறை கேட்பேன். எல்லோரிடமும் விசாரிப்பேன். எப்படி, என்ன நடக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரியாமலேயே விசாரித்திடுவேன். பிறகுதான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்க்கிறது பழக்கம். இந்த சபை இப்பொழுது, ஒரு நல்ல ஒழுங்கான முறைக்கு வந்து நல்ல நல்ல பிள்ளைகள் இதில் சேர்ந்து, உங்களுடைய சபையை நடத்தி வருகிறீர்கள். பொதுவா ஒரு சபை இருந்தால் அதில் பகுதி பிரிந்து குழப்பங்கள் செய்யக்கூடிய நபர்கள் சபைகளுக்கு அழகாய் இருக்காது. எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து, ஒரே மனதோட, சரியான முறையில், ஒழுங்கான முறையில் வரவேண்டி இருக்கிறது.



அல்லாஹ்வுக்காக வந்தவர்கள் 5 பேர்தான்



பொதுவாக சபை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு ஷெய்கிற்கு அநேகமாக நிறைய முரீதுகளும் இருப்பார்கள். குறைந்த முரீதுகளும் இருப்பார்கள். இப்படி இருக்கிறதுல அவருக்கு 4, 5 பேர்கள்தான் முக்கியமான சில முரீதுகளாய் இருப்பார்கள். காரணம், அவர்கள் அந்த விளக்கத்தை விளங்கினவர்களாய் இருப்பார்கள். ஒரு ஷெய்கிற்கு விளக்கத்தை விளங்கினவர்கள் அவ்வளவு பேர்தான் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டும் வந்திருப்பார்கள். எப்படி, எனக்கு நிறைய பணம் வேண்டும், நான் நோயாளியாய் இருக்கின்றேன். எனக்கு சுகம் வர வேண்டும். பணவசதியே எனக்கு இல்லை. அதனால் எனக்கு நிறைய பணம் வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போவதெல்லாம் உலக விஷயங்களுகுக்தான். அப்படி உள்ள ஜனங்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆனால், அந்த அல்லாஹ்வுக்காக வந்தவர்கள் அந்த 5 பேர்தான் இருப்பார்கள்.



ஒரு சிலர் தற்பெருமைக்காக வருவார்கள். தான் பெருமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வருவார்கள். ஆனால், இப்ப நாங்கள் கூட்டல், கழித்தல் செய்து பார்த்ததில் எங்களுக்கு இவ்வளவு பிள்ளைகள் விஷயம் விளங்கின பிள்ளைகள்தான் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்கு விளங்குகிறது. பெரிய சந்தோஷம். ஏனென்றால், நீங்களெல்லாம் விஷயம் விளங்காத பிள்ளைகளாக இருந்தால் இவ்வளவுக்கு எல்லோரும் போயிருப்பீர்கள். ஒரு சோதனை மாதிரி நடந்து முடிந்துவிட்டது. இப்ப இங்கு இருக்கின்ற எல்லோருமே ஹக்கை பற்றி அறிகிற சந்தோஷத்தோட, அதில் விருப்புமுள்ளவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம். ஒரு சிலர் குற்றம் சொல்வார்கள். அவர்கள் இருக்கட்டும், போகட்டும். எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.



எங்களுக்கு நல்ல பிள்ளைகளாக, விஷயம் விளக்கமுள்ள பிள்ளைகளாக, தவ்ஹீதை விரும்பின‌ பிள்ளைகளாக, தவ்ஹீதிற்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக, தவ்ஹீத் என்று சொன்னால் அல்லாஹ்வுக்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக, ரசூலுக்காகவே வாழக் கூடிய பிள்ளைகளாக இருந்தால் அதுவே போதும். இவருக்கு இத்தனை முரீத் இருக்கிறார்கள். அவருக்கு ஞானம் எப்பவுமே கொட்டிக் கொண்டே இருக்கிறது. இவர் நேரத்தோட ஞானமெல்லாம் படிச்சிட்டே வந்திருக்கிறார், அப்படி சொல்லக் கூடிய ஆட்கள் எங்களுக்கு தேவையில்லை. ஏன், நேரத்தோட படிச்சிட்டு வந்தவங்க இங்கு வரவேண்டிய அவசியமில்லையே. நாங்கள், ஒரு ஆசிரியரிடம் போகிறோம் என்றால் படிக்கிறத்துக்குதான். ஆசிரியருக்கு படிச்சுக் கொடுக்க போவதில்லையே. இங்கு வருவது தவ்ஹீதை விளங்குவதற்கு, படிப்பதற்கு அல்ல.



ஒவ்வொருவரும் பேசி, கதைச்சு அதைக்கொண்டு, நீங்கள் உங்களுக்குள்ளேயே விளக்கத்தை விளங்கி கொள்கிறீர்கள். இப்ப, நான் பேசுகிற நேரத்தில் நீங்கள் சில விஷய விளக்கங்களை விளங்கிக் கொள்கிறீர்கள். மற்றவர்களுக்கு தெரியாததை மற்றவர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் கேட்கிறீர்கள். இந்த வகையில் நாங்கள் தவ்ஹீதுடைய இல்மை ஒவ்வொருவரிடமும் பரிமாறிக் கொள்கிறீர்கள். அதுதான் மிக அவசியம்.



ஆரம்பக் காலத்தில் 2, 3 பேர் ஒன்று சேர்ந்தால் தவ்ஹீதைத்தான் பேசுவார்களாம். வேறொன்றும் பேச்சு இல்லை. அது 12, 1 மணி வரை போகுமாம் பேச்சு. கதைச்சு, கதைச்சு அதில் வருகிற‌ சந்தேகங்கள் எல்லாவற்றையும் பேசி இப்படித்தானாம் பேசுவார்கள். இதனால் நன்மை என்னவென்று கேட்டால் தவ்ஹீதை விளங்கக்கூடிய ஆர்வம் எங்கள் பிள்ளைகளுக்கிடையில் அதிகமாக இருக்கின்றது என்ப‌துதான் கருத்து. உண்மையிலேயே ஒரு தவ்ஹீதுடைய சபையாக இருந்தால் அதில் ஞான விளக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். பொய்க்கு வந்து அமர்ந்திருந்து, எல்லாம் தெரிந்தவர்கள் போல தலையாட்டி, சிரிச்சு, சிரிச்சு அதை கேட்டுக் கொண்டு இருந்து, ஒன்றுமே இல்லாமல் போறது என்றால் எருமைக்கு மேலே மழை பெய்தது போலத்தான்.



க‌டுமையாக‌ ம‌ழை பெய்கிற‌ நேர‌த்தில் ம‌ற்ற‌ மாடுக‌ளாவ‌து த‌லையை ப‌ணிக்கும். ஆடு போக‌ ப‌ய‌ப்ப‌டும். மித்த‌ம் க‌ஷ்ட‌ப்ப‌டும். எருமைக்கு அந்த‌ பேச்சே இல்லை. அது அழ‌காக‌ ந‌ட‌ந்து போகும். ஏனென்றால், அதற்கு ம‌ழை பெய்கிறதா என்றே தெரியாது. சும்மா, பொய்க்கு த‌லை ஆட்டுவ‌தும், சிரிக்கிற‌தும் தேவையில்லை. த‌வ்ஹீதை விள‌ங்க‌னும். இப்ப‌, இவ்வ‌ள‌வு பிள்ளைக‌ள் தவ்ஹீதை விள‌ங்கின‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌தை ப‌ற்றி நாங்க‌ள் ச‌ந்தோஷ‌ப்ப‌டுகிறோம். உங்க‌ளுக்குள்ளே ஏதும் குழ‌ப்ப‌ம் ஒன்றும் இல்லையே? எல்லாம் நல்லாதானே இருக்கிறீர்க‌ள்? ச‌ந்தோஷமாக‌ இருக்கின்றீர்க‌ள். எல்லா விள‌க்க‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ விள‌ங்கிக் கொள்கிறீர்க‌ள்.



அவர்கள்தான் ஞானிகள்



ர‌சூல் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் க‌ந்தூரியை அழ‌காய் செய்கிறீர்க‌ள். குதுபு நாய‌க‌த்துடைய‌ க‌ந்தூரியை செய்கிறீர்க‌ள். க‌ந்தூரி எத‌ற்கு செய்ய‌னும் என்று கேட்கிற‌து இல்லையே. நாங்க‌ள் சொல்லியிருக்கிறோம் ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் பேரிலும் நீங்க‌ள் விழா (க‌ந்தூரி) செய்யுங்க‌ள் என்று. ஏன் தெரியுமா? ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்கள்தான் குத்புமார்க‌ள் எல்லோருக்குமே த‌லைவ‌ர்க‌ள்.



இன்றைக்கு கூட‌ எங்க‌ள் ஊரில் மிக‌ப்ப‌ழைய‌ கால‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஒரு ப‌ள்ளி உள்ள‌து. எங்க‌ளுடைய‌ ஊரிலிருந்து கொஞ்ச‌ தூர‌த்தில்தான் உள்ள‌து. அது ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் இர‌ண்டு பேருக்கும் உரிய‌ ப‌ள்ளி. ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி)அவ‌ர்க‌ளுடைய‌ கால‌த்தில் அங்கு க‌ந்தூரி கொடுப்பார்க‌ள். அங்கு ஜ‌ன‌ங்க‌ள் போவார்க‌ள். ந‌ம்பி த‌ன‌க்கு தேவையான‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை கேட்டு நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடு போகிறவ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். இப்ப‌, எங்கள் வீட்டில் கூட‌ பிள்ளைக‌ள் ஏதாவ‌தும் செய்வ‌தாக‌ இருந்தால், ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் பேரில் ஒரு காணிக்கையை போட்டு வ‌ருவ‌துதான் ப‌ழ‌க்க‌ம். எல்லோருமே அப்ப‌டித்தான். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ அந்த‌ வேலையை செய்கிறார்க‌ள். ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ளுடைய‌ பேரிலும் ஒரு 2, 3 நாளாவ‌து ந‌ல்ல‌ முறையில் செய்யுங்க‌ள். 11 நாள் செய்தாலும் பர‌வாயில்லை. நாங்க‌ள் நன்றாக வாழ வேண்டும். நன்றாக இருக்க வேண்டும், நாங்க‌ சிற‌ப்பா இருக்க வேண்டும். மேன்மையாக‌ இருக்க வேண்டும். அதுமாத்திர‌ம‌ல்ல‌ எங்க‌ளுடைய‌ ச‌ந்த‌திக‌ளும் நன்றாக இருக்க வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு கொடிய‌ நோய்க‌ள், ஆப‌த்துக்க‌ள் வ‌ர‌க்கூடாது. அந்த‌ எண்ண‌த்தோட‌ நீங்க‌ள் ப‌ண‌த்தைக் கொடுத்து ந‌ல்ல‌ முறையில் செய்யுங்க‌ள். அத‌னால் உங்க‌ளுக்கு நன்றாகத்தான் இருக்குமே அல்லாம‌ல் ஒருக்காலும் கெடுதி வ‌ராது. ர‌சூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரில்‌, ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவர்களின் பேரில், முஹையுத்தீன் ஆண்ட‌கை பேரில்‌ எல்லாம் செய்வ‌தில் எல்லாச் சிற‌ப்பும் இருக்கின்றது. உங்க‌ளுக்கு அல்லாஹ் ந‌ன்மையை இன்னும் த‌ர‌ட்டும்.



ஆனால் இதுவும் ஞான‌ம்தான். ஞானிக‌ளை நாங்க‌ள் கெள‌ர‌விக்கிறோம். ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) சும்மா இருந்த‌வ‌ர்க‌ளா? இன்றைக்கு அவ‌ர்க‌ளுடைய‌ ஞான‌த்தைதான் நாங்க‌ள் பேசுகிறோம். எதை அலி (ர‌லி) அவ‌ர்க‌ள் ஹ‌ஸ‌ன், ஹுசைன் (ர‌லி) அவ‌ர்க‌ளுக்கு சொன்னார்க‌ளோ அந்த‌ விஷ‌ய‌த்தைதான் நாங்க‌ பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த‌ விஷ‌ய‌த்தை நாங்க‌ சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதில் ஏதும் த‌வ‌று இருக்கும் என்றால் காட்டுங்க‌ள், என‌க்கு எந்த‌ இட‌த்தில்‌ த‌வ‌று உள்ள‌து என்று. அவ‌ர்க‌ள்தான் ஞானிக‌ள். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வார்த்தையை ஞான‌ பாஷையில் பேசிவிட்டால் அவ‌ங்க‌ ஞானியாவார்க‌ளா? அவ‌ர்க‌ள் சாணிக‌ள்தான். ஏனென்றால் மாட்டிலிருந்து தேவையில்லாதுதானே வெளியே போகிறது. தேவையில்லாத கழிவு பொருள் போகிறதை நாங்க சாணியென்றுதான் சொல்கிறோம். அந்தக் கழிவு பொருள்தான் அப்படி சொல்லும். ஞானத்தை கிரகிச்ச பொருள்களில் எதுவுமே தன்னை ஞானியென்று சொல்லிக் கொண்டு திரியாது.



ஞானம் அல்ல பாணம்



ஞான‌ம் எங்கே இருக்கிற‌து, ஞான‌ம் எது என்ப‌தை விளங்கிக் கொள்ள வேண்டும். ஞான‌த்தை எல்லோரிடமும் கேட்க‌லாம். ஆனால் வ‌ழி த‌வ‌ற‌க்கூடாது என்றுதான் சொல்வது. ஞான‌ம் படித்தவர்கள்‌ எத்த‌னையோ பேர் இருந்திருக்கிறார்கள்? ஹ‌காய்குஸ‌பா எழுதின‌து யாரு? துஹ்ப‌த்துல் முர்ஸ‌லா எழுதின‌து யாரு? அந்த‌ மாதிரி அந்த‌ந்த‌ ஆட்களிடம் தெரிந்தவர்களிடம் ‌கேட்டாத்தான் ஞான‌ம் இருக்கும். இல்லாவிட்டால் ஞான‌ம் அல்ல பாண‌ம், குத்துகிற‌ அம்பு அதுதான் வ‌ரும். ஞான‌த்துடைய‌ விஷ‌ய‌த்தை ஒவ்வொருவ‌ரும் விள‌ங்க‌னும். ஞான‌த்தைப் ப‌ற்றி விள‌ங்குவ‌த‌ற்கு ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தை வாசிக்க‌னும். முக்கிய‌மான் புத்த‌க‌ங்க‌ள் நாங்க‌ள் எழுதியிருக்கிறோம். அதையும் பார்க்க‌லாம். அதில் ‌ வ‌ருகிற‌ ச‌ந்தேக‌த்தை கேட்க‌லாம். அதில் விள‌ங்கிக் கொள்வ‌து எவ்வ‌ள‌வோ ந‌ல்ல‌து. அதில் எவ்வ‌ள‌வோ நுனுக்க‌மான‌ விஷ‌ய‌ம் எல்லாம் இருக்கும். அதை ப‌டிக்க‌ ப‌டிக்க‌ ப‌ல‌முறை ப‌டிக்கிற‌ நேர‌த்தில‌ ப‌ல‌வ‌கையான‌ நுனுக்க‌ங்க‌ள் உண்டாகும்.



ச‌ர்புதீன் ஆலிம்ஷா என்றொரு மெளலவி இருந்தார்கள். ஜ‌மாலியாவில் அவர்கள்‌ ஓதிக் கொடுத்தவர்கள். எங்கள்‌ வாப்பா கால‌த்தில எல்லாம் என‌க்கு தெரியும். ஞான‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌ம் எதுவும் அவருக்கு தெரியாது. அப்பொழுது என்னிட‌ம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு என்னிட‌ம் பைஅத் ஆக‌னும் என்று சொல்லி, பைஅத் ஆகிவிட்டார்கள், ந‌ல்ல‌ வயதானவர்கள்‌. சொன்னாராம் நான் இவ்வ‌ள‌வு கால‌ம் குர்ஆன் ஓதிய‌துதான். ஆலிமும் கூட‌ விள‌ங்கித்தானே ஓதுவாரு. ஆனால் நான் அறிந்த‌து ஒன்றே ஒன்றுதான். ஒரேயொரு கருத்துத்தான் தெரியும். ஆனால் இப்ப எடுக்கிற நேரத்திலே எனக்கு எல்லா வகையான கருத்துக்களும் என்ற மனதுக்கு வருது என்று. அதுபோல நாங்கள் ஞான புத்தகங்களை பலமுறை வாசித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு நாங்கள் எப்பவுமே இரண்டாவது ஆகிறதுமில்லை. ஆகிவிடவும் மாட்டோம். ஞானத்திலே எப்பவுமே எங்க பிள்ளைகள் இன்னொருவருக்கு இரண்டாவது ஆகுறதுமில்லை. ஆகவும் மாட்டோம். ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இப்ப எங்களது சபை நல்ல ஒழுங்கான முறையிலே, அதாவது சல்லடையில் எல்லாவற்றையும் போட்டு, அரைச்சி சக்கையொல்லாம் போனதிற்கு பிறகு நல்லதை கொண்டு வந்து வைத்திருக்கின்றோம். இங்கு எனக்கு தேவையான முறையில் அல்லாஹ் பார்த்து அப்படியே அது சரிபண்ணி வைத்திருக்கிறது. அதேமாதிரியே எப்பவுமே எல்லோரும் இருக்க வேண்டும். சபைக்கு வருகிற நேரத்திலே முனாஃபிக் தனமோ, தற்பெருமையோ யாருக்கும் இருக்கக் கூடாது. தற்பெருமை நிச்சயமாக மனிதனுடைய வாழ்க்கையை கெடுத்தே போடும். ஆனால், இன்றைக்கு நல்லா இருந்தால் இன்னும் கொஞ்சம் நாள் போனதுக்கு பிறகு பார்க்கலாம் என்னவருவதென்று.



மற்றவர்களை பற்றி பொறாமை கொண்டால் நிச்சயமாக நீங்கள் பாருங்கள் எவன் பொறாமை கொன்டானோ அவன் நிச்சயமாக கீழே தட்டப்படுவான், தாழ்த்தப்படுவான். எனது வாழ்க்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். மற்றவர் வாழ்க்கையிலும் நான் பார்த்திருக்கிறேன். யாரும் பொறாமை கொள்ளக் கூடாது.



அப்படி எங்கள் பிள்ளைகள் யாருக்கும் தற்பெருமை, பொறாமை இதன் கிட்டேயே நெருங்கி விடாதீர்கள். ஆக மோசமான நோய்தான் அது. அதனால் நோயும் வரும் மனுசனுக்கு. பொறாமை படுகிறவனுக்கு சும்மா டென்ஷன் உண்டாகிவிடும். டென்ஷன் உண்டானால் பிரஷ்ஷர் மற்றும் சீனி கூடும். இப்படி ஒவ்வொன்றும் கூடிக் கொண்டு போய் நோயாளியாகிவிடுவான் அவன். தற்பெருமையிலே "நான் தான் பெரிய மனுஷன். அவர்கிட்ட கேட்கக் கூடாது. அவர் என்ன செய்வார், இவன் தற்பெருமைக்காரன், இவனை நாங்கள் மதிக்கக் கூடாது. இப்படி மதிப்பு கொஞ்சம் தற்பெருமையாலேயே போய்விடும். மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா அவர்களுடைய கதை ஒன்று.



அவங்க ஓதிக் கொடுக்கிற காலத்திலே, அஹ்மது அலி ஆலிம்ஷா என்று ஒருவர் ஓதியிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ பேர் ஓதியிருக்கிறார்கள். பெரிய அறிவாளி. மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா என்று சொன்னால் அவர்கள் லேசான அறிவாளி அல்ல பெரிய அறிவாளி. அறபியிலும் அப்படித்தான். மித்தம் பேருக்கு அவங்களை பற்றி தெரியாது பாருங்கள். ஒரு நாள் என்ன செய்தார்களாம் அஹமது அலியே என்று கூப்பிட்டார்களாம்.



அஹ்மது அலியே - அவர்களுடைய பெயர்.

நஹ்வில் புலியே - நஹ்வு - அறபி இலக்கணத்தில் அவர்கள் புலி

அலமாரிக்குள்ள எலி - அலமாரிக்குள் எலி இருந்துள்ளது

கம்பையெடுத்து ஒழி - அடிச்சு போடு

ஹஸது இல்லாட்டி ஒலி - அவ்வளவு பெரிய அறிவாளிக்கு ஹஸது இல்லாட்டி ஒலி என்று சொல்லி விட்டார்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷா அவர்கள். அவர்கள் எல்லாம் சிறப்பான மனிதர். அவர்களிடம் பொறாமை என்பதே இருக்கவில்லையே. நல்ல பெரிய மனிதர் அவர். எங்க வாப்பாவுடைய உஸ்தாதுவிற்கு உஸ்தாது. அந்த அஹ்மது அலி ஆலிம்ஷாதான் எங்களுடைய வாப்பாவுக்கு உஸ்தாது.



அல்லாஹ்வும் சபித்தான், ரசூலும் (ஸல்) சபித்தார்கள்



பிள்ளைகள் மற்றவர்களைப் பற்றி பொறாமை கொள்ளக் கூடாது. நீங்கள் கோப‌ங்க‌ள் ஒருவ‌ரோட‌ அதிக‌ம் வைத்துக் கொள்ள‌ கூடாது. ஆனால், உண்மையாக‌வே உங்க‌ளுக்கு ஒருவ‌ர் மோச‌மான‌ முறையில் ந‌ட‌ந்தார் என்றால் கோப‌ம் வ‌ர‌த்தான் செய்யும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே ச‌பித்திருக்கிறார்க‌ளே. அல்லாஹ்வும் சும்மாவா விட்டான். அல்லாஹ் ச‌பித்தானா இல்லையா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ‌ர்க‌ளுக்கு அநியாய‌ம் செய்த‌ அபுல‌ஹ‌பிற்கு என்ன‌ அல்லாஹ் சொன்னான்? (த‌ப்ப‌த்திய‌தா சூரா) க‌ண‌வ‌னுக்கும் ச‌பித்தான். பின்னால் ஹ‌ம்மா ல‌த்த‌ல் ஹ‌த‌ப் என்று அவளுடைய பெயரையும் கொடுத்து விட்டான் அல்லாஹ். இது இன்றைக்கும் இவ்வளவு கால‌மும் இருக்கின்றது. ர‌சூலுல்லாஹ்வுடைய‌ கால‌த்திலிருந்து வ‌ஹீ இற‌ங்கிய‌து இன்றைக்கு வ‌ரையிலும் இருக்கின்றது. இன்றைக்கு வ‌ரையிலும் ச‌பிச்சுக் கொண்டே இருக்கிறார்க‌ள். அல்லாஹ் மட்டுமா சபித்தது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சபித்தார்கள். இன்றைக்கு நாங்களும் சபித்துக் கொண்டிருக்கிறோம். அபூலஹபுடைய இரண்டு கைகளும் சூகையாகட்டும் (தப்ப‌தியதா அபிலஹபின் வ தப்). இன்றைக்கு நாங்கள் ஓதுவதுதானே. இன்றைக்கு சொல்கிற ஒவ்வொரு வார்த்தையிலும் இன்றைக்கு சபிப்புத்தான். அல்லாஹ் சபித்திருக்கான். அல்லாஹ், ரஹ்மான், ரஹீம் இருந்தாலும் கூட அவன் சபித்துக் கொண்டு இருக்கிறான்.



ஒரு நாள் அபுஜஹீல், மர்வான் எல்லாம் ஒன்று சேர்ந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழ வருவார்கள். அப்போது ஸஜ்தா செய்வார்கள். அவர்கள் ஸஜ்தா செய்யும் நேரத்தில் ஒட்டக‌த்தின் குடலை கொண்டு வந்து அவர்கள் மேலே போட வேண்டும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோடு சஹாபி ஒருவரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை ஒருவர்தானாம் கூட இருந்து உள்ளார்கள். ஒட்டகத்தின் குடலை கொண்டு வந்து போட்டார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எழும்ப முடியவில்லை. சரியான கஷ்டம். அவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கி கொண்டு எப்படி எழும்புவது. அப்படியே ஸஜ்தாவிலேயே இருந்து விட்டார்களாம். ஃபாத்திமா (ரலி) நாயகி கேள்விப்பட்டு ஓடி வந்தார்களாம். ஓடி வந்து அவற்றையெல்லாம் சுத்தம் செய்து அப்புறப்படுத்தினார்களாம். பிறகுதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலையை தூக்கி நின்றார்களாம். எழுந்து கையை ஏந்தி அல்லாஹ் இவர்களை ஹலாலாக்கி போடு என்று சபித்தார்களாம். சபித்தது பத்ரு யுத்ததில்தான் அவ்வளவு பேரும் சபிக்கப்பட்டது குளோஸ் ஆனார்கள். சபிக்க இயலாமலும் இல்லை. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு இடத்தில் அல்ல. எத்தனையோ இடத்தில் சபித்திருக்கிறார்கள். சபிக்க வேண்டிய நேரத்திலே சபிக்கத்தான் செய்வார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சபிக்கவில்லை என்றால் இதற்கு என்ன சொல்வது? அல்லாஹ் சபிக்கவில்லை என்று சொன்னால் "தப்பத்தியதா" வை வைத்து என்ன செய்வது? அல்லாஹ்வும் சபித்துள்ளான், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் சபித்துள்ளார்கள், குத்பு நாயகம் (ரலி) அவர்களும் சபித்துள்ளார்கள், சாதுலி நாயகம் (ரலி) அவர்களும் சபித்துள்ளார்கள். அவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததால் சபித்தார்கள். மனிதர்களுக்கு சபிக்கிறதுக்கு வைத்துள்ளான் அல்லாஹ். நல்லா வாழுங்கள் என்று நல்லவர்களை பார்த்து சொல்லனும். ஆகவே மோசமானவனை பார்த்து நாசமா போ என்று சொல்ல வேண்டியதுதான். இது அவரவர்கள் தேடிக் கொள்வதுதானே. அது ஆகுகிறது ஆகத்தான் செய்யும். யாராலேயும் நிறுத்த முடியாது.



சுவர்காரம் கரைய வேண்டியது கரைந்துக் கொண்டே போகும். எந்நாளும் போட்டு தேய்த்துக் கொண்டிருந்தால் அது கரைகின்றதை நிறுத்த முடியுமா? பிள்ளைகள் எல்லாம் பொறாமை, தற்பெருமை, மற்றவர்களுக்கு அநியாயம் செய்வது, பொய் பேசுவது வைத்துக் கொள்ளாதீர்கள். பொய் சொல்வதால் வாய்க்குத்தான் ஆபத்து. அதுக்கு மட்டுமா? நாக்குக்கு, உதட்டுக்கு, தொண்டைக்கு ஆபத்து. எவனொருவன் அநியாயமான பொய்யை சொல்கிறானோ, பெரும் பொய்களை, பாவமான பொய்களை சொல்லக் கூடாது. எது உண்மையோ அதைத்தான் சொல்ல வேண்டும். உண்மை, சத்தியம் அதுதான் தேவை. அதனால ஒரு கெடுதியும் வருவதைப் பற்றி பரவாயிலையே. குத்பு நாயகத்திடம் எவ்வளவு இருக்கு என்று கேட்ட பொழுது, இவ்வளவுதான் இருக்கு என்று சொன்னப்போது கள்வனுக்கே புத்தி வந்துவிட்டது. கள்வனே திருந்தி விட்டான். பாரதியார் சொல்கிறார்:



பொய் சொல்ல கூடாது பாப்பா

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

தெய்வம் நமக்கு துணை பாப்பா ‍ ஒரு

தீங்கும் வரமாட்டாது பாப்பா.



எங்களுக்கு பாரதியாருக்கு பத்வா கொடுக்கவியலாது.



ஆகவே நீங்கள் உங்கள் மனங்களை துப்புறப்படுத்தி எல்லா பிள்ளைகளும், இன்னும் நல்ல முறையில் சீரடைந்து, நல்ல ஞானிகளாக வர அல்லாஹ் உதவி செய்யட்டும். அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தையும் தந்து, கராமாத்துக்களையும் தந்து, அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும். உங்களுடைய தொழில்களிலும் நிறைய செல்வத்தை தந்து சிறப்பாக்கி வைக்கட்டும். உங்களுடைய உடல் நலங்களையும் அல்லாஹ் பாதுகாத்து, கொடிய நோய்கள், ஆபத்துக்கள் வராமல் பாதுகாத்து, உங்களுடைய பிள்ளை குட்டிகள், மனைவிமார், உங்களை சேர்ந்தவர்கள், நீங்க அன்பாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் பாதுகாத்து, நல்ல வாழ்வை கொடுத்து சிறப்பாக்கி வைக்கட்டும்.



ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது

நன்றி

அமீர்அலி
ஆதம் அப்துல் குத்தூஸ்