This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Showing posts with label கேள்வி-பதில். Show all posts

கேள்வி-பதில் நிகழ்ச்சி

சங்கைமிக்க ஷெய்கு நாயகம் துபாய் விஜயத்தில் ஏப்ரல் 21-ல் நடைபெற்ற மஜ்லிஸில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.



PART 2



PART 3



PART 4



PART 5



PART 6



PART 7

ஐயமும் தெளிவும்

ஒரு அமானிதத்தை எடுத்து மிருகங்கள் மரங்கள் மலைகளிடம் சுமக்க முடியுமா…?என இறைவன் கேட்டதற்கு அவைகள் மறுத்துவிட்டன.ஆனால் மனிதன் அவற்றை சுமந்து அநியாயக்காரனாகவும் மூடனாகவும் திரிகிறான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறதே அதன் விளக்கம் என்ன..?

மிருகங்கள் என்பது அது மிருகங்கள்தான். ஆனால் இரண்டுகால் மிருகத்தைவிட நான்கு கால் மிருகம் மிகவும் சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அது அப்படியே இயற்கையிலேயே இருக்கிறது.அதற்கு ஒன்றும் தெரியாது.ஏதாவது ஒன்றில் முட்டினாலும் அதற்கு தெரியாது.

ஆனால் மனிதனுக்கு இறைவன் கொடுத்திருப்பது பெரிய அமானிதம் எதுவென்றால் அறிவு. மனிதன்அறிவை சுமந்திருக்கிறான்.அவனிடம் இருக்கக் கூடிய ஒவ்வொரு உறுப்புகளும் அறிவுடையதாகும் விஷயமுடையதாகவும் இருக்கிறது. அதிலிருந்து எல்லா நன்மைகள் தீமைகள் பெறக்கூடியவனாகவும் மனிதன் இருக்கிறான்.

மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று இறைவன் வரையறுத்துள்ளான்.அதற்கு மாற்றமாக ஒருவன் நடந்து விட்டானென்றால் அவனுடைய அமானிதத்தை இழந்துவிடுகிறான்.

எல்லாவகையிலுமே மனிதன்தான் முக்கியமானவன்.அவனுக்கு எல்லா அறிவையும் இறைவன் வழங்கியிருக்கிறான்.

கொடுத்த அமானிதத்தை மனிதன் காப்பாற்ற வேண்டும்.அவன் இறைவனுக்கு மாற்றமாக நடந்துக் கொண்டால் ஆபத்து உண்டாகும்.

மனிதனிடம் அறிவுகள் இருந்தும் அதை விளங்காமல் கேடுகளை சுமந்துக் கொண்டிருக்கிறான்.
மனிதனுக்கு தடுக்கப்பட்டதை உண்ணுகிறான் குடிக்கிறான் ஏனென்றால் அவன் அந்த உண்மையை விட்டுவிட்டான். ஆபத்தான விசயங்களை செய்யக்கூடிய நிலமை வந்துவிட்டது.
அமானிதம் என்று சொன்னால் என்ன…?
இறைவன் தன்னுடைய இரகசியத்தை மனிதனுக்குதான் கொடுத்திருக்கிறான்.ஆனால் மனிதன் அதை மறந்துவிட்டான்.

- இமாம் கலீல்அவன் மௌலானா

ஐயமும் தெளிவும்...2

மனம் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.?

எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோசமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறு விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து கொண்டிருக்கும். ஆதலால் எந்த ஒரு கஷ்ட நிலையிலும் சந்தோசப்பட்டால் அவனுக்கு அந்தக் கஷ்டம் நீங்கி சந்தோச நிலை உண்டாகும். இது இயற்கை.
கவலை வருமாயின் அவற்றை மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

(0)

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகி விடுவோமா.?

எல்லாமே ஒன்றான பரிபூரண ஒன்றைப் பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால் ஏகமெனும் நிலை உண்டாகிவிடும்.(அது எவ்வாறெனில்) குதம்பைச் சித்தர் வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயமேதுக்கடி, குதம்பாய் பட்டயமேதுக்கடி- என்று பாடினார்.
வெட்டவெளியை மெய்யாகவைத்துக் கொண்டால் அவனுக்கு எதைப்பற்றிய பிரச்சனையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நினைத்து வருபவன் சில காலங்களில் இதில் சித்தமடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.


- செய்குனா பதில்கள் - மறைஞானப்பேழை

ஆதியானவன் அந்தமானவன்

கேள்வி: திருமறையில் அவனே ஆதியானவன் அவனே அந்தமானவன் அவனே வெளியீடானவன் அவனே உள்ளீடானவன் என்று வசனம் வருகிறது இதற்கு பொருள் என்ன…?

பதில்: ஒளியானவனும் அவன்தான் தஸ்பியாகவும் தன்ஸியாகவும் இருக்கிறான். அதாவது வெளியானவன் உள்ளானவன் எனச் சொல்வது…

அவனுக்கு ஒரு ஆரம்பமுமில்லை அவனுக்கு ஓரு முடிவுமில்லை.
வல் அவ்வலு- அவனே தான் ஆரம்பம். ஆரம்பமே இல்லாத ஆரம்பம்
முடிவு இல்லாத முடிவு .
அதுதான் அல்லாஹ்தாலாவுடைய சக்தியெனச் சொல்வது.
ஆரம்பம் போய்க் கொண்டே இருக்கும்.

நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் பார்ப்போம்.
எங்கே முடியும் …முடியும் முடியும் என்று பார்த்தால் முடிவு போய்க் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் பூமியை சுற்றிவருகிறீர்கள் என்றால் ஒருபகுதியில் இருந்து மறு பகுதிக்கு வந்துவிடுகிறீர்கள். ஆனால் இதற்கு அப்படி இல்லை. மேலே போனால் போனது தான். அந்த பவனம் இருக்கும் வரையில் சுத்திக் கொண்டிருக்கும். அதற்கு மேலே தாண்டிப்போனால் அதுபோய் கொண்டே இருக்கும். அவ்வளவுதான். கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். பயந்து விடுவீர்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்களுக்கு(நம்மால்) ஒரு குறிப்பிட்ட இடத்தைப்போய் சந்திக்க முடியும். குறிப்பிடாத இடம் ஒன்று இருக்கின்றபோது எப்படிச் சந்திக்க முடியும்,?
அது நெடுக போய்க் கொண்டே இருக்கும். அதற்கு முடிவேயில்லை. எந்தப்பக்கத்தால் போனாலும் சரி பூமிக்கு கீழால் போனாலும்சரி. பூமிக்கு மேலாக போனாலும் சரி பூமிக்கு கீழ்மேல் என்று இல்லையே… அது சுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் (நாம்) மேல்நோக்கி பார்க்கின்ற இடத்தில் மேலாகத் தெரிகிறது. கீழ்நோக்கிப் பார்த்தால் கீழாகத்தெரிகிறது. நாங்கள் (நாம்)
எப்படி இருக்கிறோம் ? நேராக நிற்கின்நோமா…? இல்லை…
தலைக்கீழாகத்தான் நிற்கிறோம்…
வெளவாலைப் போன்று நிற்கிறோம். பூமியினுடைய சக்திதான் எங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் போகாது. எவ்வளவு தூரம் சென்றாலும் கீழேதான் விழுவீர்கள். ஆனால் நிற்பது தலைக்கழால்தான். அதனால்தான் மனிதன் தலைக்கீழாய் போகிறான். தலைக்கீழால் போகக்கூடாது. என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த அறிவை தந்திருக்கிறான். பயப்படாதீர்கள். ஒருகாலும் விழமாட்டிர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான்…
நாங்கள் (நாம்) கவனிப்பதில்லை பாருங்கள். வெளவால் மரத்தில் தொங்குகிறது. நாங்கள் (நாம்) பூமியில் தொங்குகிறோம்.
பெரிய பெரிய கட்டுமானங்கள் கோபுரங்கள் எல்லாம் மறுபக்கம் திரும்பித்தான் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாருங்கள் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சக்தியை அதற்கு நிகர் எதுவுமில்லை…

- இமாம் கலீல்அவுன் மௌலானா

எங்கும் நிறைந்த இறைவனை எப்படி அறிவது…?


கேள்வி: இறை எல்லாப் புறமும் இடத்திலும் சூழ்ந்துள்ளது என்கிறோம்…மனிதனிலும் இறையுள்ளது என்பதை எப்படி உணர்ந்துக் கொள்வது…?

பதில் : மனிதனில் இறையிருப்பதை உணர்வதற்கு பயிற்சியே சரி. (மஜ்லிஸில் அமர்ந்திருக்கக் கூடியவர்களைக் காண்பித்து)அதாவது எங்களைச் சூழ மனிதர்கள்தானே இருக்கிறார்கள் வேறொன்றும் இல்லை(யா)யே…?
எங்களைச் சூழ மனிதர்கள் மட்டுமல்ல எங்களைச் சூழ ஆகாயமும் இருக்கிறது நான் இருக்கிறேன். நான் இருக்கக்கூடிய இடத்தில் ஆகாயம் இல்லை. என்னுடைய உடல்தான் இருக்கிறது. எங்களைச் சுற்றியிருப்பது எல்லாமே ஆகாயம்தான். நாங்கள் கொஞ்சம் (ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு) மாறிவிட்டோம் என்றால் அந்த இடத்தை ஆகாயம் வந்து பூரணமாக்கிவிடும்.
இன்னொரு இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் குறைந்திருக்கும். ஆக எங்களைச் (நம்மை)சுத்திவரயிருப்பது எல்லாமே ஆகாயம்தான். எங்களின் (நம்)உள்ளுக்குள்ளும் ஆகாயம்தான் உள்ளது. நாங்கள்(நாம்) மூச்சை இழுக்கிறோம் போகிறோம் வருகிறோம் இப்படி எல்லாம் உள்ளது. நாங்கள் (நாம்)தனியாக இருக்கவில்லை.
எல்லாப் பரிபூரணத்திலும் நாங்களும் ஒரு பகுதியாக எங்களுக்கு தெரிகிறது. அதாவது ஒரு விஜ் விஜூ என்றால் ஒரு பகுதி. ஒரு தாள் உள்ளது. அதில் ஒரு துண்டை எடுத்தால் அதுவொரு தாளின் பகுதிதான்.
(அதுபோல்) கண்ணைக் கொண்டு நாங்கள் (நாம்) பார்க்கிறோம்.
எப்போது பார்க்க முடியும்?
வெளிச்சம் இருந்தால்தான் பார்க்க முடியும்.
சரி எதைப் பார்க்க போகிறீர்கள் ?
ஒருபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கண்பார்வையும் சரியாக இருக்க வேண்டும். வெளிச்சமும் இருக்கவேண்டும்.
படம் இல்லாவிட்டால் அதைப்பார்க்க முடியுமா?
வெளிச்சம் இல்லாவிட்டால் பார்க்க முடியுமா ?
கண்பார்வை சரியில்லாமல் பார்க்க முடியுமா?
எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்து வருகிற சக்தி எங்களுக்குள் (நமக்குள்) உள்ளது.
அது அல்லாஹ்வுடைய சக்தி. இதைக் கொண்டு எங்களுக்குள் (நமக்குள்) அல்லாஹ்வுடைய சக்தி இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
எல்லாமே அல்லாஹ்தாலாவுடைய சக்திதான்.
வெளிச்சமும் அதுதான், அணுக்களும், ஆகாயமும் அதுதான், தண்ணீரும் அதுதான்.
அந்த சக்தியைக் கொண்டுதான் நாங்கள் (நாம்) இன்றைக்கு வாழ்கிறோம். இல்லாவிட்டால் வாழ முடியாது.
அல்லாஹ்தாலாவின் சக்தி எங்களுக்குள் இருக்கிறது என்பதை நாங்கள் (நாம்) உணரவேண்டும். ஆனால் (அது)ஒரு பகுதிதான்.
ஒரு தாள் இருக்கிறது அதில் நிறைய எழுதலாம். ஓரு கடிதமே எழுத முடியும். அதில் ஓரு துண்டை கிழித்து எடுத்தால் அதில் அந்தக் கடிதத்தை எழுத முடியுமா?
ஆக ஒரு தாளின் (துண்டின்)அளவு சக்திதான் எங்களுக்கு (நமக்கு) இருக்கிறது…(என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்).

(துபாய் 12.08.2009 அன்று நடந்த மஜ்லிஸில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வியும் பதிலும்)