This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label சொற்பொழிவு. Show all posts
Showing posts with label சொற்பொழிவு. Show all posts

அறிவை அறியுமிடத்தில் தற்பெருமை ஆடை அவசியமா.?

ஒரு செய்குவிடம் முரீத் அதிககாலம் இருந்து விட்டு செய்குவை விளங்காமல் பொறாமை தற்பெருமை திமிர் அகம்பாவம் இவைகளினால் விலகிச் சென்றால் அவர்களின் நிலை என்னவாகும்.?
அவர்களுக்கு ரசூல் (ஸல்)அவர்களின் ஷபாஅத் மற்றும் அல்லாஹ்வின் கருணைக் கிடைக்குமா.?

அவர்கள் செய்குவிடம் ஏதேனும் தவறு கண்டு போனதாச் சொல்வார்கள். அதிக காலம் இருந்தவருக்கு எப்படி தவறொன்று உண்டாகிறது.? அதற்கு முன்பு தவறு ஏற்படவில்லையா.? இப்போதுதான் தவறு ஏற்பட்டுள்ளதா.?
முரீதுக்கு பொறாமை தற்பெருமை அகம்பாவம் திமிர் இப்படி சிலருக்கு ஏற்பட்டால் அது பெரிய ஆபத்தான நிலை. எந்த இடத்தில் கொண்டுபோய் விடுமென்றுச் சொல்ல முடியாது.

சரி இல்லை என்றால் போய் மௌனமாக இருக்கவேண்டும். மௌனமாக இல்லாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு தேவையில்லாத கதைகளை கதைச்சுக் கொண்டு அசிங்கமான விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பதாக இருந்தால் இவ்வளவு காலம் (செய்குவிடம்)இருந்து கேட்டுக் கொண்ட நன்மைகளெல்லாம் அவர்களுக்குப் போய் அம்புகளாக குத்தும்.

இவ்வளவு காலம் பெற்ற நன்மைகள் அறிவுகள் அது சம்பந்தபட்டவைகள் இதற்கு முன்பு செய்குவை பற்றிப் புகழ்ந்து பேசின புகழ்ச்சிகள் எல்லாம்சேர்ந்து மோசமான இடங்களில் போய் அம்பாக குத்தும். அது எங்கெங்கே குத்தும் எனச் சொல்ல இயலாது. அது இதயத்திலேயும் குத்தலாம். முக்கியமான நரம்புகளிலேயும் குத்தலாம் உறுப்புகளிலேயும் குத்தலாம்.

அப்படி குத்துபட்டது என்றுச் சொன்னால் கடைசியில் யாராலேயும் திரும்பமுடியாது நெருங்கமுடியாது தடுக்க முடியாது அதுதான் பெரிய ஆபத்து.
அதனால்தான் மித்த கவனமாக இருக்கவேண்டும் எனச்சொல்வது. ஏனென்றால் அப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும்.

முன்பிருந்த வலிமார்கள் காலத்தில் அதற்கு பின்னால் இருந்த காலத்திலும் இனிமேலும் இருக்கக்கூடிய காலத்திலும் இப்படி நடந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அது பெரிய ஆபத்தாக போய்விடும். அக்குபஞ்சரல்ல இது.
இது மோசமானது மித்தம் பயப்படவேண்டும் அல்லாஹ்வுக்கு.

அதாவது நீங்கள் ஏதோ ஒரு பரிட்சை எடுக்குறீர்கள் அதன் ரிசல்ட் வரும்வரை எவ்வளவு காலம் யோசிக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆறுமாதமோ அல்லது ஒருவருடமோ பார்ப்பீர்கள். ரிசல்ட் வரவில்லை என்றால் திரும்ப அவரிடம் சென்று கேட்பீர்கள்.

இந்தமாதிரி விஷயங்களுக்கு சோதனைகளுக்கு ரிசல்ட் இதுமாதிரிதான் வரும். ஆனால் அந்த ரிசல்ட் மிக மோசமான ரிசல்ட் மிக ஆபத்தான ரிசல்ட். அப்படி எத்தனையோ பேர்களுக்கு அது மாதிரியான ரிசல்ட் வந்துவிட்டது. அது எல்லோருக்கும் தெரியும். அறியவில்லை என்று சொல்லவும் கூடாது. தெரியாது என்று சொல்லவும் இயலாது.

கண்முன்னால் கண்ட விஷயங்கள் நிறைய உண்டு. ஆகவே எனக்கு எல்லாம் முடியும் என்று துள்ளுகிற நேரத்தில் ஆபத்துகள் தான் வந்து முடியும். கல்லு கரடு உடைந்த கண்ணாடித் துண்டுகளில் குத்திக் கொண்டார்கள் என்றால் ஆபத்துதான்.

ஒவ்வொரு வகையான ஆபத்தான நோய்கள் மனிதனுக்கு மனிதன் உண்டாகிறது. அது மிக பயங்கரமான பலவகையான நோய்கள் இருக்கின்றன. நீங்கள் அறியாத நோய்களும் உள்ளது. புதிது புதிதான நோய்கள் அவரவர்கள் எதைச் செய்கிறார்களோ அல்லாஹ் அதைப்பார்த்து உங்களுக்கு இதுதான் ஜிஸா என்று கொடுத்திடுவான்.

ஓவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு வகையான நோய்களில் மக்கள் அவதிப்படுவதை கஷ்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு காலில் ஒரு நோவு பிடித்தது. டாக்டர் கூறினார் இந்த நோய் ஆபத்தானது இவர் நன்றாக குடிக்கவேண்டும் குடித்தால் நரம்புகள் விரிவடைந்து சரியாகிவிடும் என்றார்.
அவர் நன்றாக தொழுது கொண்டிருந்த மனிதர் குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பிறகு விரல்களில் புண் உண்டாகி காலில் உண்டாக கொஞ்சம் கொஞ்சமாக இரு கால்களையும் வெட்டி கையை வெட்டவருகிற நேரத்தில் மருந்தைப்போல் குடிக்க ஆரம்பித்தார்.ஏதோ அவரின் மனைவி நல்ல பெண்ணானதால் மித்தம் கவனமாக குழந்தை பிள்ளையைப்போல் பாதுகாத்து நீராட்டி துடைத்து பவுடரெல்லாம்போட்டு நல்ல நிலையில் வைத்திருந்தார்.

அந்த மனைவி எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கு சென்றாலும் விரட்டிவிட்டார்கள். அவர்களுக்கு எவ்வளவோ உதவிசெய்துள்ளார். யாருமே அவரைமதிக்கவில்லை. இப்படியான நிலை ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. முன்பே யோசிக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்கு பயப்புடவேண்டும் அவனுக்கு இந்தமாதிரி சில விஷயங்கள் இருக்கிறது நாடி செய்து விட்டான் என்றால் என்ன செய்வது.?

மனிதனுடைய தற்பெருமை எங்கே போகப்போகிறது. ஓன்றும் செய்யஇயலாது.
அல்லாஹ்வுடைய நாட்டம் அது. எந்த டாக்டரும் ஒன்றும் செய்ய முடியாது. சித்ரவதை என்று சொல்வது இதுதான்.அல்லாஹ் யாவரையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் முரட்டுதனமாகவும் மிருகத்தனமாகவும் அல்லாஹ்வுக்கு மாறாகவும் அநியாயமான முறையில் நடக்கிறவனுக்கு அல்லாஹ் கொடுக்கவும் வேண்டும். அப்போது தான் மற்றவன் பார்த்து பயப்படுவான்.

அப்படி எவ்வளவோ மோசமான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. என்னென்ன நோய்கள் எல்லாம் இருக்கிறது. அதற்கு நாம் பயப்புடவேண்டும். அல்லாஹ் எங்களுக்கு வராமல் காப்பாற்றவேண்டும். மனநிம்மதியாக நாம் இருக்கவேண்டும். எப்பவுமே அந்தமாதிரியான நிலைதான் மனிதனுக்கு அவசியம். அதை நினைத்து பயந்து நாம்வாழவேண்டும்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் எவன் துள்ளுகிறான் என்று.!
துள்ளினால் சரிவந்து விடுமா,?
அல்லாஹ்வுடைய சக்திக்கு முன்னால் யாருமே நிற்க முடியாது. சுனாமி வந்தது என்ன நடந்தது பார்த்தீர்களா.?
பத்து பதினைந்து நிமிடம்தான் தான் சுனாமி .பிணங்களெல்லாம் எங்கெங்யோ போனது. ஒருகடல் அதனுடைய ஆபத்தைப் பாருங்கள். நெருப்பும் அப்படித்தான் பனிபெய்கிறதே அதுவும் அப்படித்தான். இந்தமாதிரியான நிலைகள் மனிதனுக்கு வரவும் கூடாது. அல்லாஹ்விடம் இருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சாபங்களை பெற்றுக் கொள்ளவும் கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக ஆமீன்.

- இமாம் அஸ்சையிது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள்

குருவை அறிவது எப்படி.?

கேள்வி: ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு மனிதன் தன் குருவை எப்படி அடையாளம் கண்டுக் கொள்ளமுடியும்.?

பதில்: ஓரு குருவிடம் பேசிப்பார்க்கலாம். பேசும்போது உரியமாதிரி முறையோடு பேசவேண்டும். அப்போதுதான் தான் யாரென்பதைக் காட்டிக்கொடுப்பார் அல்லாமல் அதற்கு மாற்றமாய் போய் பேசினால் பொதுவாய் ஆலிம்களுடன் பேசுவதைப் போலிருக்கும். ஆலிமுடன் பேசுவதைப்போன்று பேசி அனுப்பிவிடுவார்கள்.
அறியவேண்டும் என்ற நோக்கத்தோடுச் சென்றால் அவர்களோடு பேசுவதைக் கொண்டு அவர்கள் ஞானம் தெரிந்தவர்கள், விளங்கியவர்கள் ஒரு செய்குகிற்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டுப்பிடித்துக் கொள்ளலாம்.
சிலநேரங்களில் தேட்டம் உள்ளவர்கள் மித்தம் விருப்பத்தோடு எனக்கு ஒரு காமிலான (பூரணமான) செய்கை (குருவை) நீ எனக்கு காட்டியருள்வாய் யா அல்லாஹ் என்று துவா (பிரார்த்தனை) செய்தால் கனவில் காட்டித்தருவதும் உண்டு. கனவில் காட்டப்படுவதுதான் மிகவும் நல்லது.
படேஷா ஹஜ்ரத் இருந்தார்கள் (அவர்களை) மஞ்சுவி நாயகம் என்பார்கள். சிறந்த வலீயாக அவர்களுடைய காலத்தில் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அரபி படித்தவர்கள் அல்ல. ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து வேலைப் பார்த்தவர்கள். திடிரென அவர்களுடைய நிலமையெல்லாம் பலவகையிலும் மாற்றங்கண்டு சில விசயங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.

பொது மக்களுக்கு ஒரே குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இவரொரு உம்மி (படிப்பறிவு இல்லாதவர்) அரபியல்லாதவர் இவருக்கு என்னத் தெரியும் என்றெல்லாம் கூறினார்கள். ஆலிம்கள் அதற்கு எதிர்ப்பு காண்பித்தார்கள்.
மிகச்சிறந்த ஒரு ஆலிம் அப்துல் கரீம் என்பவர் அதற்கு (மஞ்சுவி நாயகத்திற்கு) பத்வாவும் கொடுத்து விட்டார்.
அப்துல் கரீம் ஆலிம் (தனக்கு) ஒரு செய்கு (குரு) தேவை என அல்லாஹ்விடம் துவாச் செய்துவிட்டு அவர் படுக்கின்றபொழுது ஒரு கனவு தென்படுகிறது. கனவில் படேஷா ஹஜ்ரத் போகிறார்கள். உடனே எழுந்து நெஞ்சினில் துப்பிவிட்டு மறுபகுதியில் திரும்பப் படுக்கின்றார்கள். (மீண்டும் கனவில்) படேஷா ஹஜ்ரத்தான் போகிறார்கள். மீண்டும் எழுந்து மறுபகுதிக்கு திரும்பிபடுக்கிறார்கள். அப்போதும் படேஷா ஹஜ்ரத் அவர்கள்தான் போகிறார்கள்.

காலத்திற்கு உள்ளவரைத்தான் கனவுகாட்டும். இவர்களுக்கு மிகவும் மனம் குழம்பிவிட்டது. அவர்களை நேரில் சென்று பார்க்கும் வேளையில் அவர்கள் (படேஷா ஹஜ்ரத்) கேட்கிறார்கள் விளங்கிவிட்டிர்களா.? என்று.
மிகப்பெரிய ஆலிம் (அப்துல்கரீம் படேஷா ஹஜ்ரத்) அவர்களுக்கு ஹித்மத் (பணிவிடைகள்) செய்யக்கூடியவராக பின்னாலில் இருந்தார்கள்.
எங்கள் தந்தை தேவ்பந்தில் ஓதிவிட்டு வருகிறார்கள். தேவ்பந்த் ஆலிம் ஒருவர் வந்துள்ளார் என்று ஊரெல்லாம் பேச்சு. அவர்களுக்கு வயது 20 – 21 இருக்கும். ஆலிம்களெல்லாம் படேஷா ஹஜ்ரத்தைப்பற்றி கூறி பழைய பத்வாவிற்கு தந்தையுடைய கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள். தந்தையும் கையெப்பம் போட்டுவிட்டார்கள்.
திடிரென ஒரு நாள் கனவில் காண்கிறார்கள் தந்தை ஆகயத்தில் சும்மா இருப்பதைப் போன்றும் இடுப்பிலிருந்து கீழ்வரை இருட்டுக்குள் இருப்பது போன்றும் மேலாக ஒளிவு தெரிவதைப்போன்றும் ஒரு காட்சி. ஆனால் அதற்கு மேலாக செல்ல வழியே இல்லை. அப்படியே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தந்தை நான் இவ்வளவு கஷ்டத்தோடும் துன்பத்தோடும் இருந்தேன். எனக்கு வந்து உதவிச் செய்த நீங்கள் யார்.? எனக் கேட்கிறார்கள்.
அப்போது அவர்கள் சொன்னார்கள் நான் இந்த காலத்திற்குரிய ஜமான் சாஹிப் ஜமான். என்னுடைய பெயர் பதுருத்தீன் சாஹிப் என்றுச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள்.
படேஷா ஹஜ்ரத் அவர்களின் பெயர் பத்ருத்தீன் இதுதான் செய்திபென்பதை தந்தை அறிந்துக் கொண்டு பத்வாவைக் கேட்டு தாங்கள் இட்ட கையொப்பத்தை நீக்கிவிட்டார்கள். இதுபோன்று கனவில் தென்படுவது முக்கியமானது.
ஒருவருடைய படிப்பறிவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. படிப்பில்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஞானத்தைக் கொண்டுதான் காணமுடியும். இப்போதுள்ள தரீக்காக்கள் எல்லாம் ஞான விளக்கங்கள் கொடுப்பதில்லை.!

- இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்கள்.

ஆதியானவன் அந்தமானவன்

கேள்வி: திருமறையில் அவனே ஆதியானவன் அவனே அந்தமானவன் அவனே வெளியீடானவன் அவனே உள்ளீடானவன் என்று வசனம் வருகிறது இதற்கு பொருள் என்ன…?

பதில்: ஒளியானவனும் அவன்தான் தஸ்பியாகவும் தன்ஸியாகவும் இருக்கிறான். அதாவது வெளியானவன் உள்ளானவன் எனச் சொல்வது…

அவனுக்கு ஒரு ஆரம்பமுமில்லை அவனுக்கு ஓரு முடிவுமில்லை.
வல் அவ்வலு- அவனே தான் ஆரம்பம். ஆரம்பமே இல்லாத ஆரம்பம்
முடிவு இல்லாத முடிவு .
அதுதான் அல்லாஹ்தாலாவுடைய சக்தியெனச் சொல்வது.
ஆரம்பம் போய்க் கொண்டே இருக்கும்.

நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் பார்ப்போம்.
எங்கே முடியும் …முடியும் முடியும் என்று பார்த்தால் முடிவு போய்க் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் பூமியை சுற்றிவருகிறீர்கள் என்றால் ஒருபகுதியில் இருந்து மறு பகுதிக்கு வந்துவிடுகிறீர்கள். ஆனால் இதற்கு அப்படி இல்லை. மேலே போனால் போனது தான். அந்த பவனம் இருக்கும் வரையில் சுத்திக் கொண்டிருக்கும். அதற்கு மேலே தாண்டிப்போனால் அதுபோய் கொண்டே இருக்கும். அவ்வளவுதான். கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். பயந்து விடுவீர்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்களுக்கு(நம்மால்) ஒரு குறிப்பிட்ட இடத்தைப்போய் சந்திக்க முடியும். குறிப்பிடாத இடம் ஒன்று இருக்கின்றபோது எப்படிச் சந்திக்க முடியும்,?
அது நெடுக போய்க் கொண்டே இருக்கும். அதற்கு முடிவேயில்லை. எந்தப்பக்கத்தால் போனாலும் சரி பூமிக்கு கீழால் போனாலும்சரி. பூமிக்கு மேலாக போனாலும் சரி பூமிக்கு கீழ்மேல் என்று இல்லையே… அது சுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் (நாம்) மேல்நோக்கி பார்க்கின்ற இடத்தில் மேலாகத் தெரிகிறது. கீழ்நோக்கிப் பார்த்தால் கீழாகத்தெரிகிறது. நாங்கள் (நாம்)
எப்படி இருக்கிறோம் ? நேராக நிற்கின்நோமா…? இல்லை…
தலைக்கீழாகத்தான் நிற்கிறோம்…
வெளவாலைப் போன்று நிற்கிறோம். பூமியினுடைய சக்திதான் எங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் போகாது. எவ்வளவு தூரம் சென்றாலும் கீழேதான் விழுவீர்கள். ஆனால் நிற்பது தலைக்கழால்தான். அதனால்தான் மனிதன் தலைக்கீழாய் போகிறான். தலைக்கீழால் போகக்கூடாது. என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த அறிவை தந்திருக்கிறான். பயப்படாதீர்கள். ஒருகாலும் விழமாட்டிர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான்…
நாங்கள் (நாம்) கவனிப்பதில்லை பாருங்கள். வெளவால் மரத்தில் தொங்குகிறது. நாங்கள் (நாம்) பூமியில் தொங்குகிறோம்.
பெரிய பெரிய கட்டுமானங்கள் கோபுரங்கள் எல்லாம் மறுபக்கம் திரும்பித்தான் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாருங்கள் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சக்தியை அதற்கு நிகர் எதுவுமில்லை…

- இமாம் கலீல்அவுன் மௌலானா

இறையறியாமல் இணைவைத்தலிருந்து தப்பமுடியாது…



கேள்வி: இணைவைத்தல் (ஷிர்க்)என்றால் என்ன…?

பதில்: இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வை ஒன்று இரண்டு மூன்று நான்கு எனப் பிரிக்கப்படுவது. அடுத்து அல்லாஹ் அதுபோலத்தான் இதுமாதிரித்தான் என்று சொல்வதும் இணைதான் ஷிர்க்தான். விளங்குவதற்க்காக சில உதாரணங்களை சொல்லவேண்டிய சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அது அதுவல்ல. அதை தெரிந்துக் கொண்டு சொல்லவேண்டியது. அப்படிச் சொல்வது ஷிர்க்.
படிப்பிப்பதற்காக சில உதாரணங்களை காட்டினால்தான் அது தெரியும். இல்லாவிட்டால் தெரியாது.
பூரணமாக இருக்கிறான் அல்லாஹ் என்பதை விட்டுவிட்டு தனித்தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிட்டால் அது ஷிர்க்.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான்(என்று) இதை எல்லோரும் சொல்வதுதான். எல்லோரும் (இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை)ஒப்புக் கொள்கிறார்கள்.
எங்கும் இருக்கிறான் என்றால் எப்படி இருக்கிறான்…?
எங்கும் பரிப்பூரணமாய் பின்னிப் பிணைந்து மாற்றமில்லாமல் பிரிக்க முடியாது இருக்கிறதுதான் ஹக் (இறைவன்).
தனியாக ஒரு மனிதனைப் பார்த்து கடவுளென இறைவனெனச் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது ஷிர்க். அதை முஷ்ரிக்கீன்கள் என்று சொல்வது.
‘இன்ன ஷிர்கானில் அலீம்’ -ஷிர்க்காவது மிகப்பெரியப் பாவம்.அதுக்கு எந்த வகையான தவ்பாவும் இல்லை. அல்லாஹ் இரண்டு என்று சொல்லிவிட்டால் ஷிர்க்காயிற்று.
அல்லாஹ் ஒருவன்தான் என்றால் ஷிர்க் போய்விட்டது.
அதற்கு மேலாக சென்று அது எப்படியென பேசுவது தவ்ஹிதுடைய இல்மு (ஞானம்) அதைப்பேசும் நேரத்தில் மித்தம் கவனமாக பேசவேண்டும்…!

எங்கும் நிறைந்த இறைவனை எப்படி அறிவது…?


கேள்வி: இறை எல்லாப் புறமும் இடத்திலும் சூழ்ந்துள்ளது என்கிறோம்…மனிதனிலும் இறையுள்ளது என்பதை எப்படி உணர்ந்துக் கொள்வது…?

பதில் : மனிதனில் இறையிருப்பதை உணர்வதற்கு பயிற்சியே சரி. (மஜ்லிஸில் அமர்ந்திருக்கக் கூடியவர்களைக் காண்பித்து)அதாவது எங்களைச் சூழ மனிதர்கள்தானே இருக்கிறார்கள் வேறொன்றும் இல்லை(யா)யே…?
எங்களைச் சூழ மனிதர்கள் மட்டுமல்ல எங்களைச் சூழ ஆகாயமும் இருக்கிறது நான் இருக்கிறேன். நான் இருக்கக்கூடிய இடத்தில் ஆகாயம் இல்லை. என்னுடைய உடல்தான் இருக்கிறது. எங்களைச் சுற்றியிருப்பது எல்லாமே ஆகாயம்தான். நாங்கள் கொஞ்சம் (ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு) மாறிவிட்டோம் என்றால் அந்த இடத்தை ஆகாயம் வந்து பூரணமாக்கிவிடும்.
இன்னொரு இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் குறைந்திருக்கும். ஆக எங்களைச் (நம்மை)சுத்திவரயிருப்பது எல்லாமே ஆகாயம்தான். எங்களின் (நம்)உள்ளுக்குள்ளும் ஆகாயம்தான் உள்ளது. நாங்கள்(நாம்) மூச்சை இழுக்கிறோம் போகிறோம் வருகிறோம் இப்படி எல்லாம் உள்ளது. நாங்கள் (நாம்)தனியாக இருக்கவில்லை.
எல்லாப் பரிபூரணத்திலும் நாங்களும் ஒரு பகுதியாக எங்களுக்கு தெரிகிறது. அதாவது ஒரு விஜ் விஜூ என்றால் ஒரு பகுதி. ஒரு தாள் உள்ளது. அதில் ஒரு துண்டை எடுத்தால் அதுவொரு தாளின் பகுதிதான்.
(அதுபோல்) கண்ணைக் கொண்டு நாங்கள் (நாம்) பார்க்கிறோம்.
எப்போது பார்க்க முடியும்?
வெளிச்சம் இருந்தால்தான் பார்க்க முடியும்.
சரி எதைப் பார்க்க போகிறீர்கள் ?
ஒருபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கண்பார்வையும் சரியாக இருக்க வேண்டும். வெளிச்சமும் இருக்கவேண்டும்.
படம் இல்லாவிட்டால் அதைப்பார்க்க முடியுமா?
வெளிச்சம் இல்லாவிட்டால் பார்க்க முடியுமா ?
கண்பார்வை சரியில்லாமல் பார்க்க முடியுமா?
எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்து வருகிற சக்தி எங்களுக்குள் (நமக்குள்) உள்ளது.
அது அல்லாஹ்வுடைய சக்தி. இதைக் கொண்டு எங்களுக்குள் (நமக்குள்) அல்லாஹ்வுடைய சக்தி இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
எல்லாமே அல்லாஹ்தாலாவுடைய சக்திதான்.
வெளிச்சமும் அதுதான், அணுக்களும், ஆகாயமும் அதுதான், தண்ணீரும் அதுதான்.
அந்த சக்தியைக் கொண்டுதான் நாங்கள் (நாம்) இன்றைக்கு வாழ்கிறோம். இல்லாவிட்டால் வாழ முடியாது.
அல்லாஹ்தாலாவின் சக்தி எங்களுக்குள் இருக்கிறது என்பதை நாங்கள் (நாம்) உணரவேண்டும். ஆனால் (அது)ஒரு பகுதிதான்.
ஒரு தாள் இருக்கிறது அதில் நிறைய எழுதலாம். ஓரு கடிதமே எழுத முடியும். அதில் ஓரு துண்டை கிழித்து எடுத்தால் அதில் அந்தக் கடிதத்தை எழுத முடியுமா?
ஆக ஒரு தாளின் (துண்டின்)அளவு சக்திதான் எங்களுக்கு (நமக்கு) இருக்கிறது…(என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்).

(துபாய் 12.08.2009 அன்று நடந்த மஜ்லிஸில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வியும் பதிலும்)

மறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...?....2


குதுபு நாயகம் பாடல்களின் கருத்து தெரியாதவன் திண்டாடுவான். அவர்கள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள்.
குர்ஆனை நாம் நினைத்தப்படி வாசித்தால் சரிவருமா…? குர்ஆனிற்கு நாம் நினைப்பது போன்று பொருள் எழுத முடியாது. மித்தம் கவனத்தோடு மித்தம் சிந்தனையோடு நாங்கள் எழுதவேண்டும்.
ஏனென்றால் ரசூல் (ஸல் அலை) அவர்கள் ஹதீஸில் குர்ஆனிற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொண்டுதான் குர்ஆனிற்கு விளக்கம் எழுத வேண்டும்.
ஞானம் என்பது ஒரு தனிப் பகுதி. எல்லாம் தெரியும் என்று யாரும் சொல்ல முடியாது. காரணம் கவிதை முறைகள் அப்படித்தான் இருக்கும். ஞானம் பற்றிய கவிதை ஒரு தனியான அறிவு. இப்படி பேசும் சந்தர்பத்தில்தான் அதற்குண்டான விளக்கங்கள் தெரியும்.
சில பாடலகளில் சில சொற்கள் இருக்கும் அது வரியின் தேவையை நிரப்புவதற்காக அன்றி பொருள் இருக்காது. அசைநிறை எனச் சொல்வார்கள்.
‘என்கொல் வெகுண்டதென்றான்” எனத் தமிழில் வருகிறது. வெகுண்டது + என்றான் - ஏன் கோபப்பட்டாய் என்றான் என்பது பொருள். கொல் என்பதற்கு பொருளில்லை . கொல் என்பதற்கு பொருள் எடுத்தால் அர்த்தம் இல்லை.
இலக்கிய பாடல்களைவிட ஞானப்பாடல்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும் . அதற்கென்ற தனி இலக்கியம் இலக்கணம் . அதற்கு பொருள் எடுப்பதில் மித்த கவனமாக இருக்கவேண்டும். இதைத்தான் ‘ஸிராத்துல் முஸ்தகீன்’ பாலம் என்பது.
சபைக்கு வருபவர்கள் அனைவரும் உண்மையை விளங்கிக்கொள்ளுங்கள். உண்மையை விளங்கியவர்களில் அதிகம்பேர் (சபையில்)உள்ளனர். எல்லாம் தெரியும் என்று மலையை முட்டினீர்கள் என்றால் தலைதான் உடையும்.
மலையது மலையாகவே இருக்கும். அரபியில் பைத்தொன்று உள்ளது

“யாநாதிகள் ஜபலில் ஆலி லியுக்லிமஹீ
இர்ஹம் அல்ராஸி
லாதர்ஹம் அலல்ஜபலி”

யாநாதிகள் என்றால் - முட்டுவது
ஜபல் - என்றால் மலை
ஆலி – என்றால் மிகப்பெரிய
லியுக்லிமஹீ – என்றால் மலையை தூளாக்க

மிகப்பெரிய மலையை தூளாக்க முட்டுகிறவனே எனப் பொருள். இதுவரை இவரை முட்டாள் எனச் சொல்ல முடியாது.

இர்ஹம் - நீ இரக்கப்படு
அல்ராஸி – உன்னுடைய தலையின் மீது - இப்போது இவன் முட்டாள்
லாதர்ஹம் - நீ இரக்கப்படாதே
அலல் ஜபலி – மலைஉடையுமென்று.

எவ்வளவு அழகான பைத். இவற்றை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்தனையில்லாதவர்கள் என்றால் யார்…? மூளையில்லாதவர்கள்.

குர்ஆனில் வெளிரங்கத்தில் ஒன்று இருக்கும் ஆனால் அல்லாஹ்வால் சொல்லப்பட்டது அது அல்ல. ஆங்கிலத்தில் idioms எனச் சொல்வார்கள் . மரபுச் சொற்சொடர்கள். உவமைக்கு a pull up the eye என்பதற்கு ஒரு விருப்பமான அன்பான பையன் என்று பொருள். இதன் அர்த்தத்தை அப்படியே எடுத்தால் நிறைய வித்தியாசம் உண்டு.

எங்களுடைய பழைய கலீபா ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எழுதி வாப்பா இதன் விளங்கவில்லையென்று கூறினார்.
மற்றவர் சொல்கிறார்கள் ரசூலுல்லாஹ் எவ்வளவுதான் கப்ரில் உள்ளில் இருப்பவர்களிடம் பேசினாலும் யாரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள். என்று எழுதி அதற்குண்டான தமிழ் குர்ஆன் வசனத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தார். ஆனால் ரசூலுல்லாஹ் எவ்வளவோ கபர்களில் நின்று (இறந்தவர்களுக்காக)கஷ்டப்படுகிறார் என்று அவர்களுக்காக துவா செய்துள்ளார்கள். குதுபு நாயகம் வாழ்விலும் இப்படி உண்டு. ஆனால் தமிழ் தப்ஸிரோ இந்தக் கருத்தைச் சொல்கிறது.

அரபி தப்ஸிரை பார்த்தால் அதுச் சொல்வது எவனுடைய மனம் இருட்டாக உள்ளதோ அவனிடம் நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அவனதை ஏற்றுக் கொள்ளமாட்டான். கப்ர் என்றால் இருட்டடைந்த மனம் என்று பொருள். மனம் இருட்டறையாக உள்ளது.

நான் என்ற பெருமையை எவன் விடுகிறானோ அவன்தான் மனிதன். தனக்குத்தான் தெரியும் என நினைத்து ஒரு தர்க்க மேடைக்கு ஒருவர் செல்வாரேயானால் அவர் அவ்வளவுதான். அந்தக் கூட்டத்தில் விஷயம் தெரிந்த ஒருவர் இருந்தால் அவர் பேசுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வார். எல்லோருக்கும் ஒரு மைனஸ் பாய்ண்ட் இருக்குமே. இரண்டு நிமிடத்தில் அவரை தோற்கடித்துவிடுவார்.

ஞானிகள் சொல்கிறார்கள் ஒரு ஷெய்கிடம் நீங்கள் சென்றால் உங்கள் அளவோடு செல்லவேண்டும். குடம் நிறைய நீர் இருந்தால் ஊற்ற ஊற்ற கீழேதான் செல்லும். ஆகையால் வெறுங்குடமாய் இருக்கவேண்டும்.

ஆரம்பக்காலத்தில் ஷெய்குமார்கள் அல்லாஹ்வை அறிய வருபவர்களிடம் ஷெய்கு சொல்வது எல்லாம் சரியென்ற நிலைக்கு கொண்டுவருவார்கள். ஒரு கடைக்குச் சென்று ஒரு சாமானை கொண்டுவா என்றால் கொண்டுவரவேண்டும். அங்கு இல்லை என்றால் வேறு கடைக்குப் போகலதமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. எப்படியாவது எங்கேயாவதுச் சென்று கொண்டு வர வேண்டும். அந்த அளவிற்கு ஹித்மத் செய்யக் கூடியவராக அவரை மாற்றி அடிமையாக்கி அதாவது சொல்கிற விஷயத்தையெல்லாம் கேட்கக்கூடியவராக மாற்றிய பின்புதான் அல்லாஹ்வை பற்றிச் சொல்வார்கள்.
இப்பொழுது பைஅத் என்றால் மொத்த வியாரகடைக்குச் சென்று கருவாடு வாங்குவது போன்று.
ஒரு சபையில் முரீதாக இருப்பவர்கள் கெட்டுப்போவது காரணம் இதில்தான்.
நல்லவர்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள். எந்த நிலையிலும் சபைக்குச் செல்லவேண்டுமென்ற எண்ணம் வரும். அது அவர்களுடைய நன்மையும் நல்ல எண்ணமும் நல்ல குணமும் தாய் தந்தையர் பழக்கிய முறையும்.
(முரீத்) பிள்ளைகள் எல்லாம் அந்தமாதிரி நிலைக்கு வந்துவிடவேண்டும்.
ரசூலுல்லாஹ்வின் காலத்திலும் அவர்களுடைய இடத்தை விட்டு ஒடியவர்கள் உண்டு. அந்தக் காலத்தில் நடந்தது இப்பவும் நடக்கிறது. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ளனும் நாங்கள்.

அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வைத்தந்து ஆபத்துக்கள் துன்பங்கள் கஷ்டங்கள் கொடிய நோய்கள் உயிர் கொல்லக்கூடிய நோய்கள் எதுவும் உங்கள் யாரையுமே அணுகாது. அல்லாஹ்தால முழுமையாக பாதுகாத்து சந்தோசத்துடனும் உங்கள் நாட்டங்களை யெல்லாம் நிறைவேற்றி நிறைந்த செல்வத்தை தந்து நல்ல பொருளாதாரத்தை தந்து மேன்மையுடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்…!

மறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...?...1


(ஆகஸ்ட் 9ம்தேதி ஷெய்குனா இமாம் அஸ்ஸய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் 12வது விஜயமாக துபாய் வந்தார்கள். அவர்களின் வருகையையொட்டி தினமும் மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின் ஞான விளக்கங்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு நடைப்பெற்றது… அதில் 11ம்தேதி அவர்கள் ஆற்றியஉரை இதோ…)

அன்பிற்குரிய முரீதின்களே…!
அனைவருக்கும் எனது நன்றியும் ஸலாமும் உரித்தாகுக…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தகு…

இங்கே ஏகத்துவமெய்ஞ்ஞான சபை துபாயில் துவங்கி சுமார் 27 வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் இதைக்கொண்டு நீங்கள் என்ன அறிந்துக் கொண்டீர்கள்…? என்ன நன்மையை அடைந்தீர்கள் என்பதை ஒருவகையாக நாங்கள் பேச்சுக்கு முன்பு கேட்டுக்கொள்வோமே எனக்கூறி கேள்விக்கு மறுமொழி வினவினார்கள்.

ஒருவர் கூறினார்… சரியான குருவை அடைந்து நேரிய வழியை அடைந்தோம். என்றார்

சரி நேரியவழி என்றால் என்ன ? என்று ஷெய்குனா கேட்டார்கள்.

அல்லாஹ்வை பற்றிய தாத்பரியத்தை அறிந்துக்கொண்டு வருகிறோம் பெருமானார் ரசூல் (ஸல் அலை) அவர்களை பற்றி பூரணமாக கற்றுத்தந்தீர்கள். ஷரிஅத்தை அதன் வேலியுடன் எங்களுக்கு காண்பித்தீர்கள். மேலும் தரீக்கத் ஹக்கீகத் மஃரிபத் பற்றிய உண்மையை அறிகின்றோம். வயதில் மூத்தவர்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துனீர்கள் மேலும் நேராகவும் மறைமுகமாகவும் நாங்கள் பல விளக்கங்கள பெற்றுக்கொண்டதும் உண்டு இன்னும் அளித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். என்றார்.

இன்னொருவர் கூறினார்… பைஅத் பெருவதற்கு முன் அல்லாஹ்வை ஏழு வானத்திற்கு மேல் உள்ளான் என்ற பொதுவான கற்பனையான கருத்தைக் கொண்டிருந்தோம். தங்களிடம் வந்தப்பின் தான் இறை என்பது இப்பிரபஞ்சத்தில் இடைவெளியன்றி எல்லாமாக நெருக்கமாக இணக்கமாகவும் அதுதான் உள்ளது என்ற பேருண்மையை தங்களிடம் கற்றோம். என்றார்.

இன்னுமொருவர் கூறினார்… நான் ஆரம்பத்தில் ஜூம்மா தொழுகைக்கு கூட நேரம் கிடைத்தால் மட்டுமே செல்பவனாக இருந்தேன். தங்களிடம் பைஅத் பெற்றபிறகு ஐவேளை தொழுது வருகிறேன்… ஹஜ் முடித்துள்ளேன் இறைவனை விளங்கி வருகிறேன் நல்ல பணியில் உள்ளேன் முழுமனிதனாக மாறி திருப்தி அடைந்துள்ளேன். என்றார்.

ஓவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினீர்கள். அதே நேரத்தில் 26 வருடங்களாக (சபைக்கு) வந்தும் ஒரு நன்மையும் அடையவில்லை என ஒருசிலர் சொல்கிறார்கள் அல்லாஹ்தான் அறிவான்.
ஓன்று அவர்களுக்கு அறிவு குறைவாக இருக்க வேண்டும் அல்லது நான் பேசும் பாஷை புரியாமல் இருந்திருக்க வேண்டும்.
அது அவர்களுடைய மூளையின் கெப்பாசிட்டியை பொறுத்தது.
ஒருவேளை இங்கு வந்து தூங்கியிருப்பார்கள். தூங்குபவர்களுக்கும் இடையில் ஓரு ஞானம் வரும்.(அதாவது) ஏதோ சொல்கிறார்களே என்ற எண்ணம் வரும்.

நீங்களெல்லாம் ஒரு ஷெய்கை ரப்பாக(கடவுளாக) நினைக்கிறீர்களா…?
ரப்பு என்றால் வளர்த்து பாதுக்காகின்ற இறைவனுக்கு சொல்வது…
ஒரு ஷெய்கை அல்லாஹ்வாக நினைப்பது(ஷிர்கு) பாவம்… அப்படி நினைக்கக்கூடாது. ஷெய்கிற்கு (இணைவைத்தலை) பாவத்தை தருகிறீர்கள்.

நான் அல்லாஹ் எனச் சொல்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள்.
சில ஞானப் பாடல்கள் உள்ளது. அந்தப் பாடல்களை எப்படி பாடியிருக்கிறார்கள்…? ஏன் பாடியிருக்கிறார்கள் என்று ஒரு ஞானியிடம்
கேட்டால் தான் அந்தப்பாட்டை விளங்க முடியும்…!
அரபியில் அரபுஞானிகள் எழுதிய பாடல்கள் நிறைய உள்ளது. தமிழில் மஹானந்த பாவா இன்னும் சிலரின் எண்ணற்ற பாடல்கள் உண்டு. இவர்கள் யாரும் தங்களை அல்லாஹ் எனக் கூறியது இல்லை. அதில் உள்ள வார்த்தைகளை பொதுமக்கள் அதாவது வாசிக்கத் தெரியாதவர்கள் (விளக்கமில்லாதவர்கள்) பார்க்கும்போது வேறு மாதிரியாகத்தான் கருத்து தெரியும்.
ஒரு புலவர் ஒரு பாட்டை எழுதினால் அதை அவர்களுக்கு தெரியமல் கருத்தை கண்டுபிடிக்க முடியாது.
உதாரணத்திற்கு
கொம்புள்ளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முளம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே-அல்லாத
வம்புசரி தீங்கினர்தம் கண்ணுக்கு எட்டாத தூரத்து
நீங்குவதே நல்லநெறி…

(இந்த பாடலுக்கு பொருள்)
கோம்புள்ளதற்கு என்றால் ஆடு மாடுகளுக்கு ஐந்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
குதிரைக்கு பத்துமுளம். அதற்கு கொம்பில்லையென்று அருகே சென்றால் ஓங்கி காலால் உதைத்துவிடும். ஆகையால் குதிரைக்கு பத்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
கரி என்றால் யானை வெம்புக்கரி என்றால் கொடிய யானையெனப் பொருள். அதற்கு ஆயிரம் முளம் தள்ளியிருக்க வேண்டும். பாரதியாரை கொன்றது அதுதானே.
வம்புசரி தீங்கினர்தம்-தீங்கு செய்பவர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு செல்லவேண்டும். அதுவே நல்ல செயல் என்பது பொருள்.
இப்போது இதன் கருத்து அந்த (புலமை)ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே விளங்கும்.

ஒருமுறை ஒளவையார் ஒரு அரசவைக்குச் சென்று ‘வரப்புயர’ என்று சொன்னார்களாம். ‘வரப்புயர’ என்றால் ஏதோ வரம்பு உயர்ந்து கொண்டுள்ளது என எண்ணிக் கொண்டிருப்பார்கள். பின்னாலில் வருவது அவர்களுக்கு தெரியாது. அதன் கருத்து அதை விளங்கியவர் மட்டுமே கூறமுடியும். ஓளவையாரிடம் கேட்டதற்கு
வரப்புயர நீருயரும் என்றார்கள் வரப்பு என்றால் வரம்பு. நீரின் வரம்பை உயர்த்தினால் நீரும் உயரும் என்பது கருத்து. ‘நீருயர்ந்தால் நெல்லுயரும்’
நீர் உயர்ந்தால் நெல் பசுமையுடன் வளரும். ‘நெல்லுயர குடியுரும்’ நெல் உயர்ந்தால் நன்றாக சாப்பிட்டு சந்தோசமாக குடி வாழமுடியும்.
‘குடியுயர கோனுயர்வான்’ – கோன் என்றால் அரசன். குடி நன்றாக இருந்தால் அரசன் உயர்வான் என்பது கருத்து. இப்போது இது யாருக்குத் தெரியும்…?
அதை படித்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

நான் ஒரிடத்தில் எழுதி உள்ளேன் ‘மானீக்கி அருவாடு ஆனந்தமே’ என்று. சிலோனில் ஒருவர் இதன் அர்த்தத்தை தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறார். கடைசியில் அவருக்கு மானீக்கி அருவாடு என்று பெயரே வைத்துவிட்டார்கள். இறுதியா என்னிடம் வந்தார். இப்போது இதன் கருத்து அந்த ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
மான் + நீக்கி + அரு + ஆடு எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதற்கு இலக்கணமும் தெரிய வேண்டும்.
மானீக்கி – மான் என்றால் உடல்
நீக்கி என்றால் நீக்குதல் உடலை நீக்குதல்
அரு என்றால் உடல் இல்லையென்று நீ ஆடு என்பது பொருள்.
உடலை நீக்கி ஒன்றுமில்லை யென்று நீ ஆடு என்பது பொருள்.
இதைத்தான் வெட்டவெளிப் பயிற்சி என்கிறோம். இதை இன்ஸானுல் காமிலும் மற்ற நூல்களிலும் சொல்லப்படுகிறது. நாங்களும் சொல்கிறோம்.
இது காய்ந்த கருவாடுகளுக்கு விளங்காது.

உதாரணத்திற்கு கானகம் வெட்டினான். எனத் தமிழில் உள்ளது. ஒரு கருத்து கால்நகம் வெட்டினான். மற்றொரு கருத்து காட்டை வெட்டினான். கானகம் என்றால் காடு என்பதாகும். இது எந்தச் சொல்லோடு சேர்ந்து வருகிறதோ அப்போது தான் அதன் பொருள் தெரியும். இப்படி அரபியிலும் தமிழிலும் இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரணம் அது அந்த புலவர்களின் போக்கு. அது அழகை எடுத்துக்காட்டுவதற்காக இவைபோன்று ஞானக்கவிதைகளில் நிறையவரும்.

(நன்றி- சகோதரர் அமீர்அலி)

தொடரும்