This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label நிகழ்ச்சிகள். Show all posts

மாதாந்திரக் கூட்டம்

ஜுன் மாதக்கூட்டம் வியாழன்கிழமை 02/06/2011 மாலை 8.45 மணிக்கு துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வுக்கு மதிப்பிற்குரிய ஆத்மசகோதரர் ஜனாப் M.S.அப்துல்வஹாப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கு கண்ணியமிக்க ஜனாப் சையது அலி மௌலானா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த நிகழ்விற்கு அமீரகத்தில் இயங்கும் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளரும், காயல் நலமன்றம் மற்றும் இக்ராஹ் கல்வி அமைப்பின் பொறுப்பாளருமான மதிப்பிற்குரிய சகோதரர் ஜனாப் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப்புரிந்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத் கோட்டக்குப்பம் முஹைய்தீன் அவர்கள் ஓதி அமர ஹுவல்வுஜுத் பாடலை மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்கள் பாடினார்கள்.

அதன் தமிழாக்கம் ஆலியூர் அபுல்பசர்
நபிப்புகழ் பாடல் மதுக்கூர் சாகுல் ஹமீது

ஞானப்பாடல் மதுக்கூர் சிராஜ்தீன்
தலைமை உரையை துக்கம் சையதுஅலி மௌலானா



மதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை கூறி அதன் பொருளையும் விளக்கி பேசினார்
மதுக்கூர் நஜ்முதீன் சுயசிந்தனையை ஏற்படுத்தும் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கூறினார்
கிளியனூர் இஸ்மத் தன்னை அறியும் ஞானமே இஸ்லாத்தின் முக்கியக் கடமை என்பதை வலிறுத்தி பேசினார்.
சிறப்பு பேச்சாளர் காயல் யஹ்யா முஹைய்தீன் அவர்கள் பெருமானார் (ஸல் அலை) அவர்களின் சபாஅத்தை பற்றியும் பல விருந்தினர்களை பேசுவதற்கு இச்சபைக்கு நான் அழைத்து வந்திருக்கிறேன் அதன் பொருட்டால் இங்கு நான் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எடுத்தியம்பினார்.




பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையில் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் மீதும் கொண்ட நேசத்தைப்பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசாக பர்ஜன்ஸி மௌலூது நூலை வழங்குகிறார்கள்
காயல் அப்துல்காதிர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்கள்
தௌபா பைத் ஓதப்பட்டு இனிதே இம்மாதக்கூட்டம் நிறைவு பெற்றது
இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

அமீரக அமைப்புகளில் ஆலிம் புலவர்

அமீரகத்திற்கு சங்கைமிகு ஷெய்குனா அவர்களுடன் வருகைப்புரிந்த மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரிய் அவர்களை அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்கு பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை அதன் தலைவர் ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

4.5.2011 புதன்கிழமை அன்று மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சுன்னத்வல் ஜமாஅத் ஆதரவாளர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் உரையாற்றியபோது "நான்கு ஆண்டுகளாக இந்த அமைப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது இதுநாள் வரையில் யாருக்குமே நாங்கள் பொன்னாடை அணிவித்து கொளரவப்படுத்தியது கிடையாது அதில் ஏதும் குறை ஏற்பட்டுவிடுமே என்பதினால் அதை தவிர்த்து வந்தோம். ஆனால் அருமை நாயகம் (ஸல் அலை) அவர்களை தனது கவியினால் புகழ்ந்து பாடிய ஆலிம் புலவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை என்றால் குறைவந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொன்னாடை அணிவிக்கின்றோம்" என்று வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறி ஆலிம் புலவர் அவர்களுக்கும் பாடகர் தேரிழந்தூர் தாஜிதீன் அவர்களுக்கும் அணிவித்தார்கள்.


தேரிழந்தூர் தாஜிதீன் ஆலிம்புலவர் எழுதிய பாடல்களை பாடிக்காண்பிக்கின்றார்

ஆலிம்புலவரின் சிறப்பு சொற்பொழிவு

கீழக்கரை ஜனாப் ஹாஜி சாதிக் காக்கா அவர்கள் ஆலிம் புலவருக்கு பொன்னாடை அணிவிக்கிறார்கள்

தேரிழந்தூர் தாஜிதீனுக்கு மௌலவி தாவூத்அலி மன்பஈ பொன்னாடை அணிவிக்கிறார்கள்

அமீரகத்தில் ஆறு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களின் அமைப்பான வானலை வளர் தமிழ் அமைப்பு மாதந்தோறும் துபாய் கராமா சுவிஸ்ஸ்டார் பவனில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

இந்த மாத நிகழ்ச்சசிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலீபா ஆலிம் புலவர் அவர்களையும் துபாய் சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களையும் அழைத்து கௌரவித்தார்கள்.

இந்த அமைப்பில் பலதரப்பட்ட சமய நல்லிணக்கமுடையர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களுக்கு அபுதாபி பழனி அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்கள்


கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு முத்துப்பேட்டை சர்புதீன் பொன்னாடை அணிவிக்கிறார்கள்



கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு வானலை வளர் தமிழின் பொதுச் செயலாளர் சிம்மபாரதி நினைவு பரிசு வழங்குகிறார்

கிளியனூர் இஸ்மத் கலீபா ஏ.பி.சகாபுதீனைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


அதிரை சர்புதீன் கலீபா ஆலிம்புலவரைப்பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


கலீபா ஏ.பி.சகாபுதீன் உரையாற்றுகிறார் கவிஞர்களின் அமைப்பை வாழ்த்தி வானம் என்பது எல்லையற்றது அதுபோல் இந்த அமைப்பு வளர்ந்து வரவேண்டும் ஒவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சுயசிந்தனையை ஏற்படுத்த ஊக்கமான உரைநிகழ்த்தினார்கள்.




வானலை வளர் தமிழின் ஆலோசகர் காவிரிமைந்தன் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்

வானலை வளர் தமிழ் அமைப்பின் மாத இதழான தமிழ்தேரை வழங்குகிறார் லெட்சுமிநாராயணன்



அங்கு நடந்த கவியரங்கத்திற்கு பிறகு கலீபா ஆலிம்புலவர் சிறப்புரையும் அத்துடன் ஜனநாயகம் எனும் தலைப்பில் கவிதையும் வாசித்தார்கள்


இந்நிகழ்ச்சியில் வானலை வளர் தமிழ் நிர்வாகிகள் கீழைராஜா, சிம்மபாரதி, காவிரிமைந்தன், கிளியனூர் இஸ்மத், பழனி, அத்தாவுல்லாஹ், முகவை முகில், லெட்சுமிநாராயணன், அபுமைமுனா, துரைமலைவேல், நிலவன், மற்றும் பல கவிஞர்களும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள்.

துபை கலீபா இல்லத்தில் மௌலுது நிகழ்ச்சி



துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை 11/02/2011 காலை 9.30 மணிக்கு கண்மணி நாயகம் ரசூல் (ஸல் அலை) அவர்களின் புகழ்பா சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது.

மௌலுது ஷரீப் ஓதியப்பின்னர் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமையில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.

மதுக்கூர் பாடகர் தாவுது அவர்கள் நபிப்புகழ்பாடலைப் பாடினார்.
மதுக்கூர் கவிஞர் இஸ்மாயில் கவிதையை அரங்கேற்றினார்.
தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜ்தீன் பைஜி அவர்கள் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் அன்புத் தாயாரைப்பற்றிய பாடலை அரங்கேற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காயல்பட்டிணம் மவ்லவி அஹமது அப்துல்காதிர் மஹ்ழரி அவர்கள் கலந்து மீலாதுவிழாவின் சிறப்புகளைப் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். மவ்லவி உசேன் மக்கீ அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துக் கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

ஜூம்மாஹ் தொழுகக்குப்பின் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.






























புகைப்படங்கள் மற்றும் ஆடியோ
அதிரை அப்துல்ரஹ்மான்