This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

உற்சாகத்துடன் உதயதின விழா

நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம்
குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித்
கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின்
76 - ஆவது உதய தின விழா...

நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் 76 - ஆவது உதய தின விழா, திருச்சியில் நமது மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக் கல்லூரி வளாகத்தில் - சங்கைக்குரிய குத்புல் பரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (ரலி) அவர்களின் நினைவரங்கத்தில் 02.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

விழாவுக்கு சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

நமது ஷைகு நாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி. N. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் கிராஅத் ஓதினார். மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரி மாணவர்கள் ஸத்தார் கான் ஹக்கிய்யுல் காதிரிய், பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடினார்கள்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரியின் முதல்வர் ஜனாப். மக்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்களின் தலைமையுரையோடு விழாச் சொற்பொழிவுகள் தொடங்கின. கண்ணியத்திற்குரிய ஸய்யித் அலி மௌலானா அவர்கள், தலைமை கலீபா H.M. ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்(சென்னை), கலீபா.M. சிராஜுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி), கலீபா. A.முஹம்மது காசீம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (பெரம்பலூர்), கலீபா.ஆலிம்புலவர். S. உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திண்டுக்கல்), தியாகி. M.முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி), கலீபா. முஹம்மது காலித் ஷா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (மதுக்கூர்), கலீபா. அட்வகேட். A.N.M.லியாகத் அலி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (மதுக்கூர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.
நிறைவாக, ஜனாப். J.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

சொற்பொழிவுகளுக்கு இடையிற் சோபனமாய், கலீபா. ஆலிம்புலவர். S. உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், கலீபா. அட்வகேட். அப்துர் ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நபிப்புகழ்ப்பாக்களையும், ஞானப் பாடல்களையும் பாடினார்கள்.

விழா நிகழ்வுகளை தமிழ்மாமணி. மௌலவி.N.அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

சங்கைமிகு நமது ஷைகு நாயகமவர்களின் உதயதினமான இந்நன்னாளில், அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக, நமது சபையில் உள்ள முரீதுப் பிள்ளைகள் சிலருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நமது ஷைகு நாயகம் அவர்களின் உயரிய - புனித ஆக்கங்கள் அனைத்தும், மத்ரஸா வளாகத்தில் விற்பனைக்காக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

சங்கைமிகு நமது ஷைகு நாயகமவர்களின் உதயதினமான பெருநாளை முன்னிட்டு, நமது மதுரஸா வளாகத்தைப் போன்ற மினியேச்சர் அமைப்பை, குலாம் கலீல். ஜனாப். அக்பர் அலி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஜாபர் அலி ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. V.M.முஹம்மது ஹஸன் ஆலிம் யாஸீனிய் ஆகியோரின் தூண்டுதலோடும், உறுதுணையோடும், மத்ரஸா மாணவர்கள் சத்தார் கான்,யூசுப் கான், இப்றாஹீம், முஹம்மது, ஹக்கீம் பாஷா, அப்துல் ஹக்கீம், உமர் கய்யாம், பீர் முஹம்மது, ஆஷிக் மௌலானா, A.சையது இப்றாஹீம், முஹம்மது யூனுஸ், முஹம்மது காலித், முஹம்மது ஹாரீஸ், ராஜா முஹம்மது,அனீஸ் அஹ்மத், நூர் முஹம்மது ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மத்ரஸா மினியேச்சர் அமைப்பு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.

விழாவுக்கான வீடியோ ஏற்பாட்டிற்கும், மினியேச்சர் அமைப்புக்கும், புதிய ஸ்டேஜ் அமைப்பிற்கும் தேவையான உதவிகளை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆத்ம சகோதரர்கள் முஹம்மது மீரான், நத்ஹர்ஷா மற்றும் முரீதுப் பிள்ளைகள் செய்திருந்தனர்.

விழா நிறைவாக, அனைவருக்கும் கந்தூரி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல்,

நமது மத்ரஸாவிற்கு அருகில் அமைந்துள்ள சாந்திவனம் மனநலக் காப்பகத்திற்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் தமிழகமெங்குமிருந்தும் முரீதுப் பிள்ளைகள், அஹ்பாபுகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


தகவல் : A. நைனார் முஹம்மது அன்சாரி M.A, ஹக்கிய்யுல் காதிரிய், திருச்சி


விழா நிகழ்வுகளை தமிழ்மாமணி. மௌலவி.N.அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்(திருச்சி) தொகுத்து வழங்குகிறார்.

மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபிக்கல்லூரி மாணவர்கள் ஸத்தார் கான் ஹக்கிய்யுல் காதிரிய், பீர் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்
ஆகியோர் வஹ்ததுல் வுஜூத் பாடலைப் பாடுகிறார்கள்.
கலீபா.ஆலிம்புலவர். எஸ். உஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திண்டுக்கல்)



கண்ணியத்திற்குரிய சையதுஅலி மௌலானா (திருமுல்லைவாசல்)
தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
தியாகி கலீபா சிராஜ்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.










கலீபா எம்.முஹம்மது காலீது (ஷா) அவர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.

ஆலிம்புலவர்
அட்வகேட் கலீபா அப்துல்ரவூப் அவர்கள் நபிப்புகழ் பாடுகிறார்கள்.
முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (திருச்சி) உரை நிகழ்த்துகிறார்கள்.
தமிழ்மாமணி. மௌலவி.N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்

தலைமை கலீபா . எம். ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நிதி உதவி வழங்குகிறார்கள்.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக கண்ணியத்திற்குரிய சையதுஅலி மௌலானா அவர்கள் நிதி உதவி வழங்கினார்கள்.
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக, ஆத்ம சகோதரர் கலீபா A.N.M.லியாகத்அலி B A B L, ஹக்கியுல் காதிரி அவர்கள் நமது சபையில் உள்ள முரீதுப் பிள்ளைகள் சிலருக்கு நிதி உதவி வழங்கினார்.

ஆத்ம சகோதரர் ஜே.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
நமது ஷைகு நாயகம் அவர்களின் உயரிய - புனித ஆக்கங்கள் அனைத்தும், மத்ரஸா வளாகத்தில் விற்பனைக்காக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது.




நமது மதுரஸா வளாகத்தைப் போன்ற மினியேச்சர் அமைப்பை, குலாம் கலீல். ஜனாப். அக்பர் அலி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஜாபர் அலி ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய், மௌலவி. ஏ.ஆ. முஹம்மது ஹஸன்
ஆலிம் யாஸீனிய் ஆகியோரின் தூண்டுதலோடும், உறுதுணையோடும், மத்ரஸா மாணவர்கள் சத்தார் கான்,யூசுப் கான், இப்றாஹீம், முஹம்மது, ஹக்கீம் பாஷா, அப்துல் ஹக்கீம், உமர் கய்யாம், பீர் முஹம்மது, ஆஷிக் மௌலானா, ஏ. சையது இப்றாஹீம், முஹம்மது யூனுஸ், முஹம்மது காலித், முஹம்மது ஹாரீஸ், ராஜா முஹம்மது,அனீஸ் அஹ்மத், நூர் முஹம்மது ஆகியோர் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.









திருச்சியில் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் 76 ஆவது உதய தின விழா!

நமது உயிரினும் மேலான சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் 76 புனித உதய தின விழா, திருச்சியில் ஆத்ம சகோதரர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவுக்கு கிப்லா ஹல்ரத். தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை தங்கி விழாவை நடத்தினார்கள்.

விழாவில் மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி முதல்வர். ஆத்ம சகோதரர் ஜனாப். மக்ஹ்தூம் ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் மௌலவி. N. சயீத் முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், மௌலவி. N. முஹம்மது ரபீயுத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஆகியோர் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் மேன்மை, உயர்ந்த படித்தரங்கள், எளிமை, இனிமை, எண்ணில்லா சிறப்புகள், வாப்பா நாயகமவர்கள் நமக்கு வழங்கி வரும் சிறப்புகள், நன்மைகள், பாதுகாவல்கள், நாம் வாப்பா நாயகம் அவர்களை எவ்வாறு விளங்கிகொள்வது, அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற உயரிய கருத்துக்களை வெகு நேர்த்தியாக எடுத்து வைத்தார்கள்.


விழாவில், திருச்சியை சேர்ந்த முரீது பிள்ளைகள், அஹ்பாபுகள், மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபிக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

விழாவின் முத்தாய்ப்பாக, சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்களின் வாரிதாத்துக்களான கசீததுல் அஹ்மதியா - கசீததுல் அவ்னிய்யா சிறப்பாக ஓதப்பட்டது.

இந்த புனித திரு நாளின் பொருட்டால் எல்லா வளங்களும் நலன்களும் எல்லாரும் பெற்று சிறப்புற்று வாழ ஏக மனதாக பிரார்த்திக்கப்பட்டது. நிறைவாக கந்தூரி உணவு உபசாரத்தோடு விழா இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.

தகவல் : இளங்கவி. A. நைனார் முஹம்மது அன்சாரி , திருச்சி.